Showing posts with label ரிலையன்ஸ். Show all posts
Showing posts with label ரிலையன்ஸ். Show all posts

Friday, June 17, 2011

2ஜியைத் தொடர்ந்து கேஜி...!

2ஜி விவகாரமே இன்னும் முடிந்தபாடில்லை. அதற்குள்ளாக கேஜி விவகாரத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை. கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையில் பெட்ரோலியப் பொருள்களை எடுக்கும் பணியை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கியதில் அரசுக்கு மிகமிகக் குறைந்த லாபம் கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது ஏன் என்பதுதான் தணிக்கைத் துறை இப்போது எழுப்பியிருக்கும் கேள்வி.


""தனியார் துறைக்காக விதிமுறைகளை ஏன் இவ்வளவு மோசமாக வளைக்கிறீர்கள்'' என்று தணிக்கைத் துறை கேட்டிருப்பது, ஒவ்வொரு குடிமகனின் மனதில் எழும் கேள்வியாகத்தான் இருக்கிறது.

தனியார் துறை என்றாலே, குறிப்பாகப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாகப் பெருந்தொழில் செய்யும் இந்தியத் தனியார் நிறுவனங்கள் என்றால் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் குஷி பிறந்து விடுகிறது. தனியார் துறைக்கு எவ்வளவு உச்சகட்ட லாபம் கிடைக்குமோ அந்த அளவுக்குப் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்து, அவர்களை வாழ வைப்பதில் போட்டி போடுகிறார்கள்.

கிருஷ்ணா - கோதாவரி டி6 எனக் குறிக்கப்படும் இத்திட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் படிப்படியாகச் செய்யும் முதலீடு ரூ.45,000 கோடி என்று இருப்பினும், இதிலிருந்து வெளியாகும் உற்பத்திக்கு ஏற்ப அரசுக்குக் கிடைக்கும் லாபத்தின் பங்கு வெறும் 5 விழுக்காடு அல்லது 10 விழுக்காடு என்று இருக்கிறது. இது குறித்துத்தான் தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை கேள்வி எழுப்பியிருக்கிறது. இது அரசு கருவூலத்துக்குப் பெரும்இழப்பு என்று கூறியுள்ள தணிக்கைத் துறை இதன் அளவு குறித்து ஏதும் குறிப்பிடவில்லை.

தனியார் நிறுவனம் அதிக முதலீடு செய்வதற்காக நமது லாபத்தைக் மிகவும் குறைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயமில்லை. அந்த முதலீட்டுக்காக அவர்களுக்கு உரிய லாபம் கிடைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் ஆட்சேபம் இருக்க முடியாது. ஆனால், அரசாங்கத்துக்கு ஏதோ காவல் நாய்க்கு ரொட்டித் துண்டு போடுவதைப் போல, பசியாறட்டும் என்று பரிதாபத்தில் கொடுப்பதைப்போலக் கொடுப்பதைத்தான் சகித்துக்கொள்ள முடியவில்லை.

இந்த ஒப்பந்தங்களின் நுட்பமான தகவல்களைக்கூட அரசு வெளியிடுவதில்லை என்பதால் மக்களுக்கு இதுபற்றி முழுவிவரம் தெரியவருவதே கிடையாது. இதுபோன்று, தணிக்கைத் துறை போன்ற அமைப்புகளோ அல்லது பத்திரிகைகளோ இத்தகைய பாரபட்சமான ஒப்பந்தங்களை அம்பலப்படுத்தினால் மட்டுமே வெளியுலகுக்குத் தெரியவருகிறது.

இந்தச் சட்டங்களை வளைப்பதன் மூலம் அந்த நிறுவனத்துக்கு ஆதாயம் கிடைப்பதோடு, அரசியல்வாதிகளுக்குக் கடன் கொடுக்கவும், அவர்களது நிறுவனங்களில் அதிகமான தொகை கொடுத்துப் பங்குகளை வாங்குகிறார்கள் என்பதும் இந்தியாவில் எல்லோருக்கும் புரியவைத்திருக்கிறது 2ஜி விவகாரம். ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமல்ல, இதுபோல நிறைய நிறுவனங்கள் இந்தியாவைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்திய அரசுக்கோ, வெறும் சொற்ப லாபம்தான் கிடைக்கிறது.

பூமியிலிருந்து பெட்ரோல் எடுப்பதில் மட்டுமல்ல, கனிமங்கள் எடுப்பதிலும் மிகப்பெருமளவு சட்டங்கள் வளைக்கப்படுகின்றன. உதாரணமாக, கர்நாடக மாநிலத்தில் இரும்புத்தாது பிரச்னை. இந்தியாவில் ஆண்டுக்கு 100 மில்லியன் டன் இரும்புத்தாது ஏற்றுமதியாகிறது என்றால், அதில் 30 விழுக்காடு கர்நாடகத்திலிருந்து செல்கிறது. இந்தத் தாதுக்கு கர்நாடக அரசு நிர்ணயித்துள்ள கனிம உரிமத் தொகை (ராயல்டி) மிகவும் குறைவு. ஒரு டன் இரும்புத்தாதுக்கு தரத்துக்கு ஏற்ப ரூ.17 முதல் ரூ.27 வரை கிடைக்கும். ஆனால் இந்த இரும்புத்தாது ஏற்றுமதி செய்யப்படும்போது கிடைக்கும் விலை ஒரு டன்னுக்குக் குறைந்தபட்சம் 100 அமெரிக்க டாலர்கள். அதாவது ஏறக்குறைய ரூ.5000. இவ்வளவு வித்தியாசம் ஏன் இருக்க வேண்டும்?

இதேபோன்று, கட்டு-பராமரி-ஒப்படை (பி.ஓ.டி.) என்கிற திட்டத்திலும் தனியார் துறைக்கே சாதகமாக அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் செயல்படுகிறார்கள். உதாரணமாக, தங்க நாற்கரச் சாலை. இத்திட்டத்துக்காக அனைத்து உதவிகளையும் அரசு செய்கிறது. நிலத்தைக் கையகப்படுத்தி, அதற்கான தொகையையும் உரியவர்களுக்கு வழங்குகிறது. தனியார் நிறுவனங்கள் செய்யும் ஒரே வேலை சாலை அமைப்பதுதான். இதற்காக அவர்கள் சுங்கக் கட்டணம் வசூலிக்கிறார்கள். இதில் எந்தக் கணக்கு வழக்கும் கிடையாது. சாலை அமைக்கச் செய்த முதலீட்டைவிட இருமடங்கு முதலீடு குறுகிய காலத்தில் கைக்கு வந்தும்கூட, அரசியல்வாதிகள் ஆதரவுடன் சுங்கக் கட்டணம் காலவரம்பில்லாமல் தொடர்கிறது.

தனியார் நிறுவனங்கள் பூமியிலிருந்து பெட்ரோலியப் பொருள்கள் எடுப்பதிலோ அல்லது கனிமம் எடுப்பதிலோ நிறைய முதலீடு செய்து இயந்திரங்கள் மற்றும் ஆள்பலத்தை நியமிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. இதற்கெல்லாம் அதிகபட்சமாக எவ்வளவு தொகை போகும், அவர்களுக்கு எவ்வளவு தொகை மிஞ்சும் என்பதைக் கணக்குப்போடத் தெரியாதவர்களா நமது அதிகாரிகள்? தெரிந்திருந்தால், ஏன் இந்தியாவைச் சுரண்ட அனுமதிக்கிறார்கள்? அரசியல்வாதிகள் தலையீடு காரணம் என்றால், ஏன் அதுபற்றி வெளியே சொல்ல மறுக்கிறார்கள்?

இதுபோன்ற நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் அநேகமாக அதிகார வர்க்கத்தின் ஆமோதிப்புடனும், மறைமுக ஆதரவுடனும்தான் நடைபெறுகின்றன. இதனால் மறைமுகமான ஆதாயங்களை அதிகாரிகள் பெறுகிறார்கள் என்பதும் உலகறிந்த உண்மை. கடைசியில் விசாரணை, வழக்கு என்று மாட்டிக்கொள்வது என்னவோ அரசியல்வாதிகள் மட்டும்தான். "சென்னை மாநகர மேம்பால ஊழல்' விசாரணைபோல, அதிகாரிகள் தங்களது சக அதிகாரிகளைக் காப்பாற்றும் விதத்தில் வழக்குத் தொடர்ந்து ஊழலை ஒன்றுமே நடக்காததுபோல மூடி மறைத்து விடுகிறார்கள். காலங்காலமாக இதுதான் நடைபெற்று வருகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அதிகாரிகளுக்கும் சிறைத் தண்டனை கிடைத்தால் ஒருவேளை இந்த நிலைமை மாறுமோ என்னவோ? இந்தியா உண்மையாக முன்னேற வேண்டுமானால் முதலில் உடைக்கப்பட வேண்டியது தொழிலதிபர்கள் - அதிகாரிகள் - அரசியல்வாதிகள் கூட்டணிதான். அது அவ்வளவு லேசுப்பட்ட காரியமா என்ன?
 
நன்றி : தினமணி


Tuesday, January 12, 2010

ரிலையன்ஸ் பிக் 'டிவி' சிறப்பு சலுகை

இந்தியாவில் அதிவேக வளர்ச்சியடைந்து வரும், ரிலையன்ஸ் பிக் 'டிவி' நிறுவனம், பொங்கல் பண்டிகையை ஒட்டி, சில சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் பிக் 'டிவி' நிறுவனத்தின் தென்மண்டல பிரிவு தலைவர் நாகராஜன் காந்தன் கூறியதாவது: பொங்கல் திருநாளையொட்டி, 12 மாத சந்தா, 2,390 ரூபாய் செலுத்தி பிக் 'டிவி' இணைப்பு பெறும் வாடிக்கையாளர்கள், பிரான்ஸ் பேக் வசதியை பெறலாம். இதன் மூலம் மொத்தம் உள்ள 118 சேனல்களில், 17 தமிழ் சேனல்களை பார்த்து ரசிக்கலாம். மிகக் குறுகிய கால சலுகையாக பொங்கல் பண்டிகையை ஒட்டி, இச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நாகராஜன் காந்தன் கூறினார்.
நன்றி : தினமலர்


Sunday, January 10, 2010

ரிலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ் : 17 காப்பீடு திட்டங்கள் அறிமுகம்

ரிலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் வகையில் புதிதாக 17 காப்பீடு திட்டங்களை அறிமுகப் படுத்த உள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய பங்குச்சந்தை முதலீடு வாயிலாக அதிக லாபத்தை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற முறையிலும், அவர்களது தேவையை பூர்த்தி செய்யும் விதத்திலும் புதிய காப்பீடு திட்டங்கள் அறிமுகப் படுத்தப் பட உள்ளன. பிரிமியம் செலுத்தும் வகையில் யூலிப் காப்பீடு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். யூனிட் லிங்கிடு இன்ஷ்யூரன்ஸ் பாலிசி என்ற காப்பீடு திட்டம் சுருக்காமாக யூலிப் என்று அழைக்கப்படுகிறது. இந்த காப்பீடு திட்டங்களில், காப்பீடு செய்து கொண்டவர்கள் செலுத்தும் பிரிமியம், பங்குச் சந்தை, கடன் பத்திரங்கள், நிதி சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது.
நன்றி : தினமலர்


Wednesday, December 30, 2009

புதிய கட்டண குறைப்பு: ரிலையன்ஸ்

ரிலையன்ஸ் நிறுவனம் புதிய கட்டண குறைப்பினை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில், அந்நிறுவனத்தின் சி.டி.எம்.ஏ., மற்றும் ஜி.எஸ்.எம்., வாடிக்கையாளர்கள் எவருடனும் தொடர்பு கொண்டு பேசுவதற்கு 60 வினாடிக்கு​ 20 காசு கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.​ உள்ளூர் அழைப்புகளுக்கு மாத கட்டணமாக ரூ.​ 27 செலுத்தி நிமிஷத்துக்கு 20 காசு கட்டண வசதியைப் பெறலாம் என்றும் எஸ்டிடி அழைப்பு செய்வோர் ரூ.​ 77 கட்டணத்தை செலுத்தி இந்த வசதியைப் பெறலாம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும், ​ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் அதை 30 நாள்கள் வரை பயன்படுத்தலாம்.​ பிற நிறுவன மொபைலுடன் தொடர்பு கொண்டு பேசினால் வாடிக்கையாளர் தேர்வு செய்துள்ள திட்ட அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும் என்று நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


Friday, December 4, 2009

மாணவர்களுக்கு சிறப்புச் சலுகை: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்

மாணவர்களுக்கான சிறப்பு சலுகையை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் அறிமுகப் படுத்தி உள்ளது. இதன்படி, மாதாந்​திர கட்​ட​ண​மாக ரூ. 11 செலுத்தி, நாளொன்​றுக்கு 500 எஸ்​.எம்.​எஸ்.,​கள் வரை அனுப்​பலாம். இதுகுறித்து நிறு​வ​னத்​தின் தென் பிராந்​தி​யத் தலை​வர் அஜய் அவஸ்தி கூறும்போது, புத்தாண்டை ஒட்டி பல்வேறு சலுகைகளை அளிக்க உள்ளோம்.புதிதாக ரிலையன்ஸ் இணைப்பை பெறுபவர்களுக்கு ஒரு மாதத்திற்கு இலவச எஸ்.எம்.எஸ்., வசதி அளிக்கப் படும் என்று கூறினார். மேலும், கட்​ட​ணக் குறைப்​பில் வாடிக்​கை​யா​ளர்​கள் பய​ன​டை​யும் வகை​யில் மிகக் குறைந்த அளவு கட்​டண விகி​தத்தை ரிலை​யன்ஸ் நிர்​ண​யித்​துள்​ளது. செல்​போ​னில் பேச ஒரு விநா​டிக்கு ஒரு காசு திட்​டம் மட்​டு​மின்றி,​ ஒரு எஸ்​.எம்.​எஸ்.,க்கு ஒரு காசு கட்​ட​ணம் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இதற்கு மேலும் குறைப்​ப​தற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார். தமி​ழ​கத்​தில் மொத்​தம் 4.67 கோடி பேர் செல்​போன் உப​யோ​கிக்​கின்​ற​னர். இதில் ரிலை​யன்ஸ் நிறு​வ​னத்​தின் பங்​க​ளிப்பு 15 சத​வீ​தம் என்​றும் அவர் தெரி​வித்​தார்.
நன்றி : தினமலர்


Thursday, November 19, 2009

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்

இந்திய பணக்காரர் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருப்பதாக பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. இந்திய அளவிலான பணக்காரர்களின் பட்டியலை அமெரிக்க நாளிதழான போர்ப்ஸ் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள பட்டியலில், முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 32 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். அவருக்கு அடுத்த இடத்தில் உருக்கு ஆலை அதிபர் லஷ்மி மிட்டல் உள்ளார். கடந்த ஆண்டு வெளியான பட்டியலில் 3வது இடத்தில் இருந்த லஷ்மி மிட்டல், இந்த ஆண்டு 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவரது சொத்து மதிப்பு 30 பில்லியன் டாலர் ஆகும். இதனால் 2வது இடத்தில் இருந்த அனில் அம்பானி 17.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். விப்ரோ நிறுவனத் தலைவர் அஸிம் பிரேம்ஜி 4வது இடத்திலும், எஸ்ஸார் குழுமத்தைச் சேர்ந்த ஷாஷி,ரவி ருயா 5வது இடத்திலும் உள்ளனர்.
நன்றி : தினமலர்


Saturday, October 24, 2009

ரிலையன்ஸ் புதிய திட்டம் அறிமுகம்

'சிம்ப்ளி ரிலையன்ஸ் பிளான்' என்ற பெயரில் புதிய மொபைல் திட்டத்தை, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. அந்நிறுவன தமிழக தலைவர் அஜய் அவஸ்தி, மதுரை பொறுப்பாளர் ஆன்டனி ராஜ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: உள்ளூர், எஸ்.டி.டி., ரோமிங் என அனைத்து அழைப்புகளுக்கும் ஆயுள் முழுமைக்கும் 50 காசு கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதே கட்டணத்தில் எந்த நெட்வொர்க்கிற்கும், எந்த நேரத்திலும் பேசலாம். பிரீ பெய்டு, போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்கள் இச்சலுகையைப் பெறலாம். நாடு முழுவதும் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சி.டி.எம்.ஏ., ஜி.எஸ்.எம்., போன் பயன்படுத்துவோருக்கு இத்திட்டம் பொருந்தும். தற்போது வேறு திட்டத்தில் இருப்போரும் இத்திட்டத்திற்கு மாறலாம். ரிலையன்சில் இனிமேல் வேறு திட்டங்கள் இருக்காது. நாடு முழுவதும் 50 காசு கட்டணத்தில் 24 ஆயிரம் நகரங்கள், ஆறு லட்சம் கிராமங்களை இத்திட்டம் இணைத்துள்ளது
நன்றி : தினமலர்


Thursday, October 22, 2009

அம்பானி சகோதரர்கள் பிரச்னையால் பங்குச் சந்தையில் தள்ளாட்டம்

பங்குச் சந்தையில் கடந்த சனியன்று தீபாவளி வர்த்தகம் துவங்கியது. அன்றைய தினம் நடந்த வர்த்தகத்தில் சந்தை லாபமும் இல்லாமல் நஷ்டமும் இல்லாமல் முடிந்தது. திங்களன்று சந்தைக்கு விடுமுறை. ஆனால் நேற்று முன்தினம், அம்பானி சகோதரர்களின் பிரச்னைக்கு கோர்ட் என்ன தீர்ப்பு வழங்கப் போகிறதோ என்ற பயத்திலேயே சந்தை சரிந்தது.
நேற்றும் சந்தை ஒரு பெரிய சரிவை சந்தித்தது. நேற்று சந்தை ஏன் சரிந்தது? உலகளவிலும், ஆசிய அளவிலும் சந்தைகள் கீழேயே இருந்ததால், இந்தியாவிலும் அதன் எதிரொலி இருந்தது. இது தவிர ரிலையன்ஸ் பிரச்னையும் ஒரு காரணம். மேலும், வங்கிகள் கடன் களுக்கு வாங்கும் வட்டி விகிதங்களில், ரிசர்வ் வங்கி மாற்றம் கொண்டு வரும் என்ற செய்தி சந்தைக்கு வந்ததால், அது வங்கிகளிடையே போட்டியை ஏற்படுத்தும், ஆதலால் வங்கிகளின் லாபம் வருங்காலங்களில் குறையலாம் என்ற எதிர்பார்ப்புகள் சந்தையில் வங்கிப் பங்குகளை சரித்தன. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 213 புள்ளிகள் குறைந்து, 17,009 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 50 புள்ளிகள் குறைந்து, 5,063 புள்ளிகளுடனும் முடிந்தது.
சாப்ட்வேர் பங்குகள்: அமெரிக்காவில் உள்ள சாப்ட்வேர் கம்பெனிகளின் லாபம் கூடிவருவதால், அதன் எதிரொலி இந்தியாவிலும் இருந்தது. இங்கும் சாப்ட்வேர் பங்குகளின் விலை கூடியது. ஏனெனில், இந்தியாவின் 50 முதல் 60 சதவீதம் வரை மொன்பொருள் ஏற்றுமதி அமெரிக்காவிற்குத் தான் நடக்கிறது. அங்கு பிரகாசம் என்றால் இங்கும் பிரகாசம் தான். டி.சி.எஸ்., கம்பெனியின் ஆர்டர் புக் நன்றாக இருப்பதாகவும் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தேவையான ஆர்டர் இருக்கிறது எனவும் கூறப்படுகிறது. ஆதலால், நீண்ட கால நோக்கில் அந்த கம்பெனியின் பங்குகளை உங்கள் போர்ட்போலியோவில் சேர்க்கலாம்.
கசக்கும் சர்க்கரை: சந்தையில் சர்க்கரை பங்குகள் கசந்தன என்றே சொல்லலாம். ஆமாம். இறக்குமதிக்கு அரசு கொடுத்திருந்த காலக்கெடுவை நீட்டியதால் சந்தையில் சர்க்கரை கம்பெனியின் பங்குகள் விலை குறைந்தன. டிசம்பர் வரை இது நீட்டிக்கப்பட்டுள்ளது.
காலாண்டு முடிவுகள்: யெஸ் பாங்க் நல்ல காலாண்டு முடிவுகளைத் தந்தாலும், அந்த வங்கியின் வராக்கடன்கள் கூடியிருந்ததால், சந்தையில் அந்தப் பங்குகளின் விலை குறைந்தது. இது தவிர என்.ஐ.ஐ.டி., - சக்தி சுகர்ஸ் கம்பெனிகளும் நல்ல காலாண்டு முடிவுகளைத் தந்துள்ளன. வந்துள்ள காலாண்டு முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது, பல கம்பெனிகளில் காலாண்டு லாபம் கூடியுள்ளது. ஆனால், காலாண்டு விற்பனை அந்த அளவு கூடவில்லை. இது ஒரு கவலையளிக்கக் கூடிய விஷயம்.
வழுக்கும் கச்சா எண்ணெய்: தினமும் என்னை கவனி என்று மறுபடி சொல்ல வைத்து விடும் போலிருக்கிறது கச்சா எண்ணெய். பேரலுக்கு 80 டாலர் அளவிற்கு வந்து நிற்கிறது. இது கடந்த 12 மாதத்தில் அதிகபட்ச உயர்வு. இதனால், மத்திய அரசு எண் ணெய் கம்பெனிகளின் பங்குகள் களையிழந்து காணப்படுகின்றன. அதே சமயம், எண் ணெய் உற்பத்தி செய்யும் கம்பெனிகளின் பங்குகள் உயர்ந்து செல்கின்றன. வரிசையில் காத்திருக்கும் அரசு வெளியீடுகள்: என்.எச்.பி.சி., மற்றும் ஆயில் இந்தியா ஆகிய வெளியீடுகளைத் தொடர்ந்து, பல அரசு வெளியீடுகள் வரத்தயாராகி வருகின்றன. என்.டி.பி.சி., சட்லெஜ் ஜல வித்யூத், செயில் ஆகியவை அரசால் அனுமதி அளிக்கப் பட்டுள்ளன. விரைவில் எதிர்பார்க்கலாம். அப்படி வரும் பட்சத்தில் சிறிய முதலீட்டாளர்களுக்கு 5 சதவீதம் விலையில் கிடைக்கும் என்றும் செய்திகள் வருகின்றன.
ஜொலிக்கும் தங்க ஆபரண ஏற்றுமதி: உலகளவில் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதால், தங்க ஆபரண ஏற்றுமதியும் கூடியுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20 சதவீதம் கூடுதலாக ஆர்டர்கள் கிடைத்துள்ளன.
வரும் நாட்கள் எப்படி இருக்கும்? சந்தை குறுகிய காலத்தில் அதிகம் ஏறியுள்ளது போல வல்லுனர்கள் நினைக்கின்றனர். ஆதலால், ஏதாவது மாற்றம் வருமா என்று யோசிக்கத் தோன்றுகிறது.
- சேதுராமன் சாத்தப்பன் -
நன்றி : தினமலர்

Friday, October 16, 2009

மூன்றில் இரு பங்கு சம்பளம் : வேண்டாம் என்றார் முகேஷ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, தன் சம்பளத்தை மூன்றில் இரண்டு பங்கு அளவுக்கு குறைந்து கொண்டுள்ளார். இனி அவர் ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக பெறுவார் என தெரிவிக்கப் பட்டுள்ளது. பிரபல நிறுவனங்களில் நிர்வாக அதிகாரிகள் அந்தஸ்தில் பணிபுரிவோர் தங்களின் சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என, மத்திய கம்பெனிகள் விவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆலோசனை தெரிவித்திருந்தார். இருப்பினும், இந்த சம்பளம் குறித்து கம்பெனிகளின் போர்டுகளும், பங்குதாரர்களும் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், அமைச்சரின் ஆலோசனையை நிறைவேற்றும் வகையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, 2008-09ம் ஆண்டுக்கான தன் சம்பளத்தை மூன்றில் இரண்டு மடங்கு குறைத்துக் கொண்டுள்ளார். அதாவது, ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் மட்டுமே அவர் சம்பளம் பெறுவார்.
இதற்கு முந்தைய ஆண்டின் அவரது சம்பளமான 44 கோடி ரூபாயை ஒப்பிடுகையில், இது 66 சதவீதம் குறைவு. கம்பெனியின் நிகர லாபத்தில் 5 சதவீதத்தை அவர் சம்பளமாக பெறலாம். அதை ஒப்பிடும் போது, 98 சதவீதம் குறைவு. அதே நேரத்தில், தங்கள் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கான சம்பளம் மற்றும் இதர சலுகைகளை ரிலையன்ஸ் நிறுவனம் மாற்றி அமைத் துள்ளது. அது, தற்போது அவர்கள் பெறும் சம்பளத்தை விட கூடுதலாக இருக்கும்.
நன்றி : தினமலர்


Monday, October 12, 2009

முகேஷ் அம்பானிக்கு அனில் அம்பானி வெள்ளைக்கொடி: இந்திய தொழில் துறையில் புதிய திருப்பம்

அண்ணன் முகேஷ் அம்பானிக்கு, அவரது சகோதரர் அனில் அம்பானி வெள்ளைக் கொடி காட்டியுள்ளார். இந்திய தொழில் துறையில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம், சகோதரர்களும் ‌தொழிலதிபர்களுமான அம்பானி சகோதரர்கள் பிரிந்ததே. தற்போது நல்ல விஷயமாக, இருவரும் மீண்டும் இணைவதற்கு தம்பி அனில் அம்பானி விருப்பம் தெரிவித்துள்ளார். தனது அண்ணனுடன் உள்ள அனைத்து பிரச்னைகளையும் கலைந்து சுமூகமான உறவு ஏற்பட விரும்புவதாக அனில் அம்பானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அனில் அம்பானி வெளியிட்டுள்ள செய்தியில், இருதரப்பும் இணைந்து செயல்பட்டால், நிச்சயம் பிரச்னைகளை சமாளிக்க முடியும். இது அண்ணன் முகேஷ் நினைத்தால் நிச்சயம் நடக்கும். பிரச்னைகளை பேசி தீர்க்க முடியும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
நன்றி : தினமலர்


Friday, August 28, 2009

தேசமா? அம்பானிகளா?

1960-ல் குஜராத் மாநிலம் அங்கலேஸ்வர் நகருக்கு விஜயம் செய்த அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் வெண்ணிற ஷெர்வானி முழுவதும் எண்ணெய்க் கறையானது. அந்தக் கறை அவருக்குள் பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்தது. பெட்ரோலியப் பொருள்களுக்காக வெளிநாடுகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் ஏற்பட்ட மகிழ்ச்சி அது. அந்தக் கறை படிந்த ஷெர்வானியுடனே நாடாளுமன்றத்தில் பேசப் போவதாக தன்னுடன் வந்தவர்களிடம் கூறினார். இந்தியாவின் முதல் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டதில் அந்த அளவுக்கு அவருக்குள் பெருமித உணர்வு ஏற்பட்டது. அந்த இடத்தில் தோண்டப்பட்ட முதல் பெட்ரோலியக் கிணறுக்கு "வசுந்தரா' என பூமித் தாயின் பெயரை வைத்தார் நேரு.

சொன்னபடியே, இந்தியாவின் முதல் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட செய்தியை முதன் முதலாக நாடாளுமன்றத்தில்தான் நேரு அறிவித்தார். அதன் பிறகே ஊடகங்கள் வாயிலாக மக்கள் அறிந்து கொண்டனர். நாடு முழுவதும் உற்சாகம் பொங்கியது. ஆனால், இன்றைய நிலை வேறு. எல்லாம் மாறிவிட்டது.

ஆந்திரப் பிரதேச மாநிலம் கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகையில் மிகப்பெரிய அளவிலான இயற்கை எரிவாயு வளம் கடந்த 2002-ம் ஆண்டில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இந்தச் செய்தி முதன் முதலாக பிரதமர் மூலமாகவோ, நாடாளுமன்றம் மூலமாகவோ அறிவிக்கப்படவில்லை.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் பொதுக்குழுவில் முகேஷ் அம்பானி அறிவித்த பிறகே இந்த விவரத்தை நாட்டு மக்கள் தெரிந்துகொள்ள முடிந்தது. தோண்டுமிடமெல்லாம் இயற்கை எரிவாயு கிடைத்தது.

இந்தியாவின் மிகப்பெரிய எரிவாயு கண்டுபிடிப்புக்கு அவர்கள் வைத்த பெயர் திருபாய். நாட்டு மக்களுக்குப் பெருமித உணர்வோ மகிழ்ச்சியோ ஏற்படுவதற்கு இதில் என்ன இருக்கிறது?

நேரு காலத்தில் எண்ணெய் வளங்களைக் கண்டறியும் விஷயத்தில் இந்திய அரசு எவ்வளவு துணிவுடனும் வெளிப்படையாகவும் நடந்து கொண்டது என்பதற்கு முதல் நிகழ்வு சரியான உதாரணம். நேருவின் கொள்கைகள் குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றன என்பதற்கு இரண்டாவது நிகழ்வே சாட்சி. நேருவின் கொள்கைகள் தெளிவாகவும் திட்டவட்டமானதாகவும் இருந்தன. எண்ணெய் வளங்கள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் போனால் பொருளாதார வளர்ச்சி தாராளமாக இருக்காது என தேசிய வளங்களுக்கான அப்போதைய அமைச்சர் கே.டி. மாளவியா அறிவித்தார். ஆனால், அடுத்தடுத்து வந்த அரசுகள் இந்தக் கொள்கையை நீர்த்துப் போகச் செய்துவிட்டன.

எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைக் கண்டறிவதற்கும் வெளிக்கொண்டு வருவதற்கும் செலவுகள் அதிகமானதால், இந்தத் துறையில் தனியாருக்கு வாய்ப்பளிக்கும் வகையில் 1997-ம் ஆண்டில் புதிய கொள்கை உருவாக்கப்பட்டது. அதன்படி, 1999-ம் ஆண்டிலிருந்து இதுவரை 7 சுற்று ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றன. தற்போது அம்பானி சகோதரர்களுக்கு இடையேயான சர்ச்சைக்குக் காரணமான கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகை எரிவாயுவும் இதுபோன்ற ஒப்பந்தத்தின் மூலம் ஒதுக்கப்பட்டதுதான்.

கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகையில் கிடைக்கும் எரிவாயுவுக்கும் எண்ணெய்க்கும் பல தரப்பிலிருந்தும் இப்போது உரிமை கோரப்படுகிறது. இங்கு கிடைக்கும் எரிவாயுவில் 10 சதவீதத்தை வழங்கவேண்டும் என அந்த மாநில முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். தனியார் நலனுக்காக நாட்டு நலனை அடகு வைத்துவிடக்கூடாது என்கிறார் அவர். பொதுமக்களும் ஊடகங்களும் ஆதரிப்பதால் இந்தக் கோரிக்கை வலுவடைந்திருக்கிறது.

அதேபோல், காக்கிநாடாவில் இருந்து சென்னைக்கு எரிவாயுக் குழாய் அமைப்பதில் ரிலையன்ஸ் நிறுவனம் மெத்தனம் காட்டி வருவதாக அதிமுக எம்.பி. தம்பிதுரை நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டினார். மும்பை, குஜராத், உத்தரப் பிரதேசம் என வடக்குப் பக்கமே அந்த நிறுவனம் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ரிலையன்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு எதிராக இந்திய அரசே உச்ச நீதிமன்றத்தில் போராட வேண்டியிருக்கிறது. அம்பானி குடும்பத்துக்குள் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி, கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகையில் கிடைக்கும் எரிவாயுவின் ஒரு பகுதி அனில் அம்பானியின் ஆர்.என்.ஆர்.எல். நிறுவனத்துக்கு வழங்கப்பட வேண்டும்.
இந்த எரிவாயு சப்ளைக்கு மற்றவர்களுக்குத் தருவதைவிட குறைந்த விலை நிர்ணயிக்க வேண்டும் என்கிறது அந்த ஒப்பந்தம். இதை எதிர்த்து இந்திய அரசு இப்போது வழக்குத் தொடர்ந்திருக்கிறது.

கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால், விடை கிடைக்காத பல கேள்விகள் எழுகின்றன. மிகப்பெரிய தேசிய வளத்தை நாட்டின் நன்மைக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதைக் கறாராக அமல்படுத்துவதை விட்டுவிட்டு, மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒரு தனியார் நிறுவனத்திடம் ஏன் கெஞ்சிக் கொண்டிருக்கின்றன என்பது தெரியவில்லை.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை வளத்தை, தனியார் நிறுவனம் ஒன்று தனது சொந்த லாபத்துக்காகப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டதற்கு யார் காரணம் என்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
இது தொடர்பான விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாகப் பெற முடியாத நிலையும் இருப்பதாகத் தெரிகிறது.

கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகையில் ரிலையன்ஸ் நிறுவனம் செய்திருக்கும் முதலீடுகள் குறித்து மத்திய அமைச்சரவைச் செயலகத்துக்கும், பெட்ரோலிய அமைச்சகத்துக்கும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் விண்ணப்பித்திருந்தார். கடுமையாக முயன்றும் உரிய தகவல்கள் கிடைக்கவில்லை.

இந்தச் சூழலில், அம்பானி சகோதரர்களின் சண்டை வீதிக்கு வந்திருக்கிறது. இந்தச் சண்டையில், முதலீட்டை அதிகரித்துக் காட்டுவது, விலையைக் குறைத்து நிர்ணயிப்பது, குறைந்த உற்பத்தி போன்ற தந்திரங்கள் கிருஷ்ணா-கோதாவரி திட்டத்தில் கையாளப்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அரசு உரிய விசாரணை மேற்கொண்டு மக்களுக்கு உண்மை நிலையைத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியம்.
அத்துடன், எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைத் தனியாருக்குத் தாரைவார்த்துத் தரும் தற்போதைய கொள்கைகளையும் சட்டங்களையும் கண்டிப்பாக மறுபரிசீலனை செய்தாக வேண்டும்.

புதிதாக வகுக்கப்படும் கொள்கைகள், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், திட்டங்களைச் செயல்படுத்தும்போது இடம்பெயரும் மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வகை செய்வதாகவும் அமைய வேண்டும். இதைச் செய்யும் வரையில் அம்பானிகள் விவகாரத்தால் எழுந்திருக்கும் சர்ச்சை ஓயப்போவதில்லை.
கட்டுரையாளர் : பி.எஸ்.எம். ராவ்
நன்றி : தினமணி

Wednesday, July 29, 2009

அதிக லாபத்திற்கு ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் ஆசைப்படுகிறது : அனில் அம்பானி குற்றச்சாட்டு

கிருஷ்ணா கோதாவரி ஆற்று படுகையில் ( கேஜி - டி6 ) ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் நிறுவனத்தால் எடுக்கப்படும் எரிவாயுவை பிரித்துக்கொள்வது சம்பந்தமாக, இந்தியாவின் மிகப்பெரிய இரண்டு தனியார் நிறுவனங்களான ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் ( ஆர் ஐ எல் ) மற்றும் ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்சஸ் ( ஆர் என் ஆர் எல் ) ஆகியவைகளுக்கிடையே நடந்து வந்த மோதல் நேற்று பெரிதாக வெடித்துள்ளது. ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்சஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் கூட்டம் நேற்று நடந்தபோது, அதில் பேசிய அதன் தலைவர் அனில் அம்பானி, ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் அதிக லாபத்திற்கு ஆசைப்படுகிறது என்றும் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தேவையில்லாமல் எங்கள் இருவருக்குமிடையே நடந்து வரும் பிரச்னையில் மூக்கை நுழைக்கிறது என்றும் பேசினார். இது பெரும் புயலை கிளப்பி உள்ளது. அனில் அம்பானியின் இந்த பேச்சு குறித்து கருத்து தெரிவித்த ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸின் ஆலோசகர் ஹரிஷ் சால்வே, எங்கள் இருவருக்குமிடையே உள்ள பிரச்னை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் இப்போதைக்கு இது குறித்து கருத்து சொல்வது பொருத்தமாக இருக்காது என்றார். மேலும் இந்த விவகாரம் குறித்து கோர்ட்டில் பேசவே விரும்புகிறோம்; மீடியாவில் அல்ல என்றும் சொல்லி விட்டார். மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் முளரி தியோராவும், இந்த விவகாரம் கோர்ட்டில் இருப்பதால் எங்களால் பதில் ஏதுவும் தெரிவிக்க இயலாது என்று சொல்லி விட்டார். திருபாய் அம்பானி நிறுவனம் 2005 ல் இரண்டாக பிரிந்தபோது செய்து கொண்ட ஒப்பந்தத்தில் சொல்லப் பட்டிருப்பதை போல, கே - ஜி பேசில் கிடைக்கும் எரிவாயுவை, ஒரு மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட் ஒன்றுக்கு 2.34 டாலர் என்ற விலையில் எங்களுக்கு தர வேண்டும் என்று ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்சஸ் கோருகிறது. ஆனால் மத்திய அரசோ, மற்ற நிறுவனங்களுக்கு கொடுக்கும் 4.2 டாலர் விலையில் தான் இதையும் கொடுக்க வேண்டும் என்கிறது. இது குறித்து ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்சஸ் நிறுவனம் மும்பை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில், 2.34 டாலர் விலையிலேயே 17 வருடங்களுக்கு ரிலையன்ஸ் ரிசோர்சஸ் நிறுவனத்திற்கு, ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் எரிவாயுவை சப்ளை செய்ய வேண்டும் என்று தெரிவித்தது. இப்போது இந்த தீர்ப்பை எதிர்த்து ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருக்கிறது. அங்கு விசாரனை நடந்து வருகிறது. இந்நிலையில், மத்திய அரசும் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்திருக்கிறது. அதில், பூமிக்கடியில் கிடைக்கும் எரிவாயு மத்திய அரசுக்கு தான் சொந்தமானது. எனவே அதற்கு இரு தனியார் நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்ய முடியாது என்று தெரிவித்திருக்கிறது.
நன்றி : தினமலர்


Tuesday, July 21, 2009

ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் - ரிலையன்ஸ் நேச்சரல் ரிசோர்சஸ் மோதல் - செப் 1 ல் மறு விசாரணை

ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா கோதாவரி ஆற்று படுகையில் ( கே.ஜி.பேசின் ) முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் எடுக்கும் கேஸை பகிர்ந்து கொள்ளும் விதம் குறித்து, ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் மற்றும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நேச்சரல் ரிசோர்சஸ் நிறுவனங்களுக்கிடையே கருத்து மோதல் இருந்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து பாம்பே ஐகோர்ட் அளித்த இடைக்கால உத்தரவில், ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் நிறுவனம், ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்சசுக்கு 28 எம்எம்எஸ்சிஎம்டி ( மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்டு க்யூபிக் மீட்டர் பெர் டே ) கேஸை, எம்எம்பிடியு ( மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட் ) ஒன்றுக்கு 2.34 டாலர் என்ற விலையில் 17 வருடங்களுக்கு சப்ளை செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தது. ஆனால் ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸோ, எம்எம்பிடியு ஒன்றுக்கு 2.34 டாலர் விலையில் கொடுக்க முடியாது என்றும் 4.2 டாலர் விலையில்தான் விற்க முடியும் என்றும் தெரிவித்தது. எனவே இரு நிறுவனங்களும் இந்த குறித்து ஒரு ஒப்பந்தத்திற்கு வர வேண்டும் என்று பாம்பே ஐகோர்ட் தெரிவித்திருந்தது. தேவைப் பட்டால் இந்த விஷயத்தில் முகேஷ் மற்றும் அனில் அம்பானியின் தாய் கோகிலாபென்னின் கருத்தையும் கேட்டுக்கொள்ளுமாறு தெரிவித்திருந்தது. இந்த இடைக்கால உத்தரவால் பயன் அடைந்தது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ரிசோர்சஸ் நிறுவனம் தான். ஏனென்றால் அவர்களுக்கு 2.34 டாலர் விலையில் 28 எம்எம்எஸ்சிஎம்டி கேஸ் கிடைத்து விடும். அது தவிர என்டிபிசி நிறுவனத்திற்கு ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் கொடுக்க இருக்கும் 12 எம்எம்எஸ்சிஎம்டி கேஸை, அது பெற்றுக்கொள்ளவில்லை என்றால் அந்த கேஸூம் ரிலையன்ஸ் ரிசோர்சசுக்கே வந்து விடும். அப்போது அதற்கு 40 எம்எம்எஸ்சிஎம்டி கேஸ் கிடைத்து விடும். ஆனான் பாம்பே ஐகோர்ட்டின் இந்த இடைக்கால உத்தரவை எதிர்த்து ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருக்கிறது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இது குறித்த மறு விசாரனையை செப்டம்பர் ஒன்றாம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறது. இந்நிலையில், மத்திய அரசும் இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறது. அதில், பூமிக்கு அடியில் கிடைக்கும் கேஸ் அரசாங்கத்திற்கு தான் சொந்தம். எனவே அதை பிரித்துக்கொள்வது பற்றி இரு நிறுவனங்கள் செய்து கொள்ளும் ஒப்பந்தம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது. இவை எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாக செப்டம்பர் ஒன்றாம் தேதி விசாரித்துக்கொள்ளலாம் என்று சுப்ரீம் தெரிவித்திருக்கிறது.

நன்றி : தினமலர்



Thursday, July 16, 2009

கிராமங்களுக்காக 'ரிலையன்ஸ்' மொபைல்போன்

'ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்' தமிழக தலைமை செயல் அலுவலர் அஜய் அவஸ்தி கூறியதாவது: ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள் அதிகளவில் கிராமங்களில் உள்ளனர். போதிய தொழில் நுட்பம், மொழியறிவு இல்லாததால் ஐ.வி.ஆர்.,- எஸ்.எம்.எஸ்., மற்றும் கால் சென்டர் சேவையை பயன்படுத்த தயங்குகின்றனர். வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ள பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளது. கிராமங்களில் உலகத்தரமிக்க மொபைல்போன் சேவை பெற, மதுரை மண்டலத்தில் ஆண்டிபட்டி, போடி, சின்னமனூர், திருப்புவனம், கமுதி, திருத் தங்கல், சாத்தூரில் 'கிராமப்புற வாடிக்கையாளர் சேவை மையங்'களை துவங்கியுள்ளோம். கிராமங் களில் 'டெலி- டென்ஸிட்டி' என்ற தொலைத் தொடர்பு வசதியை அதிகரிக்கும் நோக்கில் இசட்.டி.இ., ஹேண்ட் செட் 799, எல்.ஜி.,கலர் ஹேண்ட் செட் 1099 ரூபாய்க்கு இன்று அறிமுகப்படுத்துகிறோம் என்றார். மதுரை மண்டல மேலாளர் ஆன்டனிராஜ் உடனிருந்தார்.
நன்றி : தினமலர்


ஹாலிவுட்டில் நுழைந்தார் அனில் அம்பானி

சமீப காலத்தில் இதுவரை யாரும் செய்துகொள்ளாத மிகப்பெரிய ஒப்பந்தம் ஒன்றை, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பிக் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும் ஹாலிவுட் பட தயாரிப்பாளரான ஸ்டீவன் ஸ்பீல்பர்க்கின் டிரீம்ஒர்க்ஸ் ஸ்டூடியோஸூம் செய்திருக்கிறது. லாஸ் ஏஞ்சல்ஸ்சை சேர்ந்த டிரீம்ஒர்க்ஸ் ஸ்டூடியோ மூலம் வருடத்திற்கு ஆறு படங்களை தயாரிக்க இந்த இருவரும் 825 மில்லியன் டாலருக்கு ( சுமார் 3,960 கோடி ரூபாய் ) ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இது குறித்து அனில் அம்பானி மற்றும் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் ஆகியோர் கூட்டாக நியுயார்க்கில் அளித்த பேட்டியில், டிரீம்ஒர்க்ஸ் ஸ்டூடியோவில் தயாரிக்கும் படங்களை உலக அளவில் வினியோகம் செய்யும் உரிமையை வால்ட் டிஸ்னி பெற்றிருக்கும் என்றும், இந்தியாவில் அதன் உரிமையை ரிலையன்ஸ் பிக் என்டர்டெய்ன் மென்ட் நிறுவனம் கொண்டிருக்கும் என்றனர்.
நன்றி : தினமலர்


Friday, April 17, 2009

இனிமேல் ரிலையன்ஸ், நேரடியாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலை விற்பனை செய்யும்

இதுவரை ஏற்றுமதிக்காக மட்டுமே எண்ணெய் சுத்திகரிப்பு செய்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்த ஜாம்நகர் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், இனிமேல் ஏற்றுமதியை முடித்துக்கொண்டு இந்தியாவுக்குள்ளும் பெட்ரோல் மற்றும் டீசலை விற்றுக்கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டிருக்கிறது. எனவே தற்போது பெரும்பாலும் மூடிய நிலையில் இருக்கும் 1,432 ரிலையன்ஸ் பெட்ரோல் பம்ப்கள் மூலமாக ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் பெட்ரோல் மற்றும் டீசலை விற்பனை செய்யும். முற்றிலும் ஏற்றுமதிக்காக மட்டும், வருடத்திற்கு 33 மில்லியன் டன் எண்ணெய்யை சுத்திகரிப்பு செய்வதற்காக அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதி இந்த வார இறுதிக்குள் முடிகிறது. குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ஜூலை 1999 ல் துவக்கப்பட்ட ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸின் ரிஃபைனரி, ஏப்ரல் 16 2007 இலிருந்து முற்றிலும் ஏற்றுமதிக்கான ரிஃபைனரியாக மாற்றப்பட்டது. அதன் பெயர் ஜே - 1 என்று அழைக்கப்படுகிறது. அதன் பின்னர் டிசம்பர் 2008ல் அதற்கு பக்கத்திலேயே இன்னொரு ரிஃபைனரி, ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸின் துணை நிறுவனமான ரிலைன்ஸ் பெட்ரோலியத்தால் துவக்கப்பட்டது. அதுவும் முற்றிலும் ஏற்றுமதிக்காக துவங்கப்பட்டதுதான். இந்த ரிஃபைனரியின் பெயர் ஜே - 2. இப்போது இங்கு பெட்ரோல் மற்றும் டீசலை விற்க அனுமதித்திருப்பது குறித்து ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தபோது, எங்களது ஜே - 1 ரிஃபைனரியில் தயாராகும் எரிபொருள் இனிமேலும் பெரும்பாலும் ஏற்றுமதிதான் செய்யப்படும். இருந்தாலும் அங்கு தயாராகும் மீதி பெட்ரோல் மற்றும் டீசல், உள்நாட்டு சந்தையில் விற்கப்படும். ஜே - 1 ல் தயாராகும் 2.5 - 3 மில்லியன் டன் டீசலை நாங்கள் இந்திய பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிண்டுஸ்டான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு விற்போம். அது, அவர்களுக்கு 2009 - 10ல் ஏற்படப்போகும் பற்றாக்குறையை போக்க வசதியாக இருக்கும். மேலும் நாங்கள் மூடியிருந்த 1,432 பெட்ரோல் பம்ப்களை மீண்டும் திறந்து அதன் மூலமாகவும் பெட்ரோல் மற்றும் டீசலை விற்போம் என்றார்.
நன்றி : தினமலர்


Thursday, April 2, 2009

கே.ஜி.படுகையில் எரிவாயு உற்பத்தியை ஆர்.ஐ.எல்., துவங்கியது : இந்தியாவின் இறக்குமதி பில் பெருமளவு குறையும்

கே.ஜி.( கிருஷ்ணா - கோதாவரி ) ஆற்றுப்படுகையில் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸூக்கு சொந்தமான இருக்கும் எண்ணெய் கிணற்றில் இருந்து எரிவாயு உற்பத்தி துவங்கியதை அடுத்து, இந்தியாவின் எரிவாயு இறக்குமதி பில் 9 பில்லியன் டாலர்கள் ( சுமார் 48,000 கோடி ரூபாய் ) வரை குறையும் என்று மத்திய பெட்ரோலிய துறை செயலாளர் ஆர்.எஸ்.பான்டே தெரிவித்தார். கே.ஜி. ஆற்றுப்படுகையில் உற்பத்தி துவங்கப்பட்டு விட்டதாக நேற்று ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் எங்களிடம் தெரிவித்தது என்று ஆர்.எஸ்.பான்டே தெரிவித்தார். ஆரம்பத்தில் அவர்கள் நாள் ஒன்றுக்கு 2.5 மில்லியன் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டர் எரிவாயு உற்பத்தி செய்கிறார்கள் என்றும், பின்னர் நாளையே அது 5 மில்லியனாக அதிகரிக்கப்படும் என்றும் பான்டே கூறினார். அங்கு, அவர்களுக்கு இருக்கும் 15 கிணறுகளில், முதல் கிணற்றில் இருந்து தான் இப்போது எரிவாயு எடுக்கப்படுகிறது. அதிலிருந்து முழு அளவிலான உற்பத்தி இன்னும் மூன்று அல்லது நான்களில் நடக்கும். இன்னும் 15 நாட்களில் அதன் கடைசி கிணற்றில் இருந்தும் உற்பத்தி துவங்கிவிடும் என்று ஆர்.ஐ.எல்., தெரிவித்திருக்கிறது. இன்னும் நான்கு மாதங்களில் அங்கிருந்து கிடைக்கும் மொத்த எரிவாயுவின் அளவு 40 மில்லியன் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டராக இருக்கும் என்றும், இன்னும் ஒரு வருடத்தில் அது 80 மில்லியன் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டராக இருக்கும் என்றும் ஆர்.ஐ.எல்., தெரிவித்ததாக பான்டே தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸின் ஜாம்நகர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ

குஜராத் மாநிலம் ஜாம் நகரில் இருக்கும் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸூக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று திடீரென தீ பிடித்துக்கொண்டது. இது குறித்து அந்த நிறுவனத்தின் அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது, இது லேசான தீ விபத்து தான் என்றும், தீ உடனடியாக அணைக்கப்பட்டு விட்டது என்றும், இதனால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தனர். அங்கு உற்பத்தி வழக்கம்போல் நடந்து வருவதாகவும், ஏற்றுமதியும் வழக்கம் போல் நடப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். நாள் ஒன்றுக்கு 5,80,000 பேரல்கள் எண்ணெய்யை சுத்திகரிக்கும் திறன் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கடந்த டிசம்பர் 2008 ல் தான் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் நிறுவனத்தால் அமைக்கப்பட்டது. முற்றிலும் ஏற்றுமதிக்காக இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டுள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் கச்சா எண்ணெய்யை எரிபொருளாக மாற்றும் இடத்தை கோக்கர் என்கிறார்கள். அந்த இடத்தில் தான் நேற்று தீ பிடித்தது. கோக்கர் தான் கச்சா எண்ணெய்யை எரிபொருளாக, அதாவது பெட்ரோலாக, டீசலாக, நாப்தாவாக மாற்றும்.
நன்றி :தினமலர்


Monday, March 16, 2009

ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க்கள் இந்தியன் ஆயில் கார்பரேஷனுக்கு விற்பனை ?

கடந்த ஒரு வருடத்திற்கு முன் மூடப்பட்ட ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க்கள் இன்று மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், நாடு முழுவதும் இருக்கும் அதன் 1,432 பெட்ரோல் பங்க்கள் இந்தியன் ஆயில் கார்பரேஷனுக்கு விற்கப்படும் அல்லது குத்ததைக்கு கொடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும், ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் மற்றும் இந்தியன் ஆயில் கார்பரேஷனும் இணைந்த நிறுவனமாக ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க்கள் மாற்றப்படும் என்றும், அதன் நிர்வாகம் இந்தியன் ஆயில் கார்பரேஷனிடம் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்தியா முழுவதும் பெட்ரோல் பங்க்களை அமைக்க ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் ரூ.5,000 கோடியை முதலீடு செய்திருக்கிறது. அதை அப்படியே விட்டு விட அது தயாராக இல்லை. எனவே, அரசு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்பரேஷனுடன் பார்ட்னராக சேர்ந்து விட்டால், இதுவரை அரசிடமிருந்து பெட்ரோலுக்காக கிடைக்காத மானியம் இனிமேல் கிடைக்கும். ஏனென்றால், குஜராத் ஜாம் நகரில் ரிலையன்ஸ் க்கு சொந்தமாக இருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் முற்றிலுமாக ஏற்றுமதிக்காக ஏற்படுத்தப்பட்டிருப்பதால், அதிலிருந்தும் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க்களுக்கு பெட்ரோலை எடுத்துக்கொள்ள முடியாமல் இருந்தது.எனவே அது நஷ்டத்திலேயே பெட்ரோல் மற்றும் டீசலை விற்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. எனவேதான் ஒரு வருடத்திற்கு முன் அவைகள் மூடப்பட்டன.
நன்றி : தினமலர்


Tuesday, March 3, 2009

செவ்ரான் நிறுவனத்திடம் இருந்த 5 சதவீத ஆர்.பி.எல்., பங்குகளை ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் வாங்குகிறது

ரிலையன்ஸ் பெட்ரோலியத்தின் 5 சதவீத பங்குகளை வைத்திருந்த அமெரிக்க செவ்ரான் நிறுவனத்திடமிருந்து, அந்த பங்குகளை ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் திரும்ப வாங்குகிறது . பங்கு ஒன்றுக்கு ரூ.60 விலை வைத்து அந்த பங்குகளை ரூ.1,350 கோடிக்கு வாங்கிக்கொள்வதாக ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் தெரிவித்திருக்கிறது. எங்களுக்குள் ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தின் படி, பங்கு ஒன்றுக்கு ரூ.60 விலை வைத்து நாங்கள் ரூ.1,350 கோடிக்கு அந்த பங்குகளை வாங்கிக்கொள்ள இருக்கிறோம் என்றார் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸின் தலைமை நிதி அதிகாரி அலோக் அகர்வால். கடந்த 2006 ஏப்ரல் மாதத்தில் செவ்ரான் நிறுவனத்திற்கும் ரிலையன்ஸ் பெட்ரோலியத்திற்குமிடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி, ரிலையன்ஸ் பெட்ரோலியத்தின் 22.50 கோடி பங்குகளை செவ்ரான் வாங்கியது. இப்போது ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனம், ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸூடன் இணைந்து விட்டதால் அந்த பங்குகளை ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் திரும்ப வாங்குகிறது.
நன்றி : தினமலர்