Friday, December 4, 2009

மாணவர்களுக்கு சிறப்புச் சலுகை: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்

மாணவர்களுக்கான சிறப்பு சலுகையை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் அறிமுகப் படுத்தி உள்ளது. இதன்படி, மாதாந்​திர கட்​ட​ண​மாக ரூ. 11 செலுத்தி, நாளொன்​றுக்கு 500 எஸ்​.எம்.​எஸ்.,​கள் வரை அனுப்​பலாம். இதுகுறித்து நிறு​வ​னத்​தின் தென் பிராந்​தி​யத் தலை​வர் அஜய் அவஸ்தி கூறும்போது, புத்தாண்டை ஒட்டி பல்வேறு சலுகைகளை அளிக்க உள்ளோம்.புதிதாக ரிலையன்ஸ் இணைப்பை பெறுபவர்களுக்கு ஒரு மாதத்திற்கு இலவச எஸ்.எம்.எஸ்., வசதி அளிக்கப் படும் என்று கூறினார். மேலும், கட்​ட​ணக் குறைப்​பில் வாடிக்​கை​யா​ளர்​கள் பய​ன​டை​யும் வகை​யில் மிகக் குறைந்த அளவு கட்​டண விகி​தத்தை ரிலை​யன்ஸ் நிர்​ண​யித்​துள்​ளது. செல்​போ​னில் பேச ஒரு விநா​டிக்கு ஒரு காசு திட்​டம் மட்​டு​மின்றி,​ ஒரு எஸ்​.எம்.​எஸ்.,க்கு ஒரு காசு கட்​ட​ணம் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இதற்கு மேலும் குறைப்​ப​தற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார். தமி​ழ​கத்​தில் மொத்​தம் 4.67 கோடி பேர் செல்​போன் உப​யோ​கிக்​கின்​ற​னர். இதில் ரிலை​யன்ஸ் நிறு​வ​னத்​தின் பங்​க​ளிப்பு 15 சத​வீ​தம் என்​றும் அவர் தெரி​வித்​தார்.
நன்றி : தினமலர்


No comments: