Saturday, December 6, 2008

கூடங்குளத்தில் மேலும் நான்கு அணு உலைகள்: ரஷ்யாவுடன் ஒப்பந்தம்

கூடங்குளத்தில் கூடுதலாக நான்கு அணுசக்தி உலைகள் அமைப்பது, ரஷ்ய டிசைனில் அணு உலைகள் மேலும் அமைப் பது தொடர்பாக, இந்தியா - ரஷ்யா இடையே அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு நேற்று கையெழுத்தானது. மேலும், எம்.ஐ.,-17 ரகத்தைச் சேர்ந்த 80 ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஒத்துழைப் பை வலுப்படுத்துவது என்றும், குறிப்பாக மும்பையில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் குறித்து, இதை கண்டு கொள்ளாத நாடுகளை தூக்கத்தில் இருந்து எழுப்புவது தொடர்பாகவும் கூட்டுப்பிரகடனம் வெளியிடப்பட்டது. இவற்றில் பிரதமர் மன் மோகன் சிங், ரஷ்ய அதிபர் மெட்வேதவ் கையெழுத் திட்டனர். ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் மெட்வேதவுடன் பத்திரிகையாளர் களைச் சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங், 'இருநாட்டு உறவுகளில் இது ஒரு மைல் கல்' என்று வர்ணித்தார். அவர் மேலும் கூறியதாவது: வரும் 2010ம் ஆண்டுக் குள் இரு நாட்டு வர்த்தகத்தை 40 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள் ளது. இந்தியா மற்றும் ரஷ்ய நிறுவனங்கள் கூடுதல் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்தோம். அதேபோல, ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம். மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் மனதை நோகடித்த சம்பவம். பக்கத்து நாடுகள் பயங்கரவாதத்தை ஆதரிப்பது, அந்த நாடுகள் அவர்களுக்கு தங்குமிடமாக இருப்பது பற்றியும் உலக நாடுகள் அறிந்து கொள்ள வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.இந்தியாவுக்குப் பக்க பலமாக ரஷ்யா நின்றது, மிகவும் நல்லெண்ண நடவடிக்கை. இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். உடனிருந்த அதிபர் மெட்வேதவ், 'இருநாடுகளும் வளர்ச்சிப் பாதையில் செல்லும் வகையில் அணுசக்தி ஒப்பந்தங்கள் மேற் கொள்ளப்படுகின்றன. ராணுவ ஒப்பந்தம் மூலம் இரு நாடுகள் இடையே இருந்த சில தடைகள் நீங்கவும், மேலும், வளர்ச்சிப் பாதையில் முன்னேறவும் பேச்சுக்கள் நடந்தன' என்றார். இந்த ஒப்பந்தங்கள் மட்டுமின்றி, அறிவியல் மற்றும் விண்வெளி துறையில் ஒத்துழைப்பு தொடர் பாகவும், அதேபோல, கலாசாரம், சுற்றுலா, சுங்கத்துறை, வர்த்தகம் தொடர்பாகவும் ஒப்பந்தங் கள் கையெழுத்தாகின.
நன்றி ; தினமலர்


கச்சா எண்ணெய் விலை குறையும்

கச்சா எண்ணெய் விலை மீண்டும் சரிந்து, பேரல் ஒன்றுக்கு 1,125 ரூபாய் அளவிற்கு வரும் என்றும், அடுத்தாண்டின் பாதிக்கு மேல் தான் சரிவில் இருந்து மீளும் என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது.
அமெரிக்க வங்கியைச் சார்ந்த மெரில் லிஞ்ச் ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: அடுத்தாண்டின் பின்பகுதியில் தான் கச்சா எண்ணெய் விலை ஏற துவங்கும். பொருளாதார நெருக்கடியால், அதிகமாக எண்ணெய் பயன்படுத்தும் நாடுகளில் எண்ணெய் தேவை குறைந்ததை அடுத்து, கச்சா எண்ணெய் விலை குறைந்துள் ளது. சீனா மற்றும் 'ஓபெக்' அல்லாத நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் போது, கச்சா எண்ணெய் தற்காலிகமாக பேரல் ஒன்றுக்கு 25 அமெரிக்க டாலர் (1,125 ரூபாய்) அளவிற்கு வீழ்ச்சி காணும். 2009ம் ஆண்டு முதல் காலாண்டின் இறுதி மற்றும் இரண்டாம் காலாண்டில் இந்த விலை சரிவு ஏற்படும். இரண்டாம் காலாண்டிற்கு பின் மீண்டும் விலை அதிகரிக்க துவங்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்