Showing posts with label பெட்ரோல். Show all posts
Showing posts with label பெட்ரோல். Show all posts

Thursday, December 24, 2009

பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும்: அடுத்த மாதம் 13ம் தேதி முக்கிய முடிவு

அரசு எண்ணெய் நிறுவனங்களின் நிதி நிலைமை குறித்து ஆய்வு செய்ய, பிரதமர் மன்மோகன் சிங், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா ஆகியோர், அடுத்த மாதம் 13ம் தேதி முக்கிய ஆலோசனை மேற் கொள்கின்றனர். பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப் பது குறித்து விவாதிக்கப்படும் பட்சத்தில், அவைகள் விலை அதிகரிக்கும் . இந்த கூட்டத்தில், திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா மற்றும் திட்டக் கமிஷன் முன்னாள் உறுப்பினர் கிரிட் எஸ்.பாரீக் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது: பெட்ரோலியத் துறை குறிப்பாக அரசு எண்ணெய் நிறுவனங்களின் நிதி நிலைமை குறித்து ஆராய, இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை குறைந்த விலைக்கு விற்பதால், நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இந்த நஷ்டத்தை ஈடுகட்ட, அரசு வழங்கும் எண்ணெய் கடன் பத்திரங்களை கொடுக்காததால், இரண்டாவது காலாண்டில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எனவே, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயத்தை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பது குறித்து, இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.


இதற்கிடையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எஸ்ஸார் ஆயில் ஆகிய தனியார் எண்ணெய் நிறுவனங்களும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயத்தை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க கேட்டு வருகின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டால், பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.49 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 2.38 ரூபாயும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவை தொடர்பாக அரசின் விலை நிர்ணய கொள்கை குறித்து ஆய்வு செய்த குழு, அடுத்த மாதம் இறுதியில் தன் பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
நன்றி : தினமலர்


Saturday, October 24, 2009

பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர்கிறது

பெட்ரோல் விற்பனையாளர்களுக்கு அளிக்கப்படும் கமிஷன் தொகையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதுவரை பெட்ரோலுக்கு, ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.1028 கமிஷன் வழங்கப்படுகிறது. இனி அது ரூ.1098 ஆக உயர்த்தப்பட உள்ளது. இதேபோல் டீசலுக்கு தற்போது, ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.630 வழங்கப்படுகிறது. இனி அது ரூ.670 ஆக உயர்த்தப்பட உள்ளது. இதனால் பெட்ரோல் லிட்டருக்கு 7 காசும், டீசல் லிட்டருக்கு 4 காசும் அதிகரிக்கும். இந்த விலை உயர்வு நாடு முழுவதும் நுகர்வோரிடம் வசூலிக்கப்படும். இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர்


Thursday, August 27, 2009

பெட்ரோல், டீசல் விலை உயராது

'சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போதும், பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை' என, பெட்ரோலியத் துறைச் செயலர் ஆர்.எஸ்.பாண்டே தெரிவித்தார். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் இந்தியன் ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்றில் பேசிய பாண்டே கூறியதாவது: சர்வதேச அளவில், தற்போதைய எண்ணெய் விலைகள் சாதகமானதாக இல்லை. ஆனால், அதற்காக, எரிபொருள் விலையை உயர்த்தும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை. சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலை, தற்போது பேரல் 3,750 ரூபாயாக(டாலர் மதிப்பில் 75) விற்கப்படுகிறது. இதனால், வாகன எரிபொருள் விற்பனை செய்யும் சில்லரை வியாபாரிகளுக்கு, அதிக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பாண்டே கூறினார்.
நன்றி : தினமலர்


Sunday, August 23, 2009

கமிஷன் உயருமா? பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ஏக்கம்

சமையல் காஸ் சிலிண்டர்களுக்கு கமிஷன் உயர்வு அறிவித்தது போல், தங்களுக்கும் கமிஷனை உயர்த்தி அறிவிக்க வேண்டுமென, பெட்ரோலிய அமைச்சகத்திற்கு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், முகவர்கள் மூலமாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் சப்ளை செய்து வருகின்றன. இப்பணியைச் செய்யும் முகவர்களுக்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் உத்தரவுப்படி, எண்ணெய் நிறுவனங்கள் கமிஷன் வழங்கி வருகின்றன. பொதுமக்களுக்கு எல்.பி.ஜி., சிலிண்டர்களை சப்ளை செய்யும் முகவர்களுக்கு, மே மாதம், ஒரு ரூபாய் 40 காசு கமிஷனை உயர்த்தி அறிவிப்பு வெளியானது. இதன்படி, 325 ரூபாய் சமையல் காஸ் சிலிண்டரை விற்றால், முகவருக்கு 21 ரூபாய் 94 காசு கமிஷனாக கிடைக்கும்.
எல்.பி.ஜி., சிலிண்டர் வினியோகிக்கும் முகவர்கள் 6.8 சதவீதத்தை கமிஷனாக பெற்று வருகின்றனர். ஆனால், பெட்ரோல், டீசல் வினியோகிக்கும் முகவர்களான பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கான கமிஷன் உயர்த்தப்படவில்லை. இவர்களுக்கு பெட்ரோல் விற்பனைக்கு 2.26 சதவீதமும், டீசல் விற்பனைக்கு 1.8 சதவீதமும் கமிஷன் வழங்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையில் பல்வேறு மாற்றங்களை மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் கொண்டுவந்தாலும், அதை வினியோகிக்கும் பங்க் உரிமையாளர்களுக்கு எவ்வித பலனும் இல்லாத நிலை தொடர்கிறது. விடுமுறை நாளின்றி பெட்ரோல் டீசல் வினியோகத்தில் ஈடுபடும் தங்களின் கமிஷன் தொகையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என பங்க் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தரப்பில் கூறப்படுவதாவது: நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 14 மணி நேரமும், அதிகபட்சமாக 24 மணிநேரமும் பெட்ரோல் 'பங்க்'களை இயக்கி வருகிறோம். இதனால் மின்சாரம், தொழிலாளர் சம்பளம் என, பெரும் தொகையை செலவிட வேண்டி வருகிறது. எங்களது கமிஷனை உயர்த்தித் தர எண்ணெய் நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்றன. 'பங்க்'களில் பெட்ரோல் ஆவியாதல், டீசலை கையாளும்போது ஏற்படும் இழப்புகளுக்கு எண்ணெய் நிறுவனங்கள் இழப்பீடு வழங்குகின்றன. மாதம் ஒன்றுக்கு 50 ஆயிரம் லிட்டருக்குள் விற்பனை செய்யும் பெட்ரோல் 'பங்க்'களில், பெட்ரோலுக்கு 0.75 சதவீதமும், டீசலுக்கு 0.25 சதவீதமும் எண்ணெய் நிறுவனங்கள் இழப்பு வழங்குகின்றன.
ஒரு மாதத்துக்க்கு 50 ஆயிரம் லிட்டருக்கு மேல் விற்பனை செய்யும் பெட்ரோல் 'பங்க்'களில் பெட்ரோலுக்கு 0.6 சதவீதமும், டீசலுக்கு 0.2 சதவீதமும் இழப்பு வழங்கப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்கள் குறிப்பிடும் இழப்பைத் தவிர, பைப்லைன் லீக், பம்ப் லீக் என பல வகையில் பெட்ரோல், டீசல் வீணாகிறது.
எண்ணெய் நிறுவனங்கள் வழங்கும் இழப்பீடும் போதுமானதாக இல்லை. இதனால் இந்த இழப்பு தொகை எங்கள் தலை மேல் விழுகிறது. இது தவிர, வாகனங்களுக்கு இலவச காற்று வழங்க தனியாக ஒருவரை நியமிக்க எண்ணெய் நிறுவனங்கள் கட்டாயப்படுத்துகின்றன. இதனால், இதற்கான சம்பளம் மற்றும் மின் செலவையும் ஏற்க வேண்டியுள்ளது. எல்.பி.ஜி., சிலிண்டர்களை பொறுத்தவரை அது, 'பேக்' செய்யப்பட்ட பொருள். அதில் இழப்பு ஏதும் ஏற்படாது. அவர்களுக்கு அதிக கமிஷன் வழங்கும் எண்ணெய் நிறுவனங்கள், எங்களுக்கு குறைவாக கமிஷனை வழங்குகின்றன. ஒரு காலத்தில், பெட்ரோல் பங்க் வைத்திருந்தவர்கள் வசதியானவர்களாக பார்க்கப்பட்டனர். தற்போது, தொடர்ந்து தொழிலை நடத்த வேண்டுமே என்ற நோக்கத்திற்காக பலர் பங்க் நடத்தி வருகின்றனர். இந்த நிலை மாறி, தொழில் மேம்பட, எண்ணெய் நிறுவனங்கள் கமிஷன் தொகையை உயர்த்தித் தர வேண்டும். நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி பெட்ரோலிய நிறுவனங்கள் கமிஷன் உயர்வை தள்ளிப் போட முயற்சிக்கின்றன. இதை ஏற்காமல், கமிஷனை உயர்த்தி வழங்க வேண் டும் என எண்ணெய் நிறுவனங் களை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நன்றி : தினமலர்


Friday, July 10, 2009

சர்வதேச சந்தையில் விலை குறைந்தால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் : தியோரா

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 50 முதல் 60 டாலருக்குள் இருந்தால், இந்தியாவில் கடந்த வாரத்தில் கூட்டிய பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டு விடும் என்று பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 70 டாலர் வரை வந்ததால் மத்திய அரசு, பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.4 ம் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2 ம் உயர்த்தியது. ஆனால் கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இந்தியா வாங்கும் பேஸ்கட் குரூட் ஆயில் விலை நேற்றைக்கு பேரலுக்கு 61.58 டாலராகத்தான் இருந்தது. ஜூலை மாதத்தின் அதன் சராசரி விலை பேரலுக்கு 61.12 டாலருக்கும் குறைவான விலையில்தான் இருக்கும் என்று சொல்கிறார்கள். இந்தியாவின் பெட்ரோலிய தேவையில் 75 சதவீதத்தை நாம் இறக்குமதிதான் செய்கிறோம். இந்தியாவில் பெட்ரோலிய பொருட்கள் மானிய விலையில் கொடுக்கப்படுவதால், இந்திய எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை 2008 - 09 நிதி ஆண்டில் ரூ.4,870 கோடி வரை நஷ்டம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பெட்ரோல்,டீசல் விலை உயர்வு அவசியமானதுதான் என்றார் முரளி தியோரா.
நன்றி : தினமலர்

Wednesday, July 1, 2009

பெட்ரோல் டீசல் விலை உயர்வு : இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4ம், டீசல் விலை ரூ.2ம் உயர்வடைகிறது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலாகிறது. டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா சந்தித்து பேசினார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முரளி தியோரா பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.4ம், டீசல் விலை ரூ.2ம் உயர்த்துவதாக அறிவித்தார். இந்த விலை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார்.
நன்றி : தினமலர்


Monday, June 29, 2009

பெட்ரோல், டீசல் விலை உயர்வு உடனடியாக இல்லை : முரளி தியோரா

எல்லோரும் எதிர்பார்த்திருக்கும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உடனடியாக உயர்த்தப்பட மாட்டாது என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை எவ்வாரெல்லாம் மாறுகிறது என்பதை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அதன் அடிப்படையில்தான் இந்தியாவில் விற்கப்படும் சில்லரை விலை பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் மாறுதல் செய்யப்படும் என்றார் அவர். அவர் மேலும் தெரிவித்தபோது, நாம் வாங்கும் பேஸ்கட் குரூட் ஆயிலின் விலை வெள்ளிக்கிழமை அன்று பேரலுக்கு 68.54 டாலராக இருந்தது. அது உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இருந்தாலும் அந்த விலை மேலும் உயருகிறதா என்பதை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறோம். எப்படி இருந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை உயர்த்தும் முன், மத்திய அமைச்சரவை கூடி விவாதித்துதான் முடிவு செய்யும் என்றார். இப்போது இந்திய எண்ணெய் கம்பெனிகள், ஒவ்வொரு லிட்டர் டீசல் விற்கும் போதும் ரூ.2.96 நஷ்டம் அடைகின்றன. பெட்ரோலி விற்கும் போது ரூ.6.08 நஷ்டம் அடைகின்றன.
நன்றி : தினமலர்


Wednesday, June 17, 2009

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இந்த வருடம் அடைய இருக்கும் வருமான இழப்பு ரூ.38,700 கோடி

இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை, பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி. மற்றும் மண்ணெண்ணெய் விற்பனையால், இந்த வருட வருமானத்தில் ரூ.38,700 கோடியை இழப்பார்கள் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்த மூன்று நிறுவனங்களுமே ஒவ்வொரு லிட்டர் டீசல் விற்பனையின் போதும் ரூ.2.96 ஐ இழக்கிறார்கள் என்கின்றனர் அதிகாரிகள். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 70 டாலர் வரை உயர்ந்து விட்டதால், ஏற்கனவே இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் விற்பனையின் போதும் ஆகிக்கொண்டிருந்த ரூ.3.68 நஷ்டம், இப்போது ரூ.6.08 ஆக உயர்ந்து விட்டது. இதன் மூலம் எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி.மற்றும் மண்ணெண்ணெய் விற்பனையால் நாள் ஒன்றுக்கு ரூ.135 கோடி நஷ்டம் அடைந்து வருகின்றன.
நன்றி : தினமலர்


Friday, April 17, 2009

இனிமேல் ரிலையன்ஸ், நேரடியாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலை விற்பனை செய்யும்

இதுவரை ஏற்றுமதிக்காக மட்டுமே எண்ணெய் சுத்திகரிப்பு செய்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்த ஜாம்நகர் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், இனிமேல் ஏற்றுமதியை முடித்துக்கொண்டு இந்தியாவுக்குள்ளும் பெட்ரோல் மற்றும் டீசலை விற்றுக்கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டிருக்கிறது. எனவே தற்போது பெரும்பாலும் மூடிய நிலையில் இருக்கும் 1,432 ரிலையன்ஸ் பெட்ரோல் பம்ப்கள் மூலமாக ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் பெட்ரோல் மற்றும் டீசலை விற்பனை செய்யும். முற்றிலும் ஏற்றுமதிக்காக மட்டும், வருடத்திற்கு 33 மில்லியன் டன் எண்ணெய்யை சுத்திகரிப்பு செய்வதற்காக அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதி இந்த வார இறுதிக்குள் முடிகிறது. குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ஜூலை 1999 ல் துவக்கப்பட்ட ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸின் ரிஃபைனரி, ஏப்ரல் 16 2007 இலிருந்து முற்றிலும் ஏற்றுமதிக்கான ரிஃபைனரியாக மாற்றப்பட்டது. அதன் பெயர் ஜே - 1 என்று அழைக்கப்படுகிறது. அதன் பின்னர் டிசம்பர் 2008ல் அதற்கு பக்கத்திலேயே இன்னொரு ரிஃபைனரி, ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸின் துணை நிறுவனமான ரிலைன்ஸ் பெட்ரோலியத்தால் துவக்கப்பட்டது. அதுவும் முற்றிலும் ஏற்றுமதிக்காக துவங்கப்பட்டதுதான். இந்த ரிஃபைனரியின் பெயர் ஜே - 2. இப்போது இங்கு பெட்ரோல் மற்றும் டீசலை விற்க அனுமதித்திருப்பது குறித்து ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தபோது, எங்களது ஜே - 1 ரிஃபைனரியில் தயாராகும் எரிபொருள் இனிமேலும் பெரும்பாலும் ஏற்றுமதிதான் செய்யப்படும். இருந்தாலும் அங்கு தயாராகும் மீதி பெட்ரோல் மற்றும் டீசல், உள்நாட்டு சந்தையில் விற்கப்படும். ஜே - 1 ல் தயாராகும் 2.5 - 3 மில்லியன் டன் டீசலை நாங்கள் இந்திய பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிண்டுஸ்டான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு விற்போம். அது, அவர்களுக்கு 2009 - 10ல் ஏற்படப்போகும் பற்றாக்குறையை போக்க வசதியாக இருக்கும். மேலும் நாங்கள் மூடியிருந்த 1,432 பெட்ரோல் பம்ப்களை மீண்டும் திறந்து அதன் மூலமாகவும் பெட்ரோல் மற்றும் டீசலை விற்போம் என்றார்.
நன்றி : தினமலர்


Thursday, April 2, 2009

கே.ஜி.படுகையில் எரிவாயு உற்பத்தியை ஆர்.ஐ.எல்., துவங்கியது : இந்தியாவின் இறக்குமதி பில் பெருமளவு குறையும்

கே.ஜி.( கிருஷ்ணா - கோதாவரி ) ஆற்றுப்படுகையில் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸூக்கு சொந்தமான இருக்கும் எண்ணெய் கிணற்றில் இருந்து எரிவாயு உற்பத்தி துவங்கியதை அடுத்து, இந்தியாவின் எரிவாயு இறக்குமதி பில் 9 பில்லியன் டாலர்கள் ( சுமார் 48,000 கோடி ரூபாய் ) வரை குறையும் என்று மத்திய பெட்ரோலிய துறை செயலாளர் ஆர்.எஸ்.பான்டே தெரிவித்தார். கே.ஜி. ஆற்றுப்படுகையில் உற்பத்தி துவங்கப்பட்டு விட்டதாக நேற்று ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் எங்களிடம் தெரிவித்தது என்று ஆர்.எஸ்.பான்டே தெரிவித்தார். ஆரம்பத்தில் அவர்கள் நாள் ஒன்றுக்கு 2.5 மில்லியன் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டர் எரிவாயு உற்பத்தி செய்கிறார்கள் என்றும், பின்னர் நாளையே அது 5 மில்லியனாக அதிகரிக்கப்படும் என்றும் பான்டே கூறினார். அங்கு, அவர்களுக்கு இருக்கும் 15 கிணறுகளில், முதல் கிணற்றில் இருந்து தான் இப்போது எரிவாயு எடுக்கப்படுகிறது. அதிலிருந்து முழு அளவிலான உற்பத்தி இன்னும் மூன்று அல்லது நான்களில் நடக்கும். இன்னும் 15 நாட்களில் அதன் கடைசி கிணற்றில் இருந்தும் உற்பத்தி துவங்கிவிடும் என்று ஆர்.ஐ.எல்., தெரிவித்திருக்கிறது. இன்னும் நான்கு மாதங்களில் அங்கிருந்து கிடைக்கும் மொத்த எரிவாயுவின் அளவு 40 மில்லியன் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டராக இருக்கும் என்றும், இன்னும் ஒரு வருடத்தில் அது 80 மில்லியன் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டராக இருக்கும் என்றும் ஆர்.ஐ.எல்., தெரிவித்ததாக பான்டே தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


Monday, March 16, 2009

ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க்கள் இந்தியன் ஆயில் கார்பரேஷனுக்கு விற்பனை ?

கடந்த ஒரு வருடத்திற்கு முன் மூடப்பட்ட ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க்கள் இன்று மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், நாடு முழுவதும் இருக்கும் அதன் 1,432 பெட்ரோல் பங்க்கள் இந்தியன் ஆயில் கார்பரேஷனுக்கு விற்கப்படும் அல்லது குத்ததைக்கு கொடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும், ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் மற்றும் இந்தியன் ஆயில் கார்பரேஷனும் இணைந்த நிறுவனமாக ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க்கள் மாற்றப்படும் என்றும், அதன் நிர்வாகம் இந்தியன் ஆயில் கார்பரேஷனிடம் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்தியா முழுவதும் பெட்ரோல் பங்க்களை அமைக்க ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் ரூ.5,000 கோடியை முதலீடு செய்திருக்கிறது. அதை அப்படியே விட்டு விட அது தயாராக இல்லை. எனவே, அரசு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்பரேஷனுடன் பார்ட்னராக சேர்ந்து விட்டால், இதுவரை அரசிடமிருந்து பெட்ரோலுக்காக கிடைக்காத மானியம் இனிமேல் கிடைக்கும். ஏனென்றால், குஜராத் ஜாம் நகரில் ரிலையன்ஸ் க்கு சொந்தமாக இருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் முற்றிலுமாக ஏற்றுமதிக்காக ஏற்படுத்தப்பட்டிருப்பதால், அதிலிருந்தும் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க்களுக்கு பெட்ரோலை எடுத்துக்கொள்ள முடியாமல் இருந்தது.எனவே அது நஷ்டத்திலேயே பெட்ரோல் மற்றும் டீசலை விற்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. எனவேதான் ஒரு வருடத்திற்கு முன் அவைகள் மூடப்பட்டன.
நன்றி : தினமலர்


Tuesday, March 3, 2009

செவ்ரான் நிறுவனத்திடம் இருந்த 5 சதவீத ஆர்.பி.எல்., பங்குகளை ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் வாங்குகிறது

ரிலையன்ஸ் பெட்ரோலியத்தின் 5 சதவீத பங்குகளை வைத்திருந்த அமெரிக்க செவ்ரான் நிறுவனத்திடமிருந்து, அந்த பங்குகளை ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் திரும்ப வாங்குகிறது . பங்கு ஒன்றுக்கு ரூ.60 விலை வைத்து அந்த பங்குகளை ரூ.1,350 கோடிக்கு வாங்கிக்கொள்வதாக ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் தெரிவித்திருக்கிறது. எங்களுக்குள் ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தின் படி, பங்கு ஒன்றுக்கு ரூ.60 விலை வைத்து நாங்கள் ரூ.1,350 கோடிக்கு அந்த பங்குகளை வாங்கிக்கொள்ள இருக்கிறோம் என்றார் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸின் தலைமை நிதி அதிகாரி அலோக் அகர்வால். கடந்த 2006 ஏப்ரல் மாதத்தில் செவ்ரான் நிறுவனத்திற்கும் ரிலையன்ஸ் பெட்ரோலியத்திற்குமிடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி, ரிலையன்ஸ் பெட்ரோலியத்தின் 22.50 கோடி பங்குகளை செவ்ரான் வாங்கியது. இப்போது ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனம், ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸூடன் இணைந்து விட்டதால் அந்த பங்குகளை ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் திரும்ப வாங்குகிறது.
நன்றி : தினமலர்


Monday, March 2, 2009

உலகின் 13 வது மிகப்பெரிய எண்ணெய் சத்திகரிப்பு நிறுவனமாகியது ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ்

ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸூடன் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனம் இன்று இணைந்திருப்பதன் மூலம் அது, உலகின் 13 வது மிகப்பெரிய எண்ணெய் சுந்திகரிப்பு நிலையம் என்ற பெருமையை கொண்டிருந்த அமெரிக்காவின் செவ்ரான் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி விட்டு, அந்த இடத்தை பிடித்துக்கொண்டது. இன்று காலை தனித்தனியாக நடந்த ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் மற்றும் ரிலையன்ஸ் பெட்ரோலியம் போர்டு மீட்டிங்கில், ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸூடன் ரிலையன்ஸ் பெட்ரோலியத்தை இணைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்காக 16 ரிலையன்ஸ் பெட்ரோலியம் பங்குகளுக்கு ஒரு ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் பங்கை கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த இணைப்பின் மூலம், குஜராத்தில் உள்ள ஜாம் நகரில் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸூக்கு இருக்கும் 33 மில்லியன் டன் திறன் கொண்ட, முற்றிலும் ஏற்றுமதிக்காக துவங்கப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துடன், அதற்கு பக்கத்திலேயே ரிலையன்ஸ் பெட்ரோலியத்திற்கு இருக்கும் 29 மில்லியன் டன் சுத்திகரிப்பு திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையமும் சேர்ந்து கொண்டதால், அது உலகின் 13 வது மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமாகிறது. இந்தியாவை பொருத்தவரை இப்போது ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் தான் இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை கொண்டிருக்கிறது. இந்தியன் ஆயில் கார்பரேஷனுக்கு 50.7 மில்லியன் திறன் கொண்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தான் இருக்கிறது. எனவே அது, இனிமேல் உலகின் 18 வது பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை கொண்டதாக ஆகிறது.
நன்றி : தினமலர்


ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸூம் ரிலையன்ஸ் பெட்ரோலியமும் இணைந்தன

முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் லிமிடெட்டும், அதன் துணை நிறுவனமான ரிலையன்ஸ் பெட்ரோலியம் லிமிடெட்டும் ஒன்றாக இணைந்தன. மும்பை பங்கு சந்தைக்கு இன்று அந்த நிறுவனம் தெரிவித்த தகவலில், ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸூம் ரிலையன்ஸ் பெட்ரோலியமும், இந்திய கம்பெனி சட்டம் 1956 ன் 391 முதல் 394 வரையிலான பிரிவுகளின் கீழ் ஒன்றாக இணைந்திருப்பதாக அறிவித்திருக்கிறது. இந்த இணைப்பு ஏப்ரல் 1, 2008 முதல் அமலுக்கு வருவதாகவும் அது தெரிவித்திருக்கிறது. இதன்படி ரூ.10 மதிப்ள்ள 16 ரிலையன்ஸ் பெட்ரோலியம் லிமிடெட் பங்குகளுக்கு ஒரு ரூ.10 மதிப்புள்ள ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் லிமிடெட்டின் பங்கு கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த இணைப்பு, அதன் பங்குதாரர்கள் மற்றும் மும்பை, அகமதாபாத் ஐகோர்ட்களின் ஒப்புதலை அடுத்தே அமையும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த இணைப்பு குறித்த தகவல் வெளியானதை அடுத்து, பிப்ரவரியில் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸின் பங்கு மதிப்பு 4.5 சதவீதமும், ரிலையன்ஸ் பெட்ரோலியத்தின் மதிப்பு 12 சதவீதமும் குறைந்திருக்கின்றன.
நன்றி : தினமலர்


Saturday, February 28, 2009

ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸூம் ரிலையன்ஸ் பெட்ரோலியமும் இணைகின்றன

சந்தை முதலீட்டு அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக இருக்கும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் லிமிடெட்டும் ( ஆர் ஐ எல் ) அதன் துணை நிறுவனமான ரிலையன்ஸ் பெட்ரோலியம் லிமிடெட்டும் ஒரே நிறுவனமாக இணைக்கப்படுகின்றன. இந்த தகவல் நேற்று மும்பை பங்கு சந்தைக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த இரு நிறுவனங்களின் போர்டும் தனித்தனியாக மார்ச் 2 ம் தேதி அன்று கூடி இது குறித்து முடிவு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸூக்கு சொந்தமாக, ரிலையன்ஸ் பெட்ரோலியம் என்ற எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் ஒன்று இருந்தது. 2001ல் உற்பத்தியை துவக்கிய அந்த நிறுவனம், 2002 இலேயே ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸூடன் இணைந்து விட்டது. இப்போதிருக்கும் இந்த இரு நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து விட்டால் பின்னர் அந்த நிறுவனத்தில் மொத்த சந்தை முதலீடு ( மார்க்கெட் கேபிடலைஷேசன் ) ரூ.2,33,000 கோடியாக உயர்ந்து விடும். அப்போது அது, இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரி ய நிறுவனமான என்.டி.பி.சி.,யின் சந்தை முதலீட்டை விட 35 சதவீதம் அதிக சந்தை முதலீட்டை கொண்டதாக இருக்கும். இரண்டும் ஒன்றாக இணைந்து விட்டால், உலகின் அதிகம் லாபம் சம்பாதிக்கும் 50 நிறுவனங்களில் ஒன்றாக ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் லிமிடெட்டும் வந்து விடும்.
நன்றி : தினமலர்


Tuesday, December 23, 2008

பொது தேர்தலுக்கு முன்னதாக பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

பொதுத்தேர்தலுக்கு முன்னதாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படலாம் என, பெட்ரோலிய அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.அவர் மேலும் கூறியதாவது:தேர்தல் அறிவிப்பு
களுக்கு முன்னதாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைக் குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகலாம். இப்போது விலையைக் குறைத்தால், கச்சா எண்ணெய் விலை கூடும் போது மீண்டும் விலையைக் கூட்ட முடியாது என்பதால், தற்போதைக்கு விலைக் குறைப்புக்கு வாய்ப்பு இல்லை.இவ்வாறு உயரதிகாரி கூறினார்.
இம்மாத முற்பகுதியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாயும் குறைக்கப்பட்டன. இதன் பின்னும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு 9.98 ரூபாயும், டீசல் விற்பனையில் லிட்டருக்கு 1.03 ரூபாயும் லாபம் ஈட்டி வருகின்றன. கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்தால், இந்த லாபம் 11.48 ரூபாய் மற்றும் 2.92 ரூபாயாக உயரும்.இருந்தாலும், கெரசின் விற்பனையில் லிட்டருக்கு 17.26 ரூபாயும், சமையல் காஸ் விற்பனையில் சிலிண்டர் ஒன்றுக்கு 148.38 ரூபாயும் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.
நன்றி : தினமலர்


Thursday, November 27, 2008

பெட்ரோல் விலை குறைப்பு : இழுபறி பதில் தந்தார் தியோரா

எத்தனை கேள்விகள் கேட்டாலும், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு எப்போது என்பது பற்றி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தியோரா வாய்திறக்க மறுத்துவிட்டார். கடந்த ஒருவாரமாகவே பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பற்றி அதிகம் பேசப்படுகிறது. மத்திய அமைச்சரவை, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பற்றி ஆறு மாநிலத் தேர்தல்கள் முடிந்த பின் முடிவு செய்யும் என்ற கருத்து பேசப்பட்ட போது, நேற்று முன்தினம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு விரைவில் வரும் என்ற கருத்தைக் கூறியிருந்தார் தியோரா. பொருளாதார ஆசிரியர்கள் மாநாட்டில் மத்திய அமைச்சர் தியோரா, அத்துறையின் செயலர் பாண்டே, துணைச் செயலர் சுந்தரேசன், ஓ.என்.ஜி.சி., தலைவர் உட்பட பலரும் சேர்ந்து நேற்று இப்பிரச்னைக்கு விளக்கமளித்தனர். குறிப்பாக பல தொழில் நுட்ப கேள்விகளுக்கு அந்தத் துறையைச் சேர்ந்த செயலர்கள் பதிலளிக்க அனுமதித்ததால், இப்பிரச்னை குறித்து ஒரு மணி நேரம் விளக்கம் தரப்பட்டது. இந்த மாநாட்டில் முரளி தியோரா தெரிவித்த கருத்துக்கள்: இன்று கச்சா எண்ணெய் பேரல் 50 டாலருக்கு கீழே குறைந்திருக்கிறது. முன், 147 டாலர் இருந்த போது நிர்ணயிக்கப்பட்ட விலையா இன்னமும் தொடர்வது என்று காங்கிரஸ் கட்சியிலேயே பலர் கேட்கின்றனர். இந்த விலை குறைப்பில் சம்பந்தப்பட்ட பெட்ரோல், டீசல், மண்ணெண் ணெய் மற்றும் சமையல் காஸ் ஆகிய நான்கில், பெட்ரோல், டீசலில் மட்டும் லாபம் கிடைக்கிறது. இன்றைய தேதியில் பெட்ரோலில் லிட்டருக்கு ரூ. 8.17ம், டீசலில் லிட்டருக்கு 60 பைசாவும் கிடைக்கிறது. அதேசமயம் மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ. 21.64ம், சமையல் காஸ் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.330.20ம் நஷ்டம் ஏற்படுகிறது. மூன்று எண்ணெய் கம்பெனிகளும் தினமும் 90 லட்சம் முதல் கோடி ரூபாய் வரை இழப்பை சந்திக்கின்றன. ஏற்கனவே, அதிக விலையில் கச்சா எண்ணெய் விற்றதில் இருந்து தொடர்ந்த நஷ்டமும், தற்போதைய நஷ்டமும் சேர்ந்து எண்ணெய் கம்பெனிகளுக்கு லட்சத்து 10 ஆயிரம் கோடியாக உள்ளது. இதே அளவு கச்சா எண்ணெய் விலை நீடித்தால், அதன் நஷ்டம் குறைய இன்னமும் ஆறு மாதங்கள் ஆகும். மேலும், எண்ணெய் பத்திரங்கள் மூலம் மத்திய நிதியமைச்சகம் 50 ஆயிரம் கோடியை முன்பே தந்திருக்கிறது. எது எப்படியானாலும் எல்லா அம்சங்களையும் அரசு ஆராய்ந்து பெட்ரோல், டீசல் விலை குறைக்கும் முடிவை எடுக்கும். அதே சமயம், விலை குறைப்பு பற்றி பேசியதாக வந்த செய்தியை அடுத்து தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது என்பது முற்றிலும் தவறு. அப்படி நோட்டீஸ் ஏதும் வரவில்லை. பெட்ரோலுடன், எத்தனால் கலக்கும் திட்டம் தொடர்ந்து மூன்றாண்டுகளாக மேற்கொள்ளப் பட்டு வரும் திட்டம். அதில் 44 கோடி லிட்டர் எத்தனால் தயாரிக்கப்படுகிறது. ஆனால், இந்த விஷயத்தில் மாநில அரசுகள் பின்பற்றும் வரித்திட்டம், மற்ற சில நடைமுறைகளால் பெரிய அளவில் ஊக்கம் பெறவில்லை. இவ்வாறு முரளி தியோரா கூறினார்.
நெருக்கடியான கேள்விகள் கேட்ட போது நகைச்சுவையாக பதிலளித்து பிரச்னையை சமாளித்தார். முன்னதாக செய்தி, ஒளிபரப்பு அமைச்சர் ஆனந்த் சர்மா, 'டிவி'களுக்கு ஒழுங்கு நடைமுறைத் திட்டம் கொண்டுவருவதில் அரசுக்கு உள்ள சிக்கல்களை விளக்கினார். அதே சமயம் ஒழுங்கு நடைமுறைகளை மீறும் சேனல்கள் மீது நடவடிக்கை எடுப்பது அரசின் உரிமை என்றார். தேர்தல் ஆணையம் நோட்டீஸ் : கச்சா எண்ணெய் விலை குறைந் துள்ளதால், டிசம்பர் 24ம் தேதிக்குப் பின், பெட்ரோல், டீசல் விலை குறைக் கப்படும் என, மத்திய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். 'அவரின் இந்த அறிவிப்பு, தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறிய செயல்' எனக் கூறி, பாரதிய ஜனதா கட்சியினர், தேர்தல் ஆணையத்திடம் நேற்று புகார் அளித்தனர். இந்தப் புகாரை அடுத்து, இது சம்பந்தமாக விளக்கம் அளிக்கும்படி, அமைச்சர் முரளி தியோராவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நன்றி : தினமலர்


Tuesday, November 25, 2008

டிசம்பர் 24ம் தேதிக்குப்பின் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் : முரளி தியோரா

சட்டமன்ற தேர்தல் டிசம்பர் 24 ம் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதை அடுத்து, இந்தியாவிலும் பெட்ரோலிய பொருட்களின் விலை குறைக்கப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. நானும் அதே எண்ணத்தில்தான் இருக்கிறேன். ஆனால் டிசம்பர் 24ம் தேதிக்குப்பின்தான் விலையை குறைக்க முடியும் என்றார் தியோரா. சர்வதேச சந்தையில் கடந்த இரண்டு வாரங்களாக கச்சா எண்ணெய், சராசரியாக இருந்த விலையின் அடிப்படையில் எடுத்த கணக்கின்படி, இந்திய எண்ணெய் கம்பெனிகள் பெட்ரோல் விற்பனையில் நாள் ஒன்றுக்கு ரூ.16 கோடியும் டீசல் விற்பனையில் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடியும் லாபம் ஈட்டுகின்றன. இருந்தாலும் நியாய விலைகடை மூலம் மண்ணெண்ணெய் விற்கும்போதும் சமையல் கேஸ் விற்பனையிலும் நஷ்டம்தான் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு லிட்டர் மண்ணெண்ணெயிலும் ரூ. 22.40 ம்,ஒவ்வொரு சிலிண்டர் சமையல் கேஸ் விற்பவையிலும் ரூ.343.49 ம் நஷ்டம் ஏற்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால் இதனால் ஏற்பட்டு வந்த நஷ்டம் குறைந்திருக்கிறது என்றார் தியோரா.
நன்றி : தினமலர்


சென்னையில் சாதா பெட்ரோல் இல்லை : 'ஸ்பீடு' மட்டும் விற்பனை

சென்னையில் தற்போது சாதா பெட்ரோல் விற்பனை நிறுத்தப்பட்டு, 'ஸ்பீடு' ரக பெட்ரோல் விற்பனை மட்டுமே நடைபெறுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அதிக விலை கொடுத்து பெட்ரோல் வாங்கிச் செல்கின்றனர்.
கடந்த இரண்டு நாட்களாக சென்னை நகரில் உள்ள பல்வேறு பெட்ரோல் 'பங்க்'களில் சாதா பெட்ரோலுக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சாதா பெட்ரோல் இல்லை என அறிவிப்பு ஒட்டப் பட்டுள்ளது. 'ஸ்பீடு' ரக பெட்ரோல் மட்டும் தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் சாதா பெட்ரோல் இருக்கும் 'பங்க்'களில் வாகனங்களின் கூட்டம் அலைமோதியது. நேற்று பெரும்பாலான 'பங்க்'களில் 'சாதாரண பெட்ரோல் இல்லை. ஸ்பீடு பெட்ரோல் தான் உள்ளது' என்ற பதில் தான் கிடைத்தது.
சாதாரண பெட்ரோலை விட, 'ஸ்பீடு' ரக பெட்ரோல் விலை சற்று அதிகம். மேலும், ஸ்பீடு பெட்ரோல் போட்டால் தொடர்ந்து அந்த வகை பெட்ரோலை போட்டு வந்தால் தான் இன்ஜின் பழுதடையாமல் இருக்கும். சாதாரண பெட்ரோல் கிடைக்காததால் வேறு வழியின்றி கூடுதல் விலை கொடுத்து 'ஸ்பீடு பெட்ரோல் வாங்கிச் சென்றனர். சில இடங்களில் இதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றதைக் காண முடிந்தது.
நன்றி : தினமலர்


Friday, November 21, 2008

பெட்ரோல் விலை குறைய இன்னமும் ஒரு மாதம்...

சமையல் காஸ் மற்றும் கெரசின் விற்பனையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருப்பதால், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கும் திட்டம் இல்லையென, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது.கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 147 டாலராக அதிகரித்த போது, கடந்த ஜூன் மாதத்தில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு மூன்று ரூபாயும் உயர்த்தப்பட்டன. ஆனால், அதன் பின், கச்சா எண்ணெய் விலை படிப்படியாகக் குறைந்து வருகிறது. தற்போது, ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 50 டாலராகக் குறைந்துள்ளது.இதனால், பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்படலாம் என செய்திகள் வெளியாயின. இந்நிலையில், பெட்ரோலியத் துறை செயலர் ஆர்.எஸ்.பாண்டே கூறுகையில், 'பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விற்பனையில் லாபம் பெற்றாலும், சமையல் காஸ் மற்றும் கெரசின் விற்பனையில், தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. 'இந்த நிலை தொடரும் வரை, பெட்ரோலியப் பொருட்களின் விலைகளைக் குறைப்பது பற்றி பரிசீலிக்கப்படாது. விலைகளைக் குறைப்பது குறித்த திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை' என்றார்.ஆனால், நமது அரசு வாங்கும் கச்சா எண்ணெய் விலை சராசரியாக 48 டாலர் என்று தற்போது அரசால் கணக்கிடப்பட்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் மீதான எக்சைஸ் வரி வரவு கடந்த மாதத்தில் அரசுக்கு குறைந்திருக்கிறது. ஏற்கனவே விலை அதிகரிப்பால் எக்சைஸ் வரிக் குறைப்பை மேற்கொண்ட மத்திய அரசுக்கு இழப்பு 6000 கோடி ரூபாயாகும். ஆகவே, தற்போது பெட்ரோல், டீசல் மீது லிட்டருக்கு எக்சைஸ் வரி ஒரு ரூபாய் விதிப்பது, அதற்குப் பின் பெட்ரோல், டீசலுக்கு லிட்டருக்கு மூன்று ரூபாய் வரை குறைக்கலாம் என்ற திட்டம் அரசிடம் இருப்பதாகக் கூறப்படுகிறது.அதே சமயம், தற்போது ஆறு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடப்பதால், டிசம்பர் மாதக் கடைசி வரை இந்த விலைக் குறைப்பை அமல் படுத்த வேண்டாம். அதுவரை எண்ணெய் கம்பெனிகள் லாபம் அடையட்டும் என்ற கருத்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
நன்றி : தினமலர்