Tuesday, November 25, 2008

டிசம்பர் 24ம் தேதிக்குப்பின் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் : முரளி தியோரா

சட்டமன்ற தேர்தல் டிசம்பர் 24 ம் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதை அடுத்து, இந்தியாவிலும் பெட்ரோலிய பொருட்களின் விலை குறைக்கப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. நானும் அதே எண்ணத்தில்தான் இருக்கிறேன். ஆனால் டிசம்பர் 24ம் தேதிக்குப்பின்தான் விலையை குறைக்க முடியும் என்றார் தியோரா. சர்வதேச சந்தையில் கடந்த இரண்டு வாரங்களாக கச்சா எண்ணெய், சராசரியாக இருந்த விலையின் அடிப்படையில் எடுத்த கணக்கின்படி, இந்திய எண்ணெய் கம்பெனிகள் பெட்ரோல் விற்பனையில் நாள் ஒன்றுக்கு ரூ.16 கோடியும் டீசல் விற்பனையில் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடியும் லாபம் ஈட்டுகின்றன. இருந்தாலும் நியாய விலைகடை மூலம் மண்ணெண்ணெய் விற்கும்போதும் சமையல் கேஸ் விற்பனையிலும் நஷ்டம்தான் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு லிட்டர் மண்ணெண்ணெயிலும் ரூ. 22.40 ம்,ஒவ்வொரு சிலிண்டர் சமையல் கேஸ் விற்பவையிலும் ரூ.343.49 ம் நஷ்டம் ஏற்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால் இதனால் ஏற்பட்டு வந்த நஷ்டம் குறைந்திருக்கிறது என்றார் தியோரா.
நன்றி : தினமலர்


No comments: