![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNsxoY7nzDwi1TgT4Vl2AsRfusIjhqOGn6F4zt62SWXZQN93-FbjrL3wN2siBH9UAq427MPF6bmoUHZ8fzBhEXbkQr3LB4OhhjTXisutgKPcsqG0P2lQtpvss8JFFgNh-f7I4b30ryXqk/s320/1845319.jpg)
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், இந்தியாவின் லட்சுமி மிட்டலை விட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி முதலில் உள்ளதாக, அமெரிக்காவின் 'போர்ப்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, அமெரிக்காவின் 'போர்ப்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: உலகின் பணக்காரர்கள் பட்டியலில், இந்தியாவின் முகேஷ் அம்பானி ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு 97 ஆயிரத்து 500 கோடி ரூபாய். இவருக்கு அடுத்த இடத் தில் இந்தியாவின் லட்சுமி மிட் டல் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 96 ஆயிரத்து 500 கோடி ரூபாய். கடந்தாண்டு பணக்காரர்கள் பட்டியலில் லட்சுமி மிட்டல் நான்காவது இடத்திலும், முகேஷ் அம் பானி ஐந்தாவது இடத்திலும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் பொருளாதார மந்த நிலையால் அதிகளவு நஷ்டமடைந்ததால், கோடீஸ்வரர்கள் பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் கடந்தாண்டு ஆறாவது இடம் பெற்ற அனில் அம்பானி, இந் தாண்டு 34வது இடத்திற்கு தள்ளப் பட்டுள்ளார். இவரின் சொத்து மதிப்பு 50 ஆயிரத்து 500 கோடி ரூபாய். இவரின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்சின் மூன்றில் இரண்டு பங்கு ஷேர்கள் சரிந்ததால், இந்தாண்டு மிக அதிகளவில் நஷ்டமடைந்தார்.
போன் பேச்சு குறைவு: தொலைபேசி பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், பொரு ளாதார நெருக்கடியால், மக்கள் குறைந்த நிமிடங்களே பேசுகின்றனர். மேலும், இந்தியாவின் பொரு ளாதார வீழ்ச்சி, பங்குச் சந்தை நெருக்கடி, அதிகரித்து வரும் போட்டி போன்றவற்றால் அனில் அம்பானியின் சொத்து மதிப்பு குறைந்துள்ளது. இவரின் சொத்து மதிப்பு, கடந் தாண்டை விட கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு குறைந்துள்ளது. உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்த இந்தியாவின் கே.பி.சிங், தற் போது 98வது இடத்திற்கு தள்ளப் பட்டுள்ளார். கடந்தாண்டு ஒரு லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த இவரின் சொத்து மதிப்பு இந்தாண்டு, 25 ஆயிரம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. உலக கோடீஸ்வரர்கள் கிளப்பிலிருந்து விஜய் மல்லையா, துளசி தாண்டி, ஆனந்த் ஜெயின் உட்பட 29 இந்தியர்கள் வெளியேறியுள்ளனர். இவ்வாறு 'போர்ப்ஸ்' பத்திரி கை செய்தியில் கூறப் பட் டுள் ளது.
இந்நிலையில், கடந்த மாதம் இந்திய அரசு, 9 லட்சத்து 53 ஆயிரத்து 231 கோடி ரூபாய்க்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தது. இது, நாட்டின் கோடீஸ் வரர்களின் மொத்த சொத்து மதிப் பில் இரண்டு மடங்கு குறைவு. ஆனால், அமெரிக்க பெடரல் அரசு கடந்த மாதம் 2010ம் ஆண் டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்த பட்ஜெட்டின் மதிப்பு, அமெரிக்க கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பை விட மூன்று மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்த இழப்பு எவ்வளவு?
* உலகில் உள்ள அனைத்து கோடீஸ்வரர்களுக்கும் ஏற்பட்டுள்ள மொத்த இழப்பு 100 லட்சம் கோடி ரூபாய்.
* கடந்த ஆண்டு 1,125 ஆக இருந்த கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை, தற்போது 793 ஆகக் குறைந்துள்ளது.
* கடந்த 2003ம் ஆண்டுக்கு பின், தற்போது முதல் முறையாக கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை சரிந்துள்ளது.
* உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ள பில்கேட்சின் சொத்து மதிப்பு இரண்டு லட்சம் கோடி ரூபாய்.
* முதல் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலில், முதலிடத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் கேட்ஸ் உள்ளார். அவரது சொத்து மதிப்பு இரண்டு லட்சம் கோடி ரூபாய். இரண்டாம் இடத்தில் உள்ள அமெரிக்க வாரன் பபெட் சொத்து மதிப்பு 1 லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாய்.
நன்றி : தினமலர்