Friday, December 26, 2008

பணவீக்கம் மேலும் குறைந்தது

டிசம்பர் 13ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 6.61 சதவீதமாக குறைந்திருக்கிறது. மொத்த விற்பனை விலை அட்டவணை அடிப்படையில் கணக்கிடப்படும் இந்தியாவின் பணவீக்க விகிதம், அதற்கு முந்தின வாரத்தில் 6.84 சதவீதமாக இருந்தது. உற்பத்தி பொருட்களுக்கான வரியை மத்திய அரசு சமீபத்தில் குறைத்தது. அதன் காரணமாக பணவீக்கம் குறைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. பணவீக்கம் 6.57 சதவீதமாக இருக்கும் என்ற ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் கணிப்பை பொய்யாக்கும் விதமாக அதைவிட சிறிது அதிகரித்திருக்கிறது. கடந்த வருடத்தில் இதே காலகட்டத்தில் பணவீக்கம் 3.84 சதவீதமாகத்தான் இருந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


2008ல் மியூச்சுவல் பணட் நிறுவனங்கள் இழந்தது ரூ.1,50,000 கோடி

மியூச்சுவல் பண்ட்டில் முதலீடு செய்தவர்களுக்கு லாபமோ நஷ்டமோ மாறி மாறி வரத்தான் செய்யும் என்பது வேறு விஷயம். ஆனால் 2008 ம் ஆண்டில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள், முன் எப்போதும் இல்லாத அளவாக ரூ.1,50,000 கோடியை ( அல்லது மொத்த முதலீட்டில் மூன்றில் ஒரு பகுதியை ) இழந்திருக்கின்றன. மியூச்சுவல் பண்ட் திட்டம் முதன் முதலில் அமெரிக்காவில் தான் துவங்கப்பட்டிருக்கிறது. அங்குள்ள மாஸாசூசட்ஸ் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட் 1925 ம் வருடம் ஆரம்பித்தது தான் முதல் மியூச்சுவல் பண்ட் என்கிறார்கள். இந்தியாவை பொருத்தவரை இப்போது 36 நிறுவனங்கள் மியூச்சுவல் பண்ட் தொழிலில் இருக்கின்றன. மியூச்சுவல் பண்ட்டிற்கு 2007 ம் வருடம் ஒரு நல்ல வருடமாக இருந்திருக்கிறது. அந்த வருடத்தில் மட்டும் ரூ.2,30,000 கோடி அதில் புதுதாக முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. அதையும் சேர்த்து அந்த வருடத்தில் மொத்தம் ரூ.5,50,000 கோடி முதலீடாக இருந்தது. ஆனால் 2008 ம் வருடம் மியூச்சுவல் பண்ட்க்கு ஒரு மோசமான வருடமாக இருக்கிறது. இந்த வருடம் மட்டும் மியூச்சுவல் பண்ட்டில் ரூ.1,50,000 கோடி முதலீடு குறைந்திருக்கிறது. 2007ல் ரூ.5,50,000 கோடியாக இருந்த அது, இப்போது ரூ.4,00,000 கோடியாக குறைந்திருக்கிறது. மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களோ, 2009ல் எல்லாம் சரியாகி விடும் என்றும், மீண்டும் மக்கள் மியூச்சுவல் பண்ட்டில் முதலீடு செய்ய வருவார்கள் என்று நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.
நன்றி : தினமலர்


தொடர்ந்து சரிந்து வரும் பங்கு சந்தை

தொடர்ந்து நான்காவது நாளாக பங்கு சந்தை சரிந்துள்ளது. இன்று நிப்டி 2900 புள்ளிகளுக்கு கீழேயும், சென்செக்ஸ் 9500 புள்ளிகளுக்கு கீழேயும் சென்று முடிந்திருக்கிறது. இன்று வர்த்தகம் துவங்கி சுமார் 3 மணி நேரம் வரை உயர்ந்திருந்த சென்செக்ஸ் மற்றும் நிப்டி, மதியத்திற்கு மேல் குறைய துவங்கியது. மதியத்திற்கு மேல் சந்தை சரிந்ததற்கு இரண்டு காரணங்கள் சொல்கிறார்கள். அட்வான்ஸ் டாக்ஸ் வசூல் குறைந்திருக்கிறது என்று வந்த செய்தியாலும் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூழும் என்ற அபாயம் இருப்பதாலும் சந்தை சரிந்து விட்டது என்கிறார்கள். மூன்றாவது காலாண்டில் அட்வான்ஸ் டாக்ஸ் வசூல் 22.4 சதவீதம் குறைந்திருக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூழும் என்ற அபாயமும் இன்று அதிகரித்திருக்கிறது. இந்திய முப்படை தளபதிகள் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து ஆலோசனை செய்திருக்கிறார்கள்.இதெல்லாம் பங்கு சந்தையை மதியத்திற்கு மேல் அதிகம் பாதித்திருக்கிறது. ஆயில், பேங்கிங், கேப்பிடல் குட்ஸ், மெட்டல், டெக்னாலஜி, பவர் மற்றும் ரியல் எஸ்டேட் பங்குகள் இறங்கி இருந்தன. ஓ.என்.ஜி.சி., ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், இன்போசிஸ் டெக்னாலஜிஸ், எஸ்.பி.ஐ, ஐசிஐசிஐ பேங்க், பெல், எல் அண்ட் டி, செய்ல், விப்ரோ, ரிலையன்ஸ் இன்ஃப்ரா, டி.எல்.எஃப்., ஆகியவை பெரும் நஷ்டமடைந்தன. மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 239.80 புள்ளிகள் ( 2.51 சதவீதம் ) குறைந்து 9,328.92 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 59.60 புள்ளிகள் ( 2.05 சதவீதம் ) குறைந்து 2,857.25 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


மும்பை நட்சத்திர ஓட்டல்களில் குறைந்து போன 'புக்கிங்'

பயங்கரவாதிகளின் தாக்குதல் மற்றும் பொருளாதார நெருக்கடி போன்ற பல்வேறு காரணங்களால், மும்பை நட்சத்திர ஓட்டல்களில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் எண் ணிக்கை மிகவும் குறைந்துவிட்டதாக ஓட்டல் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு துவக்கத்திலிருந்தே இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வந்தது. பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையும் வரலாறு காணாத அள விற்கு உயர்ந்ததால், அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடு கிடுவென உயர்ந்தது. இதன் காரணமாக, மக்களின் வாழ்க்கைத் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி, மும் பையில், பாக்., பயங்கரவாதிகள், பல நட்சத்திர ஓட்டல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில், 180க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து, நட்சத்திர ஓட் டல்கள் மூடப்பட்டு, கடந்த 21ம் தேதியன்று மீண்டும் திறக்கப்பட் டன. இந்நிலையில், நட்சத்திர ஓட் டல்களில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கிறிஸ்துமஸ் மற் றும் புத்தாண்டு கொண்டாட் டங்களின் எண்ணிக்கை பெருமளவிற்கு குறைந்துவிட்டதாக ஓட்டல் சங்க செயலர் கோர்தே தெரிவித்துள்ளார். மும்பையில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குப் பின்னர், மும்பை நட்சத் திர ஓட்டல்களில் 30 முதல் 40 சதவீதத்துக்கு 'புக்கிங்' குறைந்துவிட்டது. இதன் காரணமாக, ஓட்டலில் பல அறைகள் காலியாக உள்ளன. அதிகமான ஆடம்பர ஓட்டல் களைக் கொண்டுள்ள கோவாவிலும், இதே நிலை தான் காணப் படுகிறது. தாஜ் ஓட்டலில் மொத்தமுள்ள 268 அறைகளில் 150 அறைகள் பழுது பார்க்கப்பட்டன. இருப் பினும், 56 சதவீத அறைகளே 'புக்கிங்' செய்யப்பட்டன. இவ் வாறு கோர்தே கூறினார். மொத்தம் 550 அறைகளைக் கொண்ட டிரைடென்ட் ஓட்டலில் 16 சதவீத அறைகளே நிரம்பியுள்ளன. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, 95 அறைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது என, அதன் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். கடற்கரை அருகில் கட்டப் பட்டுள்ள ஓட்டல்களிலும் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட் டங்களை முன்னிட்டு நடைபெறும் கேளிக்கை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் போன்றவை குறைந்த அளவிலேயே இருக் கும் என, ரிட்ஸ் ஓட்டல் பொதுமேலாளர் ஆனந்த் பட் கூறினார். மும்பை சம்பவத்தை தொடர்ந்து, இந்தியர் தரப்பில் 50 முதல் 60 சதவீத புக்கிங்கும், வெளிநாட்டவர் தரப்பில் 30 சதவீத புக்கிங்குகளும் குறைந்துவிட்டதாக அவர் கூறினார். புத்தாண்டு கொண்டாட்டங் கள் மட்டுமின்றி, ஓட்டல் வாடகையும் பெருமளவில் குறைந்து போய்விட்டதாகவும், அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப் பிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் வருகையும், குறைந்து விட்டதாகவும், இந்திய டிராவல் ஏஜென்ட்கள் சங்க நிர்வாக கமிட்டியின் கவுரவ பொருளாளர் இக்பால் முல்லா கூறினார். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உட்பட்ட மும்பை நட்சத் திர ஓட்டல்கள், தங்களது பழைய நிலையை எட்டுவதற்கு குறைந்தபட்சம் ஆறு முதல் எட்டு மாதங்களாகும் என, ஓட் டல் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
நன்றி : தினமலர்