பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி மருந்து விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற வரும் நோயாளிகள் குறித்த தகவல்களை தனியார் மருத்துவமனைகள் தங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் தற்போது தமிழக அரசு கூறியுள்ள நடவடிக்கைகள் மிகமிக காலம் தாழ்ந்தவை. இந்த முடிவுகளை எப்போதோ தமிழக சுகாதாரத் துறை எடுத்திருக்க வேண்டும். ஆனால் இந்த முடிவை அறிவிக்க 800 பேர் நோய்த் தாக்குதலுக்கு ஆளாகவும், 10-க்கும் மேற்பட்டோர் இறக்கவும் வேண்டியிருந்தது.
பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி மருந்து விலை மிகவும் அதிகமாக இருக்கிறது. ஒரு குடும்பத்தில் நான்கு பேர் என்றாலும் குறைந்தது ஆயிரம் ரூபாய் செலவழித்தாக வேண்டும். அரசு தற்போது அறிவித்துள்ள, ரூ. 24,000 ஆண்டு வருமானம் உள்ள ஏழைகளுக்கு மட்டும் இலவசத் தடுப்பூசி என்பது அர்த்தமற்றது.
நோய்த்தொற்றும் கிருமி, ஏழை என்று கண்டதா, பணக்காரன் என்று கண்டதா?
தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சல் நோய், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்போதே, கேரளத்தின் வழியாக கோவைக்கு வந்து சேர்ந்துவிட்டது. ஆனால் அப்போது தமிழக சுகாதாரத் துறை, இந்த நோய் தமிழ்நாட்டில் இல்லவே இல்லை என்று அறுதியிட்டுக் கூறியது. செம்மொழி மாநாட்டுக்கு வருவோரை அச்சறுத்துவதாக இருக்கும் என்பதால் இவ்வாறு கூறப்பட்டது என்று கருதினாலும், மாநாடு முடிந்த பிறகாகிலும், சுகாதாரத் துறை வேகமாகச் செயல்பட்டு, தடுப்பூசி போடுவதை அமலுக்குக் கொண்டுவந்திருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை.
தமிழ்நாட்டில், மாநில எல்லைப் பகுதிகளில் சிலர் காய்ச்சலால் இறந்தபோது, இதனை பன்றிக் காய்ச்சல் என்று அரசல்புரசலாக மருத்துவர்கள் மூலம் இறந்தவரின் உறவினர்கள் அறிந்தபோதிலும், அதை மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தவும், சான்றளிக்கவும் மருத்துவமனைகள் தயக்கம் காட்டின. மர்மக் காய்ச்சலால் மரணம் என்றுதான் தெரிவிக்கப்பட்டது.
வேலூரில் புகழ்பெற்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்த, தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் பன்றிக் காய்ச்சலால் இறந்தார் என்று கடையநல்லூரில் உள்ள அவரது பெற்றோருக்குத் தகவல் தரப்படுகிறது. ஆனால் சான்றிதழில் மட்டும், பல உறுப்புகள் செயலிழந்ததால் மரணம் என்று மொட்டையாக மருத்துவமனை தெரிவிக்கிறது. செய்திகள் யாவும் அந்த மாணவர் பன்றிக் காய்ச்சலால் இறந்தார் என்றே வருகின்றன. ஆனால் மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத் துறையும் இந்த மாவட்டத்தில் யாரும் பன்றிக் காய்ச்சலால் இறக்கவில்லை என்றே சொல்லிக் கொண்டிருந்தன. ஒசூரைச் சேர்ந்தவர், பெங்களூரில் இறந்ததால்தான் அவருக்குப் பன்றிக் காய்ச்சலால் மரணம் என்று சான்று கிடைக்கிறது.
கோவையில் இறந்தவர்களில் ஒருவர் டாக்டர் என்பதாலும், சென்னையில் இறந்தவர் ஒருவர் தலைமைச் செயலக செய்தித் தொடர்பு பிரிவைச் சேர்ந்த உதவி மக்கள் தொடர்பு அலுவலர் என்பதாலும், ஒருவேளை வேறு வழியின்றி, பன்றிக் காய்ச்சல் என்று ஒப்புக் கொண்டார்களே தவிர, அவர்கள் சாதாரண நபர்களாக இருந்திருந்தால் அவர்களும் மர்மக் காய்ச்சலால் மரணமடைந்ததாகச் சொல்லப்பட்டிருக்கும். ஒரு தொற்றுநோய் பரவி சிலர் சாவதை ஏதோ ஆளுகின்ற அரசியல் கட்சியின் வீழ்ச்சியாகப் பார்க்கப்படும் அச்சம்தான் ஒரு நிர்வாகத்தை இவ்வாறு உண்மையை மறைக்கவும், தள்ளிப் போடவும் வைக்கிறது.
பன்றிக் காய்ச்சல் என்பதை வெளிப்படையாக அறிவித்தால், எந்தெந்தப் பகுதிகளில் அதிகம் என்று கண்டறிந்தால் அந்தந்தப் பகுதிகளில் தீவிர நடவடிக்கை எடுக்கவும், தடுப்பூசி போடவும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முடியும். நோயை முதல்கட்டத்திலேயே கட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும். ஆனால் பன்றிக் காய்ச்சல் தமிழகத்தில் இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டுவிட்டாலே, தமிழக அரசுக்கு இழுக்கு என்பதாகவும், ஏதோ அமைச்சரின் - அரசின் திறமையின்மை என்பதாக எதிர்க்கட்சிகள் பேசும் என்பதாகவும் நினைத்துக் கொண்டு செயல்படுவது மக்களின் உயிருடன் விளையாடுவதற்கு ஒப்பானது என்பதை நிர்வாகம் புரிந்துகொள்ளவில்லை. தமிழ்நாட்டில் சிக்குன் குனியா நோய் தாக்குதல் ஏற்பட்டபோதும் இதே போன்று மக்கள் மடிந்துகொண்டே இருக்க, தமிழக சுகாதாரத் துறை மறுத்துக்கொண்டே இருந்தது. கடைசியில் ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொள்ள நேர்ந்தபோது, சிக்குன் குனியா தமிழ்நாடு முழுவதும் பரவியிருந்தது.
மீண்டும் சிக்குன் குனியாவின் இரண்டாவது தாக்குதல் - தமிழ்நாட்டில் சில இடங்களில் பரவியபோது அப்போதும் அதை மர்மக் காய்ச்சல் என்றே பெயர் புனைந்தார்கள். ஆனால் மருத்துவர்களோ இதனை "செகன்டரி சிக்குன் குனியா' என்று சொல்லி அதற்கான மருந்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.
இப்போது அதே நிலைமைதான் பன்றிக் காய்ச்சலுக்கும் ஏற்பட்டுள்ளது. ஒரு நோய்த் தொற்று இருக்கிறது என்பதைத் தொடக்கத்திலேயே ஒப்புக்கொண்டு அதைத் தடுக்கவும் மக்களை விழிப்புணர்வு பெறச் செய்யவும் முற்படுவதுதான் சுகாதாரத் துறையின் கடமையாக இருக்க வேண்டுமே தவிர, சாவோர் எண்ணிக்கை அதிகரித்த பின்னர், வேறு வழியில்லாமல் ஒப்புக்கொள்வது சரியான வழிமுறை அல்ல.
உண்ண உணவு கிடைக்காமல் மக்கள் சாகும்போதுதான் ஓர் ஆட்சிக்குக் களங்கம் ஏற்படுமே தவிர, ஒரு தொற்றுநோய் பரவுகிறது என்பதை முன்னதாகவே ஒப்புக்கொள்வதால் களங்கம் ஏற்பட்டுவிடாது. மாறாக, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தடுப்பு மருந்துகளை உரியநேரத்தில் கொண்டுசேர்த்த பெருமை கிடைக்கும். நமது தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையைப் பற்றிக் கூறும்போது முதல்வர் கருணாநிதியின் "பூம்புகார்' திரைப்படப் பாடல் வரிதான் நினைவுக்கு வருகிறது - "வரும் முன் காப்பவன்தான் புத்திசாலி, வந்த பின்னே தவிப்பவன்தான் ஏமாளி!'
நன்றி : தினமணி
Showing posts with label தமிழகஅரசு. Show all posts
Showing posts with label தமிழகஅரசு. Show all posts
Tuesday, September 21, 2010
Wednesday, August 25, 2010
முதல்வரின் மனு நீதி
இந்திய நிர்வாக அமைப்பு எஃகு அமைப்பு என ஒரு காலத்தில் அழைக்கப்பட்டது. அறிவுக் கூர்மையும், நிர்வாகத் திறனும் நிறைந்த இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐ.சி.எஸ். தேர்வுக்குப் பயிற்சியளிக்கப்பட்டு உருவாக்கப்பட்டார்கள். ஐ.சி.எஸ். பயிற்சிக்கான கல்லூரி லண்டனில் மட்டுமே இருந்தது. தொடக்கக் காலத்தில் வெள்ளையர்கள் மட்டுமே இதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்கள்.
இந்திய வைசிராயின் நிர்வாகக்குழு, மாநில ஆளுநர்களின் நிர்வாகக் குழு மற்றும் மத்திய, மாநில அரசுகளின் தலைமைச் செயலகங்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் நீதிபதிகள் போன்ற உயர் பதவிகளுக்கு இவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். இவர்களின் கீழ் உள்ள வேலைகளுக்குத் தேவையானவர்களை இங்கிலாந்திலிருந்து கொண்டுவர முடியாது. எனவே அதற்கேற்றவர்களை இந்தியாவில் உருவாக்குவதற்காகத்தான் மெக்காலே கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது.
முதலாம் உலகப் போர் வரை இந்தியர்கள் யாரும் ஐ.சி.எஸ். படிக்க அனுமதிக்கப்பட்டதில்லை. அதற்குப் பிறகே இந்தியர்கள் இப்பயிற்சிபெற அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால், மிக உயர்ந்த அதிகாரப் பொறுப்பில் ஆங்கிலேயர்கள் மட்டுமே நீடித்தார்கள்.
இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நலனைப் பாதுகாப்பதற்கும், அரசுக்கெதிரான கிளர்ச்சிகளை ஒடுக்குவதற்கும் இவர்கள் சிறப்பான பயிற்சி பெற்றிருந்தனர். ஆனாலும் இந்தியா முழுவதிலும் முழுமையான நிர்வாக இயந்திரம் டெல்லி முதல் குக்கிராமம் வரை பிசிரின்றி இயங்கியது. வெள்ளையர்கள் வெளியேறும் போது இந்த நிர்வாக இயந்திரம் சீராக இயங்கியதால்தான் இளம் சுதந்திர அரசு சிக்கலின்றி செயல்பட முடிந்தது.
இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையையொட்டி நாட்டின் பல பகுதிகளில் மூண்டெழுந்த மதக் கலவரங்கள், 500-க்கும் மேற்பட்ட சுதேச சமஸ்தானங்களை இணைக்கும் முயற்சி, ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்றும் திறன் போன்ற முக்கியமான பிரச்னைகளை இந்த நிர்வாக இயந்திரத்தின் துணைக்கொண்டு சுதந்திர இந்திய அரசும், மாநில அரசுகளும் வெற்றிகரமாக சமாளித்தன.
மத்திய உள்துறை அமைச்சராக வல்லபாய் படேல் இருந்த காலத்தில் ஐ.சி.எஸ்.க்குப் பதில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சிக் கல்லூரிகளைத் தொடங்கி சுதந்திர இந்தியாவில் புதிய சூழ்நிலைக்கேற்ப அதிகாரிகளை உருவாக்கும் திட்டத்தை மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்தே ஆங்கிலேய அதிகாரிகள் கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்தியாவில் உள்ள சகல மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்றவற்றில் தேர்ச்சி பெற்று அதிகாரிகளாகப் பொறுப்பேற்றனர்.
அதே வேளையில் மத்திய அரசிலும், மாநில அரசிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். நாடாளுமன்ற ஜனநாயக முறையில் பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றங்களிலும் இடம் பெற்றார்கள். இந்த புதிய சூழ்நிலையில் அதிகார வர்க்கத்கும், அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்குமிடையே உள்ள உறவு குறித்து சிக்கல் ஏற்படாத வகையில் செயல்படவேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டது. பிரதமராக இருந்த நேரு அவர்களும், தமிழக முதலமைச்சர்களாக இருந்த ராஜாஜி, காமராஜர் போன்ற பல்வேறு மாநில முதலமைச்சர்களுக்கும் அரசு நிர்வாகத்தில் கட்சியினர் தலையீடு செய்வதை ஒரு போதும் அனுமதிக்கவில்லை. சில வேளைகளில் கட்சியினர் நிர்வாகத்தில் குறுக்கீடு செய்தபோது உடனடியாகத் தலையிட்டு அவர்களைத் தண்டிக்கத் தவறியதில்லை.
மக்கள் பிரச்சனைக்களுக்காக அதிகாரிகளை அணுகுவதைத் தவறாகக் கருதவில்லை. ஆனால் சட்டத்திற்குப் புறம்பானதும், நியாயமற்றதுமான பரிந்துரைகளுக்காக அதிகாரிகளை அணுகுவதை ஒருபோதும் அனுமதிக்கவில்லை.
எடுத்துக்காட்டாக சென்னையில் பருத்திச் சூதாட்டம் என்ற பெயரில் ஏழை அப்பாவி மக்கள் மோசடி செய்யப்பட்டதையும், கோவையில் பெரும் தொழிலதிபர் ஒருவர் கள்ளநோட்டு அச்சடித்துப் புழக்கத்தில் விட்டதையும் குறித்து உயர் போலீஸ் அதிகாரியாக இருந்த எப்.வி. அருள் மிகத் திறமையாகப் புலனாய்வு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மிகமிகச் செல்வாக்குப் படைத்தவர்களாக இருந்தும் கொஞ்சமும் தயங்காது அவர்களைக் கைது செய்தார். முதலமைச்சராக இருந்த காமராஜருக்கு பல்வேறு வகையான நெருக்கடிகள் கொடுக்கப்பட்டபோதிலும் அவர் அருள் எடுத்த நடவடிக்கைகளில் கொஞ்சமும் தலையிடவில்லை. முதலமைச்சரின் நேர்மை அவரின் கீழிருந்த அதிகாரிகளையும் நேர்மையாக்கி திறமையுடன் செயல்பட வழிவகுத்தது.
இன்னும் எவ்வளவோ எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். ஆனால், இன்று நேர்மையான அதிகாரிகள் பழிவாங்கப்படுகிறார்கள். அறிவாற்றலும் திறமையும் நிறைந்த இளைஞர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், தேர்வுகளில் கலந்து கொண்டு மிகக் கடுமையாக வடிகட்டப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரிகளாக வருகிறார்கள். ஆனால் அவர்களை அரசியல் மலைப் பாம்புகள் சுற்றி வளைத்து மிரட்டுகின்றன.
கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் நிர்வாகம் முழுமையாகக் கட்சிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அமைச்சர்களும், மாவட்டச் செயலர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் - தங்கள் விரும்பியபடியெல்லாம் அரசு அலுவலர்களை ஆட்டிப் படைக்கின்றனர்.
முதலமைச்சரின் குடும்பத்திலிருந்தும், அமைச்சர்களின் குடும்பங்களிலிருந்தும் பல அதிகார மையங்கள் அதிகாரிகளை ஆட்டிப் படைக்கின்றன. இதன் விளைவாக அரசு நிர்வாக இயந்திரம் சீரழிந்து போய்க் கிடக்கிறது. இதன் காரணமாக பல அதிகாரிகள் அமைச்சர்களின் விசுவாசிகளாக கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்களாக மாறியதன் விளைவாக நிர்வாக இயந்திரம் பிளவுபட்டுக் கிடக்கிறது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பதவி உயர்வு, வேலை மாறுதல் போன்றவை முறைப்படி நடைபெறுவதில்லை. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் விருப்பு வெறுப்புக்கேற்ப நடைபெறுவதால் பெரும்பாலான அதிகாரிகள் எதிர்த்து நிற்க முடியாமல் பணிந்து விடுகிறார்கள். ஊழலுக்குத் துணைபோகிறார்கள். நாளடைவில் அவர்களும் ஊழல்வாதிகளாக ஆகிவிடுகின்றனர். நிர்வாகத்தின் முதுகெலும்பாக விளங்கும் அதிகாரிகள், முதுகெலும்பில்லாமல் வளைந்து கொடுக்கவேண்டிய நிலைமைக்கு ஆளாக்கப்பட்டுவிட்டனர்.
ஊழலுக்குத் துணை நிற்காத அதிகாரிகள் திட்டமிட்டுப் பழிவாங்கப்படுகிறார்கள். அதற்கு சிறந்த உதாரணமாக உமாசங்கர், ஐ.ஏ.எஸ். திகழ்கிறார். மதுரை மாவட்டத்தில் 1991-1996 வரை அ.தி.மு.க. ஆட்சியின்போது கிராமங்களில் சுடுகாட்டுக் கூரைகள் அமைக்கப்பட்டதில் பெருமளவில் ஊழல் நடைபெற்று இருப்பதை அப்போதைய துணைக் கலெக்டரான உமாசங்கர் கண்டுபிடித்தார். இந்த ஊழலில் அப்போது அமைச்சர்களாக இருந்த செல்வகணபதி, ஈஸ்வரமூர்த்தி, ஊரகவளர்ச்சித் துறைச் செயலர் ஆச்சாரியலு மற்றும் பல அதிகாரிகள் சம்பந்தப்பட்டு இருப்பதாக சி.பி.ஐ. கண்டுபிடித்தது. இந்த ஊழலைக் கண்டுபிடித்த உமாசங்கரைப் பாராட்டிப் பரிசு வழங்க வேண்டிய தி.மு.க. அரசு அவர் மீதே ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி தாற்காலிக வேலை நீக்கம் செய்துள்ளது.
கடந்த இரு ஆண்டுகளில் தி.மு.க. அரசின் பல துறைகளில் நடைபெற்று வரும் முறைகேடுகளை இவர் கண்டுபிடித்ததால் அடிக்கடி வெவ்வேறு துறைகளுக்கு இடமாற்றம் செய்து பழிவாங்க முயன்றது. எந்தத் துறைக்கு மாற்றினாலும் அத்துறையில் ஊழல்களை அம்பலப்படுத்தும் பணியினை இவர் தொடர்ந்தார். எனவே வேறு வழியில்லாமல் இவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி பழிவாங்க அரசு முற்பட்டுள்ளது.
சுடுகாட்டுக்கூரை ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் செல்வகணபதி இப்போது தி.மு.க.வில் தஞ்சம் புகுந்து தி.மு.க.வின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார். இந்த வழக்கு விசாரணை இன்னமும் நடைபெற்று வருகிறது. முக்கிய சாட்சியான உமாசங்கர் மீதே ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டால் அவரது சாட்சியம் நம்பத்தகாதது ஆகிவிடும் என்பதற்காக இந்தப் பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கக்கூடும்.
மத்திய அமைச்சர் ஆ. ராசா மீது ஒரு லட்சம் கோடி ரூபாய் பெறுமான ஊழல் குற்றம் சுமத்தப்பட்டபோது அவர் ஒரு தலித் என்பதால்தான் பழிவாங்கப்படுகிறார் என வக்காலத்து வாங்கும் முதல்வர் கருணாநிதி தனது அரசின் ஊழலை மறைக்க தலித் அதிகாரியான உமாசங்கரை பழிவாங்கத் துடிப்பது என்ன நியாயம்?
சென்னை உயர் நீதிமன்றத்துக்குள் புகுந்து நீதிபதிகளையும், வழக்கறிஞர்களையும், மிகக் கொடுமையான முறையில் தாக்கிய காவலர்களை ஏவிய சென்னை மாநகரக் கூடுதல் ஆணையர், இணை ஆணையர் ஆகியோரைப் பதவி இடைநீக்கம் செய்யவேண்டுனெ உயர் நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமல் அவர்களைக் காப்பாற்றும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் முறையிட அனுமதித்துள்ள முதலமைச்சர், குற்றச்சாட்டு நீதிமன்றத்தால் உறுதி செய்யப்படாத நிலையில் உமாசங்கரை மட்டும் இடைநீக்கம் செய்தது ஏன்?
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மத்திய அரசின் நேரடி நிர்வாகத்திற்கு உள்பட்டவர்கள். இவர்களின் பதவிக்காலப் பதிவேடு மத்திய உள்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
எனவே உமாசங்கர் மீது தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றியும், தமிழக அரசு மீது உமாசங்கர் சாற்றியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சரான ப.சிதம்பரம் முன்வர வேண்டும். அதற்குரிய துணிவும், நேர்மையும் அவருக்கு இருக்குமா? கூட்டணி நிர்பந்தங்கள் மத்திய அரசின் கண்ணை மறைக்காமல் இருக்குமா?
தன்னை நல்லாட்சிக்குச் சரித்திரம் படைத்த சோழப் பேரரசர்களுடன் ஒப்பிட்டு தனக்குத்தானே புகழாரம் சூட்டி மகிழ்ந்து கொள்ளும் முதலமைச்சர் கருணாநிதி, உண்மையிலேயே மனுநீதிச் சோழனாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் சிரிப்பு வருகிறது. தனக்கும், தனது குடும்பத்தினருக்கும், தனது கட்சியினருக்கும் ஒரு நீதியும், மற்றவர்களுக்கு வேறொரு நீதியும் வழங்கிச் சரித்திரம் படைத்திருப்பார் என்று நம்பலாம். பாருங்களேன், கட்சிக்காரரான "தலித்' அமைச்சர் ஆ. ராசாவுக்கு ஒரு நீதி, தனது குடும்பத் தொலைக்காட்சி நிறுவனங்களுக்குத் தொந்தரவாக இருந்த "தலித்' அதிகாரி உமாசங்கருக்கு ஒரு நீதி என்பதுதானே தமிழக முதல்வரின் மனு நீதி...?
கட்டுரையாளர் : பழ.நெடுமாறன்
நன்றி : தினமணி
இந்திய வைசிராயின் நிர்வாகக்குழு, மாநில ஆளுநர்களின் நிர்வாகக் குழு மற்றும் மத்திய, மாநில அரசுகளின் தலைமைச் செயலகங்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் நீதிபதிகள் போன்ற உயர் பதவிகளுக்கு இவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். இவர்களின் கீழ் உள்ள வேலைகளுக்குத் தேவையானவர்களை இங்கிலாந்திலிருந்து கொண்டுவர முடியாது. எனவே அதற்கேற்றவர்களை இந்தியாவில் உருவாக்குவதற்காகத்தான் மெக்காலே கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது.
முதலாம் உலகப் போர் வரை இந்தியர்கள் யாரும் ஐ.சி.எஸ். படிக்க அனுமதிக்கப்பட்டதில்லை. அதற்குப் பிறகே இந்தியர்கள் இப்பயிற்சிபெற அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால், மிக உயர்ந்த அதிகாரப் பொறுப்பில் ஆங்கிலேயர்கள் மட்டுமே நீடித்தார்கள்.
இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நலனைப் பாதுகாப்பதற்கும், அரசுக்கெதிரான கிளர்ச்சிகளை ஒடுக்குவதற்கும் இவர்கள் சிறப்பான பயிற்சி பெற்றிருந்தனர். ஆனாலும் இந்தியா முழுவதிலும் முழுமையான நிர்வாக இயந்திரம் டெல்லி முதல் குக்கிராமம் வரை பிசிரின்றி இயங்கியது. வெள்ளையர்கள் வெளியேறும் போது இந்த நிர்வாக இயந்திரம் சீராக இயங்கியதால்தான் இளம் சுதந்திர அரசு சிக்கலின்றி செயல்பட முடிந்தது.
இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையையொட்டி நாட்டின் பல பகுதிகளில் மூண்டெழுந்த மதக் கலவரங்கள், 500-க்கும் மேற்பட்ட சுதேச சமஸ்தானங்களை இணைக்கும் முயற்சி, ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்றும் திறன் போன்ற முக்கியமான பிரச்னைகளை இந்த நிர்வாக இயந்திரத்தின் துணைக்கொண்டு சுதந்திர இந்திய அரசும், மாநில அரசுகளும் வெற்றிகரமாக சமாளித்தன.
மத்திய உள்துறை அமைச்சராக வல்லபாய் படேல் இருந்த காலத்தில் ஐ.சி.எஸ்.க்குப் பதில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சிக் கல்லூரிகளைத் தொடங்கி சுதந்திர இந்தியாவில் புதிய சூழ்நிலைக்கேற்ப அதிகாரிகளை உருவாக்கும் திட்டத்தை மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்தே ஆங்கிலேய அதிகாரிகள் கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்தியாவில் உள்ள சகல மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்றவற்றில் தேர்ச்சி பெற்று அதிகாரிகளாகப் பொறுப்பேற்றனர்.
அதே வேளையில் மத்திய அரசிலும், மாநில அரசிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். நாடாளுமன்ற ஜனநாயக முறையில் பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றங்களிலும் இடம் பெற்றார்கள். இந்த புதிய சூழ்நிலையில் அதிகார வர்க்கத்கும், அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்குமிடையே உள்ள உறவு குறித்து சிக்கல் ஏற்படாத வகையில் செயல்படவேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டது. பிரதமராக இருந்த நேரு அவர்களும், தமிழக முதலமைச்சர்களாக இருந்த ராஜாஜி, காமராஜர் போன்ற பல்வேறு மாநில முதலமைச்சர்களுக்கும் அரசு நிர்வாகத்தில் கட்சியினர் தலையீடு செய்வதை ஒரு போதும் அனுமதிக்கவில்லை. சில வேளைகளில் கட்சியினர் நிர்வாகத்தில் குறுக்கீடு செய்தபோது உடனடியாகத் தலையிட்டு அவர்களைத் தண்டிக்கத் தவறியதில்லை.
மக்கள் பிரச்சனைக்களுக்காக அதிகாரிகளை அணுகுவதைத் தவறாகக் கருதவில்லை. ஆனால் சட்டத்திற்குப் புறம்பானதும், நியாயமற்றதுமான பரிந்துரைகளுக்காக அதிகாரிகளை அணுகுவதை ஒருபோதும் அனுமதிக்கவில்லை.
எடுத்துக்காட்டாக சென்னையில் பருத்திச் சூதாட்டம் என்ற பெயரில் ஏழை அப்பாவி மக்கள் மோசடி செய்யப்பட்டதையும், கோவையில் பெரும் தொழிலதிபர் ஒருவர் கள்ளநோட்டு அச்சடித்துப் புழக்கத்தில் விட்டதையும் குறித்து உயர் போலீஸ் அதிகாரியாக இருந்த எப்.வி. அருள் மிகத் திறமையாகப் புலனாய்வு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மிகமிகச் செல்வாக்குப் படைத்தவர்களாக இருந்தும் கொஞ்சமும் தயங்காது அவர்களைக் கைது செய்தார். முதலமைச்சராக இருந்த காமராஜருக்கு பல்வேறு வகையான நெருக்கடிகள் கொடுக்கப்பட்டபோதிலும் அவர் அருள் எடுத்த நடவடிக்கைகளில் கொஞ்சமும் தலையிடவில்லை. முதலமைச்சரின் நேர்மை அவரின் கீழிருந்த அதிகாரிகளையும் நேர்மையாக்கி திறமையுடன் செயல்பட வழிவகுத்தது.
இன்னும் எவ்வளவோ எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். ஆனால், இன்று நேர்மையான அதிகாரிகள் பழிவாங்கப்படுகிறார்கள். அறிவாற்றலும் திறமையும் நிறைந்த இளைஞர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், தேர்வுகளில் கலந்து கொண்டு மிகக் கடுமையாக வடிகட்டப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரிகளாக வருகிறார்கள். ஆனால் அவர்களை அரசியல் மலைப் பாம்புகள் சுற்றி வளைத்து மிரட்டுகின்றன.
கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் நிர்வாகம் முழுமையாகக் கட்சிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அமைச்சர்களும், மாவட்டச் செயலர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் - தங்கள் விரும்பியபடியெல்லாம் அரசு அலுவலர்களை ஆட்டிப் படைக்கின்றனர்.
முதலமைச்சரின் குடும்பத்திலிருந்தும், அமைச்சர்களின் குடும்பங்களிலிருந்தும் பல அதிகார மையங்கள் அதிகாரிகளை ஆட்டிப் படைக்கின்றன. இதன் விளைவாக அரசு நிர்வாக இயந்திரம் சீரழிந்து போய்க் கிடக்கிறது. இதன் காரணமாக பல அதிகாரிகள் அமைச்சர்களின் விசுவாசிகளாக கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்களாக மாறியதன் விளைவாக நிர்வாக இயந்திரம் பிளவுபட்டுக் கிடக்கிறது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பதவி உயர்வு, வேலை மாறுதல் போன்றவை முறைப்படி நடைபெறுவதில்லை. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் விருப்பு வெறுப்புக்கேற்ப நடைபெறுவதால் பெரும்பாலான அதிகாரிகள் எதிர்த்து நிற்க முடியாமல் பணிந்து விடுகிறார்கள். ஊழலுக்குத் துணைபோகிறார்கள். நாளடைவில் அவர்களும் ஊழல்வாதிகளாக ஆகிவிடுகின்றனர். நிர்வாகத்தின் முதுகெலும்பாக விளங்கும் அதிகாரிகள், முதுகெலும்பில்லாமல் வளைந்து கொடுக்கவேண்டிய நிலைமைக்கு ஆளாக்கப்பட்டுவிட்டனர்.
ஊழலுக்குத் துணை நிற்காத அதிகாரிகள் திட்டமிட்டுப் பழிவாங்கப்படுகிறார்கள். அதற்கு சிறந்த உதாரணமாக உமாசங்கர், ஐ.ஏ.எஸ். திகழ்கிறார். மதுரை மாவட்டத்தில் 1991-1996 வரை அ.தி.மு.க. ஆட்சியின்போது கிராமங்களில் சுடுகாட்டுக் கூரைகள் அமைக்கப்பட்டதில் பெருமளவில் ஊழல் நடைபெற்று இருப்பதை அப்போதைய துணைக் கலெக்டரான உமாசங்கர் கண்டுபிடித்தார். இந்த ஊழலில் அப்போது அமைச்சர்களாக இருந்த செல்வகணபதி, ஈஸ்வரமூர்த்தி, ஊரகவளர்ச்சித் துறைச் செயலர் ஆச்சாரியலு மற்றும் பல அதிகாரிகள் சம்பந்தப்பட்டு இருப்பதாக சி.பி.ஐ. கண்டுபிடித்தது. இந்த ஊழலைக் கண்டுபிடித்த உமாசங்கரைப் பாராட்டிப் பரிசு வழங்க வேண்டிய தி.மு.க. அரசு அவர் மீதே ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி தாற்காலிக வேலை நீக்கம் செய்துள்ளது.
கடந்த இரு ஆண்டுகளில் தி.மு.க. அரசின் பல துறைகளில் நடைபெற்று வரும் முறைகேடுகளை இவர் கண்டுபிடித்ததால் அடிக்கடி வெவ்வேறு துறைகளுக்கு இடமாற்றம் செய்து பழிவாங்க முயன்றது. எந்தத் துறைக்கு மாற்றினாலும் அத்துறையில் ஊழல்களை அம்பலப்படுத்தும் பணியினை இவர் தொடர்ந்தார். எனவே வேறு வழியில்லாமல் இவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி பழிவாங்க அரசு முற்பட்டுள்ளது.
சுடுகாட்டுக்கூரை ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் செல்வகணபதி இப்போது தி.மு.க.வில் தஞ்சம் புகுந்து தி.மு.க.வின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார். இந்த வழக்கு விசாரணை இன்னமும் நடைபெற்று வருகிறது. முக்கிய சாட்சியான உமாசங்கர் மீதே ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டால் அவரது சாட்சியம் நம்பத்தகாதது ஆகிவிடும் என்பதற்காக இந்தப் பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கக்கூடும்.
மத்திய அமைச்சர் ஆ. ராசா மீது ஒரு லட்சம் கோடி ரூபாய் பெறுமான ஊழல் குற்றம் சுமத்தப்பட்டபோது அவர் ஒரு தலித் என்பதால்தான் பழிவாங்கப்படுகிறார் என வக்காலத்து வாங்கும் முதல்வர் கருணாநிதி தனது அரசின் ஊழலை மறைக்க தலித் அதிகாரியான உமாசங்கரை பழிவாங்கத் துடிப்பது என்ன நியாயம்?
சென்னை உயர் நீதிமன்றத்துக்குள் புகுந்து நீதிபதிகளையும், வழக்கறிஞர்களையும், மிகக் கொடுமையான முறையில் தாக்கிய காவலர்களை ஏவிய சென்னை மாநகரக் கூடுதல் ஆணையர், இணை ஆணையர் ஆகியோரைப் பதவி இடைநீக்கம் செய்யவேண்டுனெ உயர் நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமல் அவர்களைக் காப்பாற்றும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் முறையிட அனுமதித்துள்ள முதலமைச்சர், குற்றச்சாட்டு நீதிமன்றத்தால் உறுதி செய்யப்படாத நிலையில் உமாசங்கரை மட்டும் இடைநீக்கம் செய்தது ஏன்?
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மத்திய அரசின் நேரடி நிர்வாகத்திற்கு உள்பட்டவர்கள். இவர்களின் பதவிக்காலப் பதிவேடு மத்திய உள்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
எனவே உமாசங்கர் மீது தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றியும், தமிழக அரசு மீது உமாசங்கர் சாற்றியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சரான ப.சிதம்பரம் முன்வர வேண்டும். அதற்குரிய துணிவும், நேர்மையும் அவருக்கு இருக்குமா? கூட்டணி நிர்பந்தங்கள் மத்திய அரசின் கண்ணை மறைக்காமல் இருக்குமா?
தன்னை நல்லாட்சிக்குச் சரித்திரம் படைத்த சோழப் பேரரசர்களுடன் ஒப்பிட்டு தனக்குத்தானே புகழாரம் சூட்டி மகிழ்ந்து கொள்ளும் முதலமைச்சர் கருணாநிதி, உண்மையிலேயே மனுநீதிச் சோழனாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் சிரிப்பு வருகிறது. தனக்கும், தனது குடும்பத்தினருக்கும், தனது கட்சியினருக்கும் ஒரு நீதியும், மற்றவர்களுக்கு வேறொரு நீதியும் வழங்கிச் சரித்திரம் படைத்திருப்பார் என்று நம்பலாம். பாருங்களேன், கட்சிக்காரரான "தலித்' அமைச்சர் ஆ. ராசாவுக்கு ஒரு நீதி, தனது குடும்பத் தொலைக்காட்சி நிறுவனங்களுக்குத் தொந்தரவாக இருந்த "தலித்' அதிகாரி உமாசங்கருக்கு ஒரு நீதி என்பதுதானே தமிழக முதல்வரின் மனு நீதி...?
கட்டுரையாளர் : பழ.நெடுமாறன்
நன்றி : தினமணி
Labels:
ஊழல்,
கட்டுரை,
தமிழகஅரசு,
நீதி மன்றம்
எதிர்ப்பு தேவைதானா?
அடுத்த கல்வியாண்டு முதலாக மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு அகில இந்திய அளவில் நடத்தப்பட வேண்டும் என்கிற முடிவு, மத்திய அமைச்சரவையால் ஏற்றுக்கொண்ட போதிலும், தமிழ்நாட்டில் எழுப்பப்பட்ட எதிர்ப்பினால், இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் எதிர்ப்புக்குரல் எழுப்பிய திமுக, அதிமுக உறுப்பினர்கள் ஒருமித்து நின்று ஆச்சரியத்தை அளித்தன. அதைவிட ஆச்சரியம், பொதுத்தேர்வை அனுமதித்தால் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்போவதாக அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவும், தான் பிரதமருக்கு எழுதிய கடிதத்தின் விளைவுதான் இந்த நடவடிக்கை என்று தமிழக முதல்வர் கருணாநிதியும், யாரால் நடந்தது என்பதில் பெயர் தட்டிச் செல்ல போட்டி போடத் தொடங்கிவிட்டனர்.
இந்தப் பொது நுழைவுத் தேர்வு கூடாது என்று சொல்வதற்கு இவர்கள் சொல்லும் காரணங்கள்:
ஒன்று: ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். ஏனென்றால், அவர்களால் இதற்கான பயிற்சி பெறும் வசதிகள் கிடையாது.
இரண்டு: 69 சதவீத இடஒதுக்கீடு பாதிக்கப்படும். சமூக நீதி பாதிக்கும்
மூன்று: மற்ற மாநிலங்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். அப்படியானால் 50 சதவீத மாணவர்கள் இங்கே வந்து படித்துவிட்டுத் தங்கள் மாநிலங்களுக்குச் சென்றுவிடுவார்கள்.
இவர்கள் சொல்லும் இந்த 3 வாதங்களும் எந்த அளவுக்குச் சரியானவை?
முதலாவதாக, ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் 1,398 மாணவர்கள், கலந்தாய்வின் மூலம் சேர்கின்றனர். இவர்களில் எத்தனை பேர் ஏழைகள்? குறைந்தது 10 பேர் இருப்பார்களா? இவர்களில் எத்தனை பேர் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தவர்கள்? ஒவ்வொரு தனியார் பள்ளியும் தன் நிறுவனத்தில் படித்து எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த மாணவர்களைப் படத்துடன் விளம்பரமாக வெளியிடுகின்றனவே, அரசு இந்த ஏழை மாணவர்களைப் பாராட்டும்விதமாக, மற்ற ஏழைகளை ஊக்குவிக்கும் விதமாக அவர்களது படங்களுடன் பெயர்ப் பட்டியலை விளம்பரமாக வெளியிடலாமே! முடியாது. ஏனென்றால், இவர்கள் சொல்வது உண்மையல்ல.
கலந்தாய்வில் "கட்-ஆஃப்' மதிப்பெண் 197-க்குள்ளாகவே அரசு ஒதுக்கீடு அனைத்தும் - தாழ்த்தப்பட்டோர் ஒதுக்கீடு உள்பட- முடிந்துபோகிறது என்பதே உண்மை. இவ்வாறு, உயர்ந்த கட்ஆப் மதிப்பெண்களுடன் மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவர்களில் ஏழைகள் என்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். மற்றபடி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக்குக் குறைந்தது 2.5 லட்சம் கட்டணம். இவ்வளவு அதிக கட்டணத்தைச் செலுத்திப்படிக்கவும்கூட, கிராமப்புற மாணவர்களால், ஏழைகளால் அந்த அளவுக்கு கட்ஆப் மதிப்பெண் பெற முடிவதில்லை.
இரண்டாவதாக, 69 விழுக்காடு ஒதுக்கீடு பாதிக்கப்பட்டு சமூகநீதி பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் 50 விழுக்காடு இடஒதுக்கீடு மட்டுமே அமலில் உள்ளது. அரசியல் நிர்ணயச் சட்டத்தை மீறி கல்வியில் 69 விழுக்காடு என்பது தமிழகத்தில் மட்டுமே. இது தொடர்பான வழக்கில், தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் உயர் நீதிமன்றத்தில், பொதுப்பிரிவினர் பாதிக்கப்படும் 19 இடங்களை அதிகரித்துத் தருகிறோம் என்று உறுதிமொழி அளித்துதான் இந்த சிக்கலை சமாளித்து வருகிறது. அதாவது 100 இடங்களுக்கு 119 இடங்களை உருவாக்கி, பொதுப்பிரிவினருக்கு பாதிப்பு இல்லாமல் மாணவர் சேர்க்கை நடத்துவது என்பது இதன் பொருள். இப்போதே இதுதான் நடைமுறை. இப்போது பாதிக்கப்படாத சமூகநீதி, பொது நுழைவுத் தேர்வு நடத்தினால் மட்டும் பாதிக்கப்பட்டுவிடுமா?
50 விழுக்காடு மாணவர்கள் வெளிமாநில மாணவர்களாக இருப்பார்கள் என்கிறார்கள். இந்த நுழைவுத் தேர்வை தமிழகம் ஒப்புக்கொள்ளுமானால் ஒவ்வொரு மாநிலத்தின் ஒதுக்கீட்டிலும் தமிழக மாணவர்கள் 5 சதவீதமாகிலும் இடம் பிடித்து மருத்துவம் படிப்பார்கள். இதனால் தமிழகத்திலும் வெளிமாநிலங்களிலும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அரசுக் கட்டணத்தில் மருத்துவம் படிக்கும் 35,000 மாணவர்களில் தமிழர்களின் எண்ணிக்கை இப்போதுள்ளதைவிட இரு மடங்கு உயருமே தவிர, குறையாது.
இப்போது மருத்துவக் கல்விக்கு ஒவ்வொரு மாநிலமும் நுழைவுத் தேர்வு நடத்துகின்றன. தமிழ்நாட்டில் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி, புதுவையில் ஜிப்மர் போன்று தனித்தனி நுழைவுத் தேர்வுகள் நடக்கின்றன. இதில் முறைகேடுகளும், பாரபட்சங்களும் இருக்கவே செய்கின்றன. அப்படியிருக்க, ஏன் ஒரேயொரு தேர்வை இந்தியா முழுவதிலும் நடத்தக்கூடாது?
இதற்குப் பதிலாக, பொது நுழைவுத் தேர்வை ஏற்றுக்கொள்ள தமிழக அரசு வலியுறுத்த வேண்டிய மூன்று நிபந்தனைகள் உண்டு. அவை:
ஒன்று - பிளஸ்-2 தேர்வு மதிப்பெண், நுழைவுத் தேர்வு மதிப்பெண் இரண்டையும் சேர்த்து "கட்-ஆஃப்' மதிப்பெண் வரையறுக்கப்பட வேண்டும் என்பதோடு, இந்த இரு தேர்வுகளும் ஒரே கல்வியாண்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட வேண்டும்.
இரண்டு - அரசு மருத்துவக் கல்லூரியின் செலவினத்தில் பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும். மாநில அரசின் செலவில் கல்லூரிகளை அமைத்துப் பராமரிக்க, அதில் தேசிய அளவிலான தேர்வு நடத்தி மாணவர்களைச் சேர்க்கும்போது, மத்திய அரசு பாதிக்குப் பாதி பராமரிப்புச் செலவையும் ஏற்பதுதானே சரியாக இருக்கும்.
மூன்று - நுழைவுத் தேர்வு மூலமாக மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் வெளிமாநில மாணவர்கள், தாங்கள் படிக்கும் மாநிலத்தின் ஊரகப் பகுதியில் குறைந்தது 2 ஆண்டுகள் பணியாற்றினால் மட்டுமே, அவர்கள் மேற்படிப்பு படிக்க வாய்ப்பளிக்கப்படும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும்.
இந்த மூன்று நிபந்தனைகளை வலியுறுத்தினால் தமிழக அரசியல்வாதிகள் உண்மையாகவே பிரச்னையை புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று நம்புவதற்கு இடமுண்டாகும்.
மேலே சொன்ன நிபந்தனைகளுடன் மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு அகில இந்திய அளவில் நடத்தப்பட்டால், அது மருத்துவக் கல்வியின் தரத்தைப் பாதுகாப்பதாகவும் அமையும்!
நன்றி : தினமணி
இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் எதிர்ப்புக்குரல் எழுப்பிய திமுக, அதிமுக உறுப்பினர்கள் ஒருமித்து நின்று ஆச்சரியத்தை அளித்தன. அதைவிட ஆச்சரியம், பொதுத்தேர்வை அனுமதித்தால் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்போவதாக அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவும், தான் பிரதமருக்கு எழுதிய கடிதத்தின் விளைவுதான் இந்த நடவடிக்கை என்று தமிழக முதல்வர் கருணாநிதியும், யாரால் நடந்தது என்பதில் பெயர் தட்டிச் செல்ல போட்டி போடத் தொடங்கிவிட்டனர்.
இந்தப் பொது நுழைவுத் தேர்வு கூடாது என்று சொல்வதற்கு இவர்கள் சொல்லும் காரணங்கள்:
ஒன்று: ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். ஏனென்றால், அவர்களால் இதற்கான பயிற்சி பெறும் வசதிகள் கிடையாது.
இரண்டு: 69 சதவீத இடஒதுக்கீடு பாதிக்கப்படும். சமூக நீதி பாதிக்கும்
மூன்று: மற்ற மாநிலங்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். அப்படியானால் 50 சதவீத மாணவர்கள் இங்கே வந்து படித்துவிட்டுத் தங்கள் மாநிலங்களுக்குச் சென்றுவிடுவார்கள்.
இவர்கள் சொல்லும் இந்த 3 வாதங்களும் எந்த அளவுக்குச் சரியானவை?
முதலாவதாக, ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் 1,398 மாணவர்கள், கலந்தாய்வின் மூலம் சேர்கின்றனர். இவர்களில் எத்தனை பேர் ஏழைகள்? குறைந்தது 10 பேர் இருப்பார்களா? இவர்களில் எத்தனை பேர் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தவர்கள்? ஒவ்வொரு தனியார் பள்ளியும் தன் நிறுவனத்தில் படித்து எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த மாணவர்களைப் படத்துடன் விளம்பரமாக வெளியிடுகின்றனவே, அரசு இந்த ஏழை மாணவர்களைப் பாராட்டும்விதமாக, மற்ற ஏழைகளை ஊக்குவிக்கும் விதமாக அவர்களது படங்களுடன் பெயர்ப் பட்டியலை விளம்பரமாக வெளியிடலாமே! முடியாது. ஏனென்றால், இவர்கள் சொல்வது உண்மையல்ல.
கலந்தாய்வில் "கட்-ஆஃப்' மதிப்பெண் 197-க்குள்ளாகவே அரசு ஒதுக்கீடு அனைத்தும் - தாழ்த்தப்பட்டோர் ஒதுக்கீடு உள்பட- முடிந்துபோகிறது என்பதே உண்மை. இவ்வாறு, உயர்ந்த கட்ஆப் மதிப்பெண்களுடன் மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவர்களில் ஏழைகள் என்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். மற்றபடி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக்குக் குறைந்தது 2.5 லட்சம் கட்டணம். இவ்வளவு அதிக கட்டணத்தைச் செலுத்திப்படிக்கவும்கூட, கிராமப்புற மாணவர்களால், ஏழைகளால் அந்த அளவுக்கு கட்ஆப் மதிப்பெண் பெற முடிவதில்லை.
இரண்டாவதாக, 69 விழுக்காடு ஒதுக்கீடு பாதிக்கப்பட்டு சமூகநீதி பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் 50 விழுக்காடு இடஒதுக்கீடு மட்டுமே அமலில் உள்ளது. அரசியல் நிர்ணயச் சட்டத்தை மீறி கல்வியில் 69 விழுக்காடு என்பது தமிழகத்தில் மட்டுமே. இது தொடர்பான வழக்கில், தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் உயர் நீதிமன்றத்தில், பொதுப்பிரிவினர் பாதிக்கப்படும் 19 இடங்களை அதிகரித்துத் தருகிறோம் என்று உறுதிமொழி அளித்துதான் இந்த சிக்கலை சமாளித்து வருகிறது. அதாவது 100 இடங்களுக்கு 119 இடங்களை உருவாக்கி, பொதுப்பிரிவினருக்கு பாதிப்பு இல்லாமல் மாணவர் சேர்க்கை நடத்துவது என்பது இதன் பொருள். இப்போதே இதுதான் நடைமுறை. இப்போது பாதிக்கப்படாத சமூகநீதி, பொது நுழைவுத் தேர்வு நடத்தினால் மட்டும் பாதிக்கப்பட்டுவிடுமா?
50 விழுக்காடு மாணவர்கள் வெளிமாநில மாணவர்களாக இருப்பார்கள் என்கிறார்கள். இந்த நுழைவுத் தேர்வை தமிழகம் ஒப்புக்கொள்ளுமானால் ஒவ்வொரு மாநிலத்தின் ஒதுக்கீட்டிலும் தமிழக மாணவர்கள் 5 சதவீதமாகிலும் இடம் பிடித்து மருத்துவம் படிப்பார்கள். இதனால் தமிழகத்திலும் வெளிமாநிலங்களிலும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அரசுக் கட்டணத்தில் மருத்துவம் படிக்கும் 35,000 மாணவர்களில் தமிழர்களின் எண்ணிக்கை இப்போதுள்ளதைவிட இரு மடங்கு உயருமே தவிர, குறையாது.
இப்போது மருத்துவக் கல்விக்கு ஒவ்வொரு மாநிலமும் நுழைவுத் தேர்வு நடத்துகின்றன. தமிழ்நாட்டில் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி, புதுவையில் ஜிப்மர் போன்று தனித்தனி நுழைவுத் தேர்வுகள் நடக்கின்றன. இதில் முறைகேடுகளும், பாரபட்சங்களும் இருக்கவே செய்கின்றன. அப்படியிருக்க, ஏன் ஒரேயொரு தேர்வை இந்தியா முழுவதிலும் நடத்தக்கூடாது?
இதற்குப் பதிலாக, பொது நுழைவுத் தேர்வை ஏற்றுக்கொள்ள தமிழக அரசு வலியுறுத்த வேண்டிய மூன்று நிபந்தனைகள் உண்டு. அவை:
ஒன்று - பிளஸ்-2 தேர்வு மதிப்பெண், நுழைவுத் தேர்வு மதிப்பெண் இரண்டையும் சேர்த்து "கட்-ஆஃப்' மதிப்பெண் வரையறுக்கப்பட வேண்டும் என்பதோடு, இந்த இரு தேர்வுகளும் ஒரே கல்வியாண்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட வேண்டும்.
இரண்டு - அரசு மருத்துவக் கல்லூரியின் செலவினத்தில் பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும். மாநில அரசின் செலவில் கல்லூரிகளை அமைத்துப் பராமரிக்க, அதில் தேசிய அளவிலான தேர்வு நடத்தி மாணவர்களைச் சேர்க்கும்போது, மத்திய அரசு பாதிக்குப் பாதி பராமரிப்புச் செலவையும் ஏற்பதுதானே சரியாக இருக்கும்.
மூன்று - நுழைவுத் தேர்வு மூலமாக மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் வெளிமாநில மாணவர்கள், தாங்கள் படிக்கும் மாநிலத்தின் ஊரகப் பகுதியில் குறைந்தது 2 ஆண்டுகள் பணியாற்றினால் மட்டுமே, அவர்கள் மேற்படிப்பு படிக்க வாய்ப்பளிக்கப்படும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும்.
இந்த மூன்று நிபந்தனைகளை வலியுறுத்தினால் தமிழக அரசியல்வாதிகள் உண்மையாகவே பிரச்னையை புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று நம்புவதற்கு இடமுண்டாகும்.
மேலே சொன்ன நிபந்தனைகளுடன் மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு அகில இந்திய அளவில் நடத்தப்பட்டால், அது மருத்துவக் கல்வியின் தரத்தைப் பாதுகாப்பதாகவும் அமையும்!
நன்றி : தினமணி
Labels:
தமிழகஅரசு,
தலையங்கம்,
மத்தியஅரசு,
மருத்துவம்
Saturday, August 21, 2010
மக்களின் வரிப்பணம்தானே...
கல்வியைத் தொடர்ந்து இப்போது மருத்துவத் துறையையும் முழுமையாகத் தனியாருக்குத் தாரை வார்ப்பது என்பது ஆட்சியாளர்களின் எழுதப்படாத கொள்கைகளில் ஒன்று என்று தோன்றுகிறது. முதலில் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் தனியார் ஒத்துழைப்பு என்று தொடங்கி, இப்போது அரசு மருத்துவமனைகளின் பராமரிப்பைத் தனியாரிடம்விடும் அளவுக்குத் தனியார்மயக்கொள்கை செயலாக்கம் பெற்றிருக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளுக்கு ஒட்டுமொத்தமாக மூடுவிழா நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தமிழக அரசு மட்டுமே சுகாதாரத் துறையைத் தனியாருக்குத் தாரை வார்க்க முன்வந்திருப்பதாக யாரும் நினைத்துவிட வேண்டாம். உண்மையில், தமிழக அரசு இந்தப் பிரச்னையில் ஏனைய மாநிலங்களைவிட சற்று அடக்கியே வாசிக்கிறது என்பதை ஒத்துக்கொண்டாக வேண்டும். ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்கிற மத்திய அரசின் வழிகாட்டுதலை இதுவரை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளாகவே அரசு மருத்துவமனைகளையும், ஆரம்பச் சுகாதார நிலையங்களையும் தனியாருக்குத் தாரை வார்த்துவிடும் முயற்சி அகில இந்திய அளவில் முனைப்புடன் அரங்கேற்றப்பட்டு வருகிறது. மக்கள் வரிப்பணத்தில், அரசு நிலத்தில் முக்கியமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்களில் முதல்கட்டமாக பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த மத்திய சுகாதாரத் துறை வற்புறுத்தி வருகிறது.
அடுத்தகட்டமாக, எக்ஸ்-ரே, ரத்தப்பரிசோதனை மையம் போன்றவைகளைத் தனியாரிடம் ஒப்படைத்து நடத்துவது என்று தீர்மானிக்கக்கூடும். காலப்போக்கில் தனியாருக்கே அரசு நிறுவனங்களைத் தாரைவார்ப்பதுபோல இந்த ஆரம்பச் சுகாதார நிலையங்களையும் கொடுத்துவிடுவது என்பதுதான் மத்திய அரசின் தொலைநோக்குத் திட்டம் என்று கருதவும் இடமிருக்கிறது. கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஆரம்பச் சுகாதார நிலையங்களை ஏற்று நடத்த எந்தத் தனியார் மருத்துவமனைதான் தயங்கும்?
"கல்வி, மருத்துவம் போன்றவை அரசின் செயல்பாடுகள் அல்ல. இவைகளிலிருந்து அரசு முழுமையாக விடுபட்டாக வேண்டும்' என்கிற தனியார்மயவாதிகளின் கருத்து ஏற்புடையதல்ல. நமது அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கொள்கையே இந்தியா ஒரு ஜனநாயக சமதர்ம அரசு மட்டுமல்ல, மக்கள் நலம்பேணும் அரசும்கூட என்பதுதான். கல்வி, சுகாதாரம் போன்றவை அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் தனியாரிடம் விடப்பட்டிருக்கலாம். ஆனால், இந்தியாவைப் போன்ற வறுமைக்கோட்டுக்குக்கீழே பல கோடி மக்கள் வாழும் நாட்டில் தனியாரிடம் இவற்றை ஒப்படைப்பது என்பது மிகப்பெரிய அரசியல் சமூக பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
நியாயமாகப் பார்த்தால், தமிழக கார்ப்பரேட் மருத்துவமனைகளின் தரத்தில் நமது அரசு மருத்துவமனைகளைப் பராமரிப்பதுதான் முறையான நல்லாட்சிக்கு அடையாளமாக இருக்கும். கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்கிற பெயரில் தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்குத் தமிழக அரசு கட்டணத் தொகையாக (பிரிமியம்) முதலாண்டில் கொடுத்திருப்பது ரூ. 628.20 கோடி. ஆனால், பல்வேறு அறுவைச் சிகிச்சைகளுக்காக அந்தத் தனியார் காப்பீட்டு நிறுவனம் பயனாளிகளின் சார்பாக மருத்துவமனைகளுக்குக் கட்டணமாகக் கொடுத்திருப்பதோ வெறும் ரூ. 415.43 கோடிதான். மக்களின் வரிப்பணத்தில் சுமார் ரூ. 200 கோடி லாபம் ஈட்டியிருக்கிறது தனியார் காப்பீட்டு நிறுவனம். இரண்டாவது ஆண்டுக்கு, அரசு அந்தத் தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு ஒதுக்கியிருக்கும் கட்டணத் தொகை எவ்வளவு தெரியுமா? ரூ. 750 கோடி.
இப்படி கோடிக்கணக்கான ரூபாய்களை மக்களின் வரிப்பணத்திலிருந்து தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு வாரி வழங்கும் அரசு, அதை அரசு மருத்துவமனைகளை நவீனப்படுத்துவதில் செலவிட்டால் அதனால் நிரந்தரமாகப் பயன் கிடைக்குமே என்கிற நியாயங்கள் ஆட்சியாளர்களின் காதில் விழாது. அப்படிச் செய்தால் "கலைஞர் காப்பீட்டுத் திட்டம்' என்று ஆட்சியின் சாதனைப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளவும், தேர்தலில் வாக்குவேட்டை ஆடவும் முடியாதுதானே..
சென்னையிலுள்ள பொது மருத்துவமனையைச் சுத்தம் செய்யும் பணி தனியாரிடம் விடப்பட்டது. ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள். மாதந்தோறும் ஏழு லட்சம் ரூபாயையும் வாங்கிக்கொண்டு அந்தத் தனியார் நிறுவனம் பெரிதாக எதையும் சாதித்துவிடவும் இல்லை. தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் இயக்குநர் உள்ளிட்ட பலரும் அந்தத் தனியார் நிறுவனத்தின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என்று தெரிவித்திருக்கும் நிலையில், நமது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் என்ன செய்திருக்கிறார் தெரியுமா?
"சென்னை பொது மருத்துவமனையைப்போல, சென்னையிலுள்ள ஏனைய அரசு மருத்துவமனைகளைப் பராமரிக்கும் பணியையும் தனியாரிடம் கொடுக்க இருக்கிறோம். முறையாகச் செயல்படாவிட்டால் அவர்களது ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்' என்று அறிவித்திருக்கிறார்.
தனியார் காப்பீட்டு நிறுவனத்தைத் தொடர்ந்து மருத்துவமனைகளின் பராமரிப்பிலும், தனியார் நிறுவனங்களின் காட்டில் மழை. மக்கள் வரிப்பணம்தானே, சொந்த முதலா மோசம் போகிறது..!
நன்றி : தினமணி
தமிழக அரசு மட்டுமே சுகாதாரத் துறையைத் தனியாருக்குத் தாரை வார்க்க முன்வந்திருப்பதாக யாரும் நினைத்துவிட வேண்டாம். உண்மையில், தமிழக அரசு இந்தப் பிரச்னையில் ஏனைய மாநிலங்களைவிட சற்று அடக்கியே வாசிக்கிறது என்பதை ஒத்துக்கொண்டாக வேண்டும். ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்கிற மத்திய அரசின் வழிகாட்டுதலை இதுவரை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளாகவே அரசு மருத்துவமனைகளையும், ஆரம்பச் சுகாதார நிலையங்களையும் தனியாருக்குத் தாரை வார்த்துவிடும் முயற்சி அகில இந்திய அளவில் முனைப்புடன் அரங்கேற்றப்பட்டு வருகிறது. மக்கள் வரிப்பணத்தில், அரசு நிலத்தில் முக்கியமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்களில் முதல்கட்டமாக பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த மத்திய சுகாதாரத் துறை வற்புறுத்தி வருகிறது.
அடுத்தகட்டமாக, எக்ஸ்-ரே, ரத்தப்பரிசோதனை மையம் போன்றவைகளைத் தனியாரிடம் ஒப்படைத்து நடத்துவது என்று தீர்மானிக்கக்கூடும். காலப்போக்கில் தனியாருக்கே அரசு நிறுவனங்களைத் தாரைவார்ப்பதுபோல இந்த ஆரம்பச் சுகாதார நிலையங்களையும் கொடுத்துவிடுவது என்பதுதான் மத்திய அரசின் தொலைநோக்குத் திட்டம் என்று கருதவும் இடமிருக்கிறது. கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஆரம்பச் சுகாதார நிலையங்களை ஏற்று நடத்த எந்தத் தனியார் மருத்துவமனைதான் தயங்கும்?
"கல்வி, மருத்துவம் போன்றவை அரசின் செயல்பாடுகள் அல்ல. இவைகளிலிருந்து அரசு முழுமையாக விடுபட்டாக வேண்டும்' என்கிற தனியார்மயவாதிகளின் கருத்து ஏற்புடையதல்ல. நமது அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கொள்கையே இந்தியா ஒரு ஜனநாயக சமதர்ம அரசு மட்டுமல்ல, மக்கள் நலம்பேணும் அரசும்கூட என்பதுதான். கல்வி, சுகாதாரம் போன்றவை அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் தனியாரிடம் விடப்பட்டிருக்கலாம். ஆனால், இந்தியாவைப் போன்ற வறுமைக்கோட்டுக்குக்கீழே பல கோடி மக்கள் வாழும் நாட்டில் தனியாரிடம் இவற்றை ஒப்படைப்பது என்பது மிகப்பெரிய அரசியல் சமூக பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
நியாயமாகப் பார்த்தால், தமிழக கார்ப்பரேட் மருத்துவமனைகளின் தரத்தில் நமது அரசு மருத்துவமனைகளைப் பராமரிப்பதுதான் முறையான நல்லாட்சிக்கு அடையாளமாக இருக்கும். கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்கிற பெயரில் தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்குத் தமிழக அரசு கட்டணத் தொகையாக (பிரிமியம்) முதலாண்டில் கொடுத்திருப்பது ரூ. 628.20 கோடி. ஆனால், பல்வேறு அறுவைச் சிகிச்சைகளுக்காக அந்தத் தனியார் காப்பீட்டு நிறுவனம் பயனாளிகளின் சார்பாக மருத்துவமனைகளுக்குக் கட்டணமாகக் கொடுத்திருப்பதோ வெறும் ரூ. 415.43 கோடிதான். மக்களின் வரிப்பணத்தில் சுமார் ரூ. 200 கோடி லாபம் ஈட்டியிருக்கிறது தனியார் காப்பீட்டு நிறுவனம். இரண்டாவது ஆண்டுக்கு, அரசு அந்தத் தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு ஒதுக்கியிருக்கும் கட்டணத் தொகை எவ்வளவு தெரியுமா? ரூ. 750 கோடி.
இப்படி கோடிக்கணக்கான ரூபாய்களை மக்களின் வரிப்பணத்திலிருந்து தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு வாரி வழங்கும் அரசு, அதை அரசு மருத்துவமனைகளை நவீனப்படுத்துவதில் செலவிட்டால் அதனால் நிரந்தரமாகப் பயன் கிடைக்குமே என்கிற நியாயங்கள் ஆட்சியாளர்களின் காதில் விழாது. அப்படிச் செய்தால் "கலைஞர் காப்பீட்டுத் திட்டம்' என்று ஆட்சியின் சாதனைப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளவும், தேர்தலில் வாக்குவேட்டை ஆடவும் முடியாதுதானே..
சென்னையிலுள்ள பொது மருத்துவமனையைச் சுத்தம் செய்யும் பணி தனியாரிடம் விடப்பட்டது. ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள். மாதந்தோறும் ஏழு லட்சம் ரூபாயையும் வாங்கிக்கொண்டு அந்தத் தனியார் நிறுவனம் பெரிதாக எதையும் சாதித்துவிடவும் இல்லை. தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் இயக்குநர் உள்ளிட்ட பலரும் அந்தத் தனியார் நிறுவனத்தின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என்று தெரிவித்திருக்கும் நிலையில், நமது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் என்ன செய்திருக்கிறார் தெரியுமா?
"சென்னை பொது மருத்துவமனையைப்போல, சென்னையிலுள்ள ஏனைய அரசு மருத்துவமனைகளைப் பராமரிக்கும் பணியையும் தனியாரிடம் கொடுக்க இருக்கிறோம். முறையாகச் செயல்படாவிட்டால் அவர்களது ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்' என்று அறிவித்திருக்கிறார்.
தனியார் காப்பீட்டு நிறுவனத்தைத் தொடர்ந்து மருத்துவமனைகளின் பராமரிப்பிலும், தனியார் நிறுவனங்களின் காட்டில் மழை. மக்கள் வரிப்பணம்தானே, சொந்த முதலா மோசம் போகிறது..!
நன்றி : தினமணி
Labels:
காப்பீட்டு,
தமிழகஅரசு,
மருத்துவம்,
வரி
Tuesday, August 17, 2010
நெல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்...
சிறு,குறு விவசாயிகளின் பம்புசெட்டுகளில் உள்ள பழைய மின்மோட்டார்களை நீக்கிவிட்டு அரசின் சார்பில் புதிய மின்மோட்டார்கள் இலவசமாகப் பொருத்தித் தரப்படும் என்பதும், பெரு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் புதிய பம்புசெட்டுகள் பொருத்தித் தரப்படும் என்பதும் தமிழக முதல்வரின் விடுதலை நாள் விழா அறிவிப்பு.
திறன் இல்லாத பழைய மோட்டார்களைப் பயன்படுத்துவதால், விவசாயத்துக்கான மின்சாரத்தில் 20 விழுக்காடு வீணாகிறது, இத்தகைய புதிய, தரமான மின்மோட்டார்களை இலவசமாகப் பொருத்தித் தருவதால் (இலவசமாக வழங்குவது மட்டுமல்ல, கிணற்றில் பொருத்தித் தருவதும்கூட இலவசம்தான்) இந்த மின்இழப்பைத் தவிர்த்துவிடலாம் என்பது முதல்வர் இதற்குக் கூறியிருக்கும் காரணம்.
தமிழ்நாட்டில் ஏறக்குறைய 19 லட்சம் விவசாயிகள் தங்கள் கிணறுகளுக்கு மின்இணைப்புப் பெற்றுள்ளனர். இவர்களில் 15 லட்சம் பேர் சிறு, குறு விவசாயிகள். ஆக இப்போது முதல்வரின் அறிவிப்பின்படி 15 லட்சம் விவசாயிகளுக்கு மின்மோட்டார்கள் புதுப்பிக்கப்பட வேண்டும். அத்துடன் 4 லட்சம் விவசாயிகளுக்கு 50 விழுக்காடு மானியத்தில் பொருத்தித் தர வேண்டும். அதாவது மொத்தம் 19 லட்சம் மின்மோட்டர்களுக்கான செலவினத்தை தமிழக அரசு ஏற்றாக வேண்டும். ஒரு மின்மோட்டார் குறைந்தது 40 ஆயிரம் ஆகும். இந்தக் கணக்கின்படி இத்திட்டத்தின் மொத்த நிதித்தேவை ஏறக்குறைய 6,800 கோடி.
இந்தத் திட்டத்தை இத்தனை செலவில் அமல்படுத்தி, அனைத்து மின்மோட்டார்களையும் இலவசமாக மாற்றிப் பொருத்தினால், முதல்வர் கூறுவதைப்போல 20 விழுக்காடு வீணாகும் மின்சாரம் மிச்சப்படுத்தப்படுமா என்றால், அதுவும்கூட மிகப் பெரிய கேள்வியாகத்தான் இருக்கும். மத்திய மின்சார ஒழுங்காற்று ஆணையம் இலவச மின்சாரம் கூடாது என்று சொல்லி வந்தபோதிலும், பொதுவாக ஆண்டுக்கு 3,000 கோடி என்று மின்வாரியத்துக்கு அரசு ஒரு தொகையை மானியமாக வழங்கும் போதும், ஒவ்வொரு பம்புசெட்டில் உள்ள மீட்டரையும் ரீடிங் எடுத்து, அதன்படி உள்ள கட்டணத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது அந்த ஆணையம். ஆனால் தமிழக அரசோ, இலவசம் என்றான பின்பு எவ்வளவு மீட்டர் ரீடிங் இருந்தால் என்ன என்று சொல்வதோடு, ஆணையம் எதற்காக இதனை வலியுறுத்துகிறது என்கிற சிந்தனைக்கே திரும்பவில்லை. மின்வாரிய ஊழியர்கள் வயலுக்குப் போய், பம்புசெட்டுகளில் ரீடிங் எடுக்கும் வழக்கமே மறைந்தொழிந்துவிட்டது.
மத்திய மின்சார ஒழுங்காற்று ஆணையம், இலவச மின்சாரத்தையும் ரீடிங் செய்து கொடுக்க வேண்டும் என்கிற நடைமுறையானது, தமிழ்ப் பழமொழி சொல்வதைப்போல, "ஆற்றில் போட்டாலும் அளந்து போடு' என்பதைத் தவிர வேறில்லை.
ஒரு பம்புசெட்டில் எவ்வளவு மின்சாரம் பயன்பட்டிருக்கிறது என்பதை வைத்து, அந்த நிலத்தில் நடைபெற்ற விவசாயத்தின் வீச்சு, விளைச்சல் எல்லாவற்றையும் தோராயமாகக் கணக்கிட முடியும். மேலும், இந்த மின்சாரம் அந்த நிலத்தின் அளவுக்குத் தகுந்தபடிதான் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதைக் கணிப்பதன் மூலம், அவர்கள் தவறாக மின்சாரத்தைப் பயன்படுத்தியிருந்தால் அதனைக் கண்டுபிடிக்கும் வாய்ப்புகளும்கூட உண்டாகும். மேலும், ஒவ்வோராண்டும் இந்த மின்சாரப் பயன்பாட்டில் கூடுதல் குறைதல் இருக்கிறதா என்பதைக் கொண்டு, விவசாயத்தில் ஏற்பட்டுள்ள நல்லது கெட்டதுமான மாற்றங்களை அறிந்துகொள்ள முடியும். ஆனால் இவை எதற்கும் செவிசாய்க்க மறுத்துவிட்டது தமிழக அரசு.
இதனால், பம்புசெட் மின்சாரம் பல நேரங்களில் பண்ணை வீடுகளுக்கும் போகிறது. சில இடங்களில் கரும்பு பிழிவதற்கும் போகிறது. சில நேரங்களில் வெறுமனே லாரிகளில் தண்ணீர் நிரப்பவும் பயன்படுகிறது. வணிக ரீதியில் இவ்வாறு இலவச மின்சாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவது பல இடங்களில் நடந்துகொண்டே இருக்கிறது. சில நேரங்களில் அரசியல் தலைவர்களை வரவேற்க சாலைகளில் பல கிலோ மீட்டர் தொலைவுக்குப் போடப்படும் குழல்விளக்குகளுக்கும்கூட, கட்சி பேதமின்றி, சாலையோரம் இருக்கும் பம்புசெட்டுகளிலிருந்து இலவசமாக மின்சாரத்தை இழுத்துக் கொள்கிறார்கள்.
நிலைமை இப்படி இருக்க, தற்போது தரமான புதிய மின்மோட்டார்களை மாற்றிக் கொடுத்தால் அதனைப் பயன்படுத்தும் நேரம் அதிகரிப்பதுடன், மின்சாரத்தின் அளவும் அதிகரிக்குமே தவிர, குறையாது. அதாவது போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நாற்கர சாலைகள் அமைத்தால் வேகம் அதிகரித்து வாகனப் போக்குவரத்தும் அதிகரித்து விபத்துகளும் அதிகரிப்பதைப் போலத்தான் இதுவும். நல்ல மின்மோட்டார்களை நன்றாகப் பயன்படுத்தி, நிறைய மின்சாரத்தை உறிஞ்சுவார்கள். வீணடிப்பார்கள், வேறென்ன?
கிணறுகளை ஆழப்படுத்துவதற்காக அண்மையில் விவசாயிகளுக்கு மானியம் அளிக்கப்பட்டது. அதேபோன்று மின்மோட்டார்களின் தரம் உயர்த்த மானியம் அளிக்கப்படுவது என அரசு முடிவு செய்திருந்தால் அதனைப் பாராட்டியிருக்கலாம்.
ஒரு டன் கரும்புக்கு மேலும் 500 அதிகரிக்கப்படும் என்றாலோ அல்லது நெல்லுக்கு விலை 500 அதிகம் என்றாலோ விவசாயிக்கு நன்மை கிடைக்கும். விவசாயத்துக்கு ஊக்கம் அளித்ததாகவும் அமையும்.
விதை நெல்லுக்கு மானியம் இல்லை என்று சொல்லும் அரசு, மின்மோட்டாரை இலவசமாக வழங்குவதால், மின்மோட்டார் உற்பத்தியில் ஈடுபடும் ஒரு சில நிறுவனங்கள் இதற்கான அனைத்து ஆர்டர்களையும் பெற்று வளம்பெறப் போகின்றன.
மக்கள் பணத்தை முறைப்படி செலவிடுவதில் தவறில்லை. காமன்வெல்த் போட்டிகள் தொடங்கி சாதாரண விவசாய மின்மோட்டார் வரை, திட்டங்கள் உண்மையான நோக்கத்தைத் தாண்டி, வீணாகின்றன என்பதும், யாரோ சிலர் அதனால் சில ஆயிரம் கோடி ரூபாய் பார்க்கிறார்கள் என்பதும் தான் நமது ஆதங்கம்.
"வயலுக்கு இரைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்' என்பது புரிகிறது. ஆனால் புல்லுக்கு மட்டுமே வாய்க்கால் நீர் ஓடி, நெல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் என்றால்...
நன்றி : தினமணி
திறன் இல்லாத பழைய மோட்டார்களைப் பயன்படுத்துவதால், விவசாயத்துக்கான மின்சாரத்தில் 20 விழுக்காடு வீணாகிறது, இத்தகைய புதிய, தரமான மின்மோட்டார்களை இலவசமாகப் பொருத்தித் தருவதால் (இலவசமாக வழங்குவது மட்டுமல்ல, கிணற்றில் பொருத்தித் தருவதும்கூட இலவசம்தான்) இந்த மின்இழப்பைத் தவிர்த்துவிடலாம் என்பது முதல்வர் இதற்குக் கூறியிருக்கும் காரணம்.
தமிழ்நாட்டில் ஏறக்குறைய 19 லட்சம் விவசாயிகள் தங்கள் கிணறுகளுக்கு மின்இணைப்புப் பெற்றுள்ளனர். இவர்களில் 15 லட்சம் பேர் சிறு, குறு விவசாயிகள். ஆக இப்போது முதல்வரின் அறிவிப்பின்படி 15 லட்சம் விவசாயிகளுக்கு மின்மோட்டார்கள் புதுப்பிக்கப்பட வேண்டும். அத்துடன் 4 லட்சம் விவசாயிகளுக்கு 50 விழுக்காடு மானியத்தில் பொருத்தித் தர வேண்டும். அதாவது மொத்தம் 19 லட்சம் மின்மோட்டர்களுக்கான செலவினத்தை தமிழக அரசு ஏற்றாக வேண்டும். ஒரு மின்மோட்டார் குறைந்தது 40 ஆயிரம் ஆகும். இந்தக் கணக்கின்படி இத்திட்டத்தின் மொத்த நிதித்தேவை ஏறக்குறைய 6,800 கோடி.
இந்தத் திட்டத்தை இத்தனை செலவில் அமல்படுத்தி, அனைத்து மின்மோட்டார்களையும் இலவசமாக மாற்றிப் பொருத்தினால், முதல்வர் கூறுவதைப்போல 20 விழுக்காடு வீணாகும் மின்சாரம் மிச்சப்படுத்தப்படுமா என்றால், அதுவும்கூட மிகப் பெரிய கேள்வியாகத்தான் இருக்கும். மத்திய மின்சார ஒழுங்காற்று ஆணையம் இலவச மின்சாரம் கூடாது என்று சொல்லி வந்தபோதிலும், பொதுவாக ஆண்டுக்கு 3,000 கோடி என்று மின்வாரியத்துக்கு அரசு ஒரு தொகையை மானியமாக வழங்கும் போதும், ஒவ்வொரு பம்புசெட்டில் உள்ள மீட்டரையும் ரீடிங் எடுத்து, அதன்படி உள்ள கட்டணத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது அந்த ஆணையம். ஆனால் தமிழக அரசோ, இலவசம் என்றான பின்பு எவ்வளவு மீட்டர் ரீடிங் இருந்தால் என்ன என்று சொல்வதோடு, ஆணையம் எதற்காக இதனை வலியுறுத்துகிறது என்கிற சிந்தனைக்கே திரும்பவில்லை. மின்வாரிய ஊழியர்கள் வயலுக்குப் போய், பம்புசெட்டுகளில் ரீடிங் எடுக்கும் வழக்கமே மறைந்தொழிந்துவிட்டது.
மத்திய மின்சார ஒழுங்காற்று ஆணையம், இலவச மின்சாரத்தையும் ரீடிங் செய்து கொடுக்க வேண்டும் என்கிற நடைமுறையானது, தமிழ்ப் பழமொழி சொல்வதைப்போல, "ஆற்றில் போட்டாலும் அளந்து போடு' என்பதைத் தவிர வேறில்லை.
ஒரு பம்புசெட்டில் எவ்வளவு மின்சாரம் பயன்பட்டிருக்கிறது என்பதை வைத்து, அந்த நிலத்தில் நடைபெற்ற விவசாயத்தின் வீச்சு, விளைச்சல் எல்லாவற்றையும் தோராயமாகக் கணக்கிட முடியும். மேலும், இந்த மின்சாரம் அந்த நிலத்தின் அளவுக்குத் தகுந்தபடிதான் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதைக் கணிப்பதன் மூலம், அவர்கள் தவறாக மின்சாரத்தைப் பயன்படுத்தியிருந்தால் அதனைக் கண்டுபிடிக்கும் வாய்ப்புகளும்கூட உண்டாகும். மேலும், ஒவ்வோராண்டும் இந்த மின்சாரப் பயன்பாட்டில் கூடுதல் குறைதல் இருக்கிறதா என்பதைக் கொண்டு, விவசாயத்தில் ஏற்பட்டுள்ள நல்லது கெட்டதுமான மாற்றங்களை அறிந்துகொள்ள முடியும். ஆனால் இவை எதற்கும் செவிசாய்க்க மறுத்துவிட்டது தமிழக அரசு.
இதனால், பம்புசெட் மின்சாரம் பல நேரங்களில் பண்ணை வீடுகளுக்கும் போகிறது. சில இடங்களில் கரும்பு பிழிவதற்கும் போகிறது. சில நேரங்களில் வெறுமனே லாரிகளில் தண்ணீர் நிரப்பவும் பயன்படுகிறது. வணிக ரீதியில் இவ்வாறு இலவச மின்சாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவது பல இடங்களில் நடந்துகொண்டே இருக்கிறது. சில நேரங்களில் அரசியல் தலைவர்களை வரவேற்க சாலைகளில் பல கிலோ மீட்டர் தொலைவுக்குப் போடப்படும் குழல்விளக்குகளுக்கும்கூட, கட்சி பேதமின்றி, சாலையோரம் இருக்கும் பம்புசெட்டுகளிலிருந்து இலவசமாக மின்சாரத்தை இழுத்துக் கொள்கிறார்கள்.
நிலைமை இப்படி இருக்க, தற்போது தரமான புதிய மின்மோட்டார்களை மாற்றிக் கொடுத்தால் அதனைப் பயன்படுத்தும் நேரம் அதிகரிப்பதுடன், மின்சாரத்தின் அளவும் அதிகரிக்குமே தவிர, குறையாது. அதாவது போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நாற்கர சாலைகள் அமைத்தால் வேகம் அதிகரித்து வாகனப் போக்குவரத்தும் அதிகரித்து விபத்துகளும் அதிகரிப்பதைப் போலத்தான் இதுவும். நல்ல மின்மோட்டார்களை நன்றாகப் பயன்படுத்தி, நிறைய மின்சாரத்தை உறிஞ்சுவார்கள். வீணடிப்பார்கள், வேறென்ன?
கிணறுகளை ஆழப்படுத்துவதற்காக அண்மையில் விவசாயிகளுக்கு மானியம் அளிக்கப்பட்டது. அதேபோன்று மின்மோட்டார்களின் தரம் உயர்த்த மானியம் அளிக்கப்படுவது என அரசு முடிவு செய்திருந்தால் அதனைப் பாராட்டியிருக்கலாம்.
ஒரு டன் கரும்புக்கு மேலும் 500 அதிகரிக்கப்படும் என்றாலோ அல்லது நெல்லுக்கு விலை 500 அதிகம் என்றாலோ விவசாயிக்கு நன்மை கிடைக்கும். விவசாயத்துக்கு ஊக்கம் அளித்ததாகவும் அமையும்.
விதை நெல்லுக்கு மானியம் இல்லை என்று சொல்லும் அரசு, மின்மோட்டாரை இலவசமாக வழங்குவதால், மின்மோட்டார் உற்பத்தியில் ஈடுபடும் ஒரு சில நிறுவனங்கள் இதற்கான அனைத்து ஆர்டர்களையும் பெற்று வளம்பெறப் போகின்றன.
மக்கள் பணத்தை முறைப்படி செலவிடுவதில் தவறில்லை. காமன்வெல்த் போட்டிகள் தொடங்கி சாதாரண விவசாய மின்மோட்டார் வரை, திட்டங்கள் உண்மையான நோக்கத்தைத் தாண்டி, வீணாகின்றன என்பதும், யாரோ சிலர் அதனால் சில ஆயிரம் கோடி ரூபாய் பார்க்கிறார்கள் என்பதும் தான் நமது ஆதங்கம்.
"வயலுக்கு இரைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்' என்பது புரிகிறது. ஆனால் புல்லுக்கு மட்டுமே வாய்க்கால் நீர் ஓடி, நெல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் என்றால்...
நன்றி : தினமணி
Friday, January 22, 2010
அரசு உ ணவகங்கள் திறக்கப்படுமா?
தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோவை, மதுரை ஆகிய போக்குவரத்துக் கழகக் கோட்டங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
பொங்கல் பண்டிகையின்போது, சென்னை உள்ளிட்ட அனைத்துப் போக்குவரத்துக் கழகக் கோட்டங்களில் இருந்தும் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. பொங்கல் பண்டிகைக்காக சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டவர்கள் அலைந்து திரிந்து பயணச்சீட்டுகளை வாங்கி, இருக்கைகள்கூட கிடைக்காமல் படிக்கட்டுகளில் அமர்ந்து பயணம் செய்தனர்.
அரக்கப்பறக்க ஓடிவந்து பேருந்துகளைப் பிடித்த பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது அரசு பஸ்களின் கூடுதல் கட்டணமும், கூட்ட நெரிசலும் மட்டுமல்ல, நெடுஞ்சாலைகளில் உள்ள தனியார் உணவகங்களும்தான்.
அங்கு விற்பனை செய்யப்பட்ட சுகாதாரமற்ற உணவு, நட்சத்திர ஹோட்டல்க ளையும் மிஞ்சும் அளவுக்கு விலை உயர்வு மற்றும் மூச்சைத் திணறடித்த கழிவறைத் துர்நாற்றங்களே இந்த அதிர்ச்சிக்குக் காரணம்.
சிறுபொட்டலங்களில் அடைத்து விற்கப்படும் கடலை உள்ளிட்ட "ஸ்நாக்ஸ்'கள் கூட குறைந்தபட்சம் ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டன. வெந்நீரைவிடக் கேவலமான காபி, டீ ஆகியவற்றின் விலையோ ரூ.8 முதல் ரூ.10 வரை விற்பனையாயின. சாப்பாடு மற்றும் குளிர்பானங்களின் விலையோ வாங்க முடியாத அளவுக்கு விண்ணைத் தொட்டிருந்தன. எந்த அளவுக்கு விலை உயர்ந்திருந்ததோ, அந்த அளவுக்கு உணவின் தரமும் மோசமாக இருந்தது. உணவுக்கு அதிகவிலை கொடுத்ததற்காக கவலைப்படாதவர்கள் கூட, அதைச் சாப்பிடுவதற்காகக் கண்ணீர்விட்டனர்.
உணவுப்பொருள்கள் தான் அதிகவிலை என்றால், கழிவறைகளிலும் ரூ.5 முதல் ரூ.10 வரை அதிரடியாகக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன. பெண்களும், குழந்தைகளும் வேறு வழியின்றி கழிவறைக்குச் செல்ல நேர்ந்தது. ஆனால் கழிவறையின் நிலையோ படுமோசம். சுத்தம் செய்யப்படாமலும், சில இடங்களில் தண்ணீர் இன்றியும் காணப்பட்டன.
இதனால் கழிவறைக்குச் சென்றவர்களுக்கெல்லாம் மயக்கம்தான் வந்தது. கூடுதல் கட்டணங்கள் கொடுத்தும், பேருந்துகளில் தான் இருக்கைகள் கிடைக்கவில்லை. உணவகங்களிலும், கழிவறைகளிலுமா இந்த நிலை? என்று பயணிகள் புலம்பித் தீர்த்தனர்.
கழிவறைக் கட்டணங்களால் அதிர்ச்சிக்குள்ளான பயணிகள் சாலைகளிலேயே இயற்கை உபாதையைக் கழித்தனர். இதனால் போக்குவரத்தை விரைவுபடுத்துவதற்காக போடப்பட்ட தங்கநாற்கர சாலைகள் சிறுநீர் ஆறாய் காட்சியளித்தது.
÷விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி அருகில் உள்ள ஓர் உணவகத்தில் குண்டர்கள் ஆங்காங்கே கையில் தடிகளுடன் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் மிரட்டியது பயணிகளை மட்டும் அல்ல, பேருந்துகளை ஓரமாக நிறுத்தச்சொல்லி ஓட்டுநர்களையும் தான்.
சாலையோரம் இயற்கை உபாதையைக் கழிக்க முயன்றவர்களைத் தடிகளைக் காட்டி எச்சரித்ததோடு, தகாத வார்த்தைகளாலும் திட்டினர். இதனால் அதிர்ந்துபோன பயணிகளுக்கு கொள்ளையர்களும், ரௌடிகளும் ஹோட்டல் வைத்துவிட்டார்களோ என்ற எண்ணமே தோன்றியது.
ஆனால் பேருந்து ஓட்டுநர்களோ, கூட்டமே இல்லாதே உணவகங்களையெல்லாம் விட்டுவிட்டு கூட்ட நெரிசல் மிக்க, குண்டர்கள் நிறுத்தப்பட்டிருந்த உணவகங்களிலேயே பேருந்துகளை நிறுத்தினர்.
ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு அங்கே அசைவ உணவுடன் பான்பராக், வெற்றிலை பாக்கு, பிஸ்கெட் பாக்கெட் உள்ளிட்ட பொருள்கள் இலவசமாகத் தரப்படுகின்றன; இதற்காக இப்படிக் கஷ்டப்படுத்துகிறார்களே என்று பயணிகள் சிலர் கூறினர்.
குண்டர்களின் செயல்களால் ஆத்திரமடைந்த பயணி ஒருவர் பேருந்தின் நடத்துநரிடம் கேட்டபோது, குறிப்பிட்ட உணவகங்களில் நிறுத்துமாறு போக்குவரத்துக் கழகங்களின் மூலம் தங்களுக்கு வாய்வழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இது உண்மையா? அல்லது மக்களிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக நடத்துநர் விட்ட கதையா என்பதற்குப் போக்குவரத்துக் கழகம் தான் பதில் சொல்ல வேண்டும்.
"குடி'மகன்களுக்காக மதுபானக் கடைகளை நடத்தும் தமிழக அரசு, குடிமக்களுக்காக உணவகங்களைத் திறக்கலாம். அல்லது இந்த உணவகங்களை அந்தந்த மாவட்ட நிர்வாகங்களிடமோ அல்லது மாவட்டப் போக்குவரத்துக் கழகங்களின் பொறுப்பிலோ ஒப்படைக்கலாம். இதன் மூலம் நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்துத் துறைக்கு கூடுதல் வருவாய் கிடைக்குமே. கூடுதல் கட்டணத்தாலும், கூட்ட நெரிசலாலும் பாதிக்கப்படும் மக்களுக்கு உணவையாவது சரியான விலையில் தரமானதாக வழங்கினால் ஆறுதலாக இருக்குமே.
அதுமுடியாத பட்சத்தில் ஏல முறையில் தனியாருக்கு உணவகங்களை ஒதுக்கலாம். அவர்களும் உணவுப்பொருள்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்தால், அதைத்தடுக்கும் வகையில் வாரம் ஒருமுறை சுகாதார ஆய்வாளர்களைக் கொண்டு உணவுப்பொருள்களின் தரத்தை ஆய்வு செய்யலாம்.
அனைத்து உணவுப்பொருள்களுக்கும் குறிப்பிட்ட விலையை எழுதி பயணிகளின் பார்வையில் படும்படி உணவகங்களின் வாசலில் வைக்கலாம். உணவுப்பொருள்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் அதுகுறித்து புகார் அளிப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தொலைபேசி எண்களைத் தரலாம். ஆனாலும் உணவகங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதை விட அரசே நடத்தினால், பொதுமக்களிடம் இருந்து தனியார் உணவகங்கள் கொள்ளையடிப்பது தடுக்கப்படும்.
ரயில்வே துறையைப்போல் போக்குவரத்துத் துறையும் உணவுப்பொருள்களை விற்பனை செய்ய தமிழக முதல்வரும், போக்குவரத்துத் துறை அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பு.
கட்டுரையாளர் : ஏ.வி.பெருமாள்
நன்றி : தினமணி
பொங்கல் பண்டிகையின்போது, சென்னை உள்ளிட்ட அனைத்துப் போக்குவரத்துக் கழகக் கோட்டங்களில் இருந்தும் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. பொங்கல் பண்டிகைக்காக சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டவர்கள் அலைந்து திரிந்து பயணச்சீட்டுகளை வாங்கி, இருக்கைகள்கூட கிடைக்காமல் படிக்கட்டுகளில் அமர்ந்து பயணம் செய்தனர்.
அரக்கப்பறக்க ஓடிவந்து பேருந்துகளைப் பிடித்த பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது அரசு பஸ்களின் கூடுதல் கட்டணமும், கூட்ட நெரிசலும் மட்டுமல்ல, நெடுஞ்சாலைகளில் உள்ள தனியார் உணவகங்களும்தான்.
அங்கு விற்பனை செய்யப்பட்ட சுகாதாரமற்ற உணவு, நட்சத்திர ஹோட்டல்க ளையும் மிஞ்சும் அளவுக்கு விலை உயர்வு மற்றும் மூச்சைத் திணறடித்த கழிவறைத் துர்நாற்றங்களே இந்த அதிர்ச்சிக்குக் காரணம்.
சிறுபொட்டலங்களில் அடைத்து விற்கப்படும் கடலை உள்ளிட்ட "ஸ்நாக்ஸ்'கள் கூட குறைந்தபட்சம் ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டன. வெந்நீரைவிடக் கேவலமான காபி, டீ ஆகியவற்றின் விலையோ ரூ.8 முதல் ரூ.10 வரை விற்பனையாயின. சாப்பாடு மற்றும் குளிர்பானங்களின் விலையோ வாங்க முடியாத அளவுக்கு விண்ணைத் தொட்டிருந்தன. எந்த அளவுக்கு விலை உயர்ந்திருந்ததோ, அந்த அளவுக்கு உணவின் தரமும் மோசமாக இருந்தது. உணவுக்கு அதிகவிலை கொடுத்ததற்காக கவலைப்படாதவர்கள் கூட, அதைச் சாப்பிடுவதற்காகக் கண்ணீர்விட்டனர்.
உணவுப்பொருள்கள் தான் அதிகவிலை என்றால், கழிவறைகளிலும் ரூ.5 முதல் ரூ.10 வரை அதிரடியாகக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன. பெண்களும், குழந்தைகளும் வேறு வழியின்றி கழிவறைக்குச் செல்ல நேர்ந்தது. ஆனால் கழிவறையின் நிலையோ படுமோசம். சுத்தம் செய்யப்படாமலும், சில இடங்களில் தண்ணீர் இன்றியும் காணப்பட்டன.
இதனால் கழிவறைக்குச் சென்றவர்களுக்கெல்லாம் மயக்கம்தான் வந்தது. கூடுதல் கட்டணங்கள் கொடுத்தும், பேருந்துகளில் தான் இருக்கைகள் கிடைக்கவில்லை. உணவகங்களிலும், கழிவறைகளிலுமா இந்த நிலை? என்று பயணிகள் புலம்பித் தீர்த்தனர்.
கழிவறைக் கட்டணங்களால் அதிர்ச்சிக்குள்ளான பயணிகள் சாலைகளிலேயே இயற்கை உபாதையைக் கழித்தனர். இதனால் போக்குவரத்தை விரைவுபடுத்துவதற்காக போடப்பட்ட தங்கநாற்கர சாலைகள் சிறுநீர் ஆறாய் காட்சியளித்தது.
÷விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி அருகில் உள்ள ஓர் உணவகத்தில் குண்டர்கள் ஆங்காங்கே கையில் தடிகளுடன் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் மிரட்டியது பயணிகளை மட்டும் அல்ல, பேருந்துகளை ஓரமாக நிறுத்தச்சொல்லி ஓட்டுநர்களையும் தான்.
சாலையோரம் இயற்கை உபாதையைக் கழிக்க முயன்றவர்களைத் தடிகளைக் காட்டி எச்சரித்ததோடு, தகாத வார்த்தைகளாலும் திட்டினர். இதனால் அதிர்ந்துபோன பயணிகளுக்கு கொள்ளையர்களும், ரௌடிகளும் ஹோட்டல் வைத்துவிட்டார்களோ என்ற எண்ணமே தோன்றியது.
ஆனால் பேருந்து ஓட்டுநர்களோ, கூட்டமே இல்லாதே உணவகங்களையெல்லாம் விட்டுவிட்டு கூட்ட நெரிசல் மிக்க, குண்டர்கள் நிறுத்தப்பட்டிருந்த உணவகங்களிலேயே பேருந்துகளை நிறுத்தினர்.
ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு அங்கே அசைவ உணவுடன் பான்பராக், வெற்றிலை பாக்கு, பிஸ்கெட் பாக்கெட் உள்ளிட்ட பொருள்கள் இலவசமாகத் தரப்படுகின்றன; இதற்காக இப்படிக் கஷ்டப்படுத்துகிறார்களே என்று பயணிகள் சிலர் கூறினர்.
குண்டர்களின் செயல்களால் ஆத்திரமடைந்த பயணி ஒருவர் பேருந்தின் நடத்துநரிடம் கேட்டபோது, குறிப்பிட்ட உணவகங்களில் நிறுத்துமாறு போக்குவரத்துக் கழகங்களின் மூலம் தங்களுக்கு வாய்வழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இது உண்மையா? அல்லது மக்களிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக நடத்துநர் விட்ட கதையா என்பதற்குப் போக்குவரத்துக் கழகம் தான் பதில் சொல்ல வேண்டும்.
"குடி'மகன்களுக்காக மதுபானக் கடைகளை நடத்தும் தமிழக அரசு, குடிமக்களுக்காக உணவகங்களைத் திறக்கலாம். அல்லது இந்த உணவகங்களை அந்தந்த மாவட்ட நிர்வாகங்களிடமோ அல்லது மாவட்டப் போக்குவரத்துக் கழகங்களின் பொறுப்பிலோ ஒப்படைக்கலாம். இதன் மூலம் நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்துத் துறைக்கு கூடுதல் வருவாய் கிடைக்குமே. கூடுதல் கட்டணத்தாலும், கூட்ட நெரிசலாலும் பாதிக்கப்படும் மக்களுக்கு உணவையாவது சரியான விலையில் தரமானதாக வழங்கினால் ஆறுதலாக இருக்குமே.
அதுமுடியாத பட்சத்தில் ஏல முறையில் தனியாருக்கு உணவகங்களை ஒதுக்கலாம். அவர்களும் உணவுப்பொருள்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்தால், அதைத்தடுக்கும் வகையில் வாரம் ஒருமுறை சுகாதார ஆய்வாளர்களைக் கொண்டு உணவுப்பொருள்களின் தரத்தை ஆய்வு செய்யலாம்.
அனைத்து உணவுப்பொருள்களுக்கும் குறிப்பிட்ட விலையை எழுதி பயணிகளின் பார்வையில் படும்படி உணவகங்களின் வாசலில் வைக்கலாம். உணவுப்பொருள்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் அதுகுறித்து புகார் அளிப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தொலைபேசி எண்களைத் தரலாம். ஆனாலும் உணவகங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதை விட அரசே நடத்தினால், பொதுமக்களிடம் இருந்து தனியார் உணவகங்கள் கொள்ளையடிப்பது தடுக்கப்படும்.
ரயில்வே துறையைப்போல் போக்குவரத்துத் துறையும் உணவுப்பொருள்களை விற்பனை செய்ய தமிழக முதல்வரும், போக்குவரத்துத் துறை அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பு.
கட்டுரையாளர் : ஏ.வி.பெருமாள்
நன்றி : தினமணி
Sunday, January 17, 2010
ஊசலாடும் அரசு உதவிபெறும் பள்ளிகள்
ஒரு தாய், தன்னுடைய குழந்தைகளிடம் பாரபட்சம் காட்டும்போது "ஒரு கண்ணில் வெண்ணெயும் மறு கண்ணில் சுண்ணாம்பும்' என்ற பழமொழி கூறுவதுண்டு.
கல்வித்துறையில் அரசு பள்ளிகளுக்குச் சற்றும் குறையாத வகையில் கல்விச் சேவையை அளித்து வரும் அரசு உதவிபெறும் கல்வி நிலையங்களுக்கு நிதி உதவி அளிக்க அரசு முன்வராதது குழந்தைகளிடம் பாரபட்சம் காட்டும் தாயின் செயலுக்கு ஒப்பானது என்கிறார்கள் அரசு உதவிபெறும் கல்வி நிலையத்தினர்.
தமிழகத்தில் அரசு கல்வி நிலையங்கள், தனியார் கல்வி நிலையங்கள், அரசு உதவிபெறும் தனியார் கல்வி நிலையங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
கல்விக் கட்டண வசூல், ஆசிரியர், அலுவலர்கள் நியமனம், அவர்களுக்கான ஊதிய நிர்ணயம் ஆகியவற்றைத் தனியார் கல்வி நிலையங்கள் தாங்களே முடிவுசெய்கின்றன.
ஆனால், அரசு உதவிபெறும் கல்வி நிலையங்களில் ஆசிரியர்கள், அலுவலர்கள் நியமனம் அரசு வழிகாட்டுதலிலேயே நடத்தப்படுகிறது.
ஆசிரியர், அலுவலர்களுக்கு ஊதியம் வழங்குவது என்பதைத் தவிர அரசுப் பள்ளிகளுக்குக் கிடைக்கும் மற்ற சலுகைகள் எதுவும் உதவிபெறும் பள்ளிகளுக்குக் கிடைப்பதில்லை.
எனவே, மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, ஆசிரியர் எண்ணிக்கையைக் கூடுதலாக்குவது ஆகியவற்றை அந்தந்தக் கல்வி நிலைய நிர்வாகங்களே செயல்படுத்த வேண்டியுள்ளது.
புதிய ஆசிரியர்களை நியமித்து, அவர்களுக்கான ஊதியத்தை பெற்றோர்}ஆசிரியர் கழகத்தின் மூலம் அளிக்கும் கட்டாயமும் அரசு உதவிபெறும் பள்ளி நிர்வாகங்களுக்கு ஏற்படுகிறது.
அதன்படி, பெற்றோர்}ஆசிரியர் கழகத்துக்கு மாணவ, மாணவியரிடமிருந்து வசூலிக்கப்படும் தொகையும் மிக மிகக் குறைவேயாகும். இதைவைத்து மாதா மாதம் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது இயலாத காரியம் என்பதும் கல்வி நிலைய நிர்வாகிகள் கருத்து.
தற்போது இலவசக் கல்வித் திட்டத்தால் மாணவர்களிடையே எவ்விதக் கல்விக் கட்டணத்தையும் அப்பள்ளி நிர்வாகங்கள் வசூலிக்க முடியாத நிலையும் உள்ளது.
அரசு உதவிபெறும் கல்வி நிலையங்கள் பெரும்பாலும் சேவை நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டவையே. குறிப்பிட்ட சமூகத்தினர் சார்பிலோ அல்லது சேவை மனப்பான்மை உள்ளவர்கள் கூட்டாகச் சேர்ந்தோ, சமூக முன்னேற்றத்தில் அக்கறையுள்ள தனிப்பட்டவராலோ ஆரம்பிக்கப்பட்டு பின் அரசு உதவி பெற்றவைகளாக அவை மாறியிருப்பதே உண்மை.
இதுபோன்று மாநிலத்தில் 5048 ஆரம்பப் பள்ளிகளும், 1643 தொடக்கப் பள்ளிகளும், 630 உயர்நிலைப் பள்ளிகளும், 1067 மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் விதி விலக்காக ஒரு சில பள்ளிகள் மட்டுமே தற்போது வர்த்தக நோக்கில் செயல்படுபடத் தொடங்கி உள்ளன. ஆனால், அரசு உதவிபெறும் கல்வி நிலையங்களில் பெரும்பாலானவை இன்றும் சேவை நோக்கம் குறையாமல் செயல்படுகின்றன. இவற்றில் பல, நூற்றாண்டு கடந்தவையாகவும், பாரதியார் போன்ற மகாகவிகள் பணிபுரிந்த பெருமைக்குரியதாகவும் திகழ்கின்றன.
இதுபோன்ற பள்ளிகளில் தற்போது மாணவர் எண்ணிக்கை ஆரம்பத்தில் இருந்ததைவிட 3 மடங்கு உயர்ந்துள்ளன. ஆனால், ஆசிரியர் எண்ணிக்கை மட்டும் ஆரம்பத்தில் இருந்தது போலவே உள்ளது.
குறிப்பாக, நூலகர்கள், ஓவிய ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் அப்பள்ளிகளின் நூலகங்கள் சிதிலமடைந்து கிடக்கும் அவல நிலையும் உள்ளது.
இவ்வகைப் பள்ளிகளில் துப்புரவுப் பணியாளர் காலியிடத்தைக் கூட அந்தந்தப் பள்ளி நிர்வாகமே சொந்த நிதியில் நிரப்ப வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் கல்வித்துறை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதே நிலை நீடித்தால் கல்வி நிலையத்தைத் தொடர்ந்து நடத்த நிதிப் பற்றாக்குறை ஏற்படும். அதனால் நிதி திரட்டவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, மாணவர்களிடம் மறைமுகமாக கட்டணம் வசூலிக்க வேண்டியதிருக்கும். அப்படி நிதி வசூலிக்காவிட்டால், கல்வி நிலையத்தை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்கள் அக்கல்வி நிலைய நிர்வாகிகள்.
தற்போது இடைநிலைக் கல்வித் திட்டம் மூலம் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ஒவ்வோர் பள்ளிக்கும் பல லட்சம் நிதி அளிக்கப்படுகிறது.
ஆனால், அரசு உதவிபெறும் கல்வி நிலையங்களில் கழிப்பறை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் போதிய அளவுக்கு இல்லை. எனினும் அதற்கான நிதியைக் கூட அரசு அளிக்க முன்வராதது துரதிருஷ்டவசமானது என்கிறார்கள் ஆசிரியர்கள்.
இதனால், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும், நிர்வாகிகளும் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் அல்லது மக்களவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியைக் கோருகிற நிலை ஏற்படுகிறது.
அரசியல்வாதிகளின் உதவியைக் கோரும்போது, அவர்களது சிபாரிசை ஏற்கும் கட்டாயம் ஏற்படுவதால், மாணவர் சேர்க்கையின்போது நியாயமாக நடக்கமுடியவில்லை என்பதும் ஆசிரியர்கள் கூற்று.
எனவே, அரசு உதவிபெறும் பள்ளிகளது சேவை நோக்கம், அதன் பாரம்பரியப் பெருமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டாவது அரசு சிறப்பு நிதியை அளிக்கவேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரது வேண்டுகோள்.
சேவை நோக்கில் முழுமையாகச் செயல்பட முடியாமலும், வர்த்தக ரீதியில் மூழ்காமலும் ஊசலாட்டத்தில் தள்ளாடும் பாரம்பரியமிக்க அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு உரிய நேரத்தில் அரசு தன் உதவிக்கரத்தை நீட்டுவது "தந்தை மகனுக்காற்றும் கடமை' போன்றதே!
கட்டுரையாளர் :வ.ஜெயபாண்டி
நன்றி : தினமணி
கல்வித்துறையில் அரசு பள்ளிகளுக்குச் சற்றும் குறையாத வகையில் கல்விச் சேவையை அளித்து வரும் அரசு உதவிபெறும் கல்வி நிலையங்களுக்கு நிதி உதவி அளிக்க அரசு முன்வராதது குழந்தைகளிடம் பாரபட்சம் காட்டும் தாயின் செயலுக்கு ஒப்பானது என்கிறார்கள் அரசு உதவிபெறும் கல்வி நிலையத்தினர்.
தமிழகத்தில் அரசு கல்வி நிலையங்கள், தனியார் கல்வி நிலையங்கள், அரசு உதவிபெறும் தனியார் கல்வி நிலையங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
கல்விக் கட்டண வசூல், ஆசிரியர், அலுவலர்கள் நியமனம், அவர்களுக்கான ஊதிய நிர்ணயம் ஆகியவற்றைத் தனியார் கல்வி நிலையங்கள் தாங்களே முடிவுசெய்கின்றன.
ஆனால், அரசு உதவிபெறும் கல்வி நிலையங்களில் ஆசிரியர்கள், அலுவலர்கள் நியமனம் அரசு வழிகாட்டுதலிலேயே நடத்தப்படுகிறது.
ஆசிரியர், அலுவலர்களுக்கு ஊதியம் வழங்குவது என்பதைத் தவிர அரசுப் பள்ளிகளுக்குக் கிடைக்கும் மற்ற சலுகைகள் எதுவும் உதவிபெறும் பள்ளிகளுக்குக் கிடைப்பதில்லை.
எனவே, மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, ஆசிரியர் எண்ணிக்கையைக் கூடுதலாக்குவது ஆகியவற்றை அந்தந்தக் கல்வி நிலைய நிர்வாகங்களே செயல்படுத்த வேண்டியுள்ளது.
புதிய ஆசிரியர்களை நியமித்து, அவர்களுக்கான ஊதியத்தை பெற்றோர்}ஆசிரியர் கழகத்தின் மூலம் அளிக்கும் கட்டாயமும் அரசு உதவிபெறும் பள்ளி நிர்வாகங்களுக்கு ஏற்படுகிறது.
அதன்படி, பெற்றோர்}ஆசிரியர் கழகத்துக்கு மாணவ, மாணவியரிடமிருந்து வசூலிக்கப்படும் தொகையும் மிக மிகக் குறைவேயாகும். இதைவைத்து மாதா மாதம் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது இயலாத காரியம் என்பதும் கல்வி நிலைய நிர்வாகிகள் கருத்து.
தற்போது இலவசக் கல்வித் திட்டத்தால் மாணவர்களிடையே எவ்விதக் கல்விக் கட்டணத்தையும் அப்பள்ளி நிர்வாகங்கள் வசூலிக்க முடியாத நிலையும் உள்ளது.
அரசு உதவிபெறும் கல்வி நிலையங்கள் பெரும்பாலும் சேவை நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டவையே. குறிப்பிட்ட சமூகத்தினர் சார்பிலோ அல்லது சேவை மனப்பான்மை உள்ளவர்கள் கூட்டாகச் சேர்ந்தோ, சமூக முன்னேற்றத்தில் அக்கறையுள்ள தனிப்பட்டவராலோ ஆரம்பிக்கப்பட்டு பின் அரசு உதவி பெற்றவைகளாக அவை மாறியிருப்பதே உண்மை.
இதுபோன்று மாநிலத்தில் 5048 ஆரம்பப் பள்ளிகளும், 1643 தொடக்கப் பள்ளிகளும், 630 உயர்நிலைப் பள்ளிகளும், 1067 மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் விதி விலக்காக ஒரு சில பள்ளிகள் மட்டுமே தற்போது வர்த்தக நோக்கில் செயல்படுபடத் தொடங்கி உள்ளன. ஆனால், அரசு உதவிபெறும் கல்வி நிலையங்களில் பெரும்பாலானவை இன்றும் சேவை நோக்கம் குறையாமல் செயல்படுகின்றன. இவற்றில் பல, நூற்றாண்டு கடந்தவையாகவும், பாரதியார் போன்ற மகாகவிகள் பணிபுரிந்த பெருமைக்குரியதாகவும் திகழ்கின்றன.
இதுபோன்ற பள்ளிகளில் தற்போது மாணவர் எண்ணிக்கை ஆரம்பத்தில் இருந்ததைவிட 3 மடங்கு உயர்ந்துள்ளன. ஆனால், ஆசிரியர் எண்ணிக்கை மட்டும் ஆரம்பத்தில் இருந்தது போலவே உள்ளது.
குறிப்பாக, நூலகர்கள், ஓவிய ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் அப்பள்ளிகளின் நூலகங்கள் சிதிலமடைந்து கிடக்கும் அவல நிலையும் உள்ளது.
இவ்வகைப் பள்ளிகளில் துப்புரவுப் பணியாளர் காலியிடத்தைக் கூட அந்தந்தப் பள்ளி நிர்வாகமே சொந்த நிதியில் நிரப்ப வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் கல்வித்துறை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதே நிலை நீடித்தால் கல்வி நிலையத்தைத் தொடர்ந்து நடத்த நிதிப் பற்றாக்குறை ஏற்படும். அதனால் நிதி திரட்டவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, மாணவர்களிடம் மறைமுகமாக கட்டணம் வசூலிக்க வேண்டியதிருக்கும். அப்படி நிதி வசூலிக்காவிட்டால், கல்வி நிலையத்தை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்கள் அக்கல்வி நிலைய நிர்வாகிகள்.
தற்போது இடைநிலைக் கல்வித் திட்டம் மூலம் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ஒவ்வோர் பள்ளிக்கும் பல லட்சம் நிதி அளிக்கப்படுகிறது.
ஆனால், அரசு உதவிபெறும் கல்வி நிலையங்களில் கழிப்பறை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் போதிய அளவுக்கு இல்லை. எனினும் அதற்கான நிதியைக் கூட அரசு அளிக்க முன்வராதது துரதிருஷ்டவசமானது என்கிறார்கள் ஆசிரியர்கள்.
இதனால், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும், நிர்வாகிகளும் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் அல்லது மக்களவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியைக் கோருகிற நிலை ஏற்படுகிறது.
அரசியல்வாதிகளின் உதவியைக் கோரும்போது, அவர்களது சிபாரிசை ஏற்கும் கட்டாயம் ஏற்படுவதால், மாணவர் சேர்க்கையின்போது நியாயமாக நடக்கமுடியவில்லை என்பதும் ஆசிரியர்கள் கூற்று.
எனவே, அரசு உதவிபெறும் பள்ளிகளது சேவை நோக்கம், அதன் பாரம்பரியப் பெருமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டாவது அரசு சிறப்பு நிதியை அளிக்கவேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரது வேண்டுகோள்.
சேவை நோக்கில் முழுமையாகச் செயல்பட முடியாமலும், வர்த்தக ரீதியில் மூழ்காமலும் ஊசலாட்டத்தில் தள்ளாடும் பாரம்பரியமிக்க அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு உரிய நேரத்தில் அரசு தன் உதவிக்கரத்தை நீட்டுவது "தந்தை மகனுக்காற்றும் கடமை' போன்றதே!
கட்டுரையாளர் :வ.ஜெயபாண்டி
நன்றி : தினமணி
Labels:
ஆசிரியர்,
தமிழகஅரசு,
மாணவர்
Friday, January 15, 2010
தகுதியற்றதா, தேவையற்றதா?
தமிழ்நாட்டின் ஆறு மாவட்டங்களில் அண்ணா கிராம வளர்ச்சித் திட்டத்துக்காக ஒதுக்கிய நிதியை, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வாங்குவது போன்ற தகுதியற்ற செலவுகளுக்காகத் திருப்பிவிட்டதாகக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை கூறியிருக்கிறது.
தலைமைத் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையை ஆவலோடு எதிர்பார்த்திருந்து அதில் கூறப்படும் குறைகளைப் பற்றி பேரவையிலும் வெளியிலும் பேசுவதைத் தங்களுடைய கடமையாகவே கருதி ஒரு காலத்தில் செயல்பட்டன எதிர்க்கட்சிகள். கணக்கு வழக்குகளில் நிபுணர்களும் நடுநிலையாளர்களுமான தணிக்கையாளர்களின் அறிக்கை என்பதால், அவற்றுக்கு ஊடகங்களிலும் உரிய முக்கியத்துவம் தரப்பட்டது. ஆளும் கட்சிகளும் அதற்கு விளக்கம் அளித்து தவறு எப்படி ஏற்பட்டது என்று கூறி, தன் மீதான பழியை ஓரளவாவது போக்கிக் கொள்ளவும், தவறைத் திருத்திக் கொள்ளவும் முயற்சி செய்தன.
இப்போது அதெல்லாம் அவசியம் என்று எதிர்க்கட்சிகளும் நினைப்பதில்லை, ஆளும் கட்சியும் கவலைப்படுவதில்லை. தணிக்கை அறிக்கை என்பது பத்திரிகைகளில் பிரசுரமான பிறகு, ""நேராக எங்கு போக வேண்டுமோ'' அங்கே போய் விடுகிறது.
அடித்தளக் கட்டமைப்பு மேம்பாட்டுக்கான நிதியை இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வாங்குவது உள்ளிட்ட தகுதியற்ற செலவுகளுக்குப் பயன்படுத்தியிருப்பதாகத் தணிக்கையாளர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
தொலைக்காட்சிப் பெட்டியை முட்டாள்(களின்) பெட்டி என்றே அழைப்பார்கள் விவரம் தெரிந்தவர்கள். ஆனால் தமிழ்நாட்டு மக்களின் பொது அறிவை வளர்ப்பதற்காகவே தொலைக்காட்சிப் பெட்டியை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப் போவதாக முதலமைச்சர் அறிவித்தபோது, வழக்கம்போல ஏதோ நகைச்சுவையாகப் பேசுகிறார் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஒரே முனைப்பாக இருந்து அந்தத் திட்டத்தை அமல்படுத்தத் தொடங்கினார் முதல்வர்.
பொதுப் பணத்தை சூறையாடத்தான் இந்தத் திட்டம் என்று முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக தனது ""ஆண்ட'' அனுபவத்தைக் கொண்டு உடனே குற்றம் சாட்டியது. ""தொலைக்காட்சிப் பெட்டியைத் தேர்வு செய்யப் போவதும், தயாரிப்பாளர்களைத் தேர்வு செய்யப் போவதும் அனைத்துக் கட்சி குழுதான்'' என்று முதல்வர் அறிவித்தார். பிரச்னை, தரமான வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வாங்கப்படுவதிலும், முறையாக விநியோகம் செய்யப்படுவதிலும் இல்லை. இப்படி ஒரு திட்டம் இன்றைய நிலையில் அவசியத் தேவைதானா, அதனால் யாருக்கு என்ன லாபம் என்பதுதான்.
வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டும் என்று தொடங்கி, ரேஷன் கார்டு வைத்துள்ள எல்லா குடும்பங்களுக்கும் என்று இப்போது இந்த இலவசத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியா போன்ற நாடுகளில் நிதியாதாரம் என்பது பெரும்பாலும் ஏழைகளின் உழைப்பிலிருந்துதான் மறைமுக வரிகள் மூலம் பெறப்படுகிறது. எனவே, ஒவ்வொரு ரூபாயையும் பயனுள்ள வகையில் செலவழிப்பது என்பது அரசின் கட்டாயக் கடமை.
பள்ளிக்கூடம் இல்லாத ஊர் இருக்கலாம்; படிக்காத குழந்தைகளைக் கொண்ட குடும்பம் இருக்கலாம்; வேலை கிடைக்காத பட்டதாரிகள் இருக்கலாம்; மருத்துவமனையே இல்லாத கிராமங்கள் இருக்கலாம்; மருத்துவர்கள் இல்லாத மருத்துவமனை இருக்கலாம்; ஆசிரியர்கள் இல்லாத பள்ளிக்கூடங்கள் இருக்கலாம்; வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத வீடுகளே இருக்கக்கூடாது என்று நினைத்து, போர்க்கால அடிப்படையில் செயல்படும் இந்த அரசைப் பார்த்தால் வியப்புத்தான் ஏற்படுகிறது.
எந்த நிறுவனம் இந்தப் பொது அறிவு அட்சயபாத்திரத்தைத் தயாரிக்கிறது என்று தெரியவில்லை. மின்வாரியத்தின் மின்னழுத்த மாற்றத்தைத் தாங்க முடியாமல் பருத்தி வெடிப்பது போல ஆங்காங்கே வெடித்துச் சிதறி, கரிந்து வருகிறது மக்களின் வரிப்பணம். இந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளில் சினிமாப் படங்களும், குத்தாட்ட நடனங்களும், பழிக்குப்பழி சீரியல்களும் பார்க்காமல் அறிவார்ந்த விஷயங்களை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்பது உலகறிந்த ரகசியம். ஆளுங்கட்சி ஆதரவு சானல்களின் பார்வையாளர்கள் கணக்கை (டி.ஆர்.பி.ரேட்டிங்) அதிகரித்து அதன்மூலம் தங்களது விளம்பர வருவாயை அதிகரிக்கத்தான் இந்தத் திட்டம் உதவுகிறது என்பதும் ரகசியமல்ல.
வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிக்கான செலவை இலவச சமையல் எரிவாயு அடுப்புக்கான செலவுடன்கூட ஒப்பிட முடியாது. விறகுக்காக மரங்களை வெட்டுவதைத் தவிர்க்க உதவுவதால் இலவச சமையல் எரிவாயு திட்டம்கூட வரவேற்கப்பட வேண்டியதே.
வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளுக்கான செலவு மட்டும் அல்ல, சட்டப் பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்றோருக்காக ஒதுக்கப்படும் தொகுதிவளர்ச்சி நிதியும்கூட முழு அளவுக்குப் பயனுள்ள வகையில் செலவழிக்கப்படுவதில்லை என்றுதான் தணிக்கை அறிக்கைகள் கூறுகின்றன.
நல்லரசு என்பது மக்களின் அடிப்படைத் தேவைகளான சாலைகள், சுகாதாரம், கல்வி, கிராமப்புற முன்னேற்றம் போன்றவைகளில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, கவர்ச்சித் திட்டங்களை முன்வைத்து வாக்குகளைப் பெற்று, ஆட்சியைப் பிடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதைத் தணிக்கை அறிக்கையில் கண்டிக்கத்தான் முடிகிறதே தவிர, தண்டிக்கவா முடியும்? ஆட்சியாளர்கள் தீர்க்கதரிசிகளாக இல்லாமல், தொலைநோக்குப் பார்வையற்ற அரசியல்வாதிகளாக இருப்பதன் விளைவை அனுபவிக்கப்போவது என்னவோ நாளைய தலைமுறைதானே... இவர்கள் ஏன் கவலைப்படப் போகிறார்கள்?
நன்றி : தினமணி
தலைமைத் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையை ஆவலோடு எதிர்பார்த்திருந்து அதில் கூறப்படும் குறைகளைப் பற்றி பேரவையிலும் வெளியிலும் பேசுவதைத் தங்களுடைய கடமையாகவே கருதி ஒரு காலத்தில் செயல்பட்டன எதிர்க்கட்சிகள். கணக்கு வழக்குகளில் நிபுணர்களும் நடுநிலையாளர்களுமான தணிக்கையாளர்களின் அறிக்கை என்பதால், அவற்றுக்கு ஊடகங்களிலும் உரிய முக்கியத்துவம் தரப்பட்டது. ஆளும் கட்சிகளும் அதற்கு விளக்கம் அளித்து தவறு எப்படி ஏற்பட்டது என்று கூறி, தன் மீதான பழியை ஓரளவாவது போக்கிக் கொள்ளவும், தவறைத் திருத்திக் கொள்ளவும் முயற்சி செய்தன.
இப்போது அதெல்லாம் அவசியம் என்று எதிர்க்கட்சிகளும் நினைப்பதில்லை, ஆளும் கட்சியும் கவலைப்படுவதில்லை. தணிக்கை அறிக்கை என்பது பத்திரிகைகளில் பிரசுரமான பிறகு, ""நேராக எங்கு போக வேண்டுமோ'' அங்கே போய் விடுகிறது.
அடித்தளக் கட்டமைப்பு மேம்பாட்டுக்கான நிதியை இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வாங்குவது உள்ளிட்ட தகுதியற்ற செலவுகளுக்குப் பயன்படுத்தியிருப்பதாகத் தணிக்கையாளர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
தொலைக்காட்சிப் பெட்டியை முட்டாள்(களின்) பெட்டி என்றே அழைப்பார்கள் விவரம் தெரிந்தவர்கள். ஆனால் தமிழ்நாட்டு மக்களின் பொது அறிவை வளர்ப்பதற்காகவே தொலைக்காட்சிப் பெட்டியை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப் போவதாக முதலமைச்சர் அறிவித்தபோது, வழக்கம்போல ஏதோ நகைச்சுவையாகப் பேசுகிறார் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஒரே முனைப்பாக இருந்து அந்தத் திட்டத்தை அமல்படுத்தத் தொடங்கினார் முதல்வர்.
பொதுப் பணத்தை சூறையாடத்தான் இந்தத் திட்டம் என்று முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக தனது ""ஆண்ட'' அனுபவத்தைக் கொண்டு உடனே குற்றம் சாட்டியது. ""தொலைக்காட்சிப் பெட்டியைத் தேர்வு செய்யப் போவதும், தயாரிப்பாளர்களைத் தேர்வு செய்யப் போவதும் அனைத்துக் கட்சி குழுதான்'' என்று முதல்வர் அறிவித்தார். பிரச்னை, தரமான வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வாங்கப்படுவதிலும், முறையாக விநியோகம் செய்யப்படுவதிலும் இல்லை. இப்படி ஒரு திட்டம் இன்றைய நிலையில் அவசியத் தேவைதானா, அதனால் யாருக்கு என்ன லாபம் என்பதுதான்.
வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டும் என்று தொடங்கி, ரேஷன் கார்டு வைத்துள்ள எல்லா குடும்பங்களுக்கும் என்று இப்போது இந்த இலவசத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியா போன்ற நாடுகளில் நிதியாதாரம் என்பது பெரும்பாலும் ஏழைகளின் உழைப்பிலிருந்துதான் மறைமுக வரிகள் மூலம் பெறப்படுகிறது. எனவே, ஒவ்வொரு ரூபாயையும் பயனுள்ள வகையில் செலவழிப்பது என்பது அரசின் கட்டாயக் கடமை.
பள்ளிக்கூடம் இல்லாத ஊர் இருக்கலாம்; படிக்காத குழந்தைகளைக் கொண்ட குடும்பம் இருக்கலாம்; வேலை கிடைக்காத பட்டதாரிகள் இருக்கலாம்; மருத்துவமனையே இல்லாத கிராமங்கள் இருக்கலாம்; மருத்துவர்கள் இல்லாத மருத்துவமனை இருக்கலாம்; ஆசிரியர்கள் இல்லாத பள்ளிக்கூடங்கள் இருக்கலாம்; வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத வீடுகளே இருக்கக்கூடாது என்று நினைத்து, போர்க்கால அடிப்படையில் செயல்படும் இந்த அரசைப் பார்த்தால் வியப்புத்தான் ஏற்படுகிறது.
எந்த நிறுவனம் இந்தப் பொது அறிவு அட்சயபாத்திரத்தைத் தயாரிக்கிறது என்று தெரியவில்லை. மின்வாரியத்தின் மின்னழுத்த மாற்றத்தைத் தாங்க முடியாமல் பருத்தி வெடிப்பது போல ஆங்காங்கே வெடித்துச் சிதறி, கரிந்து வருகிறது மக்களின் வரிப்பணம். இந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளில் சினிமாப் படங்களும், குத்தாட்ட நடனங்களும், பழிக்குப்பழி சீரியல்களும் பார்க்காமல் அறிவார்ந்த விஷயங்களை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்பது உலகறிந்த ரகசியம். ஆளுங்கட்சி ஆதரவு சானல்களின் பார்வையாளர்கள் கணக்கை (டி.ஆர்.பி.ரேட்டிங்) அதிகரித்து அதன்மூலம் தங்களது விளம்பர வருவாயை அதிகரிக்கத்தான் இந்தத் திட்டம் உதவுகிறது என்பதும் ரகசியமல்ல.
வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிக்கான செலவை இலவச சமையல் எரிவாயு அடுப்புக்கான செலவுடன்கூட ஒப்பிட முடியாது. விறகுக்காக மரங்களை வெட்டுவதைத் தவிர்க்க உதவுவதால் இலவச சமையல் எரிவாயு திட்டம்கூட வரவேற்கப்பட வேண்டியதே.
வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளுக்கான செலவு மட்டும் அல்ல, சட்டப் பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்றோருக்காக ஒதுக்கப்படும் தொகுதிவளர்ச்சி நிதியும்கூட முழு அளவுக்குப் பயனுள்ள வகையில் செலவழிக்கப்படுவதில்லை என்றுதான் தணிக்கை அறிக்கைகள் கூறுகின்றன.
நல்லரசு என்பது மக்களின் அடிப்படைத் தேவைகளான சாலைகள், சுகாதாரம், கல்வி, கிராமப்புற முன்னேற்றம் போன்றவைகளில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, கவர்ச்சித் திட்டங்களை முன்வைத்து வாக்குகளைப் பெற்று, ஆட்சியைப் பிடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதைத் தணிக்கை அறிக்கையில் கண்டிக்கத்தான் முடிகிறதே தவிர, தண்டிக்கவா முடியும்? ஆட்சியாளர்கள் தீர்க்கதரிசிகளாக இல்லாமல், தொலைநோக்குப் பார்வையற்ற அரசியல்வாதிகளாக இருப்பதன் விளைவை அனுபவிக்கப்போவது என்னவோ நாளைய தலைமுறைதானே... இவர்கள் ஏன் கவலைப்படப் போகிறார்கள்?
நன்றி : தினமணி
Labels:
தமிழகஅரசு,
தலையங்கம்,
தொலைக்காட்சி
Thursday, January 14, 2010
செல்' இன்றிச் செல்!
பணியின்போது அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள் செல்போன் எடுத்துச் செல்லத் தடைவிதித்து அரசு வெளியிட்டுள்ள உத்தரவு வரவேற்கத்தக்கது.
÷சாலை விபத்துக்கான முக்கிய காரணிகளில் செல்போனும் ஒன்று. சாலைகளில் மட்டுமல்ல, தண்டவாளத்தைக் கடக்கும்போதுகூட செல்போன் பேசும் அளவு நம் மக்களை அடிமைப்படுத்தியுள்ளது செல்போன். ஆதலால் இந்தத் தடை நிச்சயம் பலனளிக்கும்.
÷அதேநேரத்தில், செல்போன் எடுத்துச் செல்ல தடைவிதிப்பது ஓட்டுநர்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும்; பணியின்போது செல்போன் பேச வேண்டுமானால் தடை விதிக்கலாம்; செல்போனே எடுத்துச் செல்லத் தடை விதிக்கக் கூடாது என சில போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இதில் சமரசத்துக்கு இடம் அளித்தால் இந்த உத்தரவே நீர்த்துப்போகும்.
÷போக்குவரத்துக் கழக கிளை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு பேச செல்போன் அவசியம் என்று கருதினால், நடத்துநர்களின் செல்போன் மூலம் தொடர்பு கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்களுடன் ஓட்டுநர்கள் தொடர்புகொள்ள செல்போன் அவசியம் என்று வாதிடுவது நியாயமல்ல. அரசு சட்டம் இயற்றினால் அதில் சலுகைகளை எதிர்பார்க்கக் கூடாது.
÷செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏற்கெனவே விதிமுறைகள் உள்ளன. ஆனால், அதன்படி எடுக்கப்படும் நடவடிக்கை போதுமானதாக இல்லை. எல்லா சாலைகளிலும் யாராவது சிலர் செல்போன் பேசிக்கொண்டேதான் வாகனத்தை இயக்குகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள்தான் எப்போதாவது போலீஸ் பிடியில் சிக்குகின்றனர். செல்போன் பேசிக்கொண்டே கார்களை இயக்கும் ஓட்டுநர்கள் கண்டுகொள்ளப்படுவதே இல்லை.
÷பொது இடத்தில் புகைபிடிக்க, எச்சில் துப்பத் தடைவிதித்து அரசு ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவு எந்த அளவு நடைமுறையில் உள்ளது என்பது எல்லோரும் அறிந்ததே. தொடர்ச்சியான கண்காணிப்பு, கடுமையான நடவடிக்கைகள் இல்லாததே அரசின் சட்டங்கள் மீறப்படுவதற்கு முதற்காரணம்.
÷அதேபோன்ற நிலைமை இந்த விஷயத்திலும் ஆகிவிடாமல் இருப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். ஓட்டுநர்கள் செல்போன் கொண்டு செல்கின்றனரா என்பது டிக்கெட் பரிசோதகர்கள் மூலம் கண்காணிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த விதிவிலக்கும் அளிக்காமல் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
÷மேலும், அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் என்பதுடன் நின்றுவிடாமல், தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்களும் செல்போன் எடுத்துச் செல்லத் தடைவிதிக்க வேண்டும்.
÷தனியார் பேருந்துகள் சிறப்பான சேவையை அளித்தாலும், அதிக வேகம், தொழில்போட்டியால் விதிமீறல் என அவைகளால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகமாகவே உள்ளன. எனவே, இந்தக் கண்காணிப்பு வளையத்துக்குள் தனியார் பேருந்து ஓட்டுநர்களும் கொண்டுவரப்பட வேண்டும்.
÷அதேபோல அரசு அலுவலகங்களிலும் பணியின்போது ஊழியர்கள் செல்போன் பேச சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வரலாம். அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் பலர், காத்துக்கிடக்கும் பொதுமக்களைக் கண்டுகொள்ளாமல் செல்போனில் வெட்டியாகப் பேசி அரட்டை அடிப்பது கண்கூடு. இதனால், பணிகள் பாதிக்கப்படுவதுடன் ஏதாவது ஒரு காரணத்துக்காக அலுவலகங்களுக்கு வந்திருக்கும் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.
÷அறிவியல் முன்னேற்றத்தின் அற்புதம் செல்போன். அதன் வருகைக்குப் பின்னர் தகவல் தொடர்பில் பெரும் புரட்சியே ஏற்பட்டு, இன்று "செல் இல்லாதோர்க்கு இவ்வுலக வாழ்க்கையே இல்லை' என்ற நிலை உருவாகியுள்ளது. ஆனால், அந்த நாகரிகப் புரட்சியே தனிமனித வாழ்வில் ஒரு மிரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கு இல்லை. செல்போனால் எந்த அளவு பயன் உள்ளதோ அதே அளவு பாதிப்புகளும் இருக்கின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலர் செல்போனிலேயே மூழ்கிக் கிடப்பதால், அவர்களது கல்வி பாதிக்கப்படுகிறது. செல்போனால், மாணவிகளுக்குப் பல்வேறு மனஉளைச்சல்கள் ஏற்படுகின்றன. உச்சகட்டமாக, ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்கிக்கொண்டே செல்போன் பேசுவதால் விபத்து நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
÷எனவே, செல்போன் பயன்பாட்டில் நிச்சயம் கட்டுப்பாடுகள் தேவை. அரசு சட்டம் போட்டுத்தான் அந்தக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டும் என்பதில்லை. ஏனெனில் என்னதான் சட்டம் இயற்றினாலும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற தனிமனித ஒழுக்கமே எந்த சட்டத்தையும் வெற்றி பெறச் செய்யும்.
கட்டுரையாளர் : எஸ்.ராஜாராம்
நன்றி : தினமணி
÷சாலை விபத்துக்கான முக்கிய காரணிகளில் செல்போனும் ஒன்று. சாலைகளில் மட்டுமல்ல, தண்டவாளத்தைக் கடக்கும்போதுகூட செல்போன் பேசும் அளவு நம் மக்களை அடிமைப்படுத்தியுள்ளது செல்போன். ஆதலால் இந்தத் தடை நிச்சயம் பலனளிக்கும்.
÷அதேநேரத்தில், செல்போன் எடுத்துச் செல்ல தடைவிதிப்பது ஓட்டுநர்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும்; பணியின்போது செல்போன் பேச வேண்டுமானால் தடை விதிக்கலாம்; செல்போனே எடுத்துச் செல்லத் தடை விதிக்கக் கூடாது என சில போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இதில் சமரசத்துக்கு இடம் அளித்தால் இந்த உத்தரவே நீர்த்துப்போகும்.
÷போக்குவரத்துக் கழக கிளை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு பேச செல்போன் அவசியம் என்று கருதினால், நடத்துநர்களின் செல்போன் மூலம் தொடர்பு கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்களுடன் ஓட்டுநர்கள் தொடர்புகொள்ள செல்போன் அவசியம் என்று வாதிடுவது நியாயமல்ல. அரசு சட்டம் இயற்றினால் அதில் சலுகைகளை எதிர்பார்க்கக் கூடாது.
÷செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏற்கெனவே விதிமுறைகள் உள்ளன. ஆனால், அதன்படி எடுக்கப்படும் நடவடிக்கை போதுமானதாக இல்லை. எல்லா சாலைகளிலும் யாராவது சிலர் செல்போன் பேசிக்கொண்டேதான் வாகனத்தை இயக்குகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள்தான் எப்போதாவது போலீஸ் பிடியில் சிக்குகின்றனர். செல்போன் பேசிக்கொண்டே கார்களை இயக்கும் ஓட்டுநர்கள் கண்டுகொள்ளப்படுவதே இல்லை.
÷பொது இடத்தில் புகைபிடிக்க, எச்சில் துப்பத் தடைவிதித்து அரசு ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவு எந்த அளவு நடைமுறையில் உள்ளது என்பது எல்லோரும் அறிந்ததே. தொடர்ச்சியான கண்காணிப்பு, கடுமையான நடவடிக்கைகள் இல்லாததே அரசின் சட்டங்கள் மீறப்படுவதற்கு முதற்காரணம்.
÷அதேபோன்ற நிலைமை இந்த விஷயத்திலும் ஆகிவிடாமல் இருப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். ஓட்டுநர்கள் செல்போன் கொண்டு செல்கின்றனரா என்பது டிக்கெட் பரிசோதகர்கள் மூலம் கண்காணிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த விதிவிலக்கும் அளிக்காமல் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
÷மேலும், அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் என்பதுடன் நின்றுவிடாமல், தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்களும் செல்போன் எடுத்துச் செல்லத் தடைவிதிக்க வேண்டும்.
÷தனியார் பேருந்துகள் சிறப்பான சேவையை அளித்தாலும், அதிக வேகம், தொழில்போட்டியால் விதிமீறல் என அவைகளால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகமாகவே உள்ளன. எனவே, இந்தக் கண்காணிப்பு வளையத்துக்குள் தனியார் பேருந்து ஓட்டுநர்களும் கொண்டுவரப்பட வேண்டும்.
÷அதேபோல அரசு அலுவலகங்களிலும் பணியின்போது ஊழியர்கள் செல்போன் பேச சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வரலாம். அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் பலர், காத்துக்கிடக்கும் பொதுமக்களைக் கண்டுகொள்ளாமல் செல்போனில் வெட்டியாகப் பேசி அரட்டை அடிப்பது கண்கூடு. இதனால், பணிகள் பாதிக்கப்படுவதுடன் ஏதாவது ஒரு காரணத்துக்காக அலுவலகங்களுக்கு வந்திருக்கும் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.
÷அறிவியல் முன்னேற்றத்தின் அற்புதம் செல்போன். அதன் வருகைக்குப் பின்னர் தகவல் தொடர்பில் பெரும் புரட்சியே ஏற்பட்டு, இன்று "செல் இல்லாதோர்க்கு இவ்வுலக வாழ்க்கையே இல்லை' என்ற நிலை உருவாகியுள்ளது. ஆனால், அந்த நாகரிகப் புரட்சியே தனிமனித வாழ்வில் ஒரு மிரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கு இல்லை. செல்போனால் எந்த அளவு பயன் உள்ளதோ அதே அளவு பாதிப்புகளும் இருக்கின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலர் செல்போனிலேயே மூழ்கிக் கிடப்பதால், அவர்களது கல்வி பாதிக்கப்படுகிறது. செல்போனால், மாணவிகளுக்குப் பல்வேறு மனஉளைச்சல்கள் ஏற்படுகின்றன. உச்சகட்டமாக, ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்கிக்கொண்டே செல்போன் பேசுவதால் விபத்து நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
÷எனவே, செல்போன் பயன்பாட்டில் நிச்சயம் கட்டுப்பாடுகள் தேவை. அரசு சட்டம் போட்டுத்தான் அந்தக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டும் என்பதில்லை. ஏனெனில் என்னதான் சட்டம் இயற்றினாலும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற தனிமனித ஒழுக்கமே எந்த சட்டத்தையும் வெற்றி பெறச் செய்யும்.
கட்டுரையாளர் : எஸ்.ராஜாராம்
நன்றி : தினமணி
கறை விரும்பாத வெள்ளைக் கார்கள்
ஒரு கொலைச் சம்பவம் சரியாகக் கையாளப்படாதபோது, அதைக் காண நேர்ந்திராதவர்களையும் காயப்படுத்தி, மனதை ரணமாக்கி, பீதிக்குள்ளாக்கிவிடும் என்பதற்கு ஓர் உதாரணம், அண்மையில் நெல்லைச் சீமையில் ஆழ்வார்குறிச்சி அருகே காவல் உதவி ஆய்வாளர் வெற்றிவேல் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்!
இறந்தவர் காவல்துறை உதவி ஆய்வாளர் என்பதோ அல்லது ஆள்மாறாட்டத்தால் நடந்த கொலை என்பதோ இதில் முக்கியமில்லை. ஒரு மனிதர், ஒரு வன்முறைக்கும்பலால் வலதுகால் வெட்டித் துண்டிக்கப்பட்டு, ரத்தம் சொட்டச்சொட்ட சாலையில் விழுந்து துடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு கூட்டமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்கிறார்கள். விடியோ கேமராக்கள் வலம் வருகின்றன. தமிழக அரசின் இரண்டு அமைச்சர்கள் தங்களது ஆள், படை, வாகனங்களுடன் நிற்கிறார்கள். ஆனாலும் சாலையில் விழுந்துகிடக்கும் மனிதருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. இருபது நிமிடங்களுக்குப் பிறகுதான் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.
அவருக்குத் தண்ணீர் கொடுக்கச் செல்லும் நபர், அங்கே தலையை உயர்த்தி ஏதோ பேச வரும் உதவி ஆய்வாளரின் கைக்குள் சிக்காமல் விலகி ஓடுகிறார்- ஏதோ மனிதவெடிகுண்டைக் கண்டதைப்போல! எதற்காக இந்தக் கொலை? அவர் சொல்ல வரும் விஷயம் என்ன? அத்தனை பேர் அருகிருந்தும் அவரது கடைசி வார்த்தையை, அவர் பிரக்ஞையுடன் இருக்கும்போதே கேட்கத் துணியும் நபர்கள் யாருமே இல்லை. (சிறகுகள் வெட்டப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஜடாயுவைக் கண்டு இவர்களைப் போலவே இராமன், இலக்குமணன் ஒதுங்கி நின்றிருந்தால் என்ன ஆகியிருக்கும்? சீதையைக் கடத்திச் சென்ற ராவணன் பற்றித் தெரியாமலே போயிருக்கும்!)
அமைச்சருடன் இருந்த சில அரசியல்வாதிகளைத் தவிர, பலரும் காவல்துறையில் பணிபுரிபவர்கள். அவர்களுக்கு முதலுதவி அளிக்கும் பயிற்சிகள் நிச்சயமாக அளிக்கப்பட்டிருக்கும். அவர்கள் ஏன் வெற்றிவேலை உடனடியாக ஒரு காரில் கொண்டு செல்லவில்லை? வலது கால் துண்டான நிலையில், ரத்தப் போக்குடன் துடித்துக் கொண்டிருந்த அவரை, அங்கிருந்த ஏதேனும் ஒரு காரில் கொண்டு செல்லவும், எதிர்ப்படும் 108 ஆம்புலன்ஸýக்கு அவரை மாற்றி, முதலுதவியை முறைப்படி அளிக்கவும் செய்திருந்தால் வெற்றிவேல் பிழைத்திருக்கக்கூடும். அமைச்சர் அல்லது அவருடன் வந்த கார்களைப் பயன்படுத்த பலத்த யோசனை ஏன்? கார் ரத்தக் கறை பட்டுவிடுமே என்ற அச்சம்தானே! அல்லது, காரிலேயே அவர் இறந்துவிட்டால் அந்தக் காரின் புனிதம் கெட்டுவிடுமே என்ற எண்ணமா? எதற்காகக் கடைசிவரை காத்திருந்து, 108 வாகனம் வராது என்று தெரிந்தபிறகு அவரை ஒரு காரில் ஏற்றிச் சென்றுள்ளனர்!.
"ஆம்புலன்ஸில் எல்லா வசதிகளும் இருக்கும் என்று நினைத்தோம். இதுபோன்று காயமடைந்தவர்களைக் கையாண்டு பழக்கமில்லை' என்று பொது சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் சொல்வது அவரது அமைச்சர் பதவிக்கும், பொறுப்பு வகிக்கும் துறைக்குமே பெருத்த அவமானம். இத்தகைய ஒரு பதிலை, சாதாரண மனிதர்கள் சொல்லலாம். ஆனால் ஓர் அமைச்சர் சொல்லலாமா? 108-க்குப் போன் செய்வது ஏதுமறியா பாமரனின் வேலை. ஒரு பொறுப்புமிக்க அமைச்சர் கட்டளையிட்டால், செயல்பட ஆள், படை, வாகனம் எல்லாமும் உடன் நிற்கிறது. ஆனால் அமைச்சர்களும் வேடிக்கை பார்ப்பதென்றால்..
காமராஜ் முதல்வர் பதவியில் இல்லாத வேளையில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டுக்கு வெளியே ஒரு காங்கிரஸ் தொண்டர், ஆளும் கட்சியினருடனான மோதலில் காயமடைந்து ரத்தம் சொட்டச்சொட்ட மேடைக்கு அழைத்துவரப்பட்டபோது, "அவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகாமல் இங்கே ஏன் அழைத்து வருகிறீர்கள்' என்று காமராஜ், அவர்களைக் கடுமையாகத் திட்டி, விரட்டி அடித்தார். அவரது கோபத்துக்குக் காரணம் மேடை ரத்தக்கறை ஆகிவிடுமே என்ற அருவருப்பு அல்ல. மாநாட்டு மேடையில் இரத்தத்தைக் காட்டி தொண்டர்களை சூடுபடுத்துவதைத்தான் அவர் அருவருப்பாகக் கருதினார்.
ஆனால், சாலையில் வெட்டுப்பட்டுக் கிடக்கும் ஒருவரை இரு அமைச்சர்களில் யாரேனும் ஒருவர் தங்கள் காரில் ஏற்றிச் சென்றிருந்தால், அவர்களது வெள்ளைக் கார்களில் படிந்திருக்கக்கூடிய ரத்தக் கறை ஆட்சியையும் அவர்கள் சார்ந்த கட்சியையும்கூட பெருமைப் படுத்தியிருக்கும். ஆனால் அமைச்சர்கள் அதற்கான எந்த முயற்சியும் செய்யவில்லை. அவர்களும் 108-க்குப் போன் செய்வார்கள் என்றால் அவர்களுக்கு அமைச்சர் பதவிக்கான தலைமைப்பண்பு இல்லை என்பதைத் தவிர, சொல்வதற்கு வேறு என்ன இருக்கிறது.
இந்தச் சம்பவம் முழுவதும் வடஇந்திய தனியார் டி.வி. சானல்களில் ஒளிப்பரப்பாகின. தமிழ்நாட்டில் ஆளும் கட்சிக்கு ஆதரவான தனியார் டி.வி. சானல்கள் இதைத் தணிக்கை செய்து ஒளிபரப்பின என்றாலும், எதிர்க்கட்சியின் தொலைக்காட்சியில் இதே கோரக் காட்சிகள் ஒளிபரப்பாகின. அமைச்சர்களின் செயலை அம்பலப்படுத்துவதற்காக இதைச் செய்திருக்கிறார்கள் என்றாலும், இதைக் காண நேர்ந்த பொதுமக்கள், சிறார்கள் மனதில் எத்தகைய பதற்றத்தை, பீதியை இந்தக் காட்சிகள் ஏற்படுத்தின என்பதை விவரிக்க இயலாது. ஓர் உயிரின் துடிப்பு, பலரையும் துடிதுடிக்க வைத்தது.
அந்த அமைச்சர்கள் நடந்து கொண்ட விதம் எத்தனை தவறோ அதே அளவுக்குத் தவறான செய்கை- தனியார் டி.வி. சானல்கள் இதை ஒளிபரப்பி அதன்மூலம் பரபரப்பை ஏற்படுத்த முற்பட்டது!
நன்றி : தினமணி
இறந்தவர் காவல்துறை உதவி ஆய்வாளர் என்பதோ அல்லது ஆள்மாறாட்டத்தால் நடந்த கொலை என்பதோ இதில் முக்கியமில்லை. ஒரு மனிதர், ஒரு வன்முறைக்கும்பலால் வலதுகால் வெட்டித் துண்டிக்கப்பட்டு, ரத்தம் சொட்டச்சொட்ட சாலையில் விழுந்து துடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு கூட்டமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்கிறார்கள். விடியோ கேமராக்கள் வலம் வருகின்றன. தமிழக அரசின் இரண்டு அமைச்சர்கள் தங்களது ஆள், படை, வாகனங்களுடன் நிற்கிறார்கள். ஆனாலும் சாலையில் விழுந்துகிடக்கும் மனிதருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. இருபது நிமிடங்களுக்குப் பிறகுதான் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.
அவருக்குத் தண்ணீர் கொடுக்கச் செல்லும் நபர், அங்கே தலையை உயர்த்தி ஏதோ பேச வரும் உதவி ஆய்வாளரின் கைக்குள் சிக்காமல் விலகி ஓடுகிறார்- ஏதோ மனிதவெடிகுண்டைக் கண்டதைப்போல! எதற்காக இந்தக் கொலை? அவர் சொல்ல வரும் விஷயம் என்ன? அத்தனை பேர் அருகிருந்தும் அவரது கடைசி வார்த்தையை, அவர் பிரக்ஞையுடன் இருக்கும்போதே கேட்கத் துணியும் நபர்கள் யாருமே இல்லை. (சிறகுகள் வெட்டப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஜடாயுவைக் கண்டு இவர்களைப் போலவே இராமன், இலக்குமணன் ஒதுங்கி நின்றிருந்தால் என்ன ஆகியிருக்கும்? சீதையைக் கடத்திச் சென்ற ராவணன் பற்றித் தெரியாமலே போயிருக்கும்!)
அமைச்சருடன் இருந்த சில அரசியல்வாதிகளைத் தவிர, பலரும் காவல்துறையில் பணிபுரிபவர்கள். அவர்களுக்கு முதலுதவி அளிக்கும் பயிற்சிகள் நிச்சயமாக அளிக்கப்பட்டிருக்கும். அவர்கள் ஏன் வெற்றிவேலை உடனடியாக ஒரு காரில் கொண்டு செல்லவில்லை? வலது கால் துண்டான நிலையில், ரத்தப் போக்குடன் துடித்துக் கொண்டிருந்த அவரை, அங்கிருந்த ஏதேனும் ஒரு காரில் கொண்டு செல்லவும், எதிர்ப்படும் 108 ஆம்புலன்ஸýக்கு அவரை மாற்றி, முதலுதவியை முறைப்படி அளிக்கவும் செய்திருந்தால் வெற்றிவேல் பிழைத்திருக்கக்கூடும். அமைச்சர் அல்லது அவருடன் வந்த கார்களைப் பயன்படுத்த பலத்த யோசனை ஏன்? கார் ரத்தக் கறை பட்டுவிடுமே என்ற அச்சம்தானே! அல்லது, காரிலேயே அவர் இறந்துவிட்டால் அந்தக் காரின் புனிதம் கெட்டுவிடுமே என்ற எண்ணமா? எதற்காகக் கடைசிவரை காத்திருந்து, 108 வாகனம் வராது என்று தெரிந்தபிறகு அவரை ஒரு காரில் ஏற்றிச் சென்றுள்ளனர்!.
"ஆம்புலன்ஸில் எல்லா வசதிகளும் இருக்கும் என்று நினைத்தோம். இதுபோன்று காயமடைந்தவர்களைக் கையாண்டு பழக்கமில்லை' என்று பொது சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் சொல்வது அவரது அமைச்சர் பதவிக்கும், பொறுப்பு வகிக்கும் துறைக்குமே பெருத்த அவமானம். இத்தகைய ஒரு பதிலை, சாதாரண மனிதர்கள் சொல்லலாம். ஆனால் ஓர் அமைச்சர் சொல்லலாமா? 108-க்குப் போன் செய்வது ஏதுமறியா பாமரனின் வேலை. ஒரு பொறுப்புமிக்க அமைச்சர் கட்டளையிட்டால், செயல்பட ஆள், படை, வாகனம் எல்லாமும் உடன் நிற்கிறது. ஆனால் அமைச்சர்களும் வேடிக்கை பார்ப்பதென்றால்..
காமராஜ் முதல்வர் பதவியில் இல்லாத வேளையில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டுக்கு வெளியே ஒரு காங்கிரஸ் தொண்டர், ஆளும் கட்சியினருடனான மோதலில் காயமடைந்து ரத்தம் சொட்டச்சொட்ட மேடைக்கு அழைத்துவரப்பட்டபோது, "அவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகாமல் இங்கே ஏன் அழைத்து வருகிறீர்கள்' என்று காமராஜ், அவர்களைக் கடுமையாகத் திட்டி, விரட்டி அடித்தார். அவரது கோபத்துக்குக் காரணம் மேடை ரத்தக்கறை ஆகிவிடுமே என்ற அருவருப்பு அல்ல. மாநாட்டு மேடையில் இரத்தத்தைக் காட்டி தொண்டர்களை சூடுபடுத்துவதைத்தான் அவர் அருவருப்பாகக் கருதினார்.
ஆனால், சாலையில் வெட்டுப்பட்டுக் கிடக்கும் ஒருவரை இரு அமைச்சர்களில் யாரேனும் ஒருவர் தங்கள் காரில் ஏற்றிச் சென்றிருந்தால், அவர்களது வெள்ளைக் கார்களில் படிந்திருக்கக்கூடிய ரத்தக் கறை ஆட்சியையும் அவர்கள் சார்ந்த கட்சியையும்கூட பெருமைப் படுத்தியிருக்கும். ஆனால் அமைச்சர்கள் அதற்கான எந்த முயற்சியும் செய்யவில்லை. அவர்களும் 108-க்குப் போன் செய்வார்கள் என்றால் அவர்களுக்கு அமைச்சர் பதவிக்கான தலைமைப்பண்பு இல்லை என்பதைத் தவிர, சொல்வதற்கு வேறு என்ன இருக்கிறது.
இந்தச் சம்பவம் முழுவதும் வடஇந்திய தனியார் டி.வி. சானல்களில் ஒளிப்பரப்பாகின. தமிழ்நாட்டில் ஆளும் கட்சிக்கு ஆதரவான தனியார் டி.வி. சானல்கள் இதைத் தணிக்கை செய்து ஒளிபரப்பின என்றாலும், எதிர்க்கட்சியின் தொலைக்காட்சியில் இதே கோரக் காட்சிகள் ஒளிபரப்பாகின. அமைச்சர்களின் செயலை அம்பலப்படுத்துவதற்காக இதைச் செய்திருக்கிறார்கள் என்றாலும், இதைக் காண நேர்ந்த பொதுமக்கள், சிறார்கள் மனதில் எத்தகைய பதற்றத்தை, பீதியை இந்தக் காட்சிகள் ஏற்படுத்தின என்பதை விவரிக்க இயலாது. ஓர் உயிரின் துடிப்பு, பலரையும் துடிதுடிக்க வைத்தது.
அந்த அமைச்சர்கள் நடந்து கொண்ட விதம் எத்தனை தவறோ அதே அளவுக்குத் தவறான செய்கை- தனியார் டி.வி. சானல்கள் இதை ஒளிபரப்பி அதன்மூலம் பரபரப்பை ஏற்படுத்த முற்பட்டது!
நன்றி : தினமணி
'பால் விலையை உயர்த்தாவிட்டால் மீண்டும் போராட்டம்'
''பசும்பாலுக்கு கூடுதலாக ஐந்து ரூபாய் வழங்க வலியுறுத்தினோம். இடைத்தேர்தல் வந்ததால், தேர்தல் முடிந்து அறிவிப்பதாக அரசு தரப்பில் தெரிவித்தனர். தற்போது திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தல் முடிந்ததும், பொங்கலுக்குள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக அறிவித்தனர். அரசு பால் விலையை உயர்த்தாவிட்டால், மீண்டும் போராட்டம் நடத்த தயாராக உள்ளோம்,'' என தமிழ்நாடு பால் உற்பாத்தியாளர்கள் நலச்சங்க தலைவர் செங்கோட்டுவேல் கூறினார்.தமிழகத்தில் ஆவின் நிறுவனம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மூலம், தமிழகம் முழுவதும் பால் கொள்முதல் செய்கிறது. தமிழகம் முழுவதும், ஏழு லட்சத்துக்கும் அதிகமான உற்பத்தியாளர்கள் உள்ளனர். தினமும் 48 லட்சம் லிட்டர் முதல் 50 லட்சம் லிட்டர் வரை, பால் கொள்முதல் செய்யப்படுகிறது. பால் உற்பத்தியாளர்கள் பெரும்பாலும், அதைச் சார்ந்த விவசாயம் செய்து வருகின்றனர். அன்றாடம் மாடுகளுக்கு தேவையான தீவனம், பருத்திக் கொட்டை, தவிடு போன்ற அனைத்து பொருட்களும் பல மடங்கு உயர்ந்து விட்டது. இதனால், பால் உற்பத்தி செலவும் கணிசமாக உயர்ந்துள்ளது. சராசரியாக ஒரு லிட்டர் பால் உற்பத்தி செலவு 29 ரூபாய் வரை ஆகிறது. ஆனால், பாலுக்கான கொள்முதல் விலை, குறைவாக உள்ளதால், கறவை மாடுகள் வளர்ப்பதை விவசாயிகள் கைவிடும் நிலையில் உள்ளனர். ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற மாநிலங்கள் அம்மாநிலங்களில் பால் வளத்தை பெருக்க, பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன. ஆனால், தமிழக அரசு பால் உற்பத்தியை பெருக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, ஆவின் நிறுவனத்தில் நடக்கும் குளறுபடியால், பெரும்பாலான கொள்முதல் நிறுவனங்களுக்கு பால் உற்பத்தியாளர்களுக்கு முறையாக பணம் வழங்கப்படுவதில்லை.
தமிழ்நாடு பால் உற்பாத்தியாளர்கள் நலச்சங்க தலைவர் செங்கோட்டுவேல் கூறியதாவது: அரசு செப்டம்பர் மாதம் பால் கொள்முதல் விலையை உயர்த்தியது. இதன்படி, எருமை பால் ஒரு லிட்டருக்கு 18 ரூபாயிலிருந்து 23 ரூபாயாக உயர்த்தியது. பசும்பால் ஒரு லிட்டருக்கு 13.64 ரூபாயிலிருந்து இரண்டு ரூபாய் மட்டும் அதிகரித்து 15.64 ரூபாயாக அறிவித்துள்ளது. பசும்பாலுக்கு கூடுதலாக ஐந்து ரூபாய் வழங்க வலியுறுத்தினோம். இடைத்தேர்தல் வந்ததால், தேர்தல் முடிந்து அறிவிப்பதாக அரசு தரப்பில் தெரிவித்தனர். தற்போது திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தல் முடிந்ததும், பொங்கலுக்குள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக அறிவித்தனர். அரசு பால் விலையை உயர்த்தாவிட்டால், மீண்டும் போராட்டம் நடத்த தயாராக உள்ளோம். முன்பு நடத்திய பேச்சுவார்த்தையில், பால் கொள்முதல் விலை தவிர, ஊழியர்கள் பணிநிரந்தரம் குறித்து பேசினோம். பத்து நாளில் செய்வதாக கூறப்பட்டது. இரண்டரை ஆண்டாக பணிநிரந்தரம் செய்யாமல் உள்ளனர்.
ஆந்திரா, கர்நாடகா அரசுகள், பால் உற்பத்தியை அதிகரிக்க உற்பத்தியாளர்களுக்கு மானியத்துடன் கடன் வழங்குகிறது. ஆனால், தமிழக அரசு இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதில்லை. கூட்டுறவு ஒன்றியங்களில் பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் பாக்கி வைக்கப்படுகிறது. தர்மபுரியில் இரண்டு மாதமும், விழுப்புரத்தில் 40 நாட்களுக்கும், பணம் வழங்காமல் பாக்கி வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கறவை மாடுகளை கணக்கு பார்க்காமல் வளர்க்கின்றனர். முறையாக கணக்கு பார்த்தால், லிட்டருக்கு 29 ரூபாய் வரை வழங்க வேண்டும். விலை உயர்த்துவதாக கூறி நான்கு மாதங்களான போதும், இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. இதே நிலை தொடர்ந்தால், பால் உற்பத்தி வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு செங்கோட்டுவேல் கூறினார்.
நன்றி : தினமலர்
Tuesday, January 12, 2010
தமிழகம் வந்த தமிழர்கள் விரட்டப்பட்டது ஏன்?
உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் தமிழர்கள் பரவி வாழ்கிறார்கள். இன்று நேற்றல்ல, பல நூறாண்டுகளாகத் தமிழர்கள் பல நாடுகளில் குடியேறி அந்நாடுகளையே தங்கள் சொந்த நாடுகளாக ஏற்றுக் கொண்டு வாழ்கிறார்கள். அதிலும் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையும் இந்தியாவும் கடலால் பிரிக்கப்படுவதற்கு முற்பட்ட காலத்திற்கு முன்பே இருபுறத்திலும் வாழ்ந்த தமிழர்கள் மொழியாலும் பண்பாட்டாலும் மிக நெருங்கியவர்களாக இருந்தார்கள்.
சங்க காலப் புலவரான ஈழத்து பூதந்தேவனார் காலத்திலிருந்து சென்ற நூற்றாண்டில் ஆறுமுக நாவலர் காலம் வரையிலும், அதற்குப் பிறகு இன்றுவரையிலும் மட்டுமல்ல, இனி எதிர்காலத்திலும் ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் உள்ள உறவு என்பது தொப்புள் கொடி உறவாகும்.
ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல பிறநாடுகளில் வாழ்கிற தமிழர்களும் தங்களது பண்பாட்டுத் தாயகமாகக் கருதுவது தமிழ்நாட்டையே ஆகும். தமிழ்நாட்டுக்கும் பிற நாடுகளில் வாழ்கிற தமிழர்களுக்கும் இடையே உள்ள உறவு என்பது தாய்-சேய் உறவு ஆகும்.
மொழி, பண்பாடு, கலை ஆகியவற்றின் அடிப்படையில் உலகம் எங்கும் நடைபெறும் தமிழ் ஆய்வுகளை ஒருங்கிணைக்கவும் உலகத் தமிழர்களை ஒன்றுபடுத்தவும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் ஈழத் தமிழறிஞர் தனிநாயகம் அடிகள், தமிழகத்து அறிஞர்கள் வ.அய். சுப்பிரமணியம், சாலை இளந்திரையன் போன்ற பலரின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது.
முதல் உலகத் தமிழராய்ச்சி மாநாடு மலேசியாவில் 1966-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை மிகச்சிறப்பாக நடைபெற்றது. உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் இம்மாநாட்டில் பங்கு பெற்றனர். அப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எம். பக்தவத்சலம் தலைமையில் இரா. நெடுஞ்செழியன், பி.டி.ராஜன் உள்பட பலகட்சித் தலைவர்கள் தமிழகக் குழுவாகச் சென்று கலந்து கொண்டனர்.
1968-ம் ஆண்டு ஜனவரி 3 முதல் 10-ம் தேதி வரை சென்னையில் 2-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றபோதும் அனைத்து நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்களும் வேறுபாடு இன்றி கலந்து கொண்டனர். ராஜாஜி, பெரியார், காமராசர், ஜீவா, ம.பொ.சி. போன்ற பலவேறு கட்சித் தலைவர்களையும் முதலமைச்சராக இருந்த அண்ணா,நேரில் சென்று அழைத்து இம்மாநாட்டில் சிறப்புரையாற்ற வைத்தார். அவர்களும் அவருடன் ஒத்துழைத்தனர். அனைவரும் தமிழர்கள் என்ற உணர்வுடன் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து உலகத் தமிழர்களின் ஒற்றுமைக்கு வலிமை சேர்த்தனர்.
1970-ம் ஆண்டு 3-வது மாநாடு பாரிசிலும் 1974-ம் ஆண்டு நான்காவது மாநாடு யாழ்ப்பாணத்திலும் ஒற்றுமை குலையாத வகையில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாநாட்டில் சிங்கள ராணுவம் புகுந்து சுட்டு 9 தமிழர்கள் உயிர் துறந்த துயர நிகழ்ச்சியும் நடைபெற்றது.
1981-ம் ஆண்டு ஜனவரி 4 முதல் 10-ம் தேதி வரை மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டின் போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். விடுத்த அழைப்பை அனைத்துக்கட்சித் தலைவர்களும் ஏற்று மாநாட்டில் பங்கு கொண்டனர். ஆனால் தி.மு.க. தலைவரான கருணாநிதி மாநாட்டில் கலந்து கொள்வதைத் தவிர்த்தார். அன்றிலிருந்து இந்த ஒற்றுமையைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகள் தொடங்கின.
1995-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் 5-ம் தேதி வரை தஞ்சாவூரில் நடைபெற்ற 8-வது மாநாட்டின் போது முதலமைச்சர் ஜெயலலிதாவின் அழைப்பை ஏற்று பல கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர். அதிலும் கருணாநிதி கலந்து கொள்ளவில்லை. இம்மாநாட்டின் போதுதான் தமிழர்களை அவமதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சுவீடன் நாட்டுத் தமிழறிஞர் பீட்டர் சால்க், ஈழத் தமிழறிஞர் சிவத்தம்பி ஆகியோர் மாநாட்டில் உரையாற்ற அழைக்கப்பட்டு, இங்கு வந்த பிறகு அவர்களைக் கட்டாயப்படுத்தி வெளியேற்றிய வெட்ககரமான நிகழ்ச்சி நடைபெற்றது. உலகத் தமிழர்கள் அனைவரும் இதை வன்மையாகக் கண்டித்தனர்.
1998-ம் ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற 6-வது உலக சைவ மாநாட்டில் கலந்து கொள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த தமிழர்கள் பலர் வந்திருந்தனர். ஆனால் தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்திருந்த வீரபத்திரன், இலங்கையைச் சேர்ந்த மனோன்மணி சண்முகதாஸ், பிரிட்டனைச் சேர்ந்த டாக்டர் சிவதாசன் தம்பதியினர் ஆகிய நால்வர் வெளியேற்றப்பட்டனர். இதற்கு எதிராக மாநாட்டுப் பிரதிநிதிகள் அறவழியில் போராடினர். ஆனாலும் எதுவும் நடக்கவில்லை. அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி இதைத் தடுக்க எதுவும் செய்யவில்லை.
அதற்குப் பிறகு 2002-ம் ஆண்டு ஜூலை 20, 21 ஆகிய நாட்களில் சென்னையில் உலகத் தமிழர் பேரமைப்பின் தொடக்க விழா மாநாடு நடைபெற்றபோது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அதற்குத் தடைவிதித்தார். அரசியலுக்கு அப்பாற்பட்ட மாநாடு என்று தெரிந்தும் இந்தத் தடை விதிக்கப்பட்டது. உயர் நீதிமன்றம் தலையிட்டு அந்தத் தடையை நீக்கி மாநாட்டுக்கு அனுமதி வழங்கியது.
÷2004-ம் ஆண்டு பெங்களூரில் உலகத் தமிழர் பேரமைப்பின் மூன்றாம் ஆண்டு நிறைவு மாநாட்டின் போது மாநாட்டைத் தொடங்கிவைப்பதற்காக அழைக்கப்பட்டிருந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன், சென்னை விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார். அதற்குரிய காரணம் எதுவும் அவருக்கு அதிகாரிகளால் தெரிவிக்கப்படவில்லை. தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க் நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் இந்த நாடுகளுக்குள் சுற்றுப்பயணம் செய்து வருவதற்கு விசா எதுவும் தேவையில்லை. இந்த விதியும் மீறப்பட்டது. இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரான ஈழவேந்தனுக்கு உரிய விசா இருந்தும் அவர் திருப்பி அனுப்பப்பட்ட அவலம் நேர்ந்தது. அப்போதும் முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2006-ம் ஆண்டு ஆகஸ்டு 12, 13-ம் தேதிகளில் சேலம் நகரில் உலகத் தமிழர் பேரமைப்பின் நான்காம் ஆண்டு நிறைவு மாநாடு நடைபெற்றபோது முதலமைச்சராக இருந்த கருணாநிதி, அதற்குத் தடைவிதித்தார். இந்தத் தடையும் உயர் நீதிமன்றத்தால் நீக்கப்பட்டு மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது.
2009-ம் ஆண்டு டிசம்பர் 26, 27-ம் தேதிகளில் தஞ்சை நகரில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரமைப்பின் ஏழாம் ஆண்டு நிறைவு மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் சென்னை விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார். இதுவும் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சியின்போதுதான் நடைபெற்றது.
உலகத் தமிழர்கள் ஒன்றுகூடி தமது பிரச்னைகள் குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளும் சுதந்திரம் தமிழ்நாட்டில் இல்லை என்பதை இந்த வெளியேற்ற நிகழ்ச்சிகள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. தமிழ்நாட்டைத் தங்கள் தாயகமாகக் கருதுகின்ற வெளிநாட்டுத் தமிழர்கள், தமிழகம் வரும்போதெல்லாம் இப்படி விரட்டியடிக்கப்படுவது ஒட்டுமொத்த தமிழினத்திற்கே அவமானமாகும்.
ஜெயலலிதா அல்லது கருணாநிதியின் ஆட்சிக் காலங்களில் தமிழ்நாட்டில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாடுகளில் பங்கேற்க வந்தவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தால் பிரளயம் எதுவும் நேர்ந்திருக்காது. தமிழறிஞர்களை அவமதித்த குற்றமும் முதலமைச்சர்கள் மீது படிந்திருக்காது. வெளியேற்றப்பட்ட தமிழறிஞர்கள் ஆனாலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆனாலும் அவர்கள் அனைவரும் தமிழகத்திற்குப் புதியவர்கள் அல்லர். எத்தனையோ முறை வந்து சென்றவர்கள். ஜெயலலிதா வேண்டுமானால் அவர்களைப் பற்றி அறியாமல் இருக்கலாம். ஆனால் கருணாநிதி அவர்கள் குறித்து நன்கு அறிந்தவர். என்றாலும் தில்லியின் தமிழர் அவமதிப்பு போக்கினைத் தடுத்து நிறுத்தி தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட இருவருமே தவறிவிட்டனர்.
இந்தியாவில் பிற மொழி பேசுகிறவர்கள் நடத்தும் உலக மாநாடுகளுக்கு வருகிறவர்கள் தாராளமாக வந்து சுதந்திரமாகப் பேசிவிட்டுப் போகிறார்கள். உலகத் தெலுங்கர் மாநாடு சில ஆண்டுகளுக்கு முன்னால் ஹைதராபாத் நகரில் நடைபெற்றபோது பிறநாடுகளில் வாழும் தெலுங்கர்கள் அந்த மாநாட்டில் கலந்துகொள்ள வந்தபோது எவ்விதத் தடையும் விதிக்கப்படவில்லை. அவ்வாறே பெங்களூரில் நடந்த உலக கன்னட மாநாட்டிலும் பிற நாடுகளைச் சேர்ந்த கன்னடர்கள் தாராளமாகக் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
உலகப் பஞ்சாபி மாநாடு சண்டீகரில் நடைபெற்றபோது கனடாவில் வாழ்ந்து கொண்டிருந்த காலிஸ்தான் இயக்க ஆதரவாளர்கள் இந்தியா வர இந்தியத் தூதரகம் விசா தர மறுத்துவிட்டபோது, பஞ்சாப் முதலமைச்சர் பிரதமரிடம் போராடி விசா வழங்கச் செய்தார். இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்குள் தாராளமாக வந்து தங்கள் மொழி மாநாட்டில் சுதந்திரமாகப் பேசமுடிகிறது. இதற்கு பஞ்சாப் முதலமைச்சரின் மொழி உணர்வும் மத்திய அரசுடன் போராடும் மன உறுதியுமே காரணமாகும்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டுக்கு வந்த பிறநாட்டுத் தமிழர்கள் வெளியேற்றப்பட்டதற்கு தான் பொறுப்பல்ல மத்திய அரசே பொறுப்பு என்று சொல்லி முதலமைச்சர் தப்பித்துக்கொள்ள முடியாது. மத்திய ஆட்சியிலும் இவரது கட்சி ஓர் அங்கம். பிரதமரிடம் இவருக்கு மதிப்பு நிறைந்த செல்வாக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் தமிழர்களுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளை இவர் தடுத்து நிறுத்த முன்வரவில்லை என்று சொன்னால் அது இவரது சம்மதத்தோடு நடைபெறுகிறது என்பதுதான் பொருள்.
முதலமைச்சர் கருணாநிதி முன்னின்று நடத்த இருக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்குபெற உலக நாடுகளிலிருந்து இத்தனை இத்தனை பிரதிநிதிகள் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்ற பட்டியலை முதலமைச்சர் மிக்க பெருமிதத்துடன் வெளியிட்டிருக்கிறார். மற்றவர்கள் நடத்தும் உலகத்தமிழ் மாநாடுகளுக்கு வந்த பலரை வெளியேற்றியவர் இப்போது இவர் நடத்தும் மாநாட்டுக்காவது உலகத் தமிழர்களை அனுமதிக்க முன்வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. இவர்களில் யாரையேனும் வெளியேற்றாமல் இருப்பார் என நம்புவோமாக.
கட்டுரையாளர் : பழ. நெடுமாறன்
நன்றி : தினமணி
சங்க காலப் புலவரான ஈழத்து பூதந்தேவனார் காலத்திலிருந்து சென்ற நூற்றாண்டில் ஆறுமுக நாவலர் காலம் வரையிலும், அதற்குப் பிறகு இன்றுவரையிலும் மட்டுமல்ல, இனி எதிர்காலத்திலும் ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் உள்ள உறவு என்பது தொப்புள் கொடி உறவாகும்.
ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல பிறநாடுகளில் வாழ்கிற தமிழர்களும் தங்களது பண்பாட்டுத் தாயகமாகக் கருதுவது தமிழ்நாட்டையே ஆகும். தமிழ்நாட்டுக்கும் பிற நாடுகளில் வாழ்கிற தமிழர்களுக்கும் இடையே உள்ள உறவு என்பது தாய்-சேய் உறவு ஆகும்.
மொழி, பண்பாடு, கலை ஆகியவற்றின் அடிப்படையில் உலகம் எங்கும் நடைபெறும் தமிழ் ஆய்வுகளை ஒருங்கிணைக்கவும் உலகத் தமிழர்களை ஒன்றுபடுத்தவும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் ஈழத் தமிழறிஞர் தனிநாயகம் அடிகள், தமிழகத்து அறிஞர்கள் வ.அய். சுப்பிரமணியம், சாலை இளந்திரையன் போன்ற பலரின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது.
முதல் உலகத் தமிழராய்ச்சி மாநாடு மலேசியாவில் 1966-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை மிகச்சிறப்பாக நடைபெற்றது. உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் இம்மாநாட்டில் பங்கு பெற்றனர். அப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எம். பக்தவத்சலம் தலைமையில் இரா. நெடுஞ்செழியன், பி.டி.ராஜன் உள்பட பலகட்சித் தலைவர்கள் தமிழகக் குழுவாகச் சென்று கலந்து கொண்டனர்.
1968-ம் ஆண்டு ஜனவரி 3 முதல் 10-ம் தேதி வரை சென்னையில் 2-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றபோதும் அனைத்து நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்களும் வேறுபாடு இன்றி கலந்து கொண்டனர். ராஜாஜி, பெரியார், காமராசர், ஜீவா, ம.பொ.சி. போன்ற பலவேறு கட்சித் தலைவர்களையும் முதலமைச்சராக இருந்த அண்ணா,நேரில் சென்று அழைத்து இம்மாநாட்டில் சிறப்புரையாற்ற வைத்தார். அவர்களும் அவருடன் ஒத்துழைத்தனர். அனைவரும் தமிழர்கள் என்ற உணர்வுடன் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து உலகத் தமிழர்களின் ஒற்றுமைக்கு வலிமை சேர்த்தனர்.
1970-ம் ஆண்டு 3-வது மாநாடு பாரிசிலும் 1974-ம் ஆண்டு நான்காவது மாநாடு யாழ்ப்பாணத்திலும் ஒற்றுமை குலையாத வகையில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாநாட்டில் சிங்கள ராணுவம் புகுந்து சுட்டு 9 தமிழர்கள் உயிர் துறந்த துயர நிகழ்ச்சியும் நடைபெற்றது.
1981-ம் ஆண்டு ஜனவரி 4 முதல் 10-ம் தேதி வரை மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டின் போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். விடுத்த அழைப்பை அனைத்துக்கட்சித் தலைவர்களும் ஏற்று மாநாட்டில் பங்கு கொண்டனர். ஆனால் தி.மு.க. தலைவரான கருணாநிதி மாநாட்டில் கலந்து கொள்வதைத் தவிர்த்தார். அன்றிலிருந்து இந்த ஒற்றுமையைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகள் தொடங்கின.
1995-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் 5-ம் தேதி வரை தஞ்சாவூரில் நடைபெற்ற 8-வது மாநாட்டின் போது முதலமைச்சர் ஜெயலலிதாவின் அழைப்பை ஏற்று பல கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர். அதிலும் கருணாநிதி கலந்து கொள்ளவில்லை. இம்மாநாட்டின் போதுதான் தமிழர்களை அவமதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சுவீடன் நாட்டுத் தமிழறிஞர் பீட்டர் சால்க், ஈழத் தமிழறிஞர் சிவத்தம்பி ஆகியோர் மாநாட்டில் உரையாற்ற அழைக்கப்பட்டு, இங்கு வந்த பிறகு அவர்களைக் கட்டாயப்படுத்தி வெளியேற்றிய வெட்ககரமான நிகழ்ச்சி நடைபெற்றது. உலகத் தமிழர்கள் அனைவரும் இதை வன்மையாகக் கண்டித்தனர்.
1998-ம் ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற 6-வது உலக சைவ மாநாட்டில் கலந்து கொள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த தமிழர்கள் பலர் வந்திருந்தனர். ஆனால் தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்திருந்த வீரபத்திரன், இலங்கையைச் சேர்ந்த மனோன்மணி சண்முகதாஸ், பிரிட்டனைச் சேர்ந்த டாக்டர் சிவதாசன் தம்பதியினர் ஆகிய நால்வர் வெளியேற்றப்பட்டனர். இதற்கு எதிராக மாநாட்டுப் பிரதிநிதிகள் அறவழியில் போராடினர். ஆனாலும் எதுவும் நடக்கவில்லை. அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி இதைத் தடுக்க எதுவும் செய்யவில்லை.
அதற்குப் பிறகு 2002-ம் ஆண்டு ஜூலை 20, 21 ஆகிய நாட்களில் சென்னையில் உலகத் தமிழர் பேரமைப்பின் தொடக்க விழா மாநாடு நடைபெற்றபோது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அதற்குத் தடைவிதித்தார். அரசியலுக்கு அப்பாற்பட்ட மாநாடு என்று தெரிந்தும் இந்தத் தடை விதிக்கப்பட்டது. உயர் நீதிமன்றம் தலையிட்டு அந்தத் தடையை நீக்கி மாநாட்டுக்கு அனுமதி வழங்கியது.
÷2004-ம் ஆண்டு பெங்களூரில் உலகத் தமிழர் பேரமைப்பின் மூன்றாம் ஆண்டு நிறைவு மாநாட்டின் போது மாநாட்டைத் தொடங்கிவைப்பதற்காக அழைக்கப்பட்டிருந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன், சென்னை விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார். அதற்குரிய காரணம் எதுவும் அவருக்கு அதிகாரிகளால் தெரிவிக்கப்படவில்லை. தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க் நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் இந்த நாடுகளுக்குள் சுற்றுப்பயணம் செய்து வருவதற்கு விசா எதுவும் தேவையில்லை. இந்த விதியும் மீறப்பட்டது. இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரான ஈழவேந்தனுக்கு உரிய விசா இருந்தும் அவர் திருப்பி அனுப்பப்பட்ட அவலம் நேர்ந்தது. அப்போதும் முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2006-ம் ஆண்டு ஆகஸ்டு 12, 13-ம் தேதிகளில் சேலம் நகரில் உலகத் தமிழர் பேரமைப்பின் நான்காம் ஆண்டு நிறைவு மாநாடு நடைபெற்றபோது முதலமைச்சராக இருந்த கருணாநிதி, அதற்குத் தடைவிதித்தார். இந்தத் தடையும் உயர் நீதிமன்றத்தால் நீக்கப்பட்டு மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது.
2009-ம் ஆண்டு டிசம்பர் 26, 27-ம் தேதிகளில் தஞ்சை நகரில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரமைப்பின் ஏழாம் ஆண்டு நிறைவு மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் சென்னை விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார். இதுவும் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சியின்போதுதான் நடைபெற்றது.
உலகத் தமிழர்கள் ஒன்றுகூடி தமது பிரச்னைகள் குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளும் சுதந்திரம் தமிழ்நாட்டில் இல்லை என்பதை இந்த வெளியேற்ற நிகழ்ச்சிகள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. தமிழ்நாட்டைத் தங்கள் தாயகமாகக் கருதுகின்ற வெளிநாட்டுத் தமிழர்கள், தமிழகம் வரும்போதெல்லாம் இப்படி விரட்டியடிக்கப்படுவது ஒட்டுமொத்த தமிழினத்திற்கே அவமானமாகும்.
ஜெயலலிதா அல்லது கருணாநிதியின் ஆட்சிக் காலங்களில் தமிழ்நாட்டில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாடுகளில் பங்கேற்க வந்தவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தால் பிரளயம் எதுவும் நேர்ந்திருக்காது. தமிழறிஞர்களை அவமதித்த குற்றமும் முதலமைச்சர்கள் மீது படிந்திருக்காது. வெளியேற்றப்பட்ட தமிழறிஞர்கள் ஆனாலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆனாலும் அவர்கள் அனைவரும் தமிழகத்திற்குப் புதியவர்கள் அல்லர். எத்தனையோ முறை வந்து சென்றவர்கள். ஜெயலலிதா வேண்டுமானால் அவர்களைப் பற்றி அறியாமல் இருக்கலாம். ஆனால் கருணாநிதி அவர்கள் குறித்து நன்கு அறிந்தவர். என்றாலும் தில்லியின் தமிழர் அவமதிப்பு போக்கினைத் தடுத்து நிறுத்தி தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட இருவருமே தவறிவிட்டனர்.
இந்தியாவில் பிற மொழி பேசுகிறவர்கள் நடத்தும் உலக மாநாடுகளுக்கு வருகிறவர்கள் தாராளமாக வந்து சுதந்திரமாகப் பேசிவிட்டுப் போகிறார்கள். உலகத் தெலுங்கர் மாநாடு சில ஆண்டுகளுக்கு முன்னால் ஹைதராபாத் நகரில் நடைபெற்றபோது பிறநாடுகளில் வாழும் தெலுங்கர்கள் அந்த மாநாட்டில் கலந்துகொள்ள வந்தபோது எவ்விதத் தடையும் விதிக்கப்படவில்லை. அவ்வாறே பெங்களூரில் நடந்த உலக கன்னட மாநாட்டிலும் பிற நாடுகளைச் சேர்ந்த கன்னடர்கள் தாராளமாகக் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
உலகப் பஞ்சாபி மாநாடு சண்டீகரில் நடைபெற்றபோது கனடாவில் வாழ்ந்து கொண்டிருந்த காலிஸ்தான் இயக்க ஆதரவாளர்கள் இந்தியா வர இந்தியத் தூதரகம் விசா தர மறுத்துவிட்டபோது, பஞ்சாப் முதலமைச்சர் பிரதமரிடம் போராடி விசா வழங்கச் செய்தார். இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்குள் தாராளமாக வந்து தங்கள் மொழி மாநாட்டில் சுதந்திரமாகப் பேசமுடிகிறது. இதற்கு பஞ்சாப் முதலமைச்சரின் மொழி உணர்வும் மத்திய அரசுடன் போராடும் மன உறுதியுமே காரணமாகும்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டுக்கு வந்த பிறநாட்டுத் தமிழர்கள் வெளியேற்றப்பட்டதற்கு தான் பொறுப்பல்ல மத்திய அரசே பொறுப்பு என்று சொல்லி முதலமைச்சர் தப்பித்துக்கொள்ள முடியாது. மத்திய ஆட்சியிலும் இவரது கட்சி ஓர் அங்கம். பிரதமரிடம் இவருக்கு மதிப்பு நிறைந்த செல்வாக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் தமிழர்களுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளை இவர் தடுத்து நிறுத்த முன்வரவில்லை என்று சொன்னால் அது இவரது சம்மதத்தோடு நடைபெறுகிறது என்பதுதான் பொருள்.
முதலமைச்சர் கருணாநிதி முன்னின்று நடத்த இருக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்குபெற உலக நாடுகளிலிருந்து இத்தனை இத்தனை பிரதிநிதிகள் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்ற பட்டியலை முதலமைச்சர் மிக்க பெருமிதத்துடன் வெளியிட்டிருக்கிறார். மற்றவர்கள் நடத்தும் உலகத்தமிழ் மாநாடுகளுக்கு வந்த பலரை வெளியேற்றியவர் இப்போது இவர் நடத்தும் மாநாட்டுக்காவது உலகத் தமிழர்களை அனுமதிக்க முன்வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. இவர்களில் யாரையேனும் வெளியேற்றாமல் இருப்பார் என நம்புவோமாக.
கட்டுரையாளர் : பழ. நெடுமாறன்
நன்றி : தினமணி
Monday, January 11, 2010
தகுதியுள்ளது வாழும்
ஜக்குபாய் திரைப்படம் இணையதளத்தில் வெளியான விவகாரத்தில் திரையுலகமே ஒன்று சேர்ந்து கண்டித்துள்ளது. இதில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து இப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட கோவை இளைஞரையும், திருட்டு டிவிடி தயாரித்த சென்னை நபரையும் கைது செய்துள்ளது. பொங்கல் நேரத்தில் திரைக்கு வரவிருந்த இப்படம் முன்னதாக வெளியாகியிருப்பது மிகவும் மோசமான சூழல் தமிழ்த் திரையுலகுக்கு ஏற்பட்டுள்ளதை காட்டுகிறது.
இப்படத்தின் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் இந்த செய்தியாளர்கள் கூட்டத்தின் போது, இதைவிட எங்களை நடுத்தெருவில் வைத்து சுட்டுக் கொன்றிருக்கலாம் என்று கூறி அழுதது, அனைத்து தனியார் தொலைக்காட்சிகளிலும் வெளியாகி, தமிழ்க் குடும்பங்கள் அனைத்திலுமே ஒரு பச்சாதாபத்தை உருவாக்கியிருக்கிறது. எத்தகைய பெரும் இழப்பைத் தயாரிப்பாளர்கள் சந்திக்கிறார்கள் என்பதை உணர்வுபூர்வமாக பார்வையாளர்களுக்குப் புரிய வைத்திருக்கிறது.
திருட்டு டிவிடி கடைகளில் கிடைக்கிறது என்பதும் இணையதளத்தில் பல படங்களை யார்யாரோ போட்டுவிடுகிறார்கள் என்பதும் புதிய விஷயம் அல்ல. இப்போது திரையுலகமே கலங்கி நிற்கக் காரணம், படம் வெளியிடப்படத் தயாராக இருக்கும் நிலையில், அது யாருக்கோ கிடைத்து, இணையதளத்தில் வெளியாகி, அதை ஒருவர் பதிவிறக்கம் செய்து திருட்டு டிவிடியாக வெளியிடுகிறார் என்ற அதிர்ச்சிதான்!
ரஜினிகாந்த் குறிப்பிட்டதைப்போல திருடன் வெளியே இருந்து வரவில்லை, கூடவே இருந்திருக்கிறான். தயாரிப்புக்குப் பிந்தைய தொழில்நுட்பப் பணியின்போதுதான் இந்தத் திரைப்படம் வெளியே எடுத்துச்செல்லப்பட்டு, இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். இதைச் செய்தவர் யார் என்பதை கண்டுபிடிப்பதும் சாத்தியம்தான். ஆனால் இத்தகைய உள்ளுறைத் திருடர்கள் உருவாக யார் காரணம்? திருட்டு டிவிடியை ஏன் ஒழிக்க முடியவில்லை? காவல்துறையினர் கண்டும்காணாமல் இருப்பதால் மட்டும்தான் திருட்டு டிவிடி சந்தையில் புழங்குகிறதா? இதற்கான பதில்கள் அந்தச் செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் பேசிய பேச்சிலேயே இருக்கிறது.
நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், திருட்டு டிவிடி வாங்கிப் படம் பார்ப்பதை மக்கள் சந்தோஷமானதாக நினைக்கிறார்கள், திருட்டு டிவிடி போன்ற சட்டவிரோதமான செயல்கள் கருப்புப் பணத்திலிருந்து வருவதுதான். திருட்டு டிவிடி மூலம் கிடைக்கும் பணம், மும்பை குண்டுவெடிப்பு போன்ற தீவிரவாதச் செயல்களுக்குப் போய்ச் சேருகிறது என்பதை மக்களுக்கு எடுத்துச்சொல்லிப் புரிய வைக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார். இது முழுக்க முழுக்க உண்மைதான்.
இருப்பினும்கூட, திரைத்துறையில் படத்தயாரிப்பு, சம்பளம் எல்லாவற்றிலும் கருப்புப் பணம் முழுவீச்சில் நடமாடுகிறது என்பதால்தான் ஒரு திரைப்படம் ஒரு கலையின் ஒரு பிரிவு என்று கருதாமல், வெறும் வியாபாரமாக கோடிகோடியாய் கொட்டப்படுகிறது என்கிற கசப்பான உண்மையும் இருக்கவே செய்கிறது.
"ரூ.15 கோடி சொத்தைத் திருடி விட்டார்கள் என்பதைவிட எங்களைக் கொன்றுவிட்டார்கள்' என்பதே உண்மை என்று படத்தின் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் கூறிய அதே மேடையில், நடிகர் ரஜினிகாந்த் ஜக்குபாய் திரைப்படத்தில் தான் நடிக்க முடியாததைச் சொல்லும்போது, "ரவிக்குமார் எனக்கு வாசபி என்ற பிரெஞ்சு படத்தின் டிவிடியைக் கொடுத்தார். அந்தக் கதை நன்றாக இருந்தது. சூப்பர் கதை. ஜக்குபாய் படம் நன்றாக ஓடும். ராதிகா கவலைப்பட வேண்டியதில்லை' என்று கூறியிருக்கிறார். தமிழ்ப்படங்களின் திரைக்கதை இப்படித்தான் உருவாகும் என்றால், மற்றவர்களைக் குறை சொல்ல என்ன நியாயம் இருக்கிறது?
தமிழ்த் திரையுலகில் பிறமொழிகளில் வெற்றியடைந்த படங்களின் கதைத் தழுவல் தொடக்க காலம் முதலாகவே நடந்து வந்திருப்பதுதான். ஆனால் அண்மைக்காலத்தில், மிகப் பெரும்பாலான படங்கள் ஏதோ ஒரு மொழியில் வெற்றியடைந்த, அல்லது பேசப்பட்ட, அல்லது கையாளப்பட்ட புதுமை உத்திகளை அப்படியே இறக்குமதி செய்வதாகத்தான் இன்றைய தமிழ்த் திரையுலகம் இருக்கிறது. ரூ.20-க்கு மூன்றுபடங்கள் கொண்ட ஒரு டிவிடி என்று பெருகிவிட்டபிறகு, தமிழ்ப்படங்களின் மூலங்களையும் சேர்த்தே வாங்கி ஒப்பிட்டுப் பார்க்கும் சூழல் தமிழகத் திரைப்பட ரசிகர்களிடம் உருவாகியிருப்பதை இன்றைய தமிழ்த் திரையுலகம் அறிந்திருக்கவில்லையோ!
எம்ஜிஆர் தனது சம்பளத்தை அதிகமாக நிர்ணயிக்கக் காரணமாகச் சொல்லப்பட்ட செய்தி ஒன்று உண்டு. "தமிழகத்தின் எல்லா நகர்களிலும் எனக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். எனக்காக மட்டுமே இந்தப் படத்தை ஒரு முறையாவது நிச்சயம் பார்ப்பார்கள். அவர்கள் கொடுக்கும் நுழைவுக்கட்டணத்தில் ஒரு ரூபாய் எனக்குக் கிடைத்தால் என்ன?' என்பதுதான். அந்த அளவுக்கு அவரது ரசிகர்கள் மீது நம்பிக்கை இருந்தது. இன்றும்கூட, அவரது பல படங்கள் டிவிடியாக கிடைத்தாலும், திரையரங்குக்கு வரும்போது ஒருமுறை மீண்டும் பெரிய திரையில் பார்ப்பதையே ரசிகர்கள் விரும்புகிறார்கள். அந்த அளவுக்குக் கதையும், நடிகர்களின் பங்களிப்பும் இருந்தது.
அண்மையில் வெளியான "2012', "அவதார்' ஆகிய படங்களின் திருட்டு டிவிடி கடைகளில் கிடைக்கிறது. அந்தப் படத்தை டிவிடியில் பார்த்து அசந்துபோய், பெரிய திரையில் ஒருமுறை பார்க்க வேண்டும் என்று திரையரங்குக்கு ஓடும் ரசிகர்கள் இன்னமும் இருக்கவே செய்கிறார்கள். நல்ல படங்களுக்கு ரசிகர்கள் அதற்கான மதிப்பை வழங்கத் தவறுவதில்லை என்பதை தமிழ்த் திரையுலகம் உணர வேண்டும்.
அத்துடன், ஜக்குபாய் படத் திருட்டு மட்டுமல்ல, ஓட்டல் அறையில் விவாதிக்கப்படும் பல திரைப்படங்களின் கதைக்கரு, நகைச்சுவைக் காட்சி தொடர்பான தகவல்கள் எல்லாமும் பல்வேறு இயக்குநர் முகாம்களுக்குக் கசிந்திடக் காரணம், இயக்குநர், கதாநாயகன் கதாநாயகிக்கு நல்ல சம்பளம் கொடுக்கும்போது, உதவி இயக்குநர்களுக்கும் மற்ற கலைஞர்களுக்கும் மிகக் குறைந்த ஊதியம் கொடுப்பதும்தான் என்பதையும் திரையுலகம் புரிந்துகொள்ள வேண்டும்.
நன்றி : தினமணி
இப்படத்தின் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் இந்த செய்தியாளர்கள் கூட்டத்தின் போது, இதைவிட எங்களை நடுத்தெருவில் வைத்து சுட்டுக் கொன்றிருக்கலாம் என்று கூறி அழுதது, அனைத்து தனியார் தொலைக்காட்சிகளிலும் வெளியாகி, தமிழ்க் குடும்பங்கள் அனைத்திலுமே ஒரு பச்சாதாபத்தை உருவாக்கியிருக்கிறது. எத்தகைய பெரும் இழப்பைத் தயாரிப்பாளர்கள் சந்திக்கிறார்கள் என்பதை உணர்வுபூர்வமாக பார்வையாளர்களுக்குப் புரிய வைத்திருக்கிறது.
திருட்டு டிவிடி கடைகளில் கிடைக்கிறது என்பதும் இணையதளத்தில் பல படங்களை யார்யாரோ போட்டுவிடுகிறார்கள் என்பதும் புதிய விஷயம் அல்ல. இப்போது திரையுலகமே கலங்கி நிற்கக் காரணம், படம் வெளியிடப்படத் தயாராக இருக்கும் நிலையில், அது யாருக்கோ கிடைத்து, இணையதளத்தில் வெளியாகி, அதை ஒருவர் பதிவிறக்கம் செய்து திருட்டு டிவிடியாக வெளியிடுகிறார் என்ற அதிர்ச்சிதான்!
ரஜினிகாந்த் குறிப்பிட்டதைப்போல திருடன் வெளியே இருந்து வரவில்லை, கூடவே இருந்திருக்கிறான். தயாரிப்புக்குப் பிந்தைய தொழில்நுட்பப் பணியின்போதுதான் இந்தத் திரைப்படம் வெளியே எடுத்துச்செல்லப்பட்டு, இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். இதைச் செய்தவர் யார் என்பதை கண்டுபிடிப்பதும் சாத்தியம்தான். ஆனால் இத்தகைய உள்ளுறைத் திருடர்கள் உருவாக யார் காரணம்? திருட்டு டிவிடியை ஏன் ஒழிக்க முடியவில்லை? காவல்துறையினர் கண்டும்காணாமல் இருப்பதால் மட்டும்தான் திருட்டு டிவிடி சந்தையில் புழங்குகிறதா? இதற்கான பதில்கள் அந்தச் செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் பேசிய பேச்சிலேயே இருக்கிறது.
நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், திருட்டு டிவிடி வாங்கிப் படம் பார்ப்பதை மக்கள் சந்தோஷமானதாக நினைக்கிறார்கள், திருட்டு டிவிடி போன்ற சட்டவிரோதமான செயல்கள் கருப்புப் பணத்திலிருந்து வருவதுதான். திருட்டு டிவிடி மூலம் கிடைக்கும் பணம், மும்பை குண்டுவெடிப்பு போன்ற தீவிரவாதச் செயல்களுக்குப் போய்ச் சேருகிறது என்பதை மக்களுக்கு எடுத்துச்சொல்லிப் புரிய வைக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார். இது முழுக்க முழுக்க உண்மைதான்.
இருப்பினும்கூட, திரைத்துறையில் படத்தயாரிப்பு, சம்பளம் எல்லாவற்றிலும் கருப்புப் பணம் முழுவீச்சில் நடமாடுகிறது என்பதால்தான் ஒரு திரைப்படம் ஒரு கலையின் ஒரு பிரிவு என்று கருதாமல், வெறும் வியாபாரமாக கோடிகோடியாய் கொட்டப்படுகிறது என்கிற கசப்பான உண்மையும் இருக்கவே செய்கிறது.
"ரூ.15 கோடி சொத்தைத் திருடி விட்டார்கள் என்பதைவிட எங்களைக் கொன்றுவிட்டார்கள்' என்பதே உண்மை என்று படத்தின் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் கூறிய அதே மேடையில், நடிகர் ரஜினிகாந்த் ஜக்குபாய் திரைப்படத்தில் தான் நடிக்க முடியாததைச் சொல்லும்போது, "ரவிக்குமார் எனக்கு வாசபி என்ற பிரெஞ்சு படத்தின் டிவிடியைக் கொடுத்தார். அந்தக் கதை நன்றாக இருந்தது. சூப்பர் கதை. ஜக்குபாய் படம் நன்றாக ஓடும். ராதிகா கவலைப்பட வேண்டியதில்லை' என்று கூறியிருக்கிறார். தமிழ்ப்படங்களின் திரைக்கதை இப்படித்தான் உருவாகும் என்றால், மற்றவர்களைக் குறை சொல்ல என்ன நியாயம் இருக்கிறது?
தமிழ்த் திரையுலகில் பிறமொழிகளில் வெற்றியடைந்த படங்களின் கதைத் தழுவல் தொடக்க காலம் முதலாகவே நடந்து வந்திருப்பதுதான். ஆனால் அண்மைக்காலத்தில், மிகப் பெரும்பாலான படங்கள் ஏதோ ஒரு மொழியில் வெற்றியடைந்த, அல்லது பேசப்பட்ட, அல்லது கையாளப்பட்ட புதுமை உத்திகளை அப்படியே இறக்குமதி செய்வதாகத்தான் இன்றைய தமிழ்த் திரையுலகம் இருக்கிறது. ரூ.20-க்கு மூன்றுபடங்கள் கொண்ட ஒரு டிவிடி என்று பெருகிவிட்டபிறகு, தமிழ்ப்படங்களின் மூலங்களையும் சேர்த்தே வாங்கி ஒப்பிட்டுப் பார்க்கும் சூழல் தமிழகத் திரைப்பட ரசிகர்களிடம் உருவாகியிருப்பதை இன்றைய தமிழ்த் திரையுலகம் அறிந்திருக்கவில்லையோ!
எம்ஜிஆர் தனது சம்பளத்தை அதிகமாக நிர்ணயிக்கக் காரணமாகச் சொல்லப்பட்ட செய்தி ஒன்று உண்டு. "தமிழகத்தின் எல்லா நகர்களிலும் எனக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். எனக்காக மட்டுமே இந்தப் படத்தை ஒரு முறையாவது நிச்சயம் பார்ப்பார்கள். அவர்கள் கொடுக்கும் நுழைவுக்கட்டணத்தில் ஒரு ரூபாய் எனக்குக் கிடைத்தால் என்ன?' என்பதுதான். அந்த அளவுக்கு அவரது ரசிகர்கள் மீது நம்பிக்கை இருந்தது. இன்றும்கூட, அவரது பல படங்கள் டிவிடியாக கிடைத்தாலும், திரையரங்குக்கு வரும்போது ஒருமுறை மீண்டும் பெரிய திரையில் பார்ப்பதையே ரசிகர்கள் விரும்புகிறார்கள். அந்த அளவுக்குக் கதையும், நடிகர்களின் பங்களிப்பும் இருந்தது.
அண்மையில் வெளியான "2012', "அவதார்' ஆகிய படங்களின் திருட்டு டிவிடி கடைகளில் கிடைக்கிறது. அந்தப் படத்தை டிவிடியில் பார்த்து அசந்துபோய், பெரிய திரையில் ஒருமுறை பார்க்க வேண்டும் என்று திரையரங்குக்கு ஓடும் ரசிகர்கள் இன்னமும் இருக்கவே செய்கிறார்கள். நல்ல படங்களுக்கு ரசிகர்கள் அதற்கான மதிப்பை வழங்கத் தவறுவதில்லை என்பதை தமிழ்த் திரையுலகம் உணர வேண்டும்.
அத்துடன், ஜக்குபாய் படத் திருட்டு மட்டுமல்ல, ஓட்டல் அறையில் விவாதிக்கப்படும் பல திரைப்படங்களின் கதைக்கரு, நகைச்சுவைக் காட்சி தொடர்பான தகவல்கள் எல்லாமும் பல்வேறு இயக்குநர் முகாம்களுக்குக் கசிந்திடக் காரணம், இயக்குநர், கதாநாயகன் கதாநாயகிக்கு நல்ல சம்பளம் கொடுக்கும்போது, உதவி இயக்குநர்களுக்கும் மற்ற கலைஞர்களுக்கும் மிகக் குறைந்த ஊதியம் கொடுப்பதும்தான் என்பதையும் திரையுலகம் புரிந்துகொள்ள வேண்டும்.
நன்றி : தினமணி
Saturday, January 9, 2010
நனவாகும் கனவுகள்
உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் இவை மூன்றும் ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகள். அதிலும் வீடு என்று வருகின்றபோது, "எலி வளையானாலும் தனி வளை' என்பதுதான் பழமொழி. சொந்தமாக ஒரு வீடு என்பது பலரது வாழ்க்கைக் கனவாக இருக்கிறது.
தமிழகத்தின் கிராமப்புறங்களில் உள்ள 21 லட்சம் மண்குடிசைகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றப்படும் என்று ஆளுநர் உரையில் தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறார்கள் என்பதைப் பொறுத்துப் பாராட்டவும் செய்யலாம்.
மத்திய நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதி அமைச்சகம் 2006-ம் ஆண்டில் அமைத்த தொழில்நுட்பக் குழுமம், நகர்ப்புற வீடுகள் பற்றாக்குறை குறித்து அண்மையில் அறிக்கை அளித்தது. பத்தாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தின் இறுதியில் (2007-08) இந்தியாவில் நகர்ப்புறங்களில் வாழும் 2.47 கோடி குடும்பங்கள் வீடுகளின்றி அவதிப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 2.17 கோடி குடும்பங்களின் மாத வருமானம் ரூ.3,300-க்குள். 28 லட்சம் குடும்பங்களின் மாத வருமானம் ரூ.7300-க்குள்.
நகர்ப்புறங்களில் வீடு இல்லாத குடும்பங்கள் அதிகம் உள்ள மாநிலம் மகாராஷ்டிரம். 37.8 லட்சம் குடும்பங்களுக்கு வீடுகள் இல்லை. இரண்டாம் இடத்தில் இருப்பது தமிழகம்தான். 28. 2 லட்சம் குடும்பங்களுக்கு வீடுகள் இல்லை. இது நகர்ப்புறக் கணக்கெடுப்பு மட்டுமே. அதிலும், 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அமைந்த புள்ளிவிவரம்.
இந்நிலையில் தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் 21 லட்சம் பேர் மண்குடிசைகளில் வாழ்வதாகப் புள்ளிவிவரங்கள் மூலம் அறியவந்துள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தமிழகத்தின் கிராமப்புறங்களில் இந்தப் புள்ளிவிவரத்தை விடவும் இரு மடங்கு குடும்பங்கள் வீடு இல்லாமல் இருக்கிறார்கள் என்பதே உண்மை நிலை. அண்மைக் காலங்களில் பெய்த பெருமழையின்போது மண்குடிசைகளில் வாழ்ந்த மக்கள் பட்ட துயரங்கள் கொஞ்சநஞ்சமல்ல.
கிராமப்புறங்களில் வீடு இல்லாத குடும்பங்களின் பிரச்னை மழைக்காலத்தோடு முடிந்துபோகிறது. ஆனால் நகர்ப்புறங்களில் வீடு இல்லாத மக்களின் சிக்கல் மிகவும் மோசமானது. நகர்ப்புறங்களில் அழகு, தூய்மை ஆகிய காரணங்களுக்காக இவர்கள் விரட்டப்படும்போது, ஏற்கெனவே நெருக்கடியில் உள்ள குடிசைப் பகுதியை நாடிப் போவதைத்தவிர வேறு வழியே இல்லை. நகர்ப்புறங்களில் வீடு இல்லா மக்களின் வாழ்க்கைக்கு குடிசை மாற்று வாரியம் இருந்தாலும்கூட, நகரத்தில் இடம் கிடைக்காததால் அவர்களுக்கு வீடு கட்டித் தர முடியவில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான நிலங்களில் தமிழ்நாடு முழுவதும் 323 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் 175 ஏக்கர் நிலம் சென்னை கே.கே.நகர் கோட்டத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலங்களை மீட்டு, குடிசைமாற்று வாரியம் இங்கே அடுக்குமாடிக் குடியிருப்புகளை கட்டச் செய்யலாம். கூவம் நதி தூய்மைப் பணிக்காக வெளியேற்றப்படும் குடும்பங்களுக்கு இந்தக் குடியிருப்புகளை வழங்கலாம்.
ஊரகப் பகுதி என்றாலும், நகர்ப்பகுதி என்றாலும் ஏழை மக்களுக்கு வீடு கட்டித் தருவது பாராட்டுக்குரியது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவற்றை இலவசம் என்று சொல்லும்போதுதான் சற்று நெருடலாக இருக்கிறது.
முதல்கட்டமாக, நிகழாண்டில் ரூ.1800 கோடி செலவில் 3 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படவுள்ளன என்றும் ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு குடிசை வீட்டை கான்கிரீட் வீடாக கட்டுவதற்கு ஆகும் செலவு ரூ.60,000.
1,500 ரூபாய் மதிப்புள்ள இலவச கலர் டி.வி. கொடுப்பதற்கே ஒவ்வொரு பயனாளியிடமும் அதிகாரிகள் ரூ.100 முதல் ரூ.200 வரை பெற்றுள்ளனர் என்பதை அரசு மறுத்தாலும் மக்கள் மன்றத்தில் அனைவரும் அறிந்த ரகசியம். ரூ.60,000 மதிப்புள்ள இந்த வீடுகளை அரசு இலவசமாகக் கட்டிக் கொடுக்கும் என்றால், அதற்காக நடைபெறக்கூடிய பாரபட்சங்கள், முறைகேடுகள் எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டியதே இல்லை.
மிக உயர்ந்த நோக்கத்துடன் கட்டித் திறக்கப்பட்டு வந்துள்ள பெரியார் சமத்துவபுரங்கள் அனைத்திலும் இப்போது திடீர் ஆய்வு நடத்தினால், அங்கு பாதிக்கும் மேற்பட்ட வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளதை அறிய முடியும். காரணம், பயனாளிகள் ஏற்கெனவே சொந்த வீடு வைத்திருப்பதாலும், அரசு மலிவாக வீடு கட்டித் தருவதால் அந்த வாய்ப்பை எந்த வகையிலும் கைப்பற்ற முற்பட்டு வெற்றி கண்டவர்கள் என்பதும்தான். இத்திட்டத்தில் பயனடைந்த ஏழைகள் மிகச் சிலராகவே இருக்கின்றனர். இது அரசின் தவறல்ல. அரசியல்வாதிகளுக்கு துணை போன, வருவாய்த்துறை அதிகாரிகளின் தவறு. அதே நிலைமை இந்தத் திட்டத்துக்கும் வந்துவிடக் கூடாது. இலவசத்தின் மதிப்பு உயரும்போது முறைகேடுகளின் அளவும் உயர்வது இயல்பு.
தமிழக அரசு இந்த ஏழைகளுக்கு வீடுகளைக் கட்டித் தருவதற்கான தொகை முழுவதையும் முழுக்க முழுக்க வட்டியில்லாக் கடனாக அளித்து, குறைந்தது 12 அல்லது 15 ஆண்டுகளுக்கு அத்தொகையை சிறு தவணைகளாகப் பிரித்து, மாதவாடகை போல செலுத்தும்படி செய்தாலும்கூட, இத்திட்டத்தில் குறைந்தது 75 சதவீதம் உண்மையான ஏழைகள் பயன்பெற ஏதுவாகும். 50 சதவீத மானியம் வழங்கினாலும் தவறில்லை.
வீட்டின் ஒவ்வொரு செங்கல், சிமென்ட் கலவையிலும் தனது உழைப்பின் பணம் சேர்ந்து இருக்கிறது என்ற எண்ணம் இருந்தால்தான், இந்த வீடுகளின் தரம் குறித்து ஏழைகள் கேள்வி எழுப்புவும், பராமரிப்பதில் அக்கறை கொள்ளவும் செய்வார்கள். இல்லையெனில், மிக நல்ல நோக்கத்துடன் அரசு அறிவித்துள்ள இத்திட்டம் குறைப்பட்டுப் போகும்.
பயனாளிகளின் தேர்வில்கூட, தமிழகத்தின் எந்த இடத்திலும் குடும்பத்தின் அங்கத்தினருக்கு வீடோ, வீட்டுமனையோ, நிலமோ சொந்தமாக இல்லை என்பதை உறுதி செய்வதில் அரசு கறாராக இல்லாவிட்டால் உள்ளாட்சியில் இடம்பெற்றுள்ள அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஏற்கெனவே வீடு இருப்போரும் கூட்டணி வைத்து இந்தத் திட்டத்தை அபகரித்துச் சென்ர்ருவிடும் வாய்ப்புகள் ஏராளம்.
நன்றி : தினமணி
தமிழகத்தின் கிராமப்புறங்களில் உள்ள 21 லட்சம் மண்குடிசைகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றப்படும் என்று ஆளுநர் உரையில் தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறார்கள் என்பதைப் பொறுத்துப் பாராட்டவும் செய்யலாம்.
மத்திய நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதி அமைச்சகம் 2006-ம் ஆண்டில் அமைத்த தொழில்நுட்பக் குழுமம், நகர்ப்புற வீடுகள் பற்றாக்குறை குறித்து அண்மையில் அறிக்கை அளித்தது. பத்தாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தின் இறுதியில் (2007-08) இந்தியாவில் நகர்ப்புறங்களில் வாழும் 2.47 கோடி குடும்பங்கள் வீடுகளின்றி அவதிப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 2.17 கோடி குடும்பங்களின் மாத வருமானம் ரூ.3,300-க்குள். 28 லட்சம் குடும்பங்களின் மாத வருமானம் ரூ.7300-க்குள்.
நகர்ப்புறங்களில் வீடு இல்லாத குடும்பங்கள் அதிகம் உள்ள மாநிலம் மகாராஷ்டிரம். 37.8 லட்சம் குடும்பங்களுக்கு வீடுகள் இல்லை. இரண்டாம் இடத்தில் இருப்பது தமிழகம்தான். 28. 2 லட்சம் குடும்பங்களுக்கு வீடுகள் இல்லை. இது நகர்ப்புறக் கணக்கெடுப்பு மட்டுமே. அதிலும், 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அமைந்த புள்ளிவிவரம்.
இந்நிலையில் தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் 21 லட்சம் பேர் மண்குடிசைகளில் வாழ்வதாகப் புள்ளிவிவரங்கள் மூலம் அறியவந்துள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தமிழகத்தின் கிராமப்புறங்களில் இந்தப் புள்ளிவிவரத்தை விடவும் இரு மடங்கு குடும்பங்கள் வீடு இல்லாமல் இருக்கிறார்கள் என்பதே உண்மை நிலை. அண்மைக் காலங்களில் பெய்த பெருமழையின்போது மண்குடிசைகளில் வாழ்ந்த மக்கள் பட்ட துயரங்கள் கொஞ்சநஞ்சமல்ல.
கிராமப்புறங்களில் வீடு இல்லாத குடும்பங்களின் பிரச்னை மழைக்காலத்தோடு முடிந்துபோகிறது. ஆனால் நகர்ப்புறங்களில் வீடு இல்லாத மக்களின் சிக்கல் மிகவும் மோசமானது. நகர்ப்புறங்களில் அழகு, தூய்மை ஆகிய காரணங்களுக்காக இவர்கள் விரட்டப்படும்போது, ஏற்கெனவே நெருக்கடியில் உள்ள குடிசைப் பகுதியை நாடிப் போவதைத்தவிர வேறு வழியே இல்லை. நகர்ப்புறங்களில் வீடு இல்லா மக்களின் வாழ்க்கைக்கு குடிசை மாற்று வாரியம் இருந்தாலும்கூட, நகரத்தில் இடம் கிடைக்காததால் அவர்களுக்கு வீடு கட்டித் தர முடியவில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான நிலங்களில் தமிழ்நாடு முழுவதும் 323 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் 175 ஏக்கர் நிலம் சென்னை கே.கே.நகர் கோட்டத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலங்களை மீட்டு, குடிசைமாற்று வாரியம் இங்கே அடுக்குமாடிக் குடியிருப்புகளை கட்டச் செய்யலாம். கூவம் நதி தூய்மைப் பணிக்காக வெளியேற்றப்படும் குடும்பங்களுக்கு இந்தக் குடியிருப்புகளை வழங்கலாம்.
ஊரகப் பகுதி என்றாலும், நகர்ப்பகுதி என்றாலும் ஏழை மக்களுக்கு வீடு கட்டித் தருவது பாராட்டுக்குரியது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவற்றை இலவசம் என்று சொல்லும்போதுதான் சற்று நெருடலாக இருக்கிறது.
முதல்கட்டமாக, நிகழாண்டில் ரூ.1800 கோடி செலவில் 3 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படவுள்ளன என்றும் ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு குடிசை வீட்டை கான்கிரீட் வீடாக கட்டுவதற்கு ஆகும் செலவு ரூ.60,000.
1,500 ரூபாய் மதிப்புள்ள இலவச கலர் டி.வி. கொடுப்பதற்கே ஒவ்வொரு பயனாளியிடமும் அதிகாரிகள் ரூ.100 முதல் ரூ.200 வரை பெற்றுள்ளனர் என்பதை அரசு மறுத்தாலும் மக்கள் மன்றத்தில் அனைவரும் அறிந்த ரகசியம். ரூ.60,000 மதிப்புள்ள இந்த வீடுகளை அரசு இலவசமாகக் கட்டிக் கொடுக்கும் என்றால், அதற்காக நடைபெறக்கூடிய பாரபட்சங்கள், முறைகேடுகள் எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டியதே இல்லை.
மிக உயர்ந்த நோக்கத்துடன் கட்டித் திறக்கப்பட்டு வந்துள்ள பெரியார் சமத்துவபுரங்கள் அனைத்திலும் இப்போது திடீர் ஆய்வு நடத்தினால், அங்கு பாதிக்கும் மேற்பட்ட வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளதை அறிய முடியும். காரணம், பயனாளிகள் ஏற்கெனவே சொந்த வீடு வைத்திருப்பதாலும், அரசு மலிவாக வீடு கட்டித் தருவதால் அந்த வாய்ப்பை எந்த வகையிலும் கைப்பற்ற முற்பட்டு வெற்றி கண்டவர்கள் என்பதும்தான். இத்திட்டத்தில் பயனடைந்த ஏழைகள் மிகச் சிலராகவே இருக்கின்றனர். இது அரசின் தவறல்ல. அரசியல்வாதிகளுக்கு துணை போன, வருவாய்த்துறை அதிகாரிகளின் தவறு. அதே நிலைமை இந்தத் திட்டத்துக்கும் வந்துவிடக் கூடாது. இலவசத்தின் மதிப்பு உயரும்போது முறைகேடுகளின் அளவும் உயர்வது இயல்பு.
தமிழக அரசு இந்த ஏழைகளுக்கு வீடுகளைக் கட்டித் தருவதற்கான தொகை முழுவதையும் முழுக்க முழுக்க வட்டியில்லாக் கடனாக அளித்து, குறைந்தது 12 அல்லது 15 ஆண்டுகளுக்கு அத்தொகையை சிறு தவணைகளாகப் பிரித்து, மாதவாடகை போல செலுத்தும்படி செய்தாலும்கூட, இத்திட்டத்தில் குறைந்தது 75 சதவீதம் உண்மையான ஏழைகள் பயன்பெற ஏதுவாகும். 50 சதவீத மானியம் வழங்கினாலும் தவறில்லை.
வீட்டின் ஒவ்வொரு செங்கல், சிமென்ட் கலவையிலும் தனது உழைப்பின் பணம் சேர்ந்து இருக்கிறது என்ற எண்ணம் இருந்தால்தான், இந்த வீடுகளின் தரம் குறித்து ஏழைகள் கேள்வி எழுப்புவும், பராமரிப்பதில் அக்கறை கொள்ளவும் செய்வார்கள். இல்லையெனில், மிக நல்ல நோக்கத்துடன் அரசு அறிவித்துள்ள இத்திட்டம் குறைப்பட்டுப் போகும்.
பயனாளிகளின் தேர்வில்கூட, தமிழகத்தின் எந்த இடத்திலும் குடும்பத்தின் அங்கத்தினருக்கு வீடோ, வீட்டுமனையோ, நிலமோ சொந்தமாக இல்லை என்பதை உறுதி செய்வதில் அரசு கறாராக இல்லாவிட்டால் உள்ளாட்சியில் இடம்பெற்றுள்ள அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஏற்கெனவே வீடு இருப்போரும் கூட்டணி வைத்து இந்தத் திட்டத்தை அபகரித்துச் சென்ர்ருவிடும் வாய்ப்புகள் ஏராளம்.
நன்றி : தினமணி
Thursday, January 7, 2010
வருமுன் காத்தலே நலம்!
தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வருகிறது. வழக்கத்தைவிட பருவமழை அதிக அளவில் பெய்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மழை காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது.
÷வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெறும் நிலை உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
÷தேங்கியுள்ள மழைநீரில் உருவாகும் கொசுக்களால் இந்த வைரஸ் காய்ச்சல் பரவுவதாகச் சுகாதாரத்துறை தெரிவிக்கிறது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் கிராமங்கள், நகர்ப்புறங்களில் மழைநீர் தேங்கி சுகாதாரக் கேடு உருவாகி கொசுக்களால் இந்நோய் எளிதில் பரவி வருகிறது.
÷வைரஸ் காய்ச்சல் தாக்கப்பட்டவர்கள் பலர் கால்வலி, மூட்டுவலி காரணமாக மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலை உள்ளது. இது சிக்குன் குனியா காய்ச்சலாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். சிலருக்கு மூளைக் காய்ச்சல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
÷திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழக்க நேரிட்டது. முக்கூடல் அருகே வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி ஒருவருக்குக் கண் பார்வை பாதிக்கப்பட்டது.
÷இதேபோல, மேலப்பாளையத்தில் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 4 வயதுச்சிறுவன் இறந்ததாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு பின்னர் அது சிக்குன் குனியா, மூளைக் காய்ச்சல், டெங்கு காய்ச்சலாக மாறி வருவதால் உயிரிழப்பு ஏற்பட்டு வருவதாக அஞ்சப்படுகிறது.
÷தமிழகத்தில் பல லட்சம் பேருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், 900 பேருக்கு சிக்குன் குனியா காய்ச்சல் இருப்பதாகவும், இன்னும் 2 மாதங்களுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளது என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. எனவே, போதிய தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
÷கடந்த சில தினங்களாக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் பாதுகாக்கப்பட்ட குடிநீரில் குளோரின் கலந்து வழங்கப்படுகிறது.
இது தவிர வேறு எந்தத் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.
÷மேலும், சுகாதாரச் சீர்கேடுகள் மூலம் உருவாகி வரும் கொசுக்களை ஒழிக்க உள்ளாட்சி அமைப்புகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
÷பல ஊர்களில் பள்ளிகள், மாணவர் விடுதிகள், சத்துணவுக் கூடங்கள் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால், மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
÷அண்மையில் தேக்கடியில் சுற்றுலா சென்றோர் பயணம் செய்த படகு கவிழ்ந்து 60}க்கும் மேற்பட்டோர் இறந்தனர். வேதாரண்யத்தில் ஓட்டுநர் உரிமம் பெறாமல் டிரைவராகப் பணி செய்தவர் ஓட்டிச் சென்ற வேன் விபத்துக்குள்ளாகி ஓர் ஆசிரியை மற்றும் 9 மாணவர்கள் உயிரிழக்க நேரிட்டது.
÷இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு நீர்நிலைகளில் படகு சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகள் உயிர் பாதுகாப்புக் கவசம் அணிந்து பயணிக்க வேண்டும் என்றும், பள்ளிகளில் நியமனம் செய்யப்படும் வாகன ஓட்டுநர்கள் 10 ஆண்டு அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தி உள்ளது.
÷கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 98 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிறகுதான் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்குப் போதிய பாதுகாப்பு உள்ளதா என்பதைக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏதாவது ஒரு விபத்தில் பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்பட்ட பிறகுதான் அரசின் நடவடிக்கையும் கடுமையாக்கப்படுகிறது. ஏன் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்கக் கூடாது?
÷வருமுன் காத்தலே நலம் என்பதற்கேற்ப, மழைக்கால நோயை எதிர்பார்த்து ஒவ்வோர் ஊரிலும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தீவிர கொசு ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம். ÷மக்களுக்காக வருமுன் காப்போம் மருத்துவ முகாம், உயிர் காக்கும் உயர் சிகிச்சை போன்ற திட்டங்களைச் செயல்படுத்தும் அரசு, இதுபோன்ற பருவகால நோய் பாதிப்புகளில் இருந்து மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கட்டுரையாளர் :சா. ஷேக் அப்துல்காதர்
நன்றி : தினமணி
÷வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெறும் நிலை உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
÷தேங்கியுள்ள மழைநீரில் உருவாகும் கொசுக்களால் இந்த வைரஸ் காய்ச்சல் பரவுவதாகச் சுகாதாரத்துறை தெரிவிக்கிறது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் கிராமங்கள், நகர்ப்புறங்களில் மழைநீர் தேங்கி சுகாதாரக் கேடு உருவாகி கொசுக்களால் இந்நோய் எளிதில் பரவி வருகிறது.
÷வைரஸ் காய்ச்சல் தாக்கப்பட்டவர்கள் பலர் கால்வலி, மூட்டுவலி காரணமாக மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலை உள்ளது. இது சிக்குன் குனியா காய்ச்சலாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். சிலருக்கு மூளைக் காய்ச்சல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
÷திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழக்க நேரிட்டது. முக்கூடல் அருகே வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி ஒருவருக்குக் கண் பார்வை பாதிக்கப்பட்டது.
÷இதேபோல, மேலப்பாளையத்தில் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 4 வயதுச்சிறுவன் இறந்ததாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு பின்னர் அது சிக்குன் குனியா, மூளைக் காய்ச்சல், டெங்கு காய்ச்சலாக மாறி வருவதால் உயிரிழப்பு ஏற்பட்டு வருவதாக அஞ்சப்படுகிறது.
÷தமிழகத்தில் பல லட்சம் பேருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், 900 பேருக்கு சிக்குன் குனியா காய்ச்சல் இருப்பதாகவும், இன்னும் 2 மாதங்களுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளது என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. எனவே, போதிய தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
÷கடந்த சில தினங்களாக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் பாதுகாக்கப்பட்ட குடிநீரில் குளோரின் கலந்து வழங்கப்படுகிறது.
இது தவிர வேறு எந்தத் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.
÷மேலும், சுகாதாரச் சீர்கேடுகள் மூலம் உருவாகி வரும் கொசுக்களை ஒழிக்க உள்ளாட்சி அமைப்புகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
÷பல ஊர்களில் பள்ளிகள், மாணவர் விடுதிகள், சத்துணவுக் கூடங்கள் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால், மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
÷அண்மையில் தேக்கடியில் சுற்றுலா சென்றோர் பயணம் செய்த படகு கவிழ்ந்து 60}க்கும் மேற்பட்டோர் இறந்தனர். வேதாரண்யத்தில் ஓட்டுநர் உரிமம் பெறாமல் டிரைவராகப் பணி செய்தவர் ஓட்டிச் சென்ற வேன் விபத்துக்குள்ளாகி ஓர் ஆசிரியை மற்றும் 9 மாணவர்கள் உயிரிழக்க நேரிட்டது.
÷இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு நீர்நிலைகளில் படகு சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகள் உயிர் பாதுகாப்புக் கவசம் அணிந்து பயணிக்க வேண்டும் என்றும், பள்ளிகளில் நியமனம் செய்யப்படும் வாகன ஓட்டுநர்கள் 10 ஆண்டு அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தி உள்ளது.
÷கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 98 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிறகுதான் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்குப் போதிய பாதுகாப்பு உள்ளதா என்பதைக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏதாவது ஒரு விபத்தில் பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்பட்ட பிறகுதான் அரசின் நடவடிக்கையும் கடுமையாக்கப்படுகிறது. ஏன் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்கக் கூடாது?
÷வருமுன் காத்தலே நலம் என்பதற்கேற்ப, மழைக்கால நோயை எதிர்பார்த்து ஒவ்வோர் ஊரிலும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தீவிர கொசு ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம். ÷மக்களுக்காக வருமுன் காப்போம் மருத்துவ முகாம், உயிர் காக்கும் உயர் சிகிச்சை போன்ற திட்டங்களைச் செயல்படுத்தும் அரசு, இதுபோன்ற பருவகால நோய் பாதிப்புகளில் இருந்து மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கட்டுரையாளர் :சா. ஷேக் அப்துல்காதர்
நன்றி : தினமணி
Labels:
கட்டுரை,
சுற்றுச்சூழல்,
தமிழகஅரசு,
மருத்துவம்
Wednesday, January 6, 2010
வாங்கும் சக்தியும், தாங்கும் சக்தியும்!
ஒரு நாட்டின் பொருளாதார இயக்கமும், வளர்ச்சியும், பலமும், வாங்கும் சக்தி, தாங்கும் சக்தி என்கிற இரண்டு வார்த்தைகளில்தான் மறைந்திருக்கின்றன. இன்றைய நவீன பொருளாதார யுகத்தில், பல நாடுகளின் வளர்ச்சியை, அந்த நாட்டு மக்களின் வாங்கும் சக்தி எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பதை, ஒரு முக்கிய அடிப்படையாகக் கொண்டு, ஆராய்ச்சியாளர்கள் கணிக்கிறார்கள்.
÷நம் நாடு, கால் நூற்றாண்டுக்கு முன்பு இருந்ததைவிட, இப்பொழுது நன்கு வளர்ந்துள்ளது என்பது தெளிவு. ஒருகாலத்தில், இந்தியா முழுவதும் ஆண்டு ஒன்றுக்கு ஐம்பதாயிரம் கார்கள்கூட உற்பத்தி செய்து, விற்பனை செய்ய முடியாத காலம் மாறி, தற்போது ஆண்டொன்றுக்கு ஆயிரக்கணக்கான கார்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வதுடன், பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யுமளவுக்கு வளர்ந்திருக்கிறோம். தவிர, மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் போன்ற இரு சக்கர வாகனங்களை லட்சக்கணக்கில் உற்பத்தி செய்வது மட்டுமன்றி, மக்களின் தேவைக்கேற்ப வாங்கும் சூழ்நிலையும், அதற்குத் தேவையான தொகையைக் கடனாகப் பெறுவதற்கு ஏதுவாக வாய்ப்புகளும் ஏற்பட்டிருப்பது நம் நாட்டின் வளர்ச்சியைக் காட்டுகிறது.
÷விவசாயிகள் உற்பத்திப் பொருள்களுக்கு நியாயமான விலையைக் கேட்டு, ஒவ்வோராண்டும் தொடர் போராட்டங்கள் நடத்தி வருவதை நாம் காண்கிறோம். குறிப்பாக, பால், கரும்பு, நெல், கோதுமை, பருத்தி, காய்கறிகள், பழங்கள் ஆகிய பொருள்களுக்கு நியாயமான விலையை விவசாயிகள் எதிர்பார்ப்பதில் தவறில்லை. விவசாய உற்பத்திச் செலவுகள் விலை உயர்வதால், விற்கும் பொருள்களின் விலையும் உயரும் என்பது தீர்க்கமான உண்மை.
÷நம் நாட்டில் விவசாயிகள் தங்களின் விவசாய உற்பத்திக்கான பொருள்களின் விலை அதிகரித்திருப்பதைக் கண்டித்துக் கிராமங்களிலும், விவசாயப் பொருள்களின் விலையேற்றத்தால் தங்களின் தாங்கும் சக்தி மீறியதைக் கண்டித்துப் பொதுமக்கள் நகரங்களிலும் போராடுவதுமான எதிர்மறைச் செயல்களைப் பார்க்கிறோம்.
÷தங்கத்தின் விலையேற்றம், அன்னியச் செலாவணி மாற்றம், அதிகமான பணவீக்கம், பணம் பற்றாக்குறை சூழ்நிலை, உலக அளவில் அதிகமான வட்டி விகிதம், பொருளாதாரச் சரிவு போன்ற உலகச் சூழ்நிலைகள், சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் ஏற்றம் போன்றவை கண்டிப்பாக நம் நாட்டையும் பாதிக்கும். நம் நாட்டின் இயற்கைச் சூழலும், பருவ மழை குறைவும், மக்களின் அன்றாட வாழ்வைப் பாதிக்கும் காரணிகளாக அமையக் கூடும்.
÷ஆக, உற்பத்தி செய்வதற்குத் தேவையான நேரத்தில், தேவையான அளவு பணவசதி இருக்க வேண்டும். அதேபோல, நியாயமான வட்டி விகிதத்தில் கடன் வசதிகள் பெறுவதற்குத் தேவையான வழிவகைகளை வகுக்க வேண்டும். தவிர, மக்கள் செலவு செய்வது மட்டுமன்றி, நியாயமான அளவு பணம் சேமிப்பும் இருக்க வேண்டும். அப்படிச் சேமிக்கும் பணத்துக்கு அரசாங்கம் நியாயமான அளவு வட்டியும் அளிக்க வேண்டும்.
÷வங்கிகளில் போடும் பணத்துக்கு நியாயமான வட்டியும், வங்கிகளின் நிர்வாகச் செலவுகளுக்கு உலக அளவில் உள்ள நியாயமான தொகைகளும் இருக்க வேண்டும். தவிர, வட்டிக்குக் கடன் கொடுப்பதும் நியாயமான வட்டி விகிதத்தில் இருக்க வேண்டும். இத்தகைய சீரான இலக்கால் மட்டுமே மக்களின் வாங்கும் சக்தியும், தாங்கும் சக்தியும் அதிகரிக்கும்.
÷ஒவ்வொரு முறையும் மத்திய, மாநில அரசுகளின் பட்ஜெட் வரும்போது, ஒவ்வோர் அரசாங்கமும் தங்களுடைய வரவு செலவுகளுக்கும், திட்டச் செலவுப் பணிகளுக்காகவும், நிர்வாகச் செலவுக்கேற்ப, வரிவிதிப்பு முறைகளை மேற்கொள்கிறார்கள். இது எல்லோரும் அறிந்ததே.
÷சாதாரண நடுத்தர மக்கள், மாதாந்திரச் சம்பளம் வாங்குவோர், அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை பார்ப்போர், சிறு தொழில் முனைவோர் போன்ற சமுதாயத்தின் இடைத்தட்டு மக்கள் எதிர்நோக்கும் சவால் வேறு வகையானது. ""மத்திய, மாநில அரசுகள் மற்றும் நகராட்சி, உள்ளாட்சி நிர்வாகங்கள் பற்றாக்குறைக்கு கூடுதல் வரிவசூல் செய்து விடுகிறார்கள் அல்லது வெளிநாடுகளில் கடன் தொகையாகப் பெற்று, நிர்வாகம் செய்கிறார்கள். ஆனால், யாருமே எங்களைப் பற்றியோ, எங்களது குடும்ப பட்ஜெட் தாங்குமா, எங்களால் குடும்ப நிர்வாகம் செய்ய முடியுமா என்று எள்ளளவும் ஆராய்ந்து பார்த்ததாகத் தெரியவில்லையே என்பது அவர்களின் நியாயமான ஆதங்கம்.
÷ஒரே நேரத்தில் உணவுப் பொருள்கள், கேஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வீட்டுவாடகை உயர்வு, பஸ் மற்றும் ரயில் கட்டண உயர்வு, மருத்துவச் செலவு உயர்வு ஆகியவற்றால் ஏற்படும் குடும்ப நிதிநிலை பற்றாக்குறைக்கு அவர்கள் என்ன செ ய்ய முடியும்? அதைச் சரிக்கட்ட அவர்கள் எங்கிருந்து கடன் வாங்குவது? அப்படி வாங்கிய கடனை எப்படித் திருப்பிக் கொடுப்பது? இன்றைய அத்தியாவசியத் தேவைகளான டி.வி., கம்ப்யூட்டர், ஆளுக்கொரு செல்போன் போன்றவைகளை வாங்கும் சக்தியின்றி, நடுத்தர வர்க்கத்தினர் மன அதிருப்தியில் உழல்கிறார்கள்.
÷இன்றைய இந்தச் சூழ்நிலையில், பலதரப்பட்ட குடும்பங்கள் அவர்கள் பெறும் சம்பளம், அவர்களின் மாதாந்திர வீடு, உணவு செலவினங்களுக்கும், அவர்கள் குழந்தைகளின் கல்வி, மருத்துவச் செலவுகளுக்கும், மற்றைய இதர போக்குவரத்துச் செலவுகளுக்கும் போதுமான அளவில் இருக்கிறதா, அவர்கள் செலுத்தும் வரிவிகிதம் மாறிய சூழ்நிலையில் விலைவாசி ஏற்றத்திற்கேற்ப பொருள்களை வாங்கும் சக்தி அவர்களிடம் உயர்ந்து உள்ளதா என்பதையும், அதனைத் தாங்கும் சக்தி இருக்கிறதா என்பது பற்றியும் பொருளாதார நிபுணர்கள் கவனம் செலுத்துவதில்லை. பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்கள் மற்றும் உயர்ந்த நிலையில் இருப்பவர்களின் பிரச்னைகளுக்கும் தரப்படும் கவனம் நடுத்தர வர்க்கத்தினருக்குக் கிடைப்பதில்லை.
÷நம் நாட்டில் 80 சதவிகித மக்களின் மாத வருமானம் ரூ. 5,000, 10,000, 15,000, 30,000 ஆகிய இந்த நான்கு பிரிவுகளில் அடங்கிவிடும். அப்படிப்பட்ட மக்களின் வாங்கும் சக்தியும், தாங்கும் சக்தியும் இன்றைய பொருளாதார சூழ்நிலைக்கேற்ப திருப்தியாக இருப்பதற்கு வழிவகைகள் என்ன என்பதை அரசாங்கம் தொடர்ந்து ஆராய வேண்டும்.
பல பெரியவர்கள் நாங்கள் எல்லாம் அன்றைய காலத்தில் மிகக் குறைந்த வருவாயில் தங்கம் சவரன் ரூ.15 லிருந்து ரூ.100 விற்ற காலங்களில் நிறைய தங்க நகைகள் வைத்திருந்தோம். கவலையின்றி நிம்மதியான வாழ்க்கை நடத்தி வந்தோம். ஆனால் எங்கள் பேரக் குழந்தைகளோ, நல்ல மேற்படிப்பு படித்திருந்தும், அத்தியாவசியத் தேவையான ஒரு சொந்த வீடு கூட இல்லாமல், நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று அடிக்கடி சொல்வதைப் பார்க்கலாம்.
÷எல்லா மக்களும் தங்களுக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ வசதி, வேலை வாய்ப்பு, ஓய்வூதியப் பாதுகாப்பு, முதியோர் நலத் திட்டங்கள் என்ற அளவில், ஏழை பணக்காரன் என்ற வேறுபாடில்லாமல், சமவாய்ப்புக் கிடைப்பதுடன், கீழ்தட்டில் இருப்பவர்களை உயர்த்துவதற்குத் திட்டங்கள் தீட்டி, புதிய சமுதாயம் உருவாக்க வேண்டும்.
அதேநேரத்தில், மத்தியதர வகுப்பினரின் பிரச்னைகளை மையப்படுத்தித்தான் திட்டங்கள் தீட்டுவதும், நிதிநிலை அறிக்கை தயாரிப்பதும் செய்யப்பட வேண்டும்.
÷மத்திய, மாநில அரசுகள், சமுதாய நலம் பேணும் பொருளாதாரத் திட்டங்களை அறிவித்து நடத்தி வருகிறார்கள். ஆனாலும், பெரும்பான்மையான நடுத்தர வர்க்கத்தினர் ஒவ்வொரு மாதமும் அவர்களின் அன்றாடச் செலவுகளைச் சந்திப்பது குறித்து பயந்துகொண்டே வாழ்கிறார்கள்.
திடீரென உடல்நலக் குறைவோ அல்லது பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்ந்தாலோ, அவர்களின் பாடு பெரும் திண்டாட்டம்தான். திடீர் விலையேற்றத்தால் உணவுப் பொருள்கள் வாங்குவதுகூட மிகவும் கடினமாகி விடுகிறது.
÷பெரும்பாலானோர் காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப் பொருள்கள் கடைகளில் திடீரென அதிக விலைக்கு விற்றால், அந்தப் பணம் ஏதோ அந்தப் பொருள்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்குச் செல்வதாக எண்ணுகிறார்கள்.
ஆனால், உற்பத்தியாளர்களுக்கும், நுகர்வோர்களுக்கும் இடையில் இருக்கும் ஒருசிலர்தான் அந்த விலையேற்றத்தின் பலனை அனுபவிக்கிறார்கள். இந்த நிலை மாறி உற்பத்தியாளருக்கு நியாயமான விலையும், வாங்கும் சக்தியும் இருப்பதை அரசுதான் உறுதி செய்ய முடியும்;
செய்ய வேண்டும்.
÷அதேபோல, உணவுப் பொருள்கள் மற்றும் தேவையான பொருள்கள் வாங்குவோருக்கும் நியாயமான விலைக்கு வாங்கும், தாங்கும் சக்தி இருக்க வேண்டும். பட்ஜெட் மற்றும் பொருள்களின் விலை உயர்வு, வரி உயர்வு போன்றவை பலதரப்பட்ட மக்களுக்கும் வாங்கும் சக்தியும், தாங்கும் சக்தியும் தொடருமா என்பதன் அடிப்படையில்தான் முடிவெடுக்க வேண்டும்.
÷செலவுக்கேற்ற வரவை அரசுகள் செய்து கொள்ள முடியும். பொதுமக்களில் பெரும்பாலோருக்கு அது அசாத்தியம். ஆகவே, அவர்கள் வரவுக்கு ஏற்ற செலவு செய்யும் வகையில் மக்களின் வாங்கும் சக்தியும், தாங்கும் சக்தியும் இருப்பதை உறுதி செய்வதுதான் மத்திய, மாநில அரசுகளின் கண்ணோட்டமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட செயல்பாடு இருந்தால் மட்டுமே அரசு மக்கள் நல அரசாக இருக்கும். சுதந்திரம், மக்களாட்சி என்பதற்கெல்லாம் அர்த்தம் இருக்கும். வாங்கும் சக்தி அதிகரிப்பது மட்டுமே வளர்ச்சிக்கு அறிகுறி அல்ல. தாங்கும் சக்தியும் இருக்கிறதா என்பதையும் உறுதிப்படுத்துவதுதான் நல்லதொரு பொருளாதாரக் கண்ணோட்டமாக இருக்கும்.
கட்டுரையாளர் :ஜெம் ஆர். வீரமணி
நன்றி : தினமணி
÷நம் நாடு, கால் நூற்றாண்டுக்கு முன்பு இருந்ததைவிட, இப்பொழுது நன்கு வளர்ந்துள்ளது என்பது தெளிவு. ஒருகாலத்தில், இந்தியா முழுவதும் ஆண்டு ஒன்றுக்கு ஐம்பதாயிரம் கார்கள்கூட உற்பத்தி செய்து, விற்பனை செய்ய முடியாத காலம் மாறி, தற்போது ஆண்டொன்றுக்கு ஆயிரக்கணக்கான கார்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வதுடன், பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யுமளவுக்கு வளர்ந்திருக்கிறோம். தவிர, மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் போன்ற இரு சக்கர வாகனங்களை லட்சக்கணக்கில் உற்பத்தி செய்வது மட்டுமன்றி, மக்களின் தேவைக்கேற்ப வாங்கும் சூழ்நிலையும், அதற்குத் தேவையான தொகையைக் கடனாகப் பெறுவதற்கு ஏதுவாக வாய்ப்புகளும் ஏற்பட்டிருப்பது நம் நாட்டின் வளர்ச்சியைக் காட்டுகிறது.
÷விவசாயிகள் உற்பத்திப் பொருள்களுக்கு நியாயமான விலையைக் கேட்டு, ஒவ்வோராண்டும் தொடர் போராட்டங்கள் நடத்தி வருவதை நாம் காண்கிறோம். குறிப்பாக, பால், கரும்பு, நெல், கோதுமை, பருத்தி, காய்கறிகள், பழங்கள் ஆகிய பொருள்களுக்கு நியாயமான விலையை விவசாயிகள் எதிர்பார்ப்பதில் தவறில்லை. விவசாய உற்பத்திச் செலவுகள் விலை உயர்வதால், விற்கும் பொருள்களின் விலையும் உயரும் என்பது தீர்க்கமான உண்மை.
÷நம் நாட்டில் விவசாயிகள் தங்களின் விவசாய உற்பத்திக்கான பொருள்களின் விலை அதிகரித்திருப்பதைக் கண்டித்துக் கிராமங்களிலும், விவசாயப் பொருள்களின் விலையேற்றத்தால் தங்களின் தாங்கும் சக்தி மீறியதைக் கண்டித்துப் பொதுமக்கள் நகரங்களிலும் போராடுவதுமான எதிர்மறைச் செயல்களைப் பார்க்கிறோம்.
÷தங்கத்தின் விலையேற்றம், அன்னியச் செலாவணி மாற்றம், அதிகமான பணவீக்கம், பணம் பற்றாக்குறை சூழ்நிலை, உலக அளவில் அதிகமான வட்டி விகிதம், பொருளாதாரச் சரிவு போன்ற உலகச் சூழ்நிலைகள், சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் ஏற்றம் போன்றவை கண்டிப்பாக நம் நாட்டையும் பாதிக்கும். நம் நாட்டின் இயற்கைச் சூழலும், பருவ மழை குறைவும், மக்களின் அன்றாட வாழ்வைப் பாதிக்கும் காரணிகளாக அமையக் கூடும்.
÷ஆக, உற்பத்தி செய்வதற்குத் தேவையான நேரத்தில், தேவையான அளவு பணவசதி இருக்க வேண்டும். அதேபோல, நியாயமான வட்டி விகிதத்தில் கடன் வசதிகள் பெறுவதற்குத் தேவையான வழிவகைகளை வகுக்க வேண்டும். தவிர, மக்கள் செலவு செய்வது மட்டுமன்றி, நியாயமான அளவு பணம் சேமிப்பும் இருக்க வேண்டும். அப்படிச் சேமிக்கும் பணத்துக்கு அரசாங்கம் நியாயமான அளவு வட்டியும் அளிக்க வேண்டும்.
÷வங்கிகளில் போடும் பணத்துக்கு நியாயமான வட்டியும், வங்கிகளின் நிர்வாகச் செலவுகளுக்கு உலக அளவில் உள்ள நியாயமான தொகைகளும் இருக்க வேண்டும். தவிர, வட்டிக்குக் கடன் கொடுப்பதும் நியாயமான வட்டி விகிதத்தில் இருக்க வேண்டும். இத்தகைய சீரான இலக்கால் மட்டுமே மக்களின் வாங்கும் சக்தியும், தாங்கும் சக்தியும் அதிகரிக்கும்.
÷ஒவ்வொரு முறையும் மத்திய, மாநில அரசுகளின் பட்ஜெட் வரும்போது, ஒவ்வோர் அரசாங்கமும் தங்களுடைய வரவு செலவுகளுக்கும், திட்டச் செலவுப் பணிகளுக்காகவும், நிர்வாகச் செலவுக்கேற்ப, வரிவிதிப்பு முறைகளை மேற்கொள்கிறார்கள். இது எல்லோரும் அறிந்ததே.
÷சாதாரண நடுத்தர மக்கள், மாதாந்திரச் சம்பளம் வாங்குவோர், அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை பார்ப்போர், சிறு தொழில் முனைவோர் போன்ற சமுதாயத்தின் இடைத்தட்டு மக்கள் எதிர்நோக்கும் சவால் வேறு வகையானது. ""மத்திய, மாநில அரசுகள் மற்றும் நகராட்சி, உள்ளாட்சி நிர்வாகங்கள் பற்றாக்குறைக்கு கூடுதல் வரிவசூல் செய்து விடுகிறார்கள் அல்லது வெளிநாடுகளில் கடன் தொகையாகப் பெற்று, நிர்வாகம் செய்கிறார்கள். ஆனால், யாருமே எங்களைப் பற்றியோ, எங்களது குடும்ப பட்ஜெட் தாங்குமா, எங்களால் குடும்ப நிர்வாகம் செய்ய முடியுமா என்று எள்ளளவும் ஆராய்ந்து பார்த்ததாகத் தெரியவில்லையே என்பது அவர்களின் நியாயமான ஆதங்கம்.
÷ஒரே நேரத்தில் உணவுப் பொருள்கள், கேஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வீட்டுவாடகை உயர்வு, பஸ் மற்றும் ரயில் கட்டண உயர்வு, மருத்துவச் செலவு உயர்வு ஆகியவற்றால் ஏற்படும் குடும்ப நிதிநிலை பற்றாக்குறைக்கு அவர்கள் என்ன செ ய்ய முடியும்? அதைச் சரிக்கட்ட அவர்கள் எங்கிருந்து கடன் வாங்குவது? அப்படி வாங்கிய கடனை எப்படித் திருப்பிக் கொடுப்பது? இன்றைய அத்தியாவசியத் தேவைகளான டி.வி., கம்ப்யூட்டர், ஆளுக்கொரு செல்போன் போன்றவைகளை வாங்கும் சக்தியின்றி, நடுத்தர வர்க்கத்தினர் மன அதிருப்தியில் உழல்கிறார்கள்.
÷இன்றைய இந்தச் சூழ்நிலையில், பலதரப்பட்ட குடும்பங்கள் அவர்கள் பெறும் சம்பளம், அவர்களின் மாதாந்திர வீடு, உணவு செலவினங்களுக்கும், அவர்கள் குழந்தைகளின் கல்வி, மருத்துவச் செலவுகளுக்கும், மற்றைய இதர போக்குவரத்துச் செலவுகளுக்கும் போதுமான அளவில் இருக்கிறதா, அவர்கள் செலுத்தும் வரிவிகிதம் மாறிய சூழ்நிலையில் விலைவாசி ஏற்றத்திற்கேற்ப பொருள்களை வாங்கும் சக்தி அவர்களிடம் உயர்ந்து உள்ளதா என்பதையும், அதனைத் தாங்கும் சக்தி இருக்கிறதா என்பது பற்றியும் பொருளாதார நிபுணர்கள் கவனம் செலுத்துவதில்லை. பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்கள் மற்றும் உயர்ந்த நிலையில் இருப்பவர்களின் பிரச்னைகளுக்கும் தரப்படும் கவனம் நடுத்தர வர்க்கத்தினருக்குக் கிடைப்பதில்லை.
÷நம் நாட்டில் 80 சதவிகித மக்களின் மாத வருமானம் ரூ. 5,000, 10,000, 15,000, 30,000 ஆகிய இந்த நான்கு பிரிவுகளில் அடங்கிவிடும். அப்படிப்பட்ட மக்களின் வாங்கும் சக்தியும், தாங்கும் சக்தியும் இன்றைய பொருளாதார சூழ்நிலைக்கேற்ப திருப்தியாக இருப்பதற்கு வழிவகைகள் என்ன என்பதை அரசாங்கம் தொடர்ந்து ஆராய வேண்டும்.
பல பெரியவர்கள் நாங்கள் எல்லாம் அன்றைய காலத்தில் மிகக் குறைந்த வருவாயில் தங்கம் சவரன் ரூ.15 லிருந்து ரூ.100 விற்ற காலங்களில் நிறைய தங்க நகைகள் வைத்திருந்தோம். கவலையின்றி நிம்மதியான வாழ்க்கை நடத்தி வந்தோம். ஆனால் எங்கள் பேரக் குழந்தைகளோ, நல்ல மேற்படிப்பு படித்திருந்தும், அத்தியாவசியத் தேவையான ஒரு சொந்த வீடு கூட இல்லாமல், நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று அடிக்கடி சொல்வதைப் பார்க்கலாம்.
÷எல்லா மக்களும் தங்களுக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ வசதி, வேலை வாய்ப்பு, ஓய்வூதியப் பாதுகாப்பு, முதியோர் நலத் திட்டங்கள் என்ற அளவில், ஏழை பணக்காரன் என்ற வேறுபாடில்லாமல், சமவாய்ப்புக் கிடைப்பதுடன், கீழ்தட்டில் இருப்பவர்களை உயர்த்துவதற்குத் திட்டங்கள் தீட்டி, புதிய சமுதாயம் உருவாக்க வேண்டும்.
அதேநேரத்தில், மத்தியதர வகுப்பினரின் பிரச்னைகளை மையப்படுத்தித்தான் திட்டங்கள் தீட்டுவதும், நிதிநிலை அறிக்கை தயாரிப்பதும் செய்யப்பட வேண்டும்.
÷மத்திய, மாநில அரசுகள், சமுதாய நலம் பேணும் பொருளாதாரத் திட்டங்களை அறிவித்து நடத்தி வருகிறார்கள். ஆனாலும், பெரும்பான்மையான நடுத்தர வர்க்கத்தினர் ஒவ்வொரு மாதமும் அவர்களின் அன்றாடச் செலவுகளைச் சந்திப்பது குறித்து பயந்துகொண்டே வாழ்கிறார்கள்.
திடீரென உடல்நலக் குறைவோ அல்லது பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்ந்தாலோ, அவர்களின் பாடு பெரும் திண்டாட்டம்தான். திடீர் விலையேற்றத்தால் உணவுப் பொருள்கள் வாங்குவதுகூட மிகவும் கடினமாகி விடுகிறது.
÷பெரும்பாலானோர் காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப் பொருள்கள் கடைகளில் திடீரென அதிக விலைக்கு விற்றால், அந்தப் பணம் ஏதோ அந்தப் பொருள்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்குச் செல்வதாக எண்ணுகிறார்கள்.
ஆனால், உற்பத்தியாளர்களுக்கும், நுகர்வோர்களுக்கும் இடையில் இருக்கும் ஒருசிலர்தான் அந்த விலையேற்றத்தின் பலனை அனுபவிக்கிறார்கள். இந்த நிலை மாறி உற்பத்தியாளருக்கு நியாயமான விலையும், வாங்கும் சக்தியும் இருப்பதை அரசுதான் உறுதி செய்ய முடியும்;
செய்ய வேண்டும்.
÷அதேபோல, உணவுப் பொருள்கள் மற்றும் தேவையான பொருள்கள் வாங்குவோருக்கும் நியாயமான விலைக்கு வாங்கும், தாங்கும் சக்தி இருக்க வேண்டும். பட்ஜெட் மற்றும் பொருள்களின் விலை உயர்வு, வரி உயர்வு போன்றவை பலதரப்பட்ட மக்களுக்கும் வாங்கும் சக்தியும், தாங்கும் சக்தியும் தொடருமா என்பதன் அடிப்படையில்தான் முடிவெடுக்க வேண்டும்.
÷செலவுக்கேற்ற வரவை அரசுகள் செய்து கொள்ள முடியும். பொதுமக்களில் பெரும்பாலோருக்கு அது அசாத்தியம். ஆகவே, அவர்கள் வரவுக்கு ஏற்ற செலவு செய்யும் வகையில் மக்களின் வாங்கும் சக்தியும், தாங்கும் சக்தியும் இருப்பதை உறுதி செய்வதுதான் மத்திய, மாநில அரசுகளின் கண்ணோட்டமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட செயல்பாடு இருந்தால் மட்டுமே அரசு மக்கள் நல அரசாக இருக்கும். சுதந்திரம், மக்களாட்சி என்பதற்கெல்லாம் அர்த்தம் இருக்கும். வாங்கும் சக்தி அதிகரிப்பது மட்டுமே வளர்ச்சிக்கு அறிகுறி அல்ல. தாங்கும் சக்தியும் இருக்கிறதா என்பதையும் உறுதிப்படுத்துவதுதான் நல்லதொரு பொருளாதாரக் கண்ணோட்டமாக இருக்கும்.
கட்டுரையாளர் :ஜெம் ஆர். வீரமணி
நன்றி : தினமணி
Labels:
கட்டுரை,
தமிழகஅரசு,
மத்தியஅரசு,
விலை உயர்வு,
விலைவாசி,
வேலை இழப்பு
Tuesday, January 5, 2010
ஒரு வேலைநிறுத்தம், இரு பரிமாணங்கள்
பின்னலாடைத் தொழில் உலகளாவிய முறையில் பிரபலமடைந்து விளங்கும் பெருமைக்குரிய நகரம் திருப்பூர்.
இங்கு தயாராகும் பல்வேறு ரகமான பின்னலாடைகளுக்குக் கவர்ச்சியான வண்ணத்தை மெருகேற்றித் தருகிற சாயங்களை உற்பத்தி செய்யும் பணியில் சாயப்பட்டறை ஆலைகள் ஈடுபட்டுள்ளன. வண்ணமேற்றப்பட்ட ஆயத்த ஆடைகளை விற்பனைக்கும் ஏற்றுமதிக்கும் அனுப்புவதற்கு முன்னதாக அவற்றைச் சலவை செய்யும் சலவை ஆலைகளும் இத்தொழிலில் பிரிக்க முடியாத அங்கம்.
இந்தச் சாயப்பட்டறை மற்றும் சலவை ஆலைகள் கடந்த கிறிஸ்துமஸ் தினத்திலிருந்து வேலைநிறுத்தம் காரணமாக முடங்கிக் கிடக்கின்றன.
வழக்கமான வேலைநிறுத்தங்கள் அவை நடைபெறும் தொழில் அல்லது பணிக்கூட முதலாளிகள் மற்றும் அவற்றின் பணியாளர்களை மட்டுமே பாதிக்கிற ஒற்றைப் பரிமாணத்தைக் கொண்டவை. ஆனால் திருப்பூரில் நடைபெற்று வருகிற வேலைநிறுத்தத்துக்கு இரட்டைப் பரிமாணங்கள் உண்டு. ஒன்று, அந்தத் தொழில் சம்பந்தப்பட்டது; இன்னொன்று ஒட்டுமொத்த சமுதாயத்தை உள்ளடக்கியது.
திருப்பூர் மட்டுமன்றி ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களிலும் இத்தகைய சாயப்பட்டறை மற்றும் சலவை ஆலைகள் அமைந்துள்ளன.
1990-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் திருப்பூரில் மிகப்பெரும் அளவில் அமைக்கப்பட்ட சாயஆலைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட சாயக்கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலந்து வரத் தொடங்கியது. இதையடுத்து நொய்யல் ஆற்றுக் கரையோர விவசாயம் பாதிக்கப்பட்டது. நொய்யல் ஆற்றில் வந்த அபாயகரமான தொழிற்சாலைக் கழிவுநீரால் ஆற்று நீர் முற்றிலுமாக மாசடைந்தது.
ஒரத்துப்பாளையம் அணை சுற்று வட்டாரத்தில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. கால்நடைகள் பல்வேறு நோய்த் தாக்குதலுக்கு ஆளாயின. இத்துடன் அணையில் தேங்கியிருக்கும் மாசுபட்ட நீரினாலும், கால்வாய்களில் செல்லும் இந்தக் கழிவுநீரினாலும் நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு, கிணறுகளில் கிடைத்துவந்த குடிநீரும் மாசுபட்டுவிட்டது. அன்றாடம் குடிநீருக்கு இப்பகுதி மக்கள் நெடுந்தொலைவு சென்று வர வேண்டியிருக்கிறது.
இதை ஒத்த பாதிப்புகள் ஈரோடு, கரூர் மாவட்டங்களிலும் நேரிட்டுள்ளன. சுற்றுச்சூழலையும் நிலத்தடி நீரையும் பெரிதளவு மாசுபடுத்துகிற இதர தொழில்களாக தோல் பதனிடும் தொழிலும், ரசாயனத் தொழிற்சாலைகளும் அறியப்படுகின்றன. வேலூர் - ராணிப்பேட்டை பகுதிகளில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் கழிவுகள் காரணமாக நேரிட்டுள்ள மாசுபடுதலும் அளவில்லாத எல்லையை எட்டியுள்ளது.
பொருளாதார வளர்ச்சிக்குத் தொழிற்சாலைகள் அமைவதும், அவற்றின் மூலம் உற்பத்தி பெருகுவதும் எந்த ஒரு நாட்டுக்கும் இன்றியமையாத தேவைதான். எனினும், இந்த வளர்ச்சியின் பரிமாணங்கள் சுற்றுச்சூழலை மீட்க முடியாத பெருஞ்சேதத்துக்கு இலக்காக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதன் காரணமாகவே தேசிய சுற்றுச்சூழல் சட்டம் மத்திய அரசால் நாடு முழுவதற்கும் பொருந்தும் வகையில் இயற்றப்பட்டுள்ளது. மாநிலங்களிலும் மாசுக்கட்டுப்பாடு வாரியங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் கீழ், தொழில் தொடங்குவதற்கும், நடத்துவதற்கும் ஏற்கெனவே அமலில் இருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் எல்லாம் நீக்கப்பட்டோ, தளர்த்தப்பட்டோ விட்டபோதிலும், மாசுக் கட்டுப்பாடு வாரிய இசைவைப் பெற்றாக வேண்டும் என்ற கட்டுப்பாடு மட்டும் தொடர்வது சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டுதான்.
ஆனால் சாயப்பட்டறைத் தொழிற்சாலைகள் வெளியேற்றும் சாயக்கழிவு நீர் ஆற்றில் விடப்பட்டு வந்ததன் காரணமாக நேரிட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தமிழக அரசோ, மாசுக்கட்டுப்பாடு வாரியமோ உரியவகையில் களையத் தவறிவிட்டன. இதே நிலைமைதான வேலூர் மாவட்டத்தின் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் விஷயத்திலும் நிலவியது. இந்த இரண்டு (திருப்பூர், வேலூர்) மாவட்டங்களின் பாதிப்புக்கு இலக்காகிய மக்கள் நீதிமன்றத்தின் தலையீட்டைக் கோரும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
திருப்பூர் சாயப்பட்டறை, சலவை ஆலைகளின் கழிவுநீர் நொய்யல் ஆற்றில் வெளியேற்றப்பட்டு, காவிரி ஆற்றோடு கலந்து அதன் பாசனப்படுகை முழுவதிலும் பாதிப்பு உணரப்பட்டது. கரூர் தாலுகா நொய்யல் கால்வாய் விவசாயிகள் சங்கம் இப்பிரச்னையை 1996-ம் ஆண்டு வாக்கில் உயர் நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றது. சென்னை உயர் நீதிமன்றத்திலும், தில்லி உச்ச நீதிமன்றத்திலும் இப்பிரச்னை தொடர்பான வழக்கும், மேல்முறையீடுகளும் கடந்த 13 ஆண்டுகளாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, பல்வேறு தீர்ப்புகளும், மேலாணைகளும் பிறப்பிக்கப்பட்டன. வேலூர் குடிமக்கள் நலச் சங்கம் தொடுத்த ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் 1996-ம் ஆண்டிலேயே வழங்கியுள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இது குறித்த முன்னோடித் தீர்ப்பாகவும் நிலைபெற்று விட்டது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் இடம்பெற்றுள்ள பதிவுகளின் சுருக்கம் பின்வருமாறு:
""தொழில் நடவடிக்கை மூலம் அபாயகரமான கழிவுகளை வெளியேற்றினால் அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கும், பாதிக்கப்படும் கிராமத்தினர் உள்ளிட்ட இதர மக்களுக்கும் தொழில்துறையினர் இழப்பீடு வழங்கப் பொறுப்பாளிகள் ஆவர். தெரிந்தோ, தெரியாமலோ செய்தாலும் இது பொருந்தும். அத்துடன் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சேதாரத்தில் இருந்து மீட்டமைக்க வேண்டிய நடவடிக்கைக்கும் அவர்கள் பொறுப்பாளிகள் ஆவர்''.
""அரசியல் சாசனப் பிரிவுகள் 47, 48-ஏ, 51-ஏ(ஜி) ஆகியவற்றின்படி சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியது மாநில அரசின் கடமையாகும். அத்துடன் அரசியல் சாசனப் பிரிவு 21-ன் படி மாசில்லாத சுற்றுச்சூழலில் வாழ்வதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது. அது தனிமனிதர்களின் உரிமை என்று அரசியல் சாசனம் உத்தரவாதம் வழங்கியிருக்கிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மாசுபடுத்தியவர்களே தண்டம் செலுத்துவது என்ற கொள்கைகள் சுற்றுப்புறச் சூழல் சட்டப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.''
இந்தத் தீர்ப்புகளின் பின்புலத்தில் திருப்பூர் சாயப்பட்டறை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கீழ்க்கண்ட கண்டிப்பான உத்தரவுகளைக் கடந்த 2009 அக்டோபர் 6அன்று பிறப்பித்தது:
""சாயஆலைகள் நீதிமன்றம் விதித்திருக்கும் அபராதம் உள்பட அனைத்து விதிமுறைகளையும் இன்றிலிருந்து (6.10.09) அடுத்த மூன்று மாத காலத்தில் நிறைவேற்றி முடிக்க வேண்டும். நொய்யல் ஆறு,அணை ஆகியவற்றில் மாசு கலக்காமல் அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். கொடுத்திருக்கும் காலக்கெடுவுக்குள் சுத்தப்படுத்தும் பணிகளையும் முடிக்க வேண்டும். பொது சுத்திகரிப்பு நிலையங்களைச் செயல்படுத்தவும், அணையைச் சுத்தப்படுத்துவது, ஆற்றைத் தூய்மைப்படுத்துவது, நிவாரணம் வழங்குவது ஆகியவற்றுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை முழுமையாக வழங்கவும், அனைத்து உத்தரவுகளையும் பின்பற்றவும் இன்றிலிருந்து மூன்று மாதங்கள் காலக்கெடு வழங்கப்படுகிறது. மாசு கட்டுப்பாடு வாரியம் வேறு மாசு ஏற்படாமல் விதிமுறைகளை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.''
உச்ச நீதிமன்றம் விதித்துள்ள இந்தக் காலக்கெடு ஜனவரி 6 அன்று முடிவடைகிறது. இதற்குள்ளாக,சாயப்பட்டறை உரிமையாளர்கள் ஏற்கெனவே செலுத்திய தொகைகள் நீங்கலாக மீதமுள்ள 62 கோடி ரூபாய்களைச் செலுத்துவது மட்டுமன்றி, ஏற்கெனவே நிறுவப்பட்டு வரும் 17 பொதுசுத்திகரிப்பு நிலையங்களில், ஆர்.ஓ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாயக்கழிவு நீரை மறுசுழற்சி செய்து கொண்டு, ஆற்றில் கழிவுநீர் கலப்பது நிறுத்தப்படுவதை உத்தரவாதம் செய்ய வேண்டும். இவற்றைச் செயல்படுத்தத் தவறினால், இந்த ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, மின் இணைப்பும் துண்டிக்கப்படும். இந்தக் கடுமையான உத்தரவுகளைச் செயல்படுத்த இயலாமையைத் தெரிவித்துத்தான், திருப்பூரில் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.
இந்தச் சாயப்பட்டறை, சலவை ஆலைகளில் பணிபுரியும் 40 ஆயிரம் தொழிலாளர்களும், அவர்தம் குடும்பங்களும் உடனடி பாதிப்புக்கு உள்ளாவது திண்ணம். இந்த ஆலைகளை நம்பியுள்ள பனியன் தொழில் மற்றும் அதன் சார்புத் தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்கும்.
திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஏழு தாலுகாக்களின் 68 கிராமங்களில் 28,499 ஹெக்டேர் பரப்பளவுக்கு நிலத்தடி நீர் மாசுபட்டு, 28,596 விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்த நிலையில் நிவாரணம் வழங்கப்பட வேண்டிய கையறு நிலையில் உள்ளனர்.
இப்பிரச்னையின் இரண்டு பரிமாணங்களும் கனமானவை; அலட்சியப்படுத்த முடியாதவை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கறாராக அமல்படுத்துவது இதில் எட்டப்படக் கூடிய எந்தத் தீர்வுக்கும் அடிநாதமாக - முன்நிபந்தனையாக இருத்தல் வேண்டும். இதில் நடைமுறைச் சிக்கல்கள் சிலவற்றுக்குத் தீர்வாக சில கோரிக்கைகளையும் ஆலை உரிமையாளர்கள் முன்வைத்துள்ளனர். நிறுவப்பட்டு வரும் பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கான கட்டமைப்புச் செலவுக்கு மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்குவது; வங்கிக் கடன் வட்டியைத் தள்ளுபடி செய்வது; கடன் தவணைகளைத் திரும்பச் செலுத்துவதற்குக் கால அவகாசம் வழங்குவது; தவணை செலுத்தி முடிக்க வேண்டிய ஆண்டுகளை நீட்டிப்பது போன்ற இக்கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுவது அவசியமே. மாநில அரசு இந்தத் தொழில்களையும், தொழிலாளர்களையும் பாதுகாக்கும் நோக்கோடு இவற்றுக்கு உரிய தீர்வு காணவும்,பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நீதிமன்ற உத்தரவுப்படியான நிவாரணத் தொகைகள் வழங்கப்படவும் முற்பட வேண்டும்.
அதேநேரத்தில், சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் மாசுபடாமல் பார்த்துக் கொள்கிற சமூகப் பொறுப்புணர்வோடு ஆலை உரிமையாளர்களும் ஒரு நேர்மையான அணுகுமுறையைக் கைக்கொள்வது சமரசம் செய்து கொள்ளக்கூடாத கட்டாயம்.
கட்டுரையாளர் : உ .ரா. வரதராசன்
நன்றி : தினமணி
இங்கு தயாராகும் பல்வேறு ரகமான பின்னலாடைகளுக்குக் கவர்ச்சியான வண்ணத்தை மெருகேற்றித் தருகிற சாயங்களை உற்பத்தி செய்யும் பணியில் சாயப்பட்டறை ஆலைகள் ஈடுபட்டுள்ளன. வண்ணமேற்றப்பட்ட ஆயத்த ஆடைகளை விற்பனைக்கும் ஏற்றுமதிக்கும் அனுப்புவதற்கு முன்னதாக அவற்றைச் சலவை செய்யும் சலவை ஆலைகளும் இத்தொழிலில் பிரிக்க முடியாத அங்கம்.
இந்தச் சாயப்பட்டறை மற்றும் சலவை ஆலைகள் கடந்த கிறிஸ்துமஸ் தினத்திலிருந்து வேலைநிறுத்தம் காரணமாக முடங்கிக் கிடக்கின்றன.
வழக்கமான வேலைநிறுத்தங்கள் அவை நடைபெறும் தொழில் அல்லது பணிக்கூட முதலாளிகள் மற்றும் அவற்றின் பணியாளர்களை மட்டுமே பாதிக்கிற ஒற்றைப் பரிமாணத்தைக் கொண்டவை. ஆனால் திருப்பூரில் நடைபெற்று வருகிற வேலைநிறுத்தத்துக்கு இரட்டைப் பரிமாணங்கள் உண்டு. ஒன்று, அந்தத் தொழில் சம்பந்தப்பட்டது; இன்னொன்று ஒட்டுமொத்த சமுதாயத்தை உள்ளடக்கியது.
திருப்பூர் மட்டுமன்றி ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களிலும் இத்தகைய சாயப்பட்டறை மற்றும் சலவை ஆலைகள் அமைந்துள்ளன.
1990-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் திருப்பூரில் மிகப்பெரும் அளவில் அமைக்கப்பட்ட சாயஆலைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட சாயக்கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலந்து வரத் தொடங்கியது. இதையடுத்து நொய்யல் ஆற்றுக் கரையோர விவசாயம் பாதிக்கப்பட்டது. நொய்யல் ஆற்றில் வந்த அபாயகரமான தொழிற்சாலைக் கழிவுநீரால் ஆற்று நீர் முற்றிலுமாக மாசடைந்தது.
ஒரத்துப்பாளையம் அணை சுற்று வட்டாரத்தில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. கால்நடைகள் பல்வேறு நோய்த் தாக்குதலுக்கு ஆளாயின. இத்துடன் அணையில் தேங்கியிருக்கும் மாசுபட்ட நீரினாலும், கால்வாய்களில் செல்லும் இந்தக் கழிவுநீரினாலும் நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு, கிணறுகளில் கிடைத்துவந்த குடிநீரும் மாசுபட்டுவிட்டது. அன்றாடம் குடிநீருக்கு இப்பகுதி மக்கள் நெடுந்தொலைவு சென்று வர வேண்டியிருக்கிறது.
இதை ஒத்த பாதிப்புகள் ஈரோடு, கரூர் மாவட்டங்களிலும் நேரிட்டுள்ளன. சுற்றுச்சூழலையும் நிலத்தடி நீரையும் பெரிதளவு மாசுபடுத்துகிற இதர தொழில்களாக தோல் பதனிடும் தொழிலும், ரசாயனத் தொழிற்சாலைகளும் அறியப்படுகின்றன. வேலூர் - ராணிப்பேட்டை பகுதிகளில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் கழிவுகள் காரணமாக நேரிட்டுள்ள மாசுபடுதலும் அளவில்லாத எல்லையை எட்டியுள்ளது.
பொருளாதார வளர்ச்சிக்குத் தொழிற்சாலைகள் அமைவதும், அவற்றின் மூலம் உற்பத்தி பெருகுவதும் எந்த ஒரு நாட்டுக்கும் இன்றியமையாத தேவைதான். எனினும், இந்த வளர்ச்சியின் பரிமாணங்கள் சுற்றுச்சூழலை மீட்க முடியாத பெருஞ்சேதத்துக்கு இலக்காக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதன் காரணமாகவே தேசிய சுற்றுச்சூழல் சட்டம் மத்திய அரசால் நாடு முழுவதற்கும் பொருந்தும் வகையில் இயற்றப்பட்டுள்ளது. மாநிலங்களிலும் மாசுக்கட்டுப்பாடு வாரியங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் கீழ், தொழில் தொடங்குவதற்கும், நடத்துவதற்கும் ஏற்கெனவே அமலில் இருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் எல்லாம் நீக்கப்பட்டோ, தளர்த்தப்பட்டோ விட்டபோதிலும், மாசுக் கட்டுப்பாடு வாரிய இசைவைப் பெற்றாக வேண்டும் என்ற கட்டுப்பாடு மட்டும் தொடர்வது சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டுதான்.
ஆனால் சாயப்பட்டறைத் தொழிற்சாலைகள் வெளியேற்றும் சாயக்கழிவு நீர் ஆற்றில் விடப்பட்டு வந்ததன் காரணமாக நேரிட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தமிழக அரசோ, மாசுக்கட்டுப்பாடு வாரியமோ உரியவகையில் களையத் தவறிவிட்டன. இதே நிலைமைதான வேலூர் மாவட்டத்தின் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் விஷயத்திலும் நிலவியது. இந்த இரண்டு (திருப்பூர், வேலூர்) மாவட்டங்களின் பாதிப்புக்கு இலக்காகிய மக்கள் நீதிமன்றத்தின் தலையீட்டைக் கோரும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
திருப்பூர் சாயப்பட்டறை, சலவை ஆலைகளின் கழிவுநீர் நொய்யல் ஆற்றில் வெளியேற்றப்பட்டு, காவிரி ஆற்றோடு கலந்து அதன் பாசனப்படுகை முழுவதிலும் பாதிப்பு உணரப்பட்டது. கரூர் தாலுகா நொய்யல் கால்வாய் விவசாயிகள் சங்கம் இப்பிரச்னையை 1996-ம் ஆண்டு வாக்கில் உயர் நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றது. சென்னை உயர் நீதிமன்றத்திலும், தில்லி உச்ச நீதிமன்றத்திலும் இப்பிரச்னை தொடர்பான வழக்கும், மேல்முறையீடுகளும் கடந்த 13 ஆண்டுகளாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, பல்வேறு தீர்ப்புகளும், மேலாணைகளும் பிறப்பிக்கப்பட்டன. வேலூர் குடிமக்கள் நலச் சங்கம் தொடுத்த ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் 1996-ம் ஆண்டிலேயே வழங்கியுள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இது குறித்த முன்னோடித் தீர்ப்பாகவும் நிலைபெற்று விட்டது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் இடம்பெற்றுள்ள பதிவுகளின் சுருக்கம் பின்வருமாறு:
""தொழில் நடவடிக்கை மூலம் அபாயகரமான கழிவுகளை வெளியேற்றினால் அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கும், பாதிக்கப்படும் கிராமத்தினர் உள்ளிட்ட இதர மக்களுக்கும் தொழில்துறையினர் இழப்பீடு வழங்கப் பொறுப்பாளிகள் ஆவர். தெரிந்தோ, தெரியாமலோ செய்தாலும் இது பொருந்தும். அத்துடன் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சேதாரத்தில் இருந்து மீட்டமைக்க வேண்டிய நடவடிக்கைக்கும் அவர்கள் பொறுப்பாளிகள் ஆவர்''.
""அரசியல் சாசனப் பிரிவுகள் 47, 48-ஏ, 51-ஏ(ஜி) ஆகியவற்றின்படி சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியது மாநில அரசின் கடமையாகும். அத்துடன் அரசியல் சாசனப் பிரிவு 21-ன் படி மாசில்லாத சுற்றுச்சூழலில் வாழ்வதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது. அது தனிமனிதர்களின் உரிமை என்று அரசியல் சாசனம் உத்தரவாதம் வழங்கியிருக்கிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மாசுபடுத்தியவர்களே தண்டம் செலுத்துவது என்ற கொள்கைகள் சுற்றுப்புறச் சூழல் சட்டப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.''
இந்தத் தீர்ப்புகளின் பின்புலத்தில் திருப்பூர் சாயப்பட்டறை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கீழ்க்கண்ட கண்டிப்பான உத்தரவுகளைக் கடந்த 2009 அக்டோபர் 6அன்று பிறப்பித்தது:
""சாயஆலைகள் நீதிமன்றம் விதித்திருக்கும் அபராதம் உள்பட அனைத்து விதிமுறைகளையும் இன்றிலிருந்து (6.10.09) அடுத்த மூன்று மாத காலத்தில் நிறைவேற்றி முடிக்க வேண்டும். நொய்யல் ஆறு,அணை ஆகியவற்றில் மாசு கலக்காமல் அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். கொடுத்திருக்கும் காலக்கெடுவுக்குள் சுத்தப்படுத்தும் பணிகளையும் முடிக்க வேண்டும். பொது சுத்திகரிப்பு நிலையங்களைச் செயல்படுத்தவும், அணையைச் சுத்தப்படுத்துவது, ஆற்றைத் தூய்மைப்படுத்துவது, நிவாரணம் வழங்குவது ஆகியவற்றுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை முழுமையாக வழங்கவும், அனைத்து உத்தரவுகளையும் பின்பற்றவும் இன்றிலிருந்து மூன்று மாதங்கள் காலக்கெடு வழங்கப்படுகிறது. மாசு கட்டுப்பாடு வாரியம் வேறு மாசு ஏற்படாமல் விதிமுறைகளை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.''
உச்ச நீதிமன்றம் விதித்துள்ள இந்தக் காலக்கெடு ஜனவரி 6 அன்று முடிவடைகிறது. இதற்குள்ளாக,சாயப்பட்டறை உரிமையாளர்கள் ஏற்கெனவே செலுத்திய தொகைகள் நீங்கலாக மீதமுள்ள 62 கோடி ரூபாய்களைச் செலுத்துவது மட்டுமன்றி, ஏற்கெனவே நிறுவப்பட்டு வரும் 17 பொதுசுத்திகரிப்பு நிலையங்களில், ஆர்.ஓ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாயக்கழிவு நீரை மறுசுழற்சி செய்து கொண்டு, ஆற்றில் கழிவுநீர் கலப்பது நிறுத்தப்படுவதை உத்தரவாதம் செய்ய வேண்டும். இவற்றைச் செயல்படுத்தத் தவறினால், இந்த ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, மின் இணைப்பும் துண்டிக்கப்படும். இந்தக் கடுமையான உத்தரவுகளைச் செயல்படுத்த இயலாமையைத் தெரிவித்துத்தான், திருப்பூரில் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.
இந்தச் சாயப்பட்டறை, சலவை ஆலைகளில் பணிபுரியும் 40 ஆயிரம் தொழிலாளர்களும், அவர்தம் குடும்பங்களும் உடனடி பாதிப்புக்கு உள்ளாவது திண்ணம். இந்த ஆலைகளை நம்பியுள்ள பனியன் தொழில் மற்றும் அதன் சார்புத் தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்கும்.
திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஏழு தாலுகாக்களின் 68 கிராமங்களில் 28,499 ஹெக்டேர் பரப்பளவுக்கு நிலத்தடி நீர் மாசுபட்டு, 28,596 விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்த நிலையில் நிவாரணம் வழங்கப்பட வேண்டிய கையறு நிலையில் உள்ளனர்.
இப்பிரச்னையின் இரண்டு பரிமாணங்களும் கனமானவை; அலட்சியப்படுத்த முடியாதவை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கறாராக அமல்படுத்துவது இதில் எட்டப்படக் கூடிய எந்தத் தீர்வுக்கும் அடிநாதமாக - முன்நிபந்தனையாக இருத்தல் வேண்டும். இதில் நடைமுறைச் சிக்கல்கள் சிலவற்றுக்குத் தீர்வாக சில கோரிக்கைகளையும் ஆலை உரிமையாளர்கள் முன்வைத்துள்ளனர். நிறுவப்பட்டு வரும் பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கான கட்டமைப்புச் செலவுக்கு மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்குவது; வங்கிக் கடன் வட்டியைத் தள்ளுபடி செய்வது; கடன் தவணைகளைத் திரும்பச் செலுத்துவதற்குக் கால அவகாசம் வழங்குவது; தவணை செலுத்தி முடிக்க வேண்டிய ஆண்டுகளை நீட்டிப்பது போன்ற இக்கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுவது அவசியமே. மாநில அரசு இந்தத் தொழில்களையும், தொழிலாளர்களையும் பாதுகாக்கும் நோக்கோடு இவற்றுக்கு உரிய தீர்வு காணவும்,பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நீதிமன்ற உத்தரவுப்படியான நிவாரணத் தொகைகள் வழங்கப்படவும் முற்பட வேண்டும்.
அதேநேரத்தில், சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் மாசுபடாமல் பார்த்துக் கொள்கிற சமூகப் பொறுப்புணர்வோடு ஆலை உரிமையாளர்களும் ஒரு நேர்மையான அணுகுமுறையைக் கைக்கொள்வது சமரசம் செய்து கொள்ளக்கூடாத கட்டாயம்.
கட்டுரையாளர் : உ .ரா. வரதராசன்
நன்றி : தினமணி
Labels:
கட்டுரை,
சுற்றுச்சூழல்,
தமிழகஅரசு,
நீதி மன்றம்,
நீர்
Monday, January 4, 2010
காலம் கடந்துவிடவில்லை
நீர்நிலைகள், நீர்வரத்து வாய்க்கால்களைப் பாதுகாப்பதா? அல்லது அங்கு ஏழைகள் கட்டியுள்ள வீடுகளை அகற்றுவதா, கூடாதா? என்ற சங்கடமான கேள்விக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அளித்துள்ள பதில் மிகத் தெளிவானது. "இரண்டுமே சமூகப் பிரச்னைதான். ஆனால், நீர்நிலைகளையும் நீர்வரத்துப் பகுதிகளையும் பாதுகாப்பதுதான் இதில் முக்கியமானது' என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பழனி நகராட்சிப் பகுதி சிறுநாயக்கன்குளத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்துள்ள 500 குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கையைத் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ள நீதிமன்றம், அதோடு நில்லாமல், 1998-ம் ஆண்டில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்காமல், ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைக்கு மாறாக, அந்தப் பகுதியில் சாலை அமைத்து, மின்இணைப்பு வழங்கி, குடிநீர்க் குழாய்கள் அமைத்துக் கொடுத்துள்ள மாவட்ட நிர்வாகத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளது.
நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய நிர்வாகம் இவ்வாறு மின்இணைப்பு, சாலைவசதி, தெருவிளக்கு எல்லாமும் அளித்து அதனை முறைப்படுத்துவதும் பட்டா வழங்கப் பரிந்துரைப்பதுமான இத்தகைய முரண்பாடுகள்தான் தமிழ்நாட்டின் அனைத்து ஏரி, குளங்களும் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட முக்கிய காரணம்.
தமிழ்நாடு முழுவதிலும் 5000-க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான ஏரிகள் உள்ளன. மழைக்காலத்தில் ஆறுகள், ஓடைகள் மூலம் மிகையாக வரும் தண்ணீரைத் தேக்கி வைக்கும் ஏரிகளும் மழைநீரை மட்டுமே தேக்கி வைக்கும் குளங்களுமாக இரு வகை நீர் ஆதாரங்கள் பன்னெடுங்காலமாக இருந்துவருகின்றன. ஆனால் அவை யாவற்றையும் கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் பாழ்படுத்திவிட்டோம். இதற்கு முக்கியமான காரணம்-அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஏரிகளிலும் நீரை நிரப்பினால், 300 டிஎம்சி தண்ணீரைச் சேமிக்க முடியும் என்று சட்டப்பேரவையில் முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார். ஆனாலும்கூட, தமிழ்நாடு ஏரிகுளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுதல் சட்டம் -2007 இன்னமும் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது விவசாயிகளின் ஆதங்கமாக இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு கடலூரில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் இச்சட்டத்தை முறையாக அமல்படுத்துவது மட்டுமன்றி ஏரிகள் குளங்கள் பராமரிப்பைப் பொதுப்பணித் துறையிடமிருந்து நீக்கி, அந்தந்தப் பகுதி விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது.
இந்த ஏரிகள் பலவற்றில் தொழிற்கூடங்கள், நீரைப் பயன்படுத்திக் கொள்வதுடன், கழிவு நீரையும் கலக்கின்றன. இதைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் கீழ் வருவதால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு இதில் ஓரளவுக்குமேல் தலையிட முடியாத சிக்கல்களும் இருக்கின்றன. இத்தகைய குறைபாடுகளையும் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் போக்க முடியும்.
ஏரிகளைப் பாதுகாப்பதில் அரசியல் பாகுபாடு இல்லாமல் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவதைத் தவிர வேறு வழியே இல்லை. ஆக்கிரமிப்பு செய்த ஏழை மக்களுக்கு வேறு இடத்தில் இடம் கொடுத்த பிறகும்கூட, அதே இடத்தில்தான் பட்டா வேண்டும் என்று கோருவதும் அவர்களுக்காக அரசியல் கட்சிகளும் களத்தில் இறங்குவதும் அரசியல் கட்சிகளின் பொறுப்பின்மையைத்தான் காட்டுகின்றன.
நகர்ப்புறத்தில் ஏரிகள் மற்றும் வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகள் நேரிட்டபோது உடனுக்குடன் அவை அகற்றப்பட்டிருந்தால், அங்கே நிலையான குடியிருப்புகள் உருவாகியிருக்காது. இன்று இத்தனை சிக்கல்களையும் நீதிமன்ற வழக்குகளையும் அரசு சந்தித்திருக்க வேண்டியதும் இல்லை. அரசியல்வாதிகளுக்குப் பயந்துகொண்டு, அல்லது அவர்களிடம் ஊழலில் பங்குகொண்டு இத்தகைய ஆக்கிரமிப்புகளை கண்டும் காணாமல் இருந்ததன் விளைவுதான் இன்றைய தினம் நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து ஏரி குளங்களும் ஏழை மக்களால், தொழிற்கூடங்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. நச்சுக் கழிவுகள் ஏரிகளில் கலக்கப்படுகின்றன.
நகரத்தை விட்டுத் தள்ளுவோம். ஏரி, குளங்கள் அழியும்படியான நிலை ஊரகப் பகுதியில் எப்படி ஏற்பட்டது? விவசாயியின் அடிப்படையே நீர்ஆதாரம்தானே! எப்படி நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அனுமதித்தார்கள்? என்கிற பின்னணி காரணங்கள், சமூக ஆராய்ச்சி மாணவர்களின் முனைவர் பட்ட ஆய்வுக்குரியவை.
கிராமங்களில் பல தலைமுறைகளாகக் கோலோச்சிக் கொண்டிருந்த நிலஉடைமையாளர்கள் மீதான வெறுப்பும், அவர்களது பயிர்களுக்குத் தண்ணீர் கிடைக்காமல் நஷ்டமடைந்தால் நமக்கென்ன என்கிற அலட்சியமும்தான், அந்தப் பண்ணையாளர்களால் பாதிப்படைந்த கிராமத்தினர் சும்மா இருக்கக் காரணமாக இருந்தது. பின்னாளில் நீர் வரத்து இல்லாமல் அத்தகைய ஏரி, குளம் மேடுற்றபோது, அதையே காரணம் காட்டி அங்கு பஸ் நிலையம், மின்சார அலுவலகம்,பஸ் பணிமனை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள் உருவாக அரசியல்வாதிகள் வகை செய்தனர்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அரசியல்வாதிகள் அல்லர். மாறாக, அப்போது ஆக்கிரமிப்புகளை எதிர்க்காமல் வேடிக்கை பார்த்த, அந்த மண்ணில் தொடர்ந்து வாழ நேர்ந்த சிறு விவசாயிகளும் விவசாயக் கூலிகளும், இடம்பெயர முடியாத அப்பகுதியின் பிற குடிகளும்தான். இப்போது அவர்களுக்குத்தான் குடிக்கவும் தண்ணீர் இல்லை. விவசாயத்துக்கும் தண்ணீர் இல்லை. மழைபெய்தாலும் ஏரிக்கு தண்ணீர் வருவதே இல்லை.
இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. இத்தவறுகளை திருத்திவிட முடியும். கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் அரசியல் சமூக, பொருளாதார மாற்றங்கள் பல வேறுபாடுகளைக் களைந்துவிட்டது. இப்போது பாசன நீர் என்பது அனைத்து விவசாயிகளுக்கான சொத்து. நீர்ஆதாரம்தான் ஊரக மக்களின் ஒரே வாழ்வாதாரம். ஆகையால், அரசியல் பாகுபாடு இல்லாமல் நீர்நிலை மற்றும் நீர்வரத்து வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தமிழகத்தின் நிலத்தடி நீரைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது. அடுத்த தலைமுறைக்கு வழங்கும் பெரும்நிதியம் இந்த நீர்நிலைகளாக மட்டுமே இருக்க முடியும்.
நன்றி : தினமணி
பழனி நகராட்சிப் பகுதி சிறுநாயக்கன்குளத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்துள்ள 500 குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கையைத் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ள நீதிமன்றம், அதோடு நில்லாமல், 1998-ம் ஆண்டில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்காமல், ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைக்கு மாறாக, அந்தப் பகுதியில் சாலை அமைத்து, மின்இணைப்பு வழங்கி, குடிநீர்க் குழாய்கள் அமைத்துக் கொடுத்துள்ள மாவட்ட நிர்வாகத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளது.
நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய நிர்வாகம் இவ்வாறு மின்இணைப்பு, சாலைவசதி, தெருவிளக்கு எல்லாமும் அளித்து அதனை முறைப்படுத்துவதும் பட்டா வழங்கப் பரிந்துரைப்பதுமான இத்தகைய முரண்பாடுகள்தான் தமிழ்நாட்டின் அனைத்து ஏரி, குளங்களும் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட முக்கிய காரணம்.
தமிழ்நாடு முழுவதிலும் 5000-க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான ஏரிகள் உள்ளன. மழைக்காலத்தில் ஆறுகள், ஓடைகள் மூலம் மிகையாக வரும் தண்ணீரைத் தேக்கி வைக்கும் ஏரிகளும் மழைநீரை மட்டுமே தேக்கி வைக்கும் குளங்களுமாக இரு வகை நீர் ஆதாரங்கள் பன்னெடுங்காலமாக இருந்துவருகின்றன. ஆனால் அவை யாவற்றையும் கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் பாழ்படுத்திவிட்டோம். இதற்கு முக்கியமான காரணம்-அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஏரிகளிலும் நீரை நிரப்பினால், 300 டிஎம்சி தண்ணீரைச் சேமிக்க முடியும் என்று சட்டப்பேரவையில் முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார். ஆனாலும்கூட, தமிழ்நாடு ஏரிகுளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுதல் சட்டம் -2007 இன்னமும் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது விவசாயிகளின் ஆதங்கமாக இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு கடலூரில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் இச்சட்டத்தை முறையாக அமல்படுத்துவது மட்டுமன்றி ஏரிகள் குளங்கள் பராமரிப்பைப் பொதுப்பணித் துறையிடமிருந்து நீக்கி, அந்தந்தப் பகுதி விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது.
இந்த ஏரிகள் பலவற்றில் தொழிற்கூடங்கள், நீரைப் பயன்படுத்திக் கொள்வதுடன், கழிவு நீரையும் கலக்கின்றன. இதைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் கீழ் வருவதால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு இதில் ஓரளவுக்குமேல் தலையிட முடியாத சிக்கல்களும் இருக்கின்றன. இத்தகைய குறைபாடுகளையும் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் போக்க முடியும்.
ஏரிகளைப் பாதுகாப்பதில் அரசியல் பாகுபாடு இல்லாமல் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவதைத் தவிர வேறு வழியே இல்லை. ஆக்கிரமிப்பு செய்த ஏழை மக்களுக்கு வேறு இடத்தில் இடம் கொடுத்த பிறகும்கூட, அதே இடத்தில்தான் பட்டா வேண்டும் என்று கோருவதும் அவர்களுக்காக அரசியல் கட்சிகளும் களத்தில் இறங்குவதும் அரசியல் கட்சிகளின் பொறுப்பின்மையைத்தான் காட்டுகின்றன.
நகர்ப்புறத்தில் ஏரிகள் மற்றும் வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகள் நேரிட்டபோது உடனுக்குடன் அவை அகற்றப்பட்டிருந்தால், அங்கே நிலையான குடியிருப்புகள் உருவாகியிருக்காது. இன்று இத்தனை சிக்கல்களையும் நீதிமன்ற வழக்குகளையும் அரசு சந்தித்திருக்க வேண்டியதும் இல்லை. அரசியல்வாதிகளுக்குப் பயந்துகொண்டு, அல்லது அவர்களிடம் ஊழலில் பங்குகொண்டு இத்தகைய ஆக்கிரமிப்புகளை கண்டும் காணாமல் இருந்ததன் விளைவுதான் இன்றைய தினம் நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து ஏரி குளங்களும் ஏழை மக்களால், தொழிற்கூடங்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. நச்சுக் கழிவுகள் ஏரிகளில் கலக்கப்படுகின்றன.
நகரத்தை விட்டுத் தள்ளுவோம். ஏரி, குளங்கள் அழியும்படியான நிலை ஊரகப் பகுதியில் எப்படி ஏற்பட்டது? விவசாயியின் அடிப்படையே நீர்ஆதாரம்தானே! எப்படி நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அனுமதித்தார்கள்? என்கிற பின்னணி காரணங்கள், சமூக ஆராய்ச்சி மாணவர்களின் முனைவர் பட்ட ஆய்வுக்குரியவை.
கிராமங்களில் பல தலைமுறைகளாகக் கோலோச்சிக் கொண்டிருந்த நிலஉடைமையாளர்கள் மீதான வெறுப்பும், அவர்களது பயிர்களுக்குத் தண்ணீர் கிடைக்காமல் நஷ்டமடைந்தால் நமக்கென்ன என்கிற அலட்சியமும்தான், அந்தப் பண்ணையாளர்களால் பாதிப்படைந்த கிராமத்தினர் சும்மா இருக்கக் காரணமாக இருந்தது. பின்னாளில் நீர் வரத்து இல்லாமல் அத்தகைய ஏரி, குளம் மேடுற்றபோது, அதையே காரணம் காட்டி அங்கு பஸ் நிலையம், மின்சார அலுவலகம்,பஸ் பணிமனை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள் உருவாக அரசியல்வாதிகள் வகை செய்தனர்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அரசியல்வாதிகள் அல்லர். மாறாக, அப்போது ஆக்கிரமிப்புகளை எதிர்க்காமல் வேடிக்கை பார்த்த, அந்த மண்ணில் தொடர்ந்து வாழ நேர்ந்த சிறு விவசாயிகளும் விவசாயக் கூலிகளும், இடம்பெயர முடியாத அப்பகுதியின் பிற குடிகளும்தான். இப்போது அவர்களுக்குத்தான் குடிக்கவும் தண்ணீர் இல்லை. விவசாயத்துக்கும் தண்ணீர் இல்லை. மழைபெய்தாலும் ஏரிக்கு தண்ணீர் வருவதே இல்லை.
இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. இத்தவறுகளை திருத்திவிட முடியும். கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் அரசியல் சமூக, பொருளாதார மாற்றங்கள் பல வேறுபாடுகளைக் களைந்துவிட்டது. இப்போது பாசன நீர் என்பது அனைத்து விவசாயிகளுக்கான சொத்து. நீர்ஆதாரம்தான் ஊரக மக்களின் ஒரே வாழ்வாதாரம். ஆகையால், அரசியல் பாகுபாடு இல்லாமல் நீர்நிலை மற்றும் நீர்வரத்து வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தமிழகத்தின் நிலத்தடி நீரைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது. அடுத்த தலைமுறைக்கு வழங்கும் பெரும்நிதியம் இந்த நீர்நிலைகளாக மட்டுமே இருக்க முடியும்.
நன்றி : தினமணி
Labels:
தமிழகஅரசு,
தலையங்கம்,
நீதி மன்றம்,
நீர்
Wednesday, December 30, 2009
ஏன் இன்னும் பாராமுகம்...?
படிப்பனுபவம் வேறெந்த சுகானுபவத்தையும் விடச்சிறந்தது என்பது உய்த்துணர்ந்தவர்களுக்குப் புரியும்.
இசை, நடனம், நாடகம், திரைப்படம், ஓவியம் போன்ற நுண்கலைகளைப் போலவே எழுத்தும் படிப்பும் ஓர் உயரனுபவம் என்பதோடு நில்லாது சிந்தனைக்குச் சாவி கொடுத்துச் செயலாக்கத்துக்கு அடித்தளம் அமைக்கும் அரும்பணி புரிகிறது. இந்தியச் சிந்தனை மரபு, பல மொழிகளில் பல வடிவங்களில் வெளிப்பட்டு வந்தது-வருகிறது.
இன்று யந்திர கதியில் கோடுகளிடை ஓடும் சாரமற்ற வாழ்க்கையாக மாறிவரும் பரபரப்புச் சூழலில், நமது கலாசாரமும் கலைகளும் அருமருந்தாக உள்ளன. மக்கள் தொகைப் பெருக்கத்தாலும், சுய-புறக் கட்டுப்பாடற்ற சுதந்திரத்தால் தகுதியற்ற போட்டிகளாலும் மாயமான் வேட்டையாகி வருகிற வாழ்க்கையில் வேரோடிய நமது நேற்றைய சிந்தனைகளும், சரித்திரமும், இலக்கியமும் இன்றைக்குப் புறந்தள்ளப்பட்டு விடுகிற அபாயம் தொடர்கிறது. இது நாளைய இந்தியாவுக்கு அபாயச் சங்கு ஊதும் தருணமாகி விட்டது.
வெறும் "மதிப்பெண்'தான் இன்றைய கல்வி. வெறும் வியாபாரமாகிவிட்ட கல்விச் சந்தையில் அறிவுதரும் கல்வியா கிடைக்கிறது?
"கல்வி அறிவு' என்பது பாமரர்க்கும்,எளியோர்க்கும் வழங்கப்பட வேண்டியது அவசியம். ஆனால் கல்விதான் வழங்கப்படுகிறது இன்றிங்கே. அறிவு புகட்டப்படுவதில்லை. நிதியமைச்சர் அன்பழகன் அடிக்கடி கூறுவதுபோல,''படித்தவரெல்லாம் படிப்பவரல்ல''!
ஆம்.
சற்று எளிதாகக் கூற முற்படின் வடிவேலு நகைச்சுவை போல்,
''தெரியும்; ஆனால் தெரியாது'' என்பது போல்தான் இது!
வெறும் "பாடத்திட்டக் கல்வி' மட்டுமே முட்ட முட்டப் புகட்டப்படுகிறது. பொது அறிவும், பல்துறை தாகம் ஏற்படுத்தும் படைப்பாளுமைத் திறன் வளர் கல்வியறிவும் அறவே ஒதுக்கப்பட்டு நசுக்கப்படுகிறது கல்விக்கூடங்களில்.
அரசு மற்றும் பெரும்பாலான தனியார் கல்விக் கூடங்களில் நூலகமோ, நூல்களோ காணக்கிடைக்காதவையே! ஆகவே நூலகரும் கிடையாது.
பள்ளிப் பாடத் திட்டத்தில் "நூலக வகுப்'பை மீண்டும் கொண்டு வந்து அதை முழு ஆர்வத்துடன் செயல்படுத்தக் கோரி தமிழக அரசிடம் பலமுறை வேண்டுகோள் வைத்தோம். ஆட்சி மாறுகிறது. ஆட்சியாளர்கள் மாறுகிறார்கள். ஆனால் எக்காரணம் கருதியோ இக்கோரிக்கை உரிய கவனம் பெறுவதே இல்லை.
முன்பு தமிழகக் கல்லூரிகளில் நல்லொழுக்கக் கல்வியும், உயர்நிலைப் பள்ளிகளில் வாரமொரு வகுப்பு- 45 நிமிடம் நூலக வகுப்பு, கைத்தொழில் ஆகியவையும் பாடத்திட்டத்திலேயே நடைமுறையில் இருந்தன.
இதன்மூலம் பள்ளிப் பருவத்திலேயே பாடநூலைத் தாண்டி பொது அறிவுத் தேடல் மாணவரிடம் விதைக்கப்படுகிறது. வாழ்நாள் முழுவதும் இந்தப் படிப்பனுபவ சுகம் அவருக்கு ஒளிகாட்டுகிறது.
இதேபோல் கைத்தொழில் வகுப்பில் ஒரு வாரம் தச்சு வேலை, ஒரு வாரம் தையல், ஒரு வாரம் தோட்ட வேலை, ஒரு வாரம் சுற்றுச்சூழல் தூய்மை, ஒரு வாரம் சாலை விதிகளைக் கடைப்பிடிக்கக் கற்றுத் தருதல் போன்ற அடிப்படை விஷயங்கள் மூலம் வாழ்க்கையின் அன்றாடத் தேவைகளைச் சொந்த உழைப்பின் மூலம் பூர்த்தி செய்து கொள்ளத் தூண்டும் மனவலிவும் உழைப்பின் உயர்வும் ஊட்டப்பட்டு விடுகிறது.
இவையெல்லாம் நான் படித்த பள்ளி நாள்களில் எனக்குக் கிட்டிய அருமையான அஸ்திவாரங்கள்.
ஆனால் இன்று இவை பாடத்திட்டத்தில் இருந்து எங்கே விரட்டப்பட்டன? ஏன் விரட்டப்பட்டன?
இன்று பல பள்ளிகளில் விளையாட்டு உடற்பயிற்சி கூட, மாணவர்களின் கவனத்திலிருந்து மறைந்து வருகிறதே என ஓர் ஆசிரியர் கவலையுடன் கூறினார்.
நமது அண்டை மாநிலங்களில் இன்றும் நூலக வகுப்பு சிறப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அரசு, தனியார் பள்ளிகளில் நூலகம், நூல்கள், நூலகர், நூலக வகுப்பு எனச் சீராகச் செல்கிறது.
மாநிலம் முழுவதிலிருந்தும் பதிப்பாளர்களிடம் மாதிரிப் புத்தகங்கள் பெறப்பட்டு வகுப்பு-வயது வாரியான புத்தகங்கள் தேர்வு செய்யப் பெற்று பட்டியலிடப்படுகின்றன. இந்நூல்கள்தான் பள்ளி நூலகங்களில் வாங்கி மாணவர்களுக்கு மத்திய வாங்குகைத் திட்டத்தின் மூலம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆந்திரத்தில் இன்றும் கடைப்பிடிக்கப்பெறும் இம்முறையை (தமிழகத்தில் முன்னர் நிகழ்த்தப் பெற்றது) நாமும் மீண்டும் தொடர வேண்டும்.
வளரும் இளம் பருவத்திலேயே படிப்பனுபவம் விதைக்கப்பட்டால்தான் அடுத்த தலைமுறையில் மனவளம் நிறைந்த ஆரோக்கியமான தமிழகத்தை வளர்த்தெடுக்க முடியும்.
தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி அமைப்புகள் மூலம் மக்களின் சொத்துவரி விதிப்பில் 10 சதவீதம் (முன்பு 5 சதவீதம்) நூலக வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஆண்டுதோறும் விரட்டி விரட்டி வசூலிக்கப்படும் இவ் வரித் தொகை உடனுக்குடன் நிதித்துறை வழியாக நூல்கள் வாங்குவதற்கு வந்து சேருவதில்லை.
நூலகத் துறைச் சம்பளம், வாடகை, நிர்வாகச் செலவுகள் அரசிடமிருந்து நேரடியாகப் பட்டுவாடா செய்யப்படுகிறது. ஆனால், மூலாதாரமான புத்தகங்கள் வாங்கும் தொகை இவற்றுடன் ஒப்பிட்டால் - எத்தனை சதவீதம் என்று கணக்கிட்டால் - வேதனைதான் மிஞ்சும்.
நமது தமிழ்நாடு பொது நூலகத் துறையில் நூல்கள் வாங்குவதும், வாங்காமல் தவிர்க்கப்படுவதும் ஒரு "பெரிய புராணம்'.
அதற்கு மேல் விலை நிர்ணயம் என்பதும் விலை நிர்ணய உத்தரவைச் செயல்படுத்தும் விதமும் மிக மிக விநோதமானது; விசித்திரமானது.
நாளுக்கு நாள் உற்பத்திச் செலவு அதிகரித்து வந்தாலும் பொதுவாக இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை விலை உயர்வு நிர்ணயம் செய்யப்படவேண்டிய நிலை கடைப்பிடிக்கப்படுவதில்லை. சுமார் நான்கு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. விலை நிர்ணயம் செய்த பின்பும் அதைச் செயல்படுத்தத் தாராளமாக ஆண்டுகளைத் தள்ளிப்போடும் நிர்வாக யந்திரம் தங்களது சம்பளம், படிகளை எல்லாம் முன்தேதியிட்டுப் பெற்றுக் கொள்கிறது உயர்த்தப்படும்போது.
பதிப்பாளர்களுக்குப் பாராமுகமே காட்டப்படுகிறது. "கட்டாத விலை' என்பதால் சமர்ப்பிக்கப்படுவதும் இல்லாமல், பெறப்பட்ட ஆணைக்கு நூல்கள் வழங்கப்படாமலும் தவிர்க்கப்படுகிறது.
இது இப்படியிருக்க, ''எமது நூல்களுக்கு ஆணை வழங்கப்படவில்லையே?'' என முறையிடச் சென்றால் "ஆணை பற்றிப் பேசக்கூடாது' என்பதுபோல் நோட்டீஸ் ஒட்டிய கதவடைப்பு!
"இவ்வருட அலொக்கேஷன்- ஒதுக்கீடு அவ்வளவுதான். நீங்கள் எத்தனை புத்தகங்கள் சமர்ப்பித்தீர்கள்- எத்தனை நூலுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது என்று சதவீதம்தான் அளவுகோல்.
என்ன புத்தகம் வாங்கப்பட்டுள்ளது, என்ன புத்தகம் நிராகரிக்கப்பட்டுள்ளது என்பது கருத்தில் கொள்ளப்படுவதில்லை.
"நூல் தேர்வு' என்பது மர்மக்குகை இருட்டு ரகசியம்!
நூலகத் துறையால் புறக்கணிக்கப்படும் புத்தகங்கள் மக்களின் நேரடி கவனத்தில் ஈர்க்கப்பட்டு தொடர் பதிப்புகள் காண்கின்றன. ஆனால், பொது நூலகக் கிளை நூலகங்களை நாடும் வாசகருக்கு இக்கருத்துகள்- நூல்கள் சென்றடைய வேண்டுமென்கிற எழுத்தாளரின் சார்பில் பதிப்பாளர் முயல்கையில் இந்த சாரமற்ற பதில்களே கிடைக்கின்றன.
இவையெல்லாம் களையப்பட தமிழ்ப் பதிப்பாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான பொது நூலகத் துறை மூலம் தமிழ் நூல்கள் வாங்குவதற்கென்றே- குறிப்பிடப்பட்ட 5 சதவீதம் மட்டுமாவது கல்வி நிதி ஒதுக்கீட்டில் வருடாந்திர நிதியாக வழங்கப்பட வேண்டும்.
நூல் தேர்வில் உரிய கவனம் செலுத்தப்படல் வேண்டும்-தவிர்க்கப்பட்ட - ஆணை வழங்கப்படாத நூல்களை - முதலில் உரிய அமைச்சரும் அதிகாரியும் ஆண்டுதோறும் கண்காணிக்க வேண்டும். அப்படிப்பட்ட நூல்கள் தகுதியுடையவை என அறியப்பட்டால் அவற்றுக்கு ஆணை வழங்கப்பட வேண்டும்-மாவட்ட வாரியாக உடனுக்குடன் பதிப்பாளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்பட வேண்டும்.
மழை, வெயில் இயற்கைப் பாதிப்பிலிருந்து பாதுகாப்பாகப் புத்தகக் காட்சி நடத்த ஊருக்குள் கண்காட்சி வளாகம் அமைத்துத்தர வேண்டும்.
தில்லியில் "பிரகதிமைதான்' போல் மாநகராட்சி, நகராட்சிகளில் இக் "கண்காட்சி வளாகம்' கட்டப்பட்டு ஆண்டுதோறும் இருமுறை தலா பதினைந்து நாள்களுக்குப் புத்தகக் காட்சி நடத்த குறைந்த வாடகையில் இடம் தர வேண்டும். மற்ற நாள்களில் ஆண்டு முழுவதும் வகைவகையான கண்காட்சிகள் நடத்தலாம் அங்கே.
மேலே குறிப்பிட்ட, மூன்று கோரிக்கைகளையும் தொலைநோக்குப் பார்வையோடு அணுகி தமிழ்ச் சமூகம் மீண்டும் தமது பாரம்பரியம் மிக்க பண்பாட்டுப் பாதையில் பீடு நடையிட்டுப் பயணிக்க தமிழக அரசு கடைக்கண் பார்வையைப் பதிக்க வேண்டும். 33-வது புத்தகக் கண்காட்சி நடைபெறும் வேளையில், எழுத்தாளர்கள் சார்பிலும், பதிப்பகங்கள் சார்பிலும், புத்தகம் படிக்கும் தமிழ் ஆர்வலர்கள் சார்பிலும் தமிழக அரசுக்கு விடுக்கப்படும் வேண்டுகோள் இது. புத்தாண்டு நல்ல ஆண்டாகப் புலரும் என்கிற நம்பிக்கையுடன்...
கட்டுரையாளர் :அகிலன் கண்ணன்
நன்றி : தினமணி
இசை, நடனம், நாடகம், திரைப்படம், ஓவியம் போன்ற நுண்கலைகளைப் போலவே எழுத்தும் படிப்பும் ஓர் உயரனுபவம் என்பதோடு நில்லாது சிந்தனைக்குச் சாவி கொடுத்துச் செயலாக்கத்துக்கு அடித்தளம் அமைக்கும் அரும்பணி புரிகிறது. இந்தியச் சிந்தனை மரபு, பல மொழிகளில் பல வடிவங்களில் வெளிப்பட்டு வந்தது-வருகிறது.
இன்று யந்திர கதியில் கோடுகளிடை ஓடும் சாரமற்ற வாழ்க்கையாக மாறிவரும் பரபரப்புச் சூழலில், நமது கலாசாரமும் கலைகளும் அருமருந்தாக உள்ளன. மக்கள் தொகைப் பெருக்கத்தாலும், சுய-புறக் கட்டுப்பாடற்ற சுதந்திரத்தால் தகுதியற்ற போட்டிகளாலும் மாயமான் வேட்டையாகி வருகிற வாழ்க்கையில் வேரோடிய நமது நேற்றைய சிந்தனைகளும், சரித்திரமும், இலக்கியமும் இன்றைக்குப் புறந்தள்ளப்பட்டு விடுகிற அபாயம் தொடர்கிறது. இது நாளைய இந்தியாவுக்கு அபாயச் சங்கு ஊதும் தருணமாகி விட்டது.
வெறும் "மதிப்பெண்'தான் இன்றைய கல்வி. வெறும் வியாபாரமாகிவிட்ட கல்விச் சந்தையில் அறிவுதரும் கல்வியா கிடைக்கிறது?
"கல்வி அறிவு' என்பது பாமரர்க்கும்,எளியோர்க்கும் வழங்கப்பட வேண்டியது அவசியம். ஆனால் கல்விதான் வழங்கப்படுகிறது இன்றிங்கே. அறிவு புகட்டப்படுவதில்லை. நிதியமைச்சர் அன்பழகன் அடிக்கடி கூறுவதுபோல,''படித்தவரெல்லாம் படிப்பவரல்ல''!
ஆம்.
சற்று எளிதாகக் கூற முற்படின் வடிவேலு நகைச்சுவை போல்,
''தெரியும்; ஆனால் தெரியாது'' என்பது போல்தான் இது!
வெறும் "பாடத்திட்டக் கல்வி' மட்டுமே முட்ட முட்டப் புகட்டப்படுகிறது. பொது அறிவும், பல்துறை தாகம் ஏற்படுத்தும் படைப்பாளுமைத் திறன் வளர் கல்வியறிவும் அறவே ஒதுக்கப்பட்டு நசுக்கப்படுகிறது கல்விக்கூடங்களில்.
அரசு மற்றும் பெரும்பாலான தனியார் கல்விக் கூடங்களில் நூலகமோ, நூல்களோ காணக்கிடைக்காதவையே! ஆகவே நூலகரும் கிடையாது.
பள்ளிப் பாடத் திட்டத்தில் "நூலக வகுப்'பை மீண்டும் கொண்டு வந்து அதை முழு ஆர்வத்துடன் செயல்படுத்தக் கோரி தமிழக அரசிடம் பலமுறை வேண்டுகோள் வைத்தோம். ஆட்சி மாறுகிறது. ஆட்சியாளர்கள் மாறுகிறார்கள். ஆனால் எக்காரணம் கருதியோ இக்கோரிக்கை உரிய கவனம் பெறுவதே இல்லை.
முன்பு தமிழகக் கல்லூரிகளில் நல்லொழுக்கக் கல்வியும், உயர்நிலைப் பள்ளிகளில் வாரமொரு வகுப்பு- 45 நிமிடம் நூலக வகுப்பு, கைத்தொழில் ஆகியவையும் பாடத்திட்டத்திலேயே நடைமுறையில் இருந்தன.
இதன்மூலம் பள்ளிப் பருவத்திலேயே பாடநூலைத் தாண்டி பொது அறிவுத் தேடல் மாணவரிடம் விதைக்கப்படுகிறது. வாழ்நாள் முழுவதும் இந்தப் படிப்பனுபவ சுகம் அவருக்கு ஒளிகாட்டுகிறது.
இதேபோல் கைத்தொழில் வகுப்பில் ஒரு வாரம் தச்சு வேலை, ஒரு வாரம் தையல், ஒரு வாரம் தோட்ட வேலை, ஒரு வாரம் சுற்றுச்சூழல் தூய்மை, ஒரு வாரம் சாலை விதிகளைக் கடைப்பிடிக்கக் கற்றுத் தருதல் போன்ற அடிப்படை விஷயங்கள் மூலம் வாழ்க்கையின் அன்றாடத் தேவைகளைச் சொந்த உழைப்பின் மூலம் பூர்த்தி செய்து கொள்ளத் தூண்டும் மனவலிவும் உழைப்பின் உயர்வும் ஊட்டப்பட்டு விடுகிறது.
இவையெல்லாம் நான் படித்த பள்ளி நாள்களில் எனக்குக் கிட்டிய அருமையான அஸ்திவாரங்கள்.
ஆனால் இன்று இவை பாடத்திட்டத்தில் இருந்து எங்கே விரட்டப்பட்டன? ஏன் விரட்டப்பட்டன?
இன்று பல பள்ளிகளில் விளையாட்டு உடற்பயிற்சி கூட, மாணவர்களின் கவனத்திலிருந்து மறைந்து வருகிறதே என ஓர் ஆசிரியர் கவலையுடன் கூறினார்.
நமது அண்டை மாநிலங்களில் இன்றும் நூலக வகுப்பு சிறப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அரசு, தனியார் பள்ளிகளில் நூலகம், நூல்கள், நூலகர், நூலக வகுப்பு எனச் சீராகச் செல்கிறது.
மாநிலம் முழுவதிலிருந்தும் பதிப்பாளர்களிடம் மாதிரிப் புத்தகங்கள் பெறப்பட்டு வகுப்பு-வயது வாரியான புத்தகங்கள் தேர்வு செய்யப் பெற்று பட்டியலிடப்படுகின்றன. இந்நூல்கள்தான் பள்ளி நூலகங்களில் வாங்கி மாணவர்களுக்கு மத்திய வாங்குகைத் திட்டத்தின் மூலம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆந்திரத்தில் இன்றும் கடைப்பிடிக்கப்பெறும் இம்முறையை (தமிழகத்தில் முன்னர் நிகழ்த்தப் பெற்றது) நாமும் மீண்டும் தொடர வேண்டும்.
வளரும் இளம் பருவத்திலேயே படிப்பனுபவம் விதைக்கப்பட்டால்தான் அடுத்த தலைமுறையில் மனவளம் நிறைந்த ஆரோக்கியமான தமிழகத்தை வளர்த்தெடுக்க முடியும்.
தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி அமைப்புகள் மூலம் மக்களின் சொத்துவரி விதிப்பில் 10 சதவீதம் (முன்பு 5 சதவீதம்) நூலக வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஆண்டுதோறும் விரட்டி விரட்டி வசூலிக்கப்படும் இவ் வரித் தொகை உடனுக்குடன் நிதித்துறை வழியாக நூல்கள் வாங்குவதற்கு வந்து சேருவதில்லை.
நூலகத் துறைச் சம்பளம், வாடகை, நிர்வாகச் செலவுகள் அரசிடமிருந்து நேரடியாகப் பட்டுவாடா செய்யப்படுகிறது. ஆனால், மூலாதாரமான புத்தகங்கள் வாங்கும் தொகை இவற்றுடன் ஒப்பிட்டால் - எத்தனை சதவீதம் என்று கணக்கிட்டால் - வேதனைதான் மிஞ்சும்.
நமது தமிழ்நாடு பொது நூலகத் துறையில் நூல்கள் வாங்குவதும், வாங்காமல் தவிர்க்கப்படுவதும் ஒரு "பெரிய புராணம்'.
அதற்கு மேல் விலை நிர்ணயம் என்பதும் விலை நிர்ணய உத்தரவைச் செயல்படுத்தும் விதமும் மிக மிக விநோதமானது; விசித்திரமானது.
நாளுக்கு நாள் உற்பத்திச் செலவு அதிகரித்து வந்தாலும் பொதுவாக இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை விலை உயர்வு நிர்ணயம் செய்யப்படவேண்டிய நிலை கடைப்பிடிக்கப்படுவதில்லை. சுமார் நான்கு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. விலை நிர்ணயம் செய்த பின்பும் அதைச் செயல்படுத்தத் தாராளமாக ஆண்டுகளைத் தள்ளிப்போடும் நிர்வாக யந்திரம் தங்களது சம்பளம், படிகளை எல்லாம் முன்தேதியிட்டுப் பெற்றுக் கொள்கிறது உயர்த்தப்படும்போது.
பதிப்பாளர்களுக்குப் பாராமுகமே காட்டப்படுகிறது. "கட்டாத விலை' என்பதால் சமர்ப்பிக்கப்படுவதும் இல்லாமல், பெறப்பட்ட ஆணைக்கு நூல்கள் வழங்கப்படாமலும் தவிர்க்கப்படுகிறது.
இது இப்படியிருக்க, ''எமது நூல்களுக்கு ஆணை வழங்கப்படவில்லையே?'' என முறையிடச் சென்றால் "ஆணை பற்றிப் பேசக்கூடாது' என்பதுபோல் நோட்டீஸ் ஒட்டிய கதவடைப்பு!
"இவ்வருட அலொக்கேஷன்- ஒதுக்கீடு அவ்வளவுதான். நீங்கள் எத்தனை புத்தகங்கள் சமர்ப்பித்தீர்கள்- எத்தனை நூலுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது என்று சதவீதம்தான் அளவுகோல்.
என்ன புத்தகம் வாங்கப்பட்டுள்ளது, என்ன புத்தகம் நிராகரிக்கப்பட்டுள்ளது என்பது கருத்தில் கொள்ளப்படுவதில்லை.
"நூல் தேர்வு' என்பது மர்மக்குகை இருட்டு ரகசியம்!
நூலகத் துறையால் புறக்கணிக்கப்படும் புத்தகங்கள் மக்களின் நேரடி கவனத்தில் ஈர்க்கப்பட்டு தொடர் பதிப்புகள் காண்கின்றன. ஆனால், பொது நூலகக் கிளை நூலகங்களை நாடும் வாசகருக்கு இக்கருத்துகள்- நூல்கள் சென்றடைய வேண்டுமென்கிற எழுத்தாளரின் சார்பில் பதிப்பாளர் முயல்கையில் இந்த சாரமற்ற பதில்களே கிடைக்கின்றன.
இவையெல்லாம் களையப்பட தமிழ்ப் பதிப்பாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான பொது நூலகத் துறை மூலம் தமிழ் நூல்கள் வாங்குவதற்கென்றே- குறிப்பிடப்பட்ட 5 சதவீதம் மட்டுமாவது கல்வி நிதி ஒதுக்கீட்டில் வருடாந்திர நிதியாக வழங்கப்பட வேண்டும்.
நூல் தேர்வில் உரிய கவனம் செலுத்தப்படல் வேண்டும்-தவிர்க்கப்பட்ட - ஆணை வழங்கப்படாத நூல்களை - முதலில் உரிய அமைச்சரும் அதிகாரியும் ஆண்டுதோறும் கண்காணிக்க வேண்டும். அப்படிப்பட்ட நூல்கள் தகுதியுடையவை என அறியப்பட்டால் அவற்றுக்கு ஆணை வழங்கப்பட வேண்டும்-மாவட்ட வாரியாக உடனுக்குடன் பதிப்பாளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்பட வேண்டும்.
மழை, வெயில் இயற்கைப் பாதிப்பிலிருந்து பாதுகாப்பாகப் புத்தகக் காட்சி நடத்த ஊருக்குள் கண்காட்சி வளாகம் அமைத்துத்தர வேண்டும்.
தில்லியில் "பிரகதிமைதான்' போல் மாநகராட்சி, நகராட்சிகளில் இக் "கண்காட்சி வளாகம்' கட்டப்பட்டு ஆண்டுதோறும் இருமுறை தலா பதினைந்து நாள்களுக்குப் புத்தகக் காட்சி நடத்த குறைந்த வாடகையில் இடம் தர வேண்டும். மற்ற நாள்களில் ஆண்டு முழுவதும் வகைவகையான கண்காட்சிகள் நடத்தலாம் அங்கே.
மேலே குறிப்பிட்ட, மூன்று கோரிக்கைகளையும் தொலைநோக்குப் பார்வையோடு அணுகி தமிழ்ச் சமூகம் மீண்டும் தமது பாரம்பரியம் மிக்க பண்பாட்டுப் பாதையில் பீடு நடையிட்டுப் பயணிக்க தமிழக அரசு கடைக்கண் பார்வையைப் பதிக்க வேண்டும். 33-வது புத்தகக் கண்காட்சி நடைபெறும் வேளையில், எழுத்தாளர்கள் சார்பிலும், பதிப்பகங்கள் சார்பிலும், புத்தகம் படிக்கும் தமிழ் ஆர்வலர்கள் சார்பிலும் தமிழக அரசுக்கு விடுக்கப்படும் வேண்டுகோள் இது. புத்தாண்டு நல்ல ஆண்டாகப் புலரும் என்கிற நம்பிக்கையுடன்...
கட்டுரையாளர் :அகிலன் கண்ணன்
நன்றி : தினமணி
Subscribe to:
Posts (Atom)
