Monday, December 21, 2009

கூகுள் மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு

பிரபல கூகுள் நிறுவனம் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் சிக்கி உள்ளது. இதுகுறித்து வெளிவந்துள்ள செய்தியில், இன்டர்நெட் வருமானம் மூலம் கூகுள் நிறுவனம் 1.6 பில்லியன் பவுண்டுகள் சம்பாதித்ததாகவும், இதற்கான வரியை அந்நிறுவனம் கட்டவில்லை என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. 2008-ம் ஆண்டு பிரிட்டனில் சம்பாதித்த பணம் முழுவதையும் தனது அயர்லாந்து கிளைக்கு குறுக்கு வழியில் மாற்றி 450 மில்லியன் பவுண்ட் வரி செலுத்தாமல் சட்டப்பூர்வமாகவே தப்பித்துக் கொண்டது கூகுள் என்றும்
இந்த நிறுவனம் கடந்த ஆண்டு செலுத்திய வருமான வரி 141519 டாலர்கள் மட்டும்தான் என்றும், அதுகூட விளம்பர வருவாய் மீதான வரி இல்லை என்றும் அதில் கூறப் பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


இரண்டாம் விடுதலை யாரிடம் இருந்து?

சுப்பிரமணிய பாரதி பிறந்த நாள் டிசம்பர் 11 மறந்தோம். சூப்பர் ஸ்டார் பிறந்த நாள் கொண்டாடி ஜன்ம சாபல்யம் அடைந்தோம். நவம்பர் 7 அன்று நோபல் விஞ்ஞானி சர். சி.வி. ராமன் பிறந்த தினம் வந்து போனது, பலருக்குத் தெரியாது. பண்டித ஜவாஹர்லால் நேரு பிறந்த நாளும் வந்தது, போனது. வெகு ஜன ஊடகங்கள் அவற்றைக் கண்டு கொண்டால்தானே.

நம் அடிமைத்தனம் மட்டும் மாறவே இல்லை. பெருகிவரும் கு, கூ, கொ, கோ - ஆகிய நான்கு தனங்களுக்கு நாம் அடிமை. இது என்ன ஹைக்கூவோ என்று பயந்து விடாதீர்கள். குடிகாரத்தனம், கூத்தாடித்தனம், கொலைகாரத்தனம், கோமாளித்தனம். இதுதான் இன்றைய நம் கலாசாரம் ஆகப் பதிவாகி வருகிறது.

குடிப்பழக்கம், புகையிலை இவற்றால் ஆண்டுதோறும் ஒன்றே கால் கோடி இதயநோய் மரணங்களாம். உலக சுகாதார நிறுவன அறிக்கை பற்றி நமக்குக் கவலை இல்லை, நமக்கு முக்கியம் வருமானம்.

போதை மருந்துப் புழக்கம் இந்தியாவில் எந்த அளவு கிறக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது? கஞ்சா அடிமைகள் 87.5 லட்சம், ஓப்பியம் பேர்வழிகள் 20.4 லட்சம், மருந்து அடிமைகள் 2.9 லட்சம். உள்ளபடியே ஆப்கானிஸ்தானத்தில் இருந்தும், மியான்மரில் இருந்தும் உலக நாடுகளுக்கு ஹெராயின் கடத்தும் உலக விரோதிகளின் ஊடு நாடாக இந்தியா இயங்கி வருகிறதாமே. 2004-ம் ஆண்டு போதை மருந்துகள் மற்றும் குற்றங்களுக்கான ஐ.நா. அலுவலகமும், சமூகநீதி அமைச்சகமும் இணைந்து நடத்திய கணிப்பின் முடிவு இது.

ஏதோ ஒரு வழியில் நம் இளைஞர்களுக்கு அறிவியல் சிந்தனை வராமல் பார்த்துக் கொள்கிறோம். உள்ளபடியே மது போதையில் நம் இளைய தலைமுறை உணர்வு மரத்து உருக்குலைந்து வருகிறது. சுயமாகச் சிந்திக்க இயலாத மந்தபுத்தி மந்தைகளை இனப்பெருக்கம் செய்வதே நோக்கம். இன்னும் பத்து இருபது ஆண்டுகளில் இவர்கள் தேர்தலில் வாக்குப் போடக் கூட வரமாட்டார்கள். வீட்டில் இருந்தபடி வாக்கை - விற்றுவிடத் தயாரானாலும் ஆச்சரியம் இல்லை.

இங்கு மதுப் பயனாளிகளில் பெரும்பாலோர் கல்லூரி மாணவர்கள், கணிப்பொறி நிபுணர்கள், இளநங்கைகள் என்பது இன்னொரு அதிர்ச்சித் தகவல். அதி நவீனக் கல்வி தர வேண்டியவர்கள் இன்று மதுக்கடை உரிமையாளர்கள். அன்றைய மது வியாபாரிகள் பலரும் கல்வி நற்பணி தொடங்கிவிட்டனர். காலத்தின் போக்கு, தலைகீழ். அவர்களின் கல்விக் கட்டணத்தைக் குறைக்கச் சொன்னால் ""உங்கள் கமிஷனைக் குறைத்தால் தானே'' என்று யாரோ திருப்பிக் கேட்டார்களாமே. அரசியல்வாதியின் வாய்மொழி உத்தரவில் ஊழல் கோப்பில் கையெழுத்துப் போடுவார் அதிகாரி. அவர் தலையெழுத்து, தனியே மாட்டிக் கொள்வார்.

ஏதாயினும் இன்று சுதந்திர இந்தியாவில் ஆட்டோ பெர்மிட் முதல் பாட்டி பென்ஷன் வரை நீக்கமறப் புழக்கத்தில் உள்ள புது வழக்குச்சொல் ஆழ்ண்க்ஷங் தமிழில் கையூட்டு, லஞ்சம், கைக்கூலி, சன்மானம், கமிஷன், மாமூல், கட்டிங், சம்திங், அன்பளிப்பு, இனாம், இலவசம், பெர்சன்ட், தள்ளு, வெட்டு, பெட்டி, கவர், சின்ன கிஃப்ட் - அடேங்கப்பா எத்தனைக் கலைச்சொற்கள். ஆங்கிலத்தை மிஞ்சியது நம் செம்மொழி.

தேர்வு எழுதாமலே வெற்றிச் சான்றிதழ் பெறவும் முடிவது அரசியலில் மட்டும் தானாம். தேர்தலுக்கு முன்னமேயே வாக்கு வித்தியாசத்தைக் குறிசொல்லும் கட்சி சோதிடர்கள் நிறைந்த பாரத ஙர்ய்ங்ஹ் திருநாடு வாழ்கவே வாழ்க.

எப்படியோ, கறுப்புதான் நம்மில் பலருக்குப் பிடித்த கலரு-பணத்தில் மட்டும். திட்டம் அறிவித்ததும் "சதவீதம்' பெற்றுக்கொள்ளும் சாமர்த்தியசாலிகள் வாழும் புண்ணிய பூமி இது. பத்து பென்சில் வாங்கினால் ஒரு ரப்பர் இலவசம். கஜானா பணத்தில் வாங்கிய பென்சிலுக்குக் கிடைத்த ரப்பர் மட்டும் எப்படி ஆணை போட்டவருக்குச் சொந்தம் ஆகுமோ? டாக்டர் கலாம் சொன்ன அறிவியல் கனவு நம் அரசியல் பெரியவர்கள் காதில் நடு எழுத்து மாறி "ள'கரம் ஆக ஒலித்ததோ என்னவோ?

வெளிநாட்டு வங்கியில் 70 லட்சம் கோடி இந்தியர் பணம் இருப்பதாக வைத்துக்கொள்வோம். கணக்குப் போடுங்கள், கைக்குழந்தையோ, படுகிழவியோ சராசரி ஒவ்வொரு இந்தியனுக்கும் உரிய 70 ஆயிரம் ரூபாய் சொந்தப் பணம் என்று அர்த்தம் ஆகிறதே. எப்போது கிடைக்கும்?

அடுத்தபடி, கூத்தாடித்தனம் பற்றிச் சொல்லவே வேண்டாம். ஒரு கணத்தில் ஊடகங்களுக்குப் பன்றிக்காய்ச்சலே வராதா என்று ஏங்கத் தோன்றும். அந்த அளவுக்கு தலைவிரித்தாட்டம்.

அண்டை நாட்டில் வீர சகோதரர்களின் "புறநானூறு' நடந்து கொண்டு இருந்தது. தமிழ்நாட்டிலோ ஆயுள்முச்சூடும் தனித்தனிச் சானல்களில் திகட்டத் திகட்ட "அக நானூறு' தான். ஆட்டம்பாட்டம் கொண்டாட்டம். வீர வசனம் களத்திலாவது, காகிதத் தளத்தில் அல்லது கவியரங்கத்தில் மட்டுமே. போட்டி போட்டுக்கொண்டு எல்லாச் சானல்களிலும் அசைவப் பாட்டுகள், ஆட்டங்கள். பள்ளிக் குழந்தைகளையும் அழைத்து வந்து இந்தப் பள்ளியறை வெட்டல் நடனம் அவசியம் தானா?

முன்னொரு காலத்தில் திருநெல்வேலி பொருட்காட்சியில் தம்பிதுரை-மஸ்தான் ஆபாச ரெக்கார்டு டான்ஸ் தடைவிதிக்கப்பட்டது. அது மறுவடிவில் மாடல் ஸ்டூடியோ அரங்கின் கீற்றுக் கொட்டகையில் பூவாளிக் குளியல் காட்சிகள் ஆயின. அந்த ரகசிய ஆட்டங்கள் இன்று தேசிய விழாக்களாக சானல்கள் தோறும் சக்கைப்போடு போடுகின்றனவே. குளியல் நடனங்களின் நீதிபதியும் பாதி குளித்த அரைத்துண்டுடன்தான் வந்து அமர்கிறார். தீர்ப்பின்போது கெமிஸ்ட்ரி நன்றாய் இருந்துச்சு, ஜியாகிராஃபி படுத்துச்சு என்று எல்லாம் பல்கலைக்கழகத் தீர்ப்பு வேறு.

திரைப்பட விழாக்களில் வயிறாட்டம் என்று ஒரு புது தினுசு இறக்குமதி ஆகி இருக்கிறது. அதையும் வேலை மெனக்கட்டு வந்து ரசிக்கும் முற்றிய கலையுள்ளங்களை வாழ்த்துவோம். அண்மையில் நம் குடியரசுத் தலைவர் விருது நிகழ்ச்சிக்கு உலக அழகி "பாத்-ரூம் மேக்கப்'புடன் வந்து இருந்தாராமே. இந்திப் படப்பிடிப்பு என்று நினைத்தாரோ என்னவோ? தேசிய விருதுக்கு வழங்கும் கெüரவம் அது. இன்றைக்கு விருதுகளும் ஜனநாயகம் மாதிரி வரையறுக்கப்பட்டு விட்டது. தானே நிறுவிய விருதுக்குத் தன்னைத் தானே தேர்ந்து எடுத்துத் தன்னால் வழங்கும் கிரீடத்தைத் தனக்குத் தானே தரிப்பதில் நம்மவர்க்குத்தான் தாகம் அதிகம்.

அண்டைக் கேரளத்தில் முன்பு ஒருமுறை அமைச்சர் உண்மையான பொறுப்புடன் வாரந்தோறும் ஒரு நாளில் தொலைக்காட்சியில் தோன்றினார். பொதுஜனம் கேட்கும் கேள்விகள், முறையீடுகள், கோரிக்கைகளை விசாரிப்பார். நேரடியாக மக்கள் குறை தீர்ப்பார். துணைக்கு அவரது துறைச் செயலரும் உடன் இருப்பார். நமக்கு அதற்கு எல்லாம் நேரம் கிடையாது. "டிவி வால்யூம் கம்மி பண்ணி' சினிமாப் பாட்டு கேட்க மட்டுமே நமக்குப் பிடிக்கும். திரை விண்மீன்களின் மினுமினுப்புகள் போதும்.

மூன்றாவதாக, மனிதாபிமானம் இழந்த கொலைகாரத்தனம் எப்படி நம் சமூகத்தில் ஊடுருவுறுகிறது பாருங்கள். சாலை விபத்தில் சக்கரத்தில் மாட்டி உயிர் இழந்தவர்க்கு ஓட்டுநர் சில ஆயிரங்கள் நஷ்டஈடு கொடுத்தால் போதுமாம். ஆனால் காயங்களுடன் அடிபட்டு மருத்துவமனையில் சேர்த்தால் முழுச்செலவையும் ஓட்டுநரே ஏற்க வேண்டுமாமே. அதனால் அடிபட்டுக் குற்றுயிராகக் கிடந்தவர் மீது ரிவர்ஸில் வந்து வண்டியை ஏற்றிக் கொன்றே விட்டாராமே. ஆயிரங்கள் அபராதத்தோடு போகும். நாம் எங்கே போகிறோம்?

அதிலும் பலவகைக் கொலைகாரர்களும் தொலைக்காட்சிகளில் கூச்சமே இல்லாமல் சிரித்தபடி லேன்சர், டோயாட்டோ கார்களில் மிதப்பதும் பார்த்தால் நமக்கே சந்தேகம் வரும்.

அரசியல்வாதிகள் மட்டும் அல்ல, குற்றவாளிகளும் தான் போலீஸ் பாதுகாப்புடன் உலா வருகிறார்கள். குற்ற வழக்குகளுக்கு என்றே தனியொரு சானல் தொடங்கலாம் போல. சி.சி.டிவி. பெரிய அங்காடிகளில் மூலையில் யாருக்கும் தெரியாமல் இயங்கும் ரகசியத் தொலைக்காட்சிக் கேமரா, குளோஸ்ட் சர்க்யூட் டிவி என்றுதானே நினைத்தீர்கள். நினைப்பீர்கள். அதுதான் இல்லை, நாம் சொல்ல வந்தது கோர்ட் கேஸ் டிவி சானல்.

நான்காவதாக, கோமாளித்தனம் வேறு மனிதனை மழுங்கடித்து வருகிறது. "சிப்' போடச் சொல்லும் சிரிப்புகள், ஒன்றுக்குப் போகும் உவகைக் காட்சிகள், இரட்டை அர்த்த ஏளனிப்புகள் என்று நாடே சிரிப்பாய்ச் சிரிக்கிறது. இனி எவரும் நூற்றாண்டு கண்ட கலைவாணர் பெயரைக் கண்டபடி இழுக்க வேண்டாம். விரசமே இல்லாத மேதை செத்த பிறகாவது பிழைத்துப் போகட்டும்.
கட்டுரையாளர் : நெல்லை சு. முத்து
நன்றி : தினமணி

காலில் அணி​வ​தைக் கழுத்​தில் மாட்டும் விஞ்​ஞா​னம்

வேளாண்​மை​யும் மனி​த​நல வாழ்​வும் சீர்​மிகு சிறப்​பு​டன் விளங்க வேண்​டு​மென்று எண்​ணிய முன்​னோ​டி​கள் ஆயி​ரம் பேர் இருந்​தா​லும்,​​ இரண்டு மாபெ​ரும் விஞ்​ஞா​னி​க​ளின் சேவை​களை எண்​ணி​னால்,​​ இன்று வாழும் வேளாண்​மைப் பேரா​சி​ரி​யர்​கள் வெட்​கப்​பட வேண்​டும்.​ அந்த இரு​வர்​க​ளில் ஒரு​வர் ஆல்​பர்ட் ஹோவார்டு.​ மற்​றொ​ரு​வர் ஆல்​பர்ட் ஷாட்ஸ்.​ ஒரு​வர் இந்​தி​யா​வில் வாழ்ந்த இங்​கி​லாந்​துப் பேரா​சி​ரி​யர்.​ மற்​றொ​ரு​வர் அமெ​ரிக்​கா​வில் வாழ்ந்த யூத-​ரஷிய விஞ்​ஞானி.​

யாருக்கு யாரி​டம் பாடம் என்ற தின​மணி ​(24-8-09) கட்​டுரை மூலம்,​​ ஆல்​பர்ட் ஹோவார்டு அறி​மு​க​மா​கி​விட்​டார்.​ ரசா​யன விவ​சா​யத்​தால் எதிர்​கா​லத்​தில் நிக​ழப்​போ​கும் ஆபத்​து​க​ளைக் குறிப்​பாக மண்​வ​ளம் இழப்பு,​​ மனி​த​வ​ளம் இழப்பு-​அதா​வது நோய் எதிர்ப்பு சக்​தி​யில்​லா​மல் மருந்து மாத்​தி​ரை​க​ளுக்கு அடி​மை​யா​கப் போகும் மனி​த​கு​லம் பற்​றி​யெல்​லாம் 1920-களில் சுமார் 100 ஆண்​டு​க​ளுக்கு முன்பே எச்​ச​ரித்​த​வர்,​​ ஆல்​பர்ட் ஹோவார்டு.​

இந்​திய விவ​சா​யத்​தில் ரசா​யன உரம் இல்​லா​ம​லேயே உற்​பத்​தியை உயர்த்த மண்​ணில் கரிய விழு​து​க​ளைப் பதிக்க-​அதா​வது ஹு​மஸ் பற்​றிய ஆய்​வு​க​ளுக்கு வித்​திட்​டார்.​ பிரிட்​டிஷ் ஆட்​சி​யில் வேளாண்மை ஆலோ​ச​க​ரா​கப் பணி​பு​ரிந்த ஹோவார்​டுக்கு எதிர்ப்​பு​கள் விளைந்​தன.

​ ""வேளாண்​மைக்கு உயில்'' எழு​தி​ய​வர் ரசா​யன உரங்​க​ளை​யும் பூச்​சி​ம​ருந்து விஷங்​க​ளை​யும் அவற்​றின் தொடக்க காலத்தி​லி​ருந்து எதிர்த்​த​வர்.​ இவர் வழங்​கிய மாற்​றுத்​திட்​டம் அதா​வது மண்​வ​ளத்​து​டன் இயற்கை வழி​யி​லேயே உயர்ந்த விளைச்​சல் பெறும் ஆராய்ச்​சி​க​ளுக்​குப் புசா​வில் வாய்ப்பு இல்லை.​ இந்​தி​யா​வின் வேளாண்மை ஆராய்ச்​சிக் கழ​கத்​தின் முதன்மை வேளாண் ஆலோ​ச​க​ருக்கு நெருக்​கடி வந்​தது.​ உர நிறு​வ​னங்​க​ளுக்கு ஒரு கைப்​பா​வை​யாக விவ​சாய ஆராய்ச்​சி​கள் திசை​தி​ரும்​பி​ய​தால்,​​ ஹோவார்​டுக்கு சோதனை வந்​தது.​ புசாவி​லி​ருந்து ஹோவார்டு வெளி​யே​றி​னாரா,​​ வெளி​யேற்​றப்​பட்​டாரா என்​ப​தில் தெளிவு இல்லை.​

வே​ளாண்மை உயி​லைப் புரட்​டிப் பார்த்​தால்,​​ புசாவி​லி​ருந்து ஏன் இந்​தூர் தர்​பா​ருக்கு வந்​தார் என்​ப​தற்கு இவ்​வாறு ஹோவார்டு நொந்​து​கொண்ட வரி​கள்:​ ""ஒரு பயிர் நோயின்றி நல்​ல​படி வளர்ந்து திட​மாக வாழ்ந்து உயர்ந்த அள​வில் உற்​பத்தி பெற அப் பயி​ரின் கீழ் வள​மான கரிம விழு​து​கள் மண்​ணில் பர​வ​லாக வேண்​டும்.​ அதற்​கேற்ற வகை​யில்,​​ நாம் வழங்க வேண்​டிய குண​ப​எரு நிலை,​​ நைட்​ர​ஜன் கார்​பன் விகி​தம் 1 :​ 10 என்ற அள​வில் நிலவ வேண்​டும்.​ முறை​யான அளவு அவ​சி​யம்.​ புசா​வில் வேளாண்மை ஆராய்ச்சி என்​றால் அதை மண்​ணோடு தொடர்பு செய்​யா​மல்,​​ விதைப்​பெ​ருக்​கம்,​​ பூச்​சி​யி​யல்,​​ பூச​ண​யி​யல்,​​ பயி​ரி​யல் என்று பல​வி​த​மான துறைப் பிரி​வு​கள் முளைத்​து​விட்​டன.​ மண்​வ​ளம் பற்​றிய யோச​னையோ ஆய்வோ...​ இல்லை...'' பின்​னர் இவர் மண்​ணில் கரிம விழு​து​கள் பற்​றிய ஆராய்ச்​சி​யைத் தொடர,​​ விதர்​பா​வில் உள்ள காட்​டன் கமிட்டி முன்​வந்து,​​ இந்​தூர் சமஸ்​தான ஆத​ர​வு​டன் 100 ஏக்​கர் நிலம் 100 ஆண்டு குத்​தகை என்ற அடிப்​ப​டை​யில் பெற்று,​​ ஆராய்ச்​சியை அன்று தொடங்கி மண்​வ​ளத்தை உயர்த்​தி​ய​தால்​தான்,​​ இன்​று​வரை மத்​திய மாகா​ணங்​க​ளில் பருத்தி உற்​பத்​தித்​தி​றன் கூடி​யது.​

மண்​வ​ளம் வேறு,​​ மண்​ணில் ஹு​மஸ் என்​பது வேறு.​ இன்​றைய விஞ்​ஞா​னி​கள் ஹு​மஸ் என்​றால் இயற்கை உரம் இடு​வது என்று பொருள்​ப​டப் புரிந்து கொள்​கின்​ற​னர்.​ சுருக்​க​மா​கச் சொல்​வ​தா​னால் பத்​தாம் நூற்​றாண்​டில் சுர​பா​லர் எழு​திய விருட்​சா​யுர்​வே​தம் திருக்​கு​ற​ளைப்​போல் ஈரடி வெண்​பா​வைப்​போல் பாடப்​பட்​டது.

தி​ருக்​கு​ற​ளுக்​குப் பரி​மே​ல​ழ​கர் உரை எழு​தி​ய​தைப்​போல்,​​ ஆல்​பர்ட் ஹோவார்டு எழு​தி​யுள்ள ""வேளாண்மை உயில்'' படிக்​கப் படிக்​கப் புதிய பொருள்​க​ளைத் தரு​கி​றது.​ குண​ப​ஜ​லமே ஹு​மஸ் என்று பொருள்​பட இவ​ரு​டைய இந்​தூர் கம்​போஸ்​டிங் உள்​ளது.​ நாற்​பது பக்​கங்​க​ளில் ஹோவார்டு கூறி​யதை நாலு வரி​க​ளில் சொல்​வது இய​லாது என்​றா​லும் அடிப்​படை இதுவே.​

ஹோவார்டு இந்​தி​யா​வில் பணி​பு​ரிந்த கால​கட்​டத்​தில் ​(1906-32) விவ​சா​யி​க​ளி​டம் மாடு இருந்​தது.​ மாட்​டுக்​கொட்டி​லில் சிமெண்​டுத்​த​ளம் இல்லை.​ மண்​த​ரை​யில் கட்​டு​வார்​கள்.​ மண்​த​ரை​யில் மாட்​டின் சாண​மும் கோம​ய​மும் விழா​மல் இருக்க தின​மும் மாட்​டுக்கு ஒரு படுக்கை போட வேண்​டும்.​ அது அறு​வ​டைக்​க​ழி​வாக இருக்க வேண்​டும்.​ பெரும்​பா​லும் தட்​டைப்​புல்-​வைக்​கோல்,​​ துவ​ரைக்​கொடி,​​ கட​லைக்​கொடி,​​ கரும்​புச்​சோகை,​​ வாழைச்​சோகை அவற்​றின்​மீது மரத்​தூள்-​இப்​ப​டிப்​பட்ட படுக்கை இந்​தூர் பண்​ணை​யில் அமைக்​கப்​பட்​டது.​ அதன் நைட்​ர​ஜன்:​ கார்​பன் ரேஷியோ 1 :​ 33.​ அப்​ப​டுக்​கை​யின் மீது இரவு மாடு​கள் கழிக்​கும் கோம​யம்,​​ சாணம் சேர்ந்து ஒரு பயி​ருக்​குத் தேவை​யான ஹு​மûஸ அதா​வது 1 :​ 10 என்ற அள​வில் தழைச்​சத்து உயர்ந்து கார்​பன் சத்து குறைந்து மக்​கும் நிலை உருப்​பெ​று​கி​றது.​ தினம் மாட்​டுத் தொழு​வத்​தைக் கூட்ட வேண்​டாம்.​ அப்​ப​டியே வாரிச்​சு​ருட்டி தோட்​டத் தரி​சில் போட்டு விட வேண்​டும்.​ மாடு​க​ளின் அள​வைப் பொருத்து 1 மாதத்​தில் 50 செண்டு நிலத்​தில் உரத்​தையே உலர்​மூ​டாக்கு செய்து சற்று மக்​கிய பின்பு உழுது விதைத்​து​வி​ட​லாம்.​ அவ​ர​வர் வச​திப்​படி முட்​டுப்​ப​டுக்​கை​யா​கப் போட​லாம்.​ குவி​ய​லா​கப் போட்​டும் மக்க மக்க அள்​ள​லாம்..​ 1935-க்குப் பின் இங்​கி​லாந்து திரும்​பிய ஹோவார்டு இம்​மு​றைக்கு இந்​தூர் கம்​போஸ்​டிங் என்று பெய​ரிட்​டுத் தன் தாய்​நாட்​டை​யும் வளப்​ப​டுத்​தி​யுள்​ளார்.​ ஆயி​ரக்​க​ணக்​கான இங்​கி​லாந்து விவ​சா​யி​களை இயற்கை விவ​சா​யத்​துக்கு மாற்​றிய பெருமை இவ​ருக்கு உண்டு.​

இக்​கால ரசா​யன விஞ்​ஞா​னி​கள் இயற்கை விவ​சா​யத்தை எதிர்த்து என்ன பேசி​னார்​களோ ஹோவார்டு வாழ்ந்த அந்​தக் காலத்​தி​லும் பேசி​யுள்​ளார்​கள்.​ 1920-30 கால​கட்​டத்​தில் ரசா​யன உரம் விலை மலிவு.​ அதைக் கார​ணம் காட்டி மரத்​தூள்,​​ சாணம்,​​ வைக்​கோல் எல்​லாம் விலை அதி​கம் என்று ரசா​ய​ன​வா​தி​கள் கூறி​ய​தற்கு அவர் வழங்​கிய ஒரே பதில் இதுவே:​ ""இயற்கை எரு​வைப் பெறும் உரிமை மண்​ணுக்கு உள்​ளது.​ இந்த மண் உரி​மை​யைத் தட்​டிப் பறித்​தால் மண் இறந்​து​வி​டும்...'' மண் இறந்​து​வி​டும் என்​றால் அம்​மண்​ணில் நுண்​ணு​யி​ரி​கள் பூண்​டோடு அழி​யும் என்று பொருள்.​

ஹோ​வார்டை இத்​து​டன் நிறுத்​திக் கொண்டு ஷாட்​சின் கதை​யைத் தொடங்​கு​வோம்.​

ஆல்​பர்ட் ஷாட்ஸ் ஹோவார்டு காலத்​தில் வாழ்ந்த யூத-​ரஷிய விஞ்​ஞானி.​ நிற​வெ​றி​யால் இவர் தாத்தா ரஷி​யாவி​லி​ருந்து விரட்​டப்​பட்​டார்.​ அவர் அமெ​ரிக்​கா​வில் கனக்​டிக்​கட் மாநி​லத்​தில் போஸ்ரா என்ற சிற்​றூ​ரில் 140 ஏக்​க​ரில் ஒரு சிறு விவ​சா​யப் பண்​ணையை உரு​வாக்​கி​னார்.​ அமெ​ரிக்​கா​வில் 140 ஏக்​கர் நில​முள்​ள​வர் சிறு விவ​சாயி.​ அப்​போது சின்​னப்​பை​ய​னாக இருந்த ஷாட்​சுக்கு விவ​சா​யத்​தின்​மீது கொள்ளை ஆசை.​ விவ​சா​யம் என்​றால் அது மண்​ணைப் பற்​றிய படிப்பு என்று அச்​சி​று​வன் புரிந்​து​கொண்டு ராணு​வத்​தில் சேர்ந்து புளோ​ரிடா ராணுவ மருத்​து​வ​ம​னை​யில் பணி​பு​ரிந்​து​கொண்டே மண்​ணு​யி​ரி​யல்,​​ நுண்​ணு​யி​ரி​யல் ஆகிய துறை​க​ளில் ரட்​கர்ஸ் பல்​க​லைக்​க​ழ​கத்​தில் பிற்​கா​லத்​தில் முனை​வர் பட்​டம் பெறும் முன்பே,​​ ஸ்ட்​ரப்​டோ​மை​சீ​னைக் கண்​டு​பி​டித்​த​வர்.​ இவர் ஸ்ட்​ரப்​டோ​மை​சீ​னைக் கண்​டு​பி​டிப்​ப​தற்கு முன்பு உல​கில் அது​வரை காச​நோய்க்கு மருந்து இல்​லா​மல் கோடிக்​க​ணக்​கான மக்​கள் காச​நோய் வந்து இறந்​த​தாக வர​லாறு கூறும்.​ இவர் புளோ​ரிடா ராணுவ மருத்​து​வ​ம​னை​யில் பணி​பு​ரிந்து கொண்டே பல வகை​யான மண்​களை-​ ஏரி​மண்,​​ சேற்று மண்,​​ தோட்ட மண்,​​ ஆற்​றோர மண்,​​ அலை​யாத்தி மண் என்று சேக​ரித்து ஆராய்ந்​த​வண்​ணம் இருந்​த​போது ஒரு​வ​கை​யான குண​ப​நுண்​ணு​யி​ரி​க​ளைக் கண்​டு​பி​டித்​தார்.​ அது காச​நோய்க் கிரு​மி​யைக் கொல்​லுமா என்ற கேள்​வி​யு​டன்,​​ டூபர்​கு​ளோ​சிஸ் என்ற பாக்​டீ​ரி​யாக்​க​ளைப் பெற விரும்​பி​னார்.​ அப்​போது எந்த மருத்​து​வ​ரும் துணி​வு​டன் காச​நோய்க் கிரு​மியை ஆராய முன்​வ​ர​வில்லை.​ இவ​ருக்கு ஒரு​பா​தாள அறை ஒதுக்​கப்​பட்​டது.​ இரவு பக​லாக அந்​தப் பாதாள இருட்​ட​றை​யில் டூபர்​கு​ளோ​சிஸ் பாக்​டீ​ரியா காச​நோய்க் கிரு​மி​யைக் கையாண்டு,​​ அதைத்​தான் கண்​டு​பி​டித்த ஸ்ட்​ரப்​டோ​மை​சீன் காச​நோய் பாக்​டீ​ரி​யா​வைக் கொல்​வ​தை​யும் கண்​டு​பி​டித்து,​​ இந்த விஷ​யத்தை இவ​ருக்கு உத​வி​யாக இருந்த பேரா​சி​ரி​ய​ரி​டம் கூறி​னார்.​ அப்​போது ஷாட்ஸ் 23 வயது இளை​ஞர்.​ உல​கம் அறி​யா​த​வர்.​ இவர் யூதர்,​​ ரஷி​யர்,​​ மாண​வர் என்​றெல்​லாம் குறை கூறி ஸ்ட்​ரப்​டோ​மை​சீன் மருந்​தை​யும் அதன் விருத்​திக்​கான நுட்​பத்​தை​யும் மருந்து நிறு​வ​னத்​துக்கு அப்​பே​ரா​சி​ரி​யர் விற்​றுப்​ப​ணம் சம்​பா​தித்​தது மட்​டு​மல்ல,​​ நோபல் பரி​சை​யும் தட்​டிப் பறித்​தார்.​ பின்​னர் மிக​வும் போரா​டிய ஷாட்ஸ் குறைந்​த​பட்​சம் ஸ்ட்​ரப்​டோ​மை​சீன் தனது கண்​டு​பி​டிப்பு என்​ப​தைச் சான்​று​றுதி செய்​தார்.​ ஸ்ட்​ரப்​டோ​மை​சீன் என்​றால் "பின்​ன​லான காளான் நுண்​ணு​யிர்' என்று பொருள்.​ கோழி​யின் தொண்​டை​யில் இருந்த ஒரு பாக்​டீ​ரி​யாவை மண்ணி​லி​ருந்து பெற்ற காளான் நுண்​ணு​யி​ரி​யைக் கலந்து உரு​வான குண​பமே ஸ்ட்​ரப்​டோ​மை​சீன்.​ இவர் இந்த நுண்​ணு​யி​ரி​யைப் பெருக்​கிப் பயிர்​கள் மீது தெளித்​துப் பயிர்​க​ளுக்கு ​ வரும் பூசண நோய்,​​ பூச்சி நோய் ஆகி​ய​வற்​றை​யும் குணப்​ப​டுத்​தி​னார்.​

பிற்​கா​லத்​தில் ஷாட்ஸ் மண்​ணில் உள்ள கரி​ம​வி​ழு​தா​கிய ஹு​மஸ் பற்​றிய ஆய்​வி​லேயே முழுக்​க​வ​னத்​தை​யும் செலுத்​தி​னார்.​ ரசா​யன உரங்​கள் அறி​மு​க​மா​வ​தற்கு முன்பு மண்​ணில் உள்ள நுண்​ணு​யி​ரி​கள் பற்​றிய ஆராய்ச்​சியை ரஷி​யா​வின் பல்​க​லைக்​க​ழ​கங்​கள் மட்​டுமே மேற்​கொண்​டது.​ ஒரு பயி​ரைப் பற்​றிப் படிப்​ப​தற்கு முன் ​ ​

வேரின் கீழுள்ள மண்​ணைப் பற்​றிப் படிக்க வேண்​டும் என்​பது ரஷிய விஞ்​ஞா​னி​க​ளின் கருத்து.​ பெடா​லஜி என்ற துறை ரஷி​யா​வில் மட்​டுமே இருந்​தது.​ ஆனால் அவை ரஷிய மொழி​யில் இருந்​தன.​ ஷாட்ஸ் ரஷிய மொழி கற்று அத்​து​றை​யின் ஆய்​வு​க​ளை​யெல்​லாம் கரைத்​துக் குடித்து அமெ​ரிக்​கா​வில் இயற்கை விவ​சா​யம் பர​வக் கார​ண​மா​னார்.​

இவர் கூறிய ஒரு கருத்து இன்​றைய விஞ்​ஞா​னி​க​ளுக்​குப் பாடம் புகட்​டும்.​ ஆனால் ஷாட்ஸ் அன்​றைய வேளாண் விஞ்​ஞா​னி​க​ளைப் பற்றி இவ்​வாறு கூறி​யுள்​ளார்:​

""இன்று மண்​விஞ்​ஞா​னி​கள் என்று கூறும் பேரா​சி​ரி​யர்​க​ளின் செயல்​பா​டு​கள் வெட்​கக்​கே​டா​னது.​ நான் என்னை ஒரு மண்​விஞ்​ஞானி என்று கூறவே வெட்​க​மா​யுள்​ளது.​ மண்​ணில் ரசா​ய​னங்​களை இட்டு அந்த விளை​வைப் பயிர்​க​ளில் எடுத்​துக்​காட்​டும் செயற்​கைக்கு விவ​சா​யம் விலை​போய் விட்​டது.​ ஒரு மண்​விஞ்​ஞா​னிக்​கும் உழ​வி​யல் விளைச்​சலை மட்​டும் கணக்​குப் பார்க்​கும் பண்ணை நிர்​வா​கிக்​கும் என்ன வித்​தி​யா​சம்?​ மண் ஆய்வு என்​பது ரசா​யன உர நிறு​வ​னங்​கள் வழங்​கும் ஒரு பாடத்​திட்​ட​மா​கி​விட்​டது.​ ரசா​யன உர நிறு​வ​னங்​க​ளின் கொழுத்த லாபத்​துக்​கா​கவே வேளாண்​மைப் பல்​க​லைக்​க​ழ​கப் பேரா​சி​ரி​யர்​கள்,​​ விஞ்​ஞா​னி​கள் உழைக்​கின்​ற​னர்.​ மண் ஆராய்ச்​சிப் பட்​டப்​ப​டிப்​பு​கள் மண்​ணுக்கு உத​வா​மல் ரசா​யன உர நிறு​வ​னங்​க​ளின் வரு​மா​னத்​துக்கு உத​வு​கின்​றன.​ மண் விஞ்​ஞா​னி​க​ளுக்கு ரசா​யன உரக் கம்​பெ​னி​கள் கொழுத்த சம்​ப​ளம் தரு​கின்​றன.​ தேனில் விழுந்த ஈக்​க​ளைப்​போல் வேளாண்​மைப் பட்​டம் பெற்ற பேரா​சி​ரி​யர்​க​ளும் மாண​வர்​க​ளும் ரசா​யன உர ஊறல்​க​ளில் விழுந்​து​விட்​ட​னர்.​ ஆண்​டுக்கு ஆண்டு தலை​முறை தலை​மு​றை​யாக காலம் செல்​லச் செல்ல மண்​ணில் உள்ள குண​ப​ரச ஆய்வு-​மண்​வி​ழு​து​க​ளைப் பற்​றிய ஆய்வு மண்​ணில் உள்ள நுண்​ணு​யி​ரி​கள் பற்​றிய ஆய்வு ஆகிய அற்​புத விஷ​யங்​கள் கிடப்​பில் போடப்​பட்​டு​விட்​டன'' பிற்​கா​லத்​தில் ஷாட்ஸ் மண்​ணில் இருக்க வேண்​டிய லைகன் என்ற ஒரு​வ​கைப் பாசி உயி​ரி​யின் கரைக்​கும் ஆற்​றலை அறிந்து,​​ அது​போன்ற நுண்​ணு​யி​ரி​களே மண்​ணில் உள்ள உலோ​கச் சத்​தைக் கரைத்து உயர்ந்த விளைச்​சலை ஏற்​ப​டுத்​து​கின்​றன என்​றார்.​ மண்​ணில் நுண்​ணு​யி​ரி​கள் இருக்க வேண்​டும்.​ ரசா​ய​னம் இருக்க வேண்​டும் என்று கூறும் மண்​விஞ்​ஞா​னி​களை என்ன செய்​வது?​ இந்​தி​யா​வில் எல்லா மாநி​லங்​க​ளும் மர​பணு மாற்ற விதை​க​ளைப் புறக்​க​ணித்​துள்​ளன.​ கேரள அரசு மர​பணு மாற்ற விதைக்​குத் தடை விதித்து விட்​டது.​ எனி​னும்​கூட தமிழ்​நாடு பல்​க​லைக்​க​ழ​கப் பேரா​சி​ரி​யர் மாலிக்​யூ​லர் பயா​லஜி கற்​ற​வர்,​​ பி.ட்டி கத்​த​ரிக்​காய் விஷ​மில்லை என்​றும்,​​ அதில் உள்ள ஒரு பாக்​டீ​ரியா மண்ணி​லி​ருந்து எடுக்​கப்​பட்​டது என்​றும் கூறு​கி​றார்.

​ இன்று ஹோவார்டோ,​​ ஷாட்சோ உயி​ரு​டன் இருந்​தால் அந்​தப்ó பேரா​சி​ரி​ய​ருக்கு இவ்​வாறு பதில் வழங்​கி​யி​ருப்​பார்:​ ""மண்​ணுக்​குள் செய்ய வேண்​டிய உயிர் விஞ்​ஞா​னம் உயி​ரித்​தொ​ழில்​நுட்​பம்.​ அதை மண்​ணில்​தான் செய்ய வேண்​டும்.​ அதற்கு மர​பணு மாற்​றம் என்று மகு​டம் சூட்​டிப் பயிர் மீதும் விதை​மீ​தும் திணிக்​கக்​கூ​டாது.​ மண்​ணில் உள்ள நுண்​ணு​யி​ரி​கள் மண்​ணில்​தான் இருக்க வேண்​டும்.​ காலில் அணிய வேண்​டிய ஒன்றை யாரா​வது கழுத்​தில் மாலை​யா​கப் போட்​டுக் கொள்​வார்​களா?​...''
கட்டுரையாளர் : ஆர்.எஸ்.​ நாரா​ய​ணன்
நன்றி : தினமணி

காத்​தி​ருக்​கும் புதை​குழி

வர​லாறு என்​பது திட்​ட​மிட்டு நிக​ழக்​கூ​டி​ய​தல்ல.​ சொல்​லப்​போ​னால்,​​ மிகச் சாதா​ர​ண​மான அபத்​த​மான முடி​வு​கள்​தான் பெரும்​பா​லான சரித்​திர நிகழ்​வு​களை உரு​வாக்கி இருக்​கின்​றன.​ சமீ​பத்​தில் நடந்த இப்​ப​டிப்​பட்ட ஒரு நிகழ்வு இந்​தியா சம்​பந்​தப்​பட்​டது.​ கார​ணம்,​​ அமெ​ரிக்க வர​லாற்​றில் வியூக முக்​கி​யத்​து​வம் வாய்ந்த ஒரு முடிவை அறி​விக்​கும் முன் இந்​தி​யப் பிர​த​ம​ரு​டன் அந்​நாட்டு அதி​பர் உரை​யா​டி​யி​ருப்​ப​தைச் சாதா​ரண நிகழ்​வாக நம்​ம ôல் எடுத்​துக்​கொள்ள முடி​ய​வில்லை.​

ஆப்​கன் போரில் ஈடு​பட்​டி​ருக்​கும் அமெ​ரிக்​கத் துருப்​பு​க​ளின் எண்​ணிக்​கையை அதி​க​ரிப்​பது}​அதா​வது}​போரை மேலும் தீவி​ரப்​ப​டுத்​து​வது என்று வெள்ளை மாளிகை எடுத்​தி​ருக்​கும் முடிவை இப்​போது மதிப்​பி​டு​வது கடி​ன​மா​னது.​ இதைத் தவிர்த்து,​​ இப்​போ​தைக்கு அமெ​ரிக்​கா​வுக்கு வேறு நல்ல தெரி​வு​கள் ஏதும் இருப்​ப​தா​கத் தெரி​ய​வில்லை.​

அதே​ச​ம​யம்,​​ இந்​தப் போரில் அல்}​காயிதா மற்​றும் தாலி​பன்​க​ளின் வலைப் பின்​னல்​களை அறுக்க நேசப் படை​கள் பாகிஸ்​தா​னு​டன் கூட்​டணி அமைத்​தால் போதாது என்​கிற முடி​வுக்கு அமெ​ரிக்கா வந்​தி​ருக்​கி​றது.​ ராணுவ நட​வ​டிக்​கை​க​ளில்,​​ ஆளில்லா "காம்​பட் ட்ரோன்' தாக்​கு​தல் விமா​னங்​க​ளைப்​போல இந்​தி​யா​வும் கை கோர்க்க வேண்​டும் என்று அமெ​ரிக்க வியூ​க​வா​தி​கள் நினைக்​கி​றார்​கள்.​ இந்​தப் பின்​ன​ணி​யி​லேயே மன்​மோ​கன் சிங்}​ஒபாமா இடை​யே​யான உரை​யா​டல் நடந்​தேறி இருக்​கி​றது.​

உரை​யா​ட​லைத் தொடர்ந்து,​​ அமெ​ரிக்க அறி​விப்​புக்கு இந்​திய வெளி​யு​ற​வுத் துறை அமைச்​ச​கம் வெளி​யிட்​டி​ருக்​கும் வர​வேற்​பைப் பார்க்​கும்​போது அமெ​ரிக்​கா​வின் வியூ​கத்தை நோக்கி இந்​தியா நக​ரத் தொடங்​கி​விட்​ட​தா​கவே தோன்​று​கி​றது.​ ஒரு​வேளை ஆப்​க​னுக்கு இந்​தி​யப் படை​களை அனுப்ப நம் அரசு முடி​வெ​டுத்​தால்,​​ ராணுவ ரீதி​யா​க​வும் ராஜ​தந்​திர ரீதி​யா​க​வும் இந்​தியா எடுக்​கப்​போ​கும் மிக மோச​மான முடி​வு​க​ளில் ஒன்​றாக அது அமை​யு​யும்.​ சோவி​யத் ஒன்​றி​ய​மும் அமெ​ரிக்​கா​வும் கற்ற பாடங்​க​ளை​வி​ட​வும் மோச​மான பாடங்​களை இந்​தியா எதிர்​கொள்ள நேர்ந்​தால் ஆச்​ச​ரி​யப்​ப​டு​வ​தற்​கில்லை.​

ஆப்​கன் மீது 1979}ல் சோவி​யத் ஒன்​றி​யம் போர் தொடுத்​தது.​ ஏறத்​தாழ 10 ஆண்​டு​கள் நீடித்த அந்​தப் போரின் இறு​தி​யில் வலு​வான சோவி​யத் படை​கள் தோல்​வி​யைத் தழு​வின.​ அப்​பு​றம் 12 ஆண்​டு​கள் உள்​நாட்​டுப் போர்.​ பிறகு,​​ 2001 முதல் அமெ​ரிக்கா அங்கு போரிட்​டுக்​கொண்​டி​ருக்​கி​றது.​ ரஷி​யா​வும் சரி,​​ அமெ​ரிக்​கா​வும் சரி;​ ஆப்​க​னைப் பற்றி நினைத்​தது வேறு;​ நடந்​தது வேறு.​

முன்​ன​தாக,​​ ஆங்​கி​லேயே}​ஆப்​கா​னி​யப் போர்​க​ளில் ஆங்​கி​லே​யர்​க​ளுக்​கும் இப்​ப​டித்​தான் நேர்ந்​தது.​ புவி​யி​ய​லைப்​போ​லவே சிக்​க​லான சமூக இயக்​க​வி​ய​லைக் கொண்ட ஆப்​கன் ""ஏன் இந்த நாட்​டுக்​குள் காலடி எடுத்​து​வைத்​தோம்'' என்ற மோச​மான அனு​ப​வத்​தையே படை​யெ​டுத்த நாடு​க​ளுக்​கெல்​லாம் அளித்​தி​ருக்​கி​றது என்​பது சரித்​தி​ரம் புகட்​டும் பாடம்.​

ஆங்​கி​லே​யர்​க​ளும் ரஷி​யர்​க​ளும் தோல்​வியை ஒப்​புக்​கொண்​டார்​கள்.​ அமெ​ரிக்​கர்​கள் முடிந்த வரை மோதிப் பார்க்க முடி​வெ​டுத்​தி​ருக்​கி​றார்​கள்.​ அவ்​வ​ளவே.​

இந்​நி​லை​யில்,​​ இந்​தி​யப் படை​கள் ஆப்​க​னுக்​குள் நுழை​வது இந்​தி​யா​வுக்​குத் தேவை​யற்ற தலைவ​லியை உரு​வாக்​கும்.​ ஏதோ ஒரு காலை வேளை​யில் அமெ​ரிக்க விமா​னங்​கள் தன் துருப்​பு​க​ளைச் சுமந்து பல்​லா​யி​ரம் கி.மீ.​ தொலை​வுக்கு அப்​பால் பறந்த பின்​னர் இந்த வலி​யின் தீவி​ரத்தை இந்​தியா உணர வேண்​டி​யி​ருக்​கும்.​

கடந்த சில மாதங்​க​ளா​கவே இந்​திய எல்​லை​க​ளில் அதி​க​ரித்​து​வ​ரும் சீன அத்​து​மீ​றல்​கள்,​​ இந்​தி​யா​வின் அண்டை நாடு​க​ளில் நிறு​வப்​ப​டும் ராணுவ முக்​கி​யத்​து​வம் மிக்க சீனக் கட்​ட​மைப்​பு​கள் குறித்த செய்​தி​கள் ஒரு​வி​த​மான அச்​சத்தை உரு​வாக்கி வரு​கி​றது.​ இதை எதிர்​கொள்ள ""இந்​தியா ராணுவ ரீதி​யி​லான பலத்​தைப் பெருக்க வேண்​டும்;​ சீனா​வுக்​குப் பாடம் புகட்ட வேண்​டும்'' என்ற குரல்​கள் எழு​வ​தை​யும் பார்க்​கி​றோம்.​

ஆனால்,​​ இந்​தியா எங்கு தன் பலத்​தைப் பெருக்க வேண்​டும் என்​றால்,​​ முத​லில் ராஜ​தந்​திர வட்​டா​ரத்​தில்​தான்.​ கடந்த கால் நூற்​றாண்டு கால​மா​கத் தொடர்ச்​சி​யாக மிக மோச​மான முடி​வு​கள் எடுக்​கப்​பட்ட துறை நமது வெளி​யு​ற​வுத் துறை​யா​கவே இருக்​கும்.​ ஆகை​யால்,​​ இந்​தி​யர்​கள் முத​லில் தம் குரலை நம்​மு​டைய வெளி​யு​ற​வுக் கொள்​கைக்​காக எழுப்​பு​வதே பொருத்​த​மாக இருக்​கும்.​ தற்​போ​தைய தேவை​யும் அதுவே.​

அர​சனை நம்​பிப் புரு​ஷ​னைக் கைவிட்ட கதை​யாக,​​ அமெ​ரிக்​காவை நம்பி நாம் நமது தன்​னம்​பிக்​கை​யை​யும்,​​ தனித்​தன்​மை​யை​யும் கைவி​டு​கி​றோம் என்று அர​சை​யும்,​​ குறிப்​பாக,​​ வெளி​யு​ற​வுத் துறை​யை​யும் எச்​ச​ரிக்க விரும்​பு​கி​றோம்!
நன்றி : தினமணி