Monday, December 21, 2009

கூகுள் மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு

பிரபல கூகுள் நிறுவனம் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் சிக்கி உள்ளது. இதுகுறித்து வெளிவந்துள்ள செய்தியில், இன்டர்நெட் வருமானம் மூலம் கூகுள் நிறுவனம் 1.6 பில்லியன் பவுண்டுகள் சம்பாதித்ததாகவும், இதற்கான வரியை அந்நிறுவனம் கட்டவில்லை என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. 2008-ம் ஆண்டு பிரிட்டனில் சம்பாதித்த பணம் முழுவதையும் தனது அயர்லாந்து கிளைக்கு குறுக்கு வழியில் மாற்றி 450 மில்லியன் பவுண்ட் வரி செலுத்தாமல் சட்டப்பூர்வமாகவே தப்பித்துக் கொண்டது கூகுள் என்றும்
இந்த நிறுவனம் கடந்த ஆண்டு செலுத்திய வருமான வரி 141519 டாலர்கள் மட்டும்தான் என்றும், அதுகூட விளம்பர வருவாய் மீதான வரி இல்லை என்றும் அதில் கூறப் பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


No comments: