Friday, December 4, 2009

மாணவர்களுக்கு சிறப்புச் சலுகை: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்

மாணவர்களுக்கான சிறப்பு சலுகையை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் அறிமுகப் படுத்தி உள்ளது. இதன்படி, மாதாந்​திர கட்​ட​ண​மாக ரூ. 11 செலுத்தி, நாளொன்​றுக்கு 500 எஸ்​.எம்.​எஸ்.,​கள் வரை அனுப்​பலாம். இதுகுறித்து நிறு​வ​னத்​தின் தென் பிராந்​தி​யத் தலை​வர் அஜய் அவஸ்தி கூறும்போது, புத்தாண்டை ஒட்டி பல்வேறு சலுகைகளை அளிக்க உள்ளோம்.புதிதாக ரிலையன்ஸ் இணைப்பை பெறுபவர்களுக்கு ஒரு மாதத்திற்கு இலவச எஸ்.எம்.எஸ்., வசதி அளிக்கப் படும் என்று கூறினார். மேலும், கட்​ட​ணக் குறைப்​பில் வாடிக்​கை​யா​ளர்​கள் பய​ன​டை​யும் வகை​யில் மிகக் குறைந்த அளவு கட்​டண விகி​தத்தை ரிலை​யன்ஸ் நிர்​ண​யித்​துள்​ளது. செல்​போ​னில் பேச ஒரு விநா​டிக்கு ஒரு காசு திட்​டம் மட்​டு​மின்றி,​ ஒரு எஸ்​.எம்.​எஸ்.,க்கு ஒரு காசு கட்​ட​ணம் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இதற்கு மேலும் குறைப்​ப​தற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார். தமி​ழ​கத்​தில் மொத்​தம் 4.67 கோடி பேர் செல்​போன் உப​யோ​கிக்​கின்​ற​னர். இதில் ரிலை​யன்ஸ் நிறு​வ​னத்​தின் பங்​க​ளிப்பு 15 சத​வீ​தம் என்​றும் அவர் தெரி​வித்​தார்.
நன்றி : தினமலர்


விபரீதப் பாதையில் பள்ளி மாணவர்கள்!

பள்ளி மாணவர்களின் போக்கு குறித்து அண்மையில் வெளியான சில செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. அடிப்படைக் கல்வியை ஆர்வத்தோடு பயில வேண்டிய மாணவர்கள் சிலர், திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு போலீஸில் சிக்கியிருக்கிறார்கள்.

மதுரை சுப்பிரமணியபுரம், விளக்குத்தூண் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சைக்கிள்களைத் திருடியதாக 22 மாணவர்கள் அண்மையில் பிடிபட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் தாங்கள் படிக்கும் பள்ளியிலேயே சைக்கிள்களைத் திருடி, அவற்றை வேறு பள்ளிகளின் மாணவர்களுக்கு விற்றிருக்கிறார்கள். இவ்வாறு திருடப்பட்ட சைக்கிள்கள் அனைத்தும், மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச சைக்கிள்கள்.

சினிமா பார்க்கவும், ஆடம்பரச் செலவு செய்யவும் பணம் தேவைப்பட்டதால், சைக்கிள்களைத் திருடி விற்றதாக போலீஸ் விசாரணையில் மாணவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இதையடுத்து இந்த மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, கருணை உள்ளத்தோடு செயல்பட்டிருக்கிறார்கள் மதுரை போலீஸôர். திருட்டுப் புகார் தொடர்பாக மாணவர்கள் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை. அவர்களின் பெற்றோரை வரவழைத்து, அறிவுரை கூறி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

அத்துடன் நிற்காமல், மாணவர்கள் வழிதவறிச் செல்வதைத் தடுக்க பள்ளிகளில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் போலீஸôர் தெரிவித்திருக்கிறார்கள்.

இது இப்படியிருக்க, செங்கல்பட்டு அருகே உள்ள படாளத்தைச் சேர்ந்த நர்ஸ் விஜயபானு அண்மையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டிருக்கிறார் பிளஸ் 2 மாணவர் சாண்டில்யன். இந்தச் சம்பவத்தில், தனது நண்பருக்கு உதவுவதாகக் கருதி, அந்தப் பெண்ணின் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டதாகப் போலீஸ் விசாரணையில் தெரிவித்திருக்கிறார் சாண்டில்யன்.

பள்ளி மாணவர்களின் இத்தகைய செயல்கள், பிற்காலத்தில் சமூகவிரோத மற்றும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடத் தூண்டும் அளவுக்கு அவர்களை விபரீதப் பாதையில் கொண்டு சென்றுவிடும் அபாயம் இருப்பதை மறுத்துவிட முடியாது.

எனவே, இத்தகைய போக்கிலிருந்து மாணவர்களைத் திசை திருப்பி, அவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் கல்வி வளர்ச்சித் திட்டங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், இந்தியாவில் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கும் முதல் மாநிலம் தமிழகம் தான் என்றும் அரசு தெரிவிக்கிறது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் 100 பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு வருவதாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருக்கிறார்.

பள்ளிகளின் தரம் உயர்த்தப்படுவது அனைத்துத் தரப்பினராலும் வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான். அதே நேரத்தில் மாணவர்களின் தரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகளிலும் அரசு முனைப்புக் காட்ட வேண்டும்.

மாணவர்களின் படிக்கும் ஆர்வம், சிந்தனைத் திறன், படைப்புத் திறன் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் அந்த நடவடிக்கைகள் அமைய வேண்டும்.

அந்த வகையில், மாணவர்களின் படிக்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதத்திலும் நூலகத்தை நோக்கி மாணவர்களை ஈர்க்கும் விதத்திலும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு தெரிவித்திருக்கிறது. கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறுபவர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இந்த முயற்சி நல்ல பலனைத் தரும் என்று எதிர்பார்க்கலாம்.

அத்துடன், நமது கல்வியாளர்களும் பிரமுகர்களும் அடிக்கடி வலியுறுத்தி வருவதைப் போல பள்ளிகளில் மாணவர்களுக்கு நல்ல ஒழுக்கத்தைக் கற்றுத் தர வேண்டும். ஒழுக்கத்தின் மேன்மை குறித்து மாணவர்களுக்கு விளக்க வேண்டும். பள்ளிப் படிப்பு முடிந்து வெளியேறும் மாணவர்கள் ஒழுக்கம் மிக்கவர்களாக விளங்கும் வகையில் ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகத்தினரும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

இந்த விஷயத்தில் பெற்றோர்களின் பங்கைத் தட்டிக்கழிக்க முடியாது. தங்கள் பிள்ளைகளின் சேர்க்கையை (நட்பு வட்டாரம்) கண்காணித்து, தவறாக வழிநடத்தும் நண்பர்களை "கழற்றிவிடும்' வகையில் தொடர் முயற்சிகளைக் கண்டிப்புடன் மேற்கொள்ள வேண்டும்.

நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த தான், நன்கு கல்வி கற்றதால்தான் உயர்ந்த பதவியான பிரதமர் பதவிக்கு வர முடிந்தது என்று பெருமையோடு கூறுகிறார் நமது பிரதமர் மன்மோகன் சிங். அத்தகைய கல்வியின் மேன்மையை தங்கள் பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் உணர்த்த வேண்டும். அவர்களுக்கு நல்ல வழிகாட்டிகளாகத் திகழ வேண்டும்.
கட்டுரையாளர் :என். ஆர். ரவீந்திரன்
நன்றி : தினமணி

அர​சுப் பேருந்​து​க​ளின் அவ​லம்!

சில தினங்​க​ளுக்கு முன்பு தனி​யார் பேருந்​து​க​ளில் கட்​ட​ணம் உயர்த்​தப்​பட்​ட​தா​க​வும்,​ இத​னால் அதி​ருப்தி அடைந்த பய​ணி​கள் ஆட்​சி​ய​ரி​டம் மனு கொடுக்க,​ அவர் நட​வ​டிக்கை எடுக்க சம்​பந்​தப்​பட்ட துறை​யி​ன​ருக்கு உத்​த​ர​விட்​ட​தா​க​வும்,​ இதை​ய​டுத்து,​ கட்​ட​ணம் உயர்த்​தப்​பட்ட சில தனி​யார் பேருந்​து​க​ளில் மீண்​டும் பழைய கட்​ட​ணமே வசூ​லிக்​கப்​பட்​ட​தா​க​வும் பத்​தி​ரி​கை​க​ளில் செய்தி ஒன்று கண்​ணில்​பட்​டது.

​ ​ ​ ​அப்​போது,​ அர​சுப் பேருந்​து​க​ளில் முறை​யான அறி​விப்​பின்றி சில மாதங்​க​ளா​கக் கூடு​தல் கட்​ட​ணம் வசூ​லிக்​கப்​பட்டு வரு​வது நினை​வுக்கு வந்​தது. ஆட்​சி​ய​ரி​டம் மனு கொடுத்​த​தும்,​ தனி​யார் பேருந்​து​க​ளில் கூடு​தல் கட்​ட​ணம் குறைக்​கப்​ப​டு​கி​றது. ஆனால்,​ பொது​மக்​கள்,​ வியா​பா​ரி​கள்,​ பய​ணி​கள் என பல்​வேறு தரப்​பி​ன​ரும் பல​கட்ட போராட்​டங்​கள் நடத்​தி​யும் அர​சுப் பேருந்​து​க​ளில் ஏற்​றப்​பட்ட கட்​ட​ணங்​கள் இது​வரை குறைக்​கப்​பட்​ட​தா​கத் தெரி​ய​வில்லை.

​ ​ வாக்​கு​கள் மீது இருக்​கும் அச்​சம்​கூட வாக்​கா​ளர்​க​ளி​டம் தங்​க​ளுக்கு இல்லை என்​பதை சில மாதங்​க​ளுக்கு முன்பு நடை​பெற்ற தேர்த​லின்​போது ஆட்​சி​யா​ளர்​கள் நிரூ​பித்​ததை மக்​கள் அறி​வர். பொது​மக்​கள் மீது தேர்​த​லுக்கு உள்ள இரக்​கம்​கூட ஆட்​சி​யா​ளர்​க​ளி​டம் இல்​லையோ என எண்​ணத் தோன்​று​கி​றது.

​ ​ சில வழித்​த​டங்​க​ளில் இயங்​கும் பேருந்​து​க​ளில் அதி​கா​ரி​க​ளின் நாளொரு உத்​த​ர​வால்,​ பொழு​தொரு கட்​ட​ணம் வசூ​லிக்​கப்​ப​டு​வ​தால் ஏழை,​ எளி​யோர் பாதிக்​கப்​ப​டு​வது ஆட்​சி​யா​ளர்​க​ளின் பார்​வைக்​குத் தெரி​யாத பகல் நிலா.

​ ​ வரும் துன்​பங்​க​ளைச் சிறிது காலம் பொறுத்​துக் கொண்​டால் பின்பு அதுவே பழ​கி​வி​டும் என்​ப​து​போல ஏற்​றப்​பட்ட கட்​ட​ணங்​கள் பய​ணி​க​ளுக்​குப் பழ​கி​விட்​டன.

​ ​ போக்​கு​வ​ரத்​தைப் பொறுத்​த​வரை தனி​யா​ரின் சேவை அர​சின் சேவை​யை​விட திருப்​தி​க​ர​மாக உள்​ளது என்​பதே பெரும்​பான்​மை​யான பொது​மக்​க​ளின் கருத்து.

​ ​ நக​ரங்​கள்,​ கிரா​மங்​கள் என்ற வேறு​பா​டில்​லா​மல் தனி​யார் பேருந்​து​கள் எப்​போ​தும் பள​ப​ளப்​பும்,​ சுறு​சு​றுப்​பும் மாறா​தவை. ஆனால்,​ அர​சுப் பேருந்​து​களோ நக​ருக்​குள்​ளும்,​ பெரு நக​ரங்​க​ளுக்கு இடை​யே​யும் இயக்​கப்​ப​டும் பேருந்​து​கள் பள​ப​ளப்பு,​ தாழ்​த​ளம் என பல்​வேறு வச​தி​கள் கொண்​டவை. கிரா​மப்​பு​றங்​க​ளுக்கு இயக்​கப்​ப​டும் பஸ்​க​ளின் நிலை​மையோ டெபா​சிட் இழந்த வேட்​பா​ள​ரின் நிலை​மை​போல மிக​வும் பரி​தா​பம்.

​ ​ மழைக்​கா​லங்​க​ளில் ஒழு​கு​தல்,​ குறிப்​பிட்ட நேரத்​தைத் தாண்​டி​யும் தேநீர் குடித்​த​படி உலக நடப்​பைப் பேசிக் கொண்​டி​ருக்​கும் ஓட்​டு​நர்,​ நடத்​து​நர்​கள்,​ இந்த வழித்​த​டத்​தில் செல்​லாது,​ நிறுத்​தங்​க​ளில் நிற்​காது என குரல் உயர்த்​தும் அறி​விப்​பு​கள்...இவை​யெல்​லாம் அரசு பேருந்​து​க​ளில் பிர​சித்​தம். தனி​யார் பேருந்​து​க​ளிலோ இது​போன்ற குறை​கள் எண்​பது சத​வி​கி​தம் இல்லை என்றே கூற​லாம்.

​ ​ பய​ணி​க​ளின் நிலைமை,​ வயது போன்​ற​வற்றை அனு​ச​ரித்து நிறுத்​தங்​கள் இல்​லாத இடங்​க​ளில்​கூட இறக்​கி​வி​டு​தல்,​ அனைத்து நிறுத்​தங்​க​ளில் நின்​றா​லும் குறிப்​பிட்ட நேரத்​தில் இலக்கை அடை​தல் போன்​றவை தனி​யார் பேருந்​து​க​ளின் கூடு​தல் பலம்.

​ ​ மற்ற விஷ​யங்​க​ளில் எப்​ப​டியோ,​ அரசு பேருந்​து​கள் விஷ​யத்​தில் "வடக்கு வாழ்​கி​றது,​ தெற்கு தேய்​கி​றது' என்​பதே உண்மை என்​பதை தென் மாவட்ட மக்​கள் அறி​வர்.

​ ​ ஒட்​டடை,​ அகற்​றப்​ப​டாத குப்​பைக் கூளங்​கள்,​ உடைந்த ஜன்​னல் கண்​ணா​டி​கள்,​ நசுங்​கிய படிக்​கட்​டு​கள்,​ கிழிந்த இருக்​கை​கள்...என சில அர​சுப் பேருந்​து​க​ளின் அவ​லங்​கள் சொல்​லில் அடங்​கா​தவை.

சில பேருந்​து​க​ளில் சிலந்​தி​கள் போன்ற சின்​னச்​சின்ன ஜந்​துக்​கள் டிக்​கெட்​டும் எடுக்​கா​மல்,​ பஸ் பாஸýம் இல்​லா​மல் பய​ணிப்​ப​தைப் பார்த்​தால் பய​ணி​க​ளுக்​குப் பொறா​மை​கூட உண்​டா​க​லாம். வடக்​கில் ஓடி வய​தா​கித் தேய்ந்த பல பேருந்​து​கள் தெற்​கில் இயக்​கப்​ப​டு​கின்​றன என்ற குற்​றச்​சாட்டு இருப்​ப​தும் நினை​வில் கொள்​ளத்​தக்​கது.

மேலும்,​ அதிக எண்​ணிக்​கை​யில் இயக்​கப்​பட்டு வந்த நகர பேருந்​து​களை தாழ்​த​ளப் பேருந்​து​கள் ஓரங்​கட்டி விட்​ட​தால்,​ பய​ணி​கள் வேறு​வ​ழி​யின்றி தாழ்​த​ளப் பேருந்​து​க​ளில்​தான் செல்ல வேண்​டிய நிர்​பந்​தம். ஏறக்​கு​றைய தமி​ழ​கத்​தின் அனைத்​துப் பகு​தி​க​ளி​லும் இதே​நி​லை​தான்.

தனி​யாரா,​ அரசா என பொது​மக்​கள் அந்​த​நாள்​தொட்டு இந்​த​நாள்​வரை குழம்​பித் தவிக்​க​லாம். ஆனால்,​ அரசோ தெளி​வா​கவே உள்​ளது. இல்​லை​யெ​னில்,​ அர​சுப் பேருந்​து​க​ளில் கட்​ட​ணம் ஒன்​றி​ரண்டு ரூபாய்​கள் உயர்த்​தப்​பட்​ட​தற்​கா​கப் ​ பொது​மக்​கள் போரா​டிக் கொண்​டி​ருக்​கும்​போது,​ கோடிக்​க​ணக்​கான ரூபா​யைக் கொட்​டித்​தர மருத்​து​வக் காப்​பீட்​டுத் திட்​டத்​துக்கு தனி​யா​ரைத் தேர்வு செய்​யுமா அரசு?​
கட்டுரையாளர் :மா. ஆறு​முக கண்​ணன்
நன்றி : தினமணி

புதிய மொபைல் போன் 'நோக்கியா' அறிமுகம்

இ.மெயில் தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான அனைத்து விதமான நவீன வசதிகளுடன் கூடிய புதிய மொபைல் போனை நோக்கியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மொபைல் போன் துறையில், முன்னிலை வகிக்கும் நோக்கியா நிறுவனம் இ72 என்கிற புதிய மொபைல் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. நவீன வசதிகளுடன் கூடிய இந்த மொபைல் போனை தொழில் சார்ந்த தேவை களுக்கும், தனிப்பட்ட தேவைகளுக்கும் இ-மெயில் அனுப்ப பயன்படுத்திக் கொள்ளலாம். இது குறித்து, நிறுவனத்தின் தெற்கு மண்டல பொது மேலாளர் ஸ்ரீதர் கூறியதாவது: சோடியம் பிளாக், டோபாஸ் பிரவுன் ஆகிய நிறங்களில் கிடைக்கும். இந்த மொபைல் போன் எளிதாக கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மொபைலில் 250 எம்பி மெமரி, 5 மெகா பிக்ஸ் ஆட்டோ போகஸ் கேமரா, இரைச்சல் நீக்கும் தொழில் நுட்பம், அதிவேக பிராட்பேன்ட் இணைப்பு, மைக்ரோ மெமரி கார்டு ஆகியவை இதன் சிறப்பம்சங்கள். வழக்கமான மற்ற சேவைகளும் இதில் உண்டு. விலை 22 ஆயிரத்து 989 ரூபாய். இவ்வாறு ஸ்ரீதர் கூறினார்.
நன்றி : தினமலர்


வளைகுடா பணம் வரும் : கேரளாவுக்கு பாதிப்பு உண்டு

'துபாயில் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், வளைகுடா நாடுகளில் இருந்து பணம் பெறும் சில மாநிலங்களின் பொருளாதார நிலையில் பாதிப்பு ஏற்படலாம்' என, இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டது. துபாயில் அரசுக்கு சொந்தமான முதலீட்டு நிறுவனமான 'துபாய் வேர்ல்ட்' என்ற நிறுவனம், நிதி நெருக்கடியில் சிக்கி, தான் வாங்கிய பல லட்ச கோடிக்கணக்கான ரூபாய் கடனை, திருப்பி செலுத்த ஆறு மாத காலம் தவணை கேட்டது. துபாயின் இந்த பொருளாதார சூழ்நிலை குறித்த கேள்விக்கு பதிலளித்த இந்திய ரிசர்வ் வங்கி துணை கவர்னர் உஷா தோராட் கூறியதாவது: துபாயில் இருந்து வரும் பணத்தை நம்பியே நாட்டின் சில பகுதிகள் உள்ளன. அதனால், சில பாதிப்புகள் ஏற்படலாம். குறிப்பாக, வளைகுடா நாடுகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தின் மூலமே ஏராளமான வருவாய் பெற்று வந்தது கேரளா. துபாயின் பொருளாதார நெருக்கடி எந்த அளவுக்கு பாதிப்பை உண்டாக்கும் என்பதை நாம் காண வேண்டும். எனினும், துபாய் பொருளாதார நெருக்கடியால், இந்திய வங்கித் துறைகளுக்கு பாதிப்பு ஏற்படாது. எனவே, அதுபற்றி கவலைப்படத் தேவையில்லை.
இவ்வாறு உஷா கூறினார். பொதுத்துறை வங்கிகளில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில் உள்ள கம்பெனிக்கு 1,500 கோடி ரூபாய் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், பிரிட்டனைச் சேர்ந்த நான்கு வங்கிகள் இணைந்து, 'துபாய் வேர்ல்டு' நிறுவனத்திற்கு 24 ஆயிரம் கோடி ரூபாய் கடன் கொடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகி உள்ள செய்தியில், 'ராயல் பாங்க் ஆப் ஸ்காட்லாந்து, 4,800 கோடி ரூபாய் முதல் 9,600 கோடி ரூபாய் வரையும், எச்.எஸ்.பி.சி., ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு மற்றும் லாய்ட்ஸ் வங்கி ஆகியவை தலா 4,800 கோடி ரூபாயும் கடன் கொடுத்துள்ளன. ஆனால், இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கிகள் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை' என, தெரிவிக்கப்பட்டுள்ளது இதற்கிடையில், துபாயின் பொருளாதார நெருக்கடி குறித்து, 'டிவி' சேனல் ஒன்றிற்கு பேட்டி யளித்த சவுதி இளவரசர் அல்வாலீத் பின் தலால் கூறியதாவது: சர்வதேச வங்கிகளில் இருந்து பெறப்பட்ட வர்த்தக கடன்களுக்கு அரசு பொறுப்பல்ல. துபாய் வேர்ல்டு நிறுவனத்திற்கு கடன் வழங்கிய வங்கிகள் அதன் பாதிப்புகளையும் உணர்ந்திருக்க வேண்டும். கம்பெனிக்கு தரப்படும் கடன் மற்றும் அரசுக்கு தரப்படும் கடன் ஆகிய இரண்டையும் வேறுபடுத்தி பார்க்க இவர்களுக்கு தெரிய வேண்டும். இவ்வாறு அல்வாலீத் கூறினார்.
நன்றி : தினமலர்