Sunday, June 28, 2009

வீடுகளின் விலை மேலும் குறையும்

அடுத்த ஆண்டின் மத்தியில் வீடுகளின் விலை மேலும் பத்து சதவீதம் வரை குறைவதற்கு வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிசில் என்ற நிறுவனம், பொருளாதார மந்த நிலையால் நிலம் மற்றும் வீடுகளின் தேவை, அவற்றின் விலை போன்றவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த ஆய்வை மேற் கொண்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மும்பை, டில்லி உள்ளிட்ட பெருநகரங்களில் நான்கு ஆண்டுகளுக்கு முன் வரை, வீடுகளின் விலை இரண்டு மடங்கு அதிகரித்து காணப்பட்டது.
ஆனால், பொருளாதார மந்த நிலையால் வளர்ச்சி தடைபட்டதால், வீடுகளுக்கான தேவை பெரிதும் குறையத் துவங்கியது. இதன்காரணமாக, அவற்றின் விலையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த மார்ச்சில் 18ல் இருந்து 20 சதவீதம் வரை வீடுகளின் விலையில் சரிவு ஏற்பட்டது. பெருநகரங்களில் அதிகமான வீடுகள் விற்பனைக்கு தயாராக உள்ளன. இருந்தபோதும், அவற்றை வாங்குவதற்கு முன்பு போல் போட்டி எதுவும் இல்லை. இதனால், அடுத்த ஆண்டின் மத்தியில் வீடுகளின் விலை, மேலும் பத்து சதவீதம் அளவுக்கு குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி : தினமலர்