Tuesday, June 30, 2009

கச்சா எண்ணெய் விலை 72 டாலருக்கும் மேல் உயர்ந்தது

உலகின் எட்டாவது மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடான நைஜீரியாவில், அடிக்கடி ஆயில் உற்பத்தி நிலையங்களில் இருந்து வரும் பைப்லைன்களை மற்றும் பிளாட்பாரத்தை தீவிரவாதிகள் சேதப்படுத்தி விடுவார்கள். இதனால் எண்ணெய் கம்பெனிகளுக்கு கோடிக்கணக்கான டாலர்கள் நஷ்டம் ஏற்படுவதுடன் உற்பத்தியும் பாதிக்கப்படுவது வழக்கம். இப்போது அம்மாதிரியான பிரச்னை மீண்டும் எழுந்துள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 72 டாலருக்கும் மேல் உயர்ந்து விட்டது. அமெரிக்காவின் யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 1.08 டாலர் அதிகரித்து 72.57 டாலராக இருக்கிறது. லண்டனின் பிரன்ட் நார்த்ஸீ குரூட் ஆயில் விலை 1.21 டாலர் அதிகரித்து 72.20 டாலராக இருக்கிறது.
நன்றி : தினமலர்


எம்.டி.என். நிறுவனத்துடன் இணைவது குறித்து புதிதாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை : சுனில் மிட்டல்

தென் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய செல்போன் நிறுவனமான எம்.டி.எம்.,உடன் இணைவது குறித்து நாங்கள் புதிதாக பேச்சவார்த்தை ஏதுவும் நடத்தவில்லை என்று பார்தி ஏர்டெல்லின் சேர்மன் சுனில் மிட்டல் தெரிவித்தார். ஆனால் அதை அவர் மறுக்கவும் இல்லை. மேலும் இது குறித்து நாங்கள் இந்திய மற்றும் ஆப்பிரிக்க அரசாங்கத்துடனும் இதுவரை பேச்சுவார்த்தை எதையும் நடத்தவில்லை என்றார். ஆனால் எப்போது நாங்கள் அவர்களை அனுகுகிறோமோ, அப்போது அவர்களிடமிருந்து எங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று சொன்னார் மிட்டல். லண்டனில் நடக்கும் சர்வதேச தொழில் அதிபர்கள் கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்திருக்கும் அவர் இதனை தெரிவித்தார். இந்தியாவின் மிகப்பெரிய மொபைல் நிறுவனமான பார்தி ஏர்டெல்லும் தென் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய மொபைல் நிறுவனமான எம்.டி.எம்.,மும் இணைந்து, உலக அளவில் மூன்றாவது மிகப்பெரிய மொபைல் நிறுவனமாக உருவாக முடிவு செய்து, அதற்கான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை யை நடத்தியிருக்கின்றன. இந்த இருவரும் இணைந்தால் அவர்களுக்கு மொத்தம் 20 கோடி சந்தாதாரர்கள் இருப்பார்கள். அவர்களது மொத்த வருமானமும் 20 பில்லியன் டாலராக இருக்கும்.
நன்றி : தினமலர்