Showing posts with label வர்த்தகம். Show all posts
Showing posts with label வர்த்தகம். Show all posts

Tuesday, January 5, 2010

கொடிகட்டி பறக்குது 'ஸ்டெம் செல்' வர்த்தகம்: ஒரே ஆண்டில் 100 கோடி ரூபாயை எட்டியது

சமீபகாலமாக பிரபலம் அடைந்து வரும், 'ஸ்டெம் செல்' சிகிச்சைக்காக தொப்புள் கொடி, 'செல்'கள் சேமிக்கப்படுகின்றன. இதற்கான சேமிப்பு வங்கிகளின் வர்த்தகம், 100 கோடி ரூபாயையும் தாண்டியுள்ளது. தொப்புள் கொடி ரத்தத்தின் மூலம் வளரும், 'செல்'களை பயன்படுத்தி, உடலில் செயலிழந்த பகுதிகளில் காணப்படும் பழுதடைந்த செல்களை நீக்கிவிட்டு, புது செல்களை புகுத்தும், 'ஸ்டெம் செல்' சிகிச்சை முறைக்கு தற்போது பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே, 'ஸ்டெம் செல்' சிகிச்சை முறை வெகுவாக பிரபலமடைந்துள்ளது. இதனால், 'ஸ்டெம் செல்' சேமிப்பு வங்கிகளின் வர்த்தகமும் அதிகரிக்க துவங்கியது. அதிக விலைக்கு இந்த, 'செல்'கள் விற்பனை செய்யப்படுவதால், பெரும்பாலானோர் தங்கள் குழந்தைகளின் தொப்புள் கொடி ரத்தத்தை சேமிப்பு வங்கிகளின் மூலம் சேமிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். நரம்பியல் பிரச்னை உள்ளிட்ட அதிகமான குடும்ப வியாதிகளுக்கு இது ஒரு மாற்று சிகிச்சை முறை. இதனால், இந்த தொப்புள் கொடி ரத்தம் சேமிப்பு விரைவான வளர்ச்சி கண்டுள்ளது. 'ஸ்டெம் செல்' சிகிச்சை முறையில், உடலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பழுதடைந்த செல்களை அப்புறப்படுத்திவிட்டு, புதிய செல்களை உடலுக்குள் செலுத்த வேண்டும். இந்த செல்கள் வேண்டி வங்கிகளை நாடும் தனியாருக்கு பொருத்தமான செல்கள், 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.

'ஸ்டெம் செல்' தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், பல நிறுவனங்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக செல் உற்பத்தி செய் யும், 'கார்டு பிளட்' சேமிப்பு மற்றும் விற்பனையில் இறங்கிவிட்டன. டில்லியைச் சேர்ந்த, 'ஸ்டெம் செல்' குளோபல் பவுண்டேஷன் என்ற அமைப்பின் ஆய்வுப்படி, 'ஸ்டெம் செல்' சேமிப்பு வங்கிகளில் 100 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்து வருவது தெரியவந்துள்ளது. இது ஆண்டு வளர்ச்சியில் 35 சதவீதமாகும். இந்த ஆண்டில் இதன் வர்த்தகம் 140 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடுமையான நோயால் பாதிக்கப் பட்ட பல லட்சம் நோயாளிகளுக்கு, 'ஸ்டெம் செல்' சிகிச்சை முறை ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதே இந்த வளர்ச்சிக்கு காரணம் என்று, 'ஸ்டெம் செல்' ஆராய்ச்சி பவுண்டேஷன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
நன்றி : தினமலர்


Monday, December 14, 2009

விலை உயர்​வுக்​கு முன்பேர வர்த்தகம் காரணம் அல்ல

விலை உயர்​வுக்​கும் முன்​பேர வர்த்​த​கத்​துக்​கும் தொடர்​பில்லை என்று என்.​சி.​டி.​இ.​எக்ஸ் முன்பேர நிறு​வ​ன நிர்​வா​கத் தலை​வர் ஆர்.​ ராம​சே​ஷன் தெரி​வித்​தார். சென்​னை​யில் செய்​தி​யா​ளர்​க​ளி​டம் பேசிய அவர், அத்​தி​யா​வ​சி​யப் பொருள்​க​ளின் விலை உயர்​வைக் கட்​டுப்​ப​டுத்த அரசு உண​வுப் பொருள்​க​ளான பருப்பு,​​ சர்க்​கரை ஆகி​ய​வற்றை முன்​பேர வர்த்​த​கத்​தில் ஈடு​ப​டுத்த தடை விதித்​தது.​ ஆனால் தடை விதிக்​கப்​பட்ட பிறகு இவற்றின் விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு முக்​கி​யக் கார​ணமே தேவைக்​கேற்ப உற்​பத்தி இல்​லா​த​து​தான்.​ வெளி​நா​டு​க​ளில் முன்​பேர வர்த்​த​கத்​துக்கு ஒரு​போ​தும் தடை விதிப்​பது கிடை​யாது.​ அங்கு 100 ஆண்​டு​க​ளுக்​கும் மேலாக முன்பேர வர்த்​தக நடை​முறை உள்​ளது.​ இத்​த​கைய சூழல் இந்​தி​யா​வில் உரு​வாக இன்​னும் பல ஆண்​டு​கள் ஆகும். முன்​பேர வர்த்​த​கம் தொடர்​பான விழிப்​பு​ணர்வை தொடர்ந்து என்​சி​டி​இ​எக்ஸ் ஈடுபட்டு வரு​கி​றது.​ இத​னால் முன்​பேர வர்த்​த​கத்​தில் ஈடு​ப​டு​வோ​ரின் எண்​ணிக்​கை​யும் கணி​ச​மாக உயர்ந்து வரு​கி​றது. முன்​பேர வர்த்​த​கத்​தால் நுகர்​வோ​ருக்கு மட்​டு மின்றி விவ​சா​யி​க​ளுக்​கும் கூடு​தல் விலை கிடைக்​கும் என்​றும் ராம​சே​ஷன் தெரிவித்தார்.
என்​சி​டி​இ​எக்ஸ் 2003ம் ஆண்டி​லி​ருந்து முன்​பேர வர்த்​த​கத்​தில் ஈடு​பட்​டுள்​ளது.​ இதை கனரா வங்கி,​​ கிரி​சில்,​​ இஃப்கோ,​​ நபார்டு,​​ தேசிய பங்​குச் சந்தை,​​ எல்​ஐசி,​​ பஞ்​சாப் நேஷ​னல் வங்கி,​​ கோல்ட்​மேன் சாஷ்,​​ இன்​டர்​நே​ஷ​னல் எக்ஸ்​சேஞ்ச்,​​ ரேணுகா சுகர்ஸ் ஆகிய நிறு​வ​னங்​கள் இணைந்து தொடங்​கி​யுள்​ளன.​ இந்​நி​று​வ​னத்​தில் 5 லட்​சம் வாடிக்​கை​யா​ளர்​கள் உள்​ள​னர்.​ இந்​நி​று​வ​னம் 39 வேளாண் உற்பத்தி பொருட்​கள்,​ 6 உலோ​கங்​கள்,​​ 3 பாலி​மர்​கள்,​​ 4 எரி​சக்தி பொருள்​கள் உட்பட 59 பொருட்​க​ளின் முன்​பேர வர்த்​த​கத்​தில் ஈடு​பட்​டுள்​ளது.​ நாடு முழு​வ​தும் 700 மையங்​க​ளில், இருபதாயிரம் டெர்​மி​னல்​க​ளு​டன் செயல்​ப​டு​கி​றது.​ ​
நன்றி : தினமலர்


Tuesday, November 24, 2009

காட்பரி நிறுவனத்தை வாங்க கடும் போட்டி

பிரிட்டிஷின் புகழ்பெற்ற சாக்லேட் தயாரிப்பு நிறுவனமான காட்பரி விற்பனைக்கு வருகிறது. இதனை வாங்க சர்வதேச நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. காட்பரி நிறுவனத்துக்கு 16.5 பில்லியன் டாலர் வரை தர க்ராப்ட் புட்ஸ் முன்வந்துள்ளது. ஆனால் இப்போது அமெரிக்காவின் ஹெர்ஷே நிறுவனமும் களத்தில் குதித்துள்ளதால், போட்டி கடுமையாகியுள்ளது. க்ராப்ட் புட்ஸ் நிறுவனத்தைவிட 0.5 பில்லியன் டாலர் அதிகம் தர ஹெர்ஷே முன் வந்துள்ளது. ஆனால் இதுகுறித்து இன்னும் வாய்திறக்காமல் உள்ளது காட்பரி. இந்நிலையில் காட்பரியை வாங்க தங்களுக்கும் விருப்பமுள்ளது என்று அறிவித்துள்ளது புகழ்பெற்ற நெஸ்லே நிறுவனம். காட்பரி நிறுவனத்தை வாங்க நெஸ்லே, 18 பில்லியன் டாலர் வரை தரவும் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.
நன்றி : தினமலர்


Saturday, October 17, 2009

சீன பட்டாசுகளால் சிவகாசியில் பட்டாசு தொழில் பாதிப்பு

சீனாவிலிருந்து கடத்தப்பட்டு இந்தியாவுக்குள் கொண்டு வரப்படும் பட்டாசுகளால் சிவகாசியில் பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிவகாசியில் தான் நாட்டிலேயே அதிக அளவிலான பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. ஆண்டுக்கு சுமார் ரூ. 3,000 கோடி மதிப்பிலான பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. இது இந்தியாவின் மொத்த பட்டாசு உற்பத்தியில் 90 சதவீதம் ஆகும். இவற்றில் 5 முதல் 10 சதவீத பட்டாசுகள் ஏற்றுமதி செய்யபடுகின்றன. இந்நிலையில் சீனாவிலிருந்து முறைகேடாக கொண்டு வரப்பட்டு விற்கப்படும் பட்டாசுகளால் சிவகாசியில் பட்டாசுத் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இந்திய-சீன எல்லை மற்றும் நேபாளம், பங்களாதேஷ் எல்லைகள் வழியாக நாட்டுக்குள் கொண்டு வரப்படும் சீன பட்டாசுகள், வட மாநிலங்களிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்தக் பட்டாசுக் கடத்தலைத் தடுக்க மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி : தினமலர்


Wednesday, October 14, 2009

அங்கே குறையுது; இங்கே 'இறங்க' மறுக்குது தங்கம்!

அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மாற்று மதிப்பு சற்று குறைந்தாலும், இந்தியாவில் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. சமீபகாலமாகவே, சர்வதேச அளவில் அவுன்ஸ் (31 கிராம்) தங்கம் விலையில் சரிவு கண்டு வந்துகொண்டிருக்கிறது. எனினும், இந்தியாவில் இதன் தாக்கம் காணப்படவில்லை. 'சர்வதேச அளவில் தங்கத்தின் விலை சரிந்தாலும், இந்தியாவில் தங்கத்தின் விலை குறைய இனி வாய்ப்பில்லை' என, சந்தைப் பொருட்கள் ஆராய்ச்சி வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மும்பையில், 10 கிராம் தங்கத்தின் விலை 15 ஆயிரத்து 855 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதனால், தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை, இந்தியாவில் குறைந்துள்ளது.

மும்பையில், சந்தீப் ஜுவல்லரி உரிமையாளர் உத்தம் லோதா கூறியதாவது: திருவிழாக் காலங்களில், கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு நகை விற்பனை 30 முதல் 40 சதவீதம் குறைந்து விட்டது. தசரா காலத்தில், மக்கள் நகை வாங்க மாட்டார்கள். தீபாவளி போனஸ் பெற்றுள்ளவர்கள், தற்போது நகை வாங்குகின்றனர். திருமணத்திற்கு நகை வாங்குவோர், அவர்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப, நகை வாங்குகின்றனர். இவ்வாறு லோதா கூறினார். 'எங்கள் பட்ஜெட்டில், கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு குறைந்த அளவு நகையே வாங்க முடிகிறது. கடந்தாண்டை விட, அதிகபட்சம் 2,000 ரூபாய் வரை சவரன் விலை எகிறி விட்டது.


அதனால், அதிக விலை கொடுத்து குறைந்த சவரன் வாங்க வேண்டிய நிலை உள்ளது' என்று வாடிக்கையாளர்கள் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது. எனினும், விற்பனை சரியவிடாமல் பார்த்துக்கொள்ள நகைக் கடை உரிமையாளர்கள், தற்போது, குறைந்த எடையில், 'பார்வையாக' உள்ள பல்வேறு டிசைன் நகைகளைச் செய்ய, 'ஆர்டர்' கொடுக்கின்றனர். கடந்த ஒரு மாதமாகவே, குறைந்த எடை நகைகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. 'தங்கத்தின் விலை ஏற ஏற, குறைந்த எடை நகைகளை வாங்க, மக்கள் தயாராகி விடுவர். பழைய நகைகளைப் போட்டு, குறைந்த எடை நகைகளை வாங்க, மும்பை மக்கள் தயாராகி விட்டனர்; பல உலோகங்கள் கலந்த தங்க நகை, சுத்தமான வெள்ளி நகைகளை வாங்கவும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்' என, இந்திய நகை பயிற்சி நிறுவன இயக்குனர் வேதாந்த் ஜாட்டியா கூறியுள்ளார்.


இன்னும் சில நாட்களுக்கு தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்காது என்றாலும், குறைந்தது 15 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 17 ஆயிரம் ரூபாய் வரை, சவரன் தங்கம் விலை ஏற்றம் காண வாய்ப்பு உள்ளது என்பது தான் வல்லுனர்கள் கருத்து.

நன்றி : தினமலர்


Friday, September 4, 2009

சர்க்கரை விலை உயர்வை தடுக்க நடவடிக்கை

சர்க்கரை விலை உயர்வை தடுக்கும் விதமாக தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக 20.45 லட்சம் டன் சர்க்கரை ஒதுக்கி வைக்க மத்திய அரசு முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இனி வரும் மாதங்கள் அதிகம் பண்டிகைகள் நிறைந்த மாதங்கள் என்பதால், சர்க்கரையின் தேவை அதிகம் ஏற்படும். கரும்பை விட கோதுமை உள்ளிட்டவைகளுக்கு அதிக கொள்முதல் விலை கொடுக்கப் படுவதால், விவசாயிகள் அதிகமாக கரும்பு பயிரிடுவதை நிறுத்தி உள்ளனர். இதனால் இந்தியாவில் சர்க்கரை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கியூபா உள்ளிட்ட வெளிநாடுகளிடம் இருந்து ‌சர்க்கரை இறக்குமதி செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. இதனால், சர்க்கரை விலை அதிகளவு உயர வாய்ப்புள்ளது. இதனை தடுக்கும் விதமாக மத்திய அரசு விற்பனைக்காக செப்டம்பர் மாதத்திற்கு 20.45 லட்சம் டன் சர்க்கரை ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் 18.34 லட்சம் டன் வெளி சந்தையிலும், 2.11 லட்சம் டன் ரேஷன் கடைகளிலும் விற்பனை செய்யப் படும்.
நன்றி : தினமலர்


Tuesday, August 18, 2009

லட்சம் வாட்ச் விற்பனை: டைட்டன் பெரும் சாதனை

இந்தியாவின் முதன்மையான வாட்ச் நிறுவனமான டைட்டன், எக்ஸ்சேஞ்ச் ஆபர் அறிவித்துள்ளது.
இதுகுறித்து டைட்டன் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:சென்ற மாதம் 23ம் தேதி முதல் வரும் 23ம் தேதி வரை, டைட்டன் நிறுவனம் எக்ஸ்சேஞ்ச் ஆபர் அறிவித்துள்ளது.
டைட்டன் நிறுவனத்தின் ஐந்தாவது எக்ஸ்சேஞ்ச் ஆபரான இது, பெரியளவில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில், 20 லட்சம் மக்கள், டைட்டன் நிறுவனத்தின் எக்ஸ்சேஞ்ச் ஆபரால் பயனடைந்துள்ளனர்.
இந்தாண்டு எக்ஸ்சேஞ்ச் ஆபர் அறிவிக்கப்பட்ட, முதல் 15 நாட்களில், இரண்டு லட்சம் வாட்சுகள் விற்பனை ஆகி உள்ளன. சூரத், பரோடா, நாக்பூர், ஜாம்ஷெட்பூர், ராஞ்சி,ராய்பூர் மற்றும் புவனேஸ்வர் உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களிலும், டைட்டன் நிறுவன எக்ஸ்சேஞ்ச் ஆபர் பெரியளவில் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த எக்ஸ்சேஞ்ச் ஆபரில், 'நெபுலா-18 கேரட் சாலிட் கோல்ட் வாட்ச்' வாங்கும் வாடிக் கையாளர்களுக்கு, 'ஹெரிட்டேஜ் வாட்ச்' இலவசம் உட்பட பல சலுகைகள் வழங்கப்படு கின்றன.
நன்றி : தினமலர்


Monday, August 17, 2009

பொருளாதார நிதிச்சுழல் தாக்கத்தால் ஆன்லைன் விளம்பர வர்த்தகத்தில் சரிவு

பொருளாதார நிதிச்சுழல் தாக்கத்தால் ஆன்லைன் விளம்பர மார்க்கெட்டிங் துறையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த நிதியாண்டில் ஆன்லைன் விளம்பர வர்த்தகம் சொர்ப்ப வளர்ச்சியையே கண்டது. இது குறித்து நவுக்ரி டாட் காம் நிறுவனத்தின் சி.இ.ஓ., சஞ்சீவ் பிக்சாண்டனி கூறுகையில்: ஆன்லைன் விளம்பர வர்த்தகம் ஆண்டுக்கு 20 முதல் 25 சதவீதம் வளர்ச்சியை சந்தித்து வந்தது. ஆனால் கடந்த 2008-2009ம் நிதி ஆண்டில் இந்த வளர்ச்சியில் சுணக்கம் ஏற்பட்டது. நடப்பு நிதி ஆண்டிலும் இந்த மந்த நிலை தொடர்கிறது என்றார். பிரிண்ட் மீடியாவை விட அதி வேகமாக வளர்ந்து வந்த ஆன்லைன் விளம்பர வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சரிவு குறித்து இந்தியன் ஸ்கூல் ஆப் பிசினஸ் - ஐதராபாத்தில் நடந்த கருத்தரங்கில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நன்றி : தினமலர்


புது மாடல்கள்; தாராள கடன் வசதியால் விற்பனை ஜோர்*மாருதி, ஹுண்டாய்க்கு மவுசு

புது மாடல் கார்களின் வரவு அதிகமாக உள்ளது. மேலும், அவற்றை வாங்க வங்கிக் கடன் கட்டுப்பாடுகளும் நீங்கி வருகின்றன. இதனால், நான்கு சக்கர வாகனங்களின் விற்பனை மீண்டும் சூடு பிடித்துள்ளது.கடந்த மாதம் கார்கள் விற்பனை 31 சதவீதம் உயர்ந்துள்ளது. ஜூலை மாதத்தில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் கார்கள் விற்கப் பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே மாதத்தில்87,901 ஆக இருந்தது என்று, மோட்டார் வாகன உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மாருதி நிறுவனத்தில் இருந்து 'ரிட்ஸ்', பியட் மூலம்'பன்ட்டோ', ஹுண்டாயின்'ஐ-20', ஹோண்டாவின் 'ஜாஸ்' ஆகிய புதிய மாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. எளிதில் கிடைக்கும் வங்கிக் கடன்கள், அரசின் வரிச்சலுகை ஆகியவற்றால் தான், கார் விற்பனை அதிகரித்துள்ளது என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
வாகன விற்பனை, பொதுவாக அக்டோபர்-டிசம்பர் மாதங்களில் உச்சத்தில் இருக்கும். பண்டிகைகள், விழாக்கள் நடைபெறும் காலம் அது. இந்த ஆண்டு விழாக்கள் பெரும்பாலும் செப்டம்பரில் துவங்குவதால், விற்பனையாளர்கள் முன்னரே, கார்களை அதிக அளவில் இருப்பு வைக்கத் துவங்கி விட்டனர்.கார் ஏற்றுமதியிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஏற்றுமதி 22 சதவீதம் உயர்ந்துள்ளது. மாருதி, ஹுண்டாய் நிறுவனங்களில் இருந்து 33,506 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன. வாகன மொத்த ஏற்றுமதி 5 சதவீதம் உயர்ந்துள்ளது. ஒரு லட்சத்து 39 ஆயிரம் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
நன்றி : தினமலர்


Wednesday, August 12, 2009

இந்தியா புல்ஸ் ஷேர் டிரேடிங் நிறுவன துணை தலைவர் கைது

இந்தியாபுல்ஸ் ஷேர் டிரேடிங் நிறுவனத்தின் துணை தலைவர் சித்தார்த்த தாகா கைது செய்யப்பட்டுள்ளார். ஆன்லைன் மூலம் ஷேர் டிரேடிங்கில் மோசடி செய்த குற்றத்துக்காக சித்தார்த்தை போலீசார் கைது செய்துள்ளதாக தெரிகிறது. சித்தார்த் அரவது நிறுவனத்தில் பணிபுரியும் சார்டர்ட் அக்கவுண்டன்ட் ஒருவரின் டிரேடிங் அக்கவுண்ட் மூலம் முறைகே‌டாக வர்த்தகத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 6ம் தேதியன்று நடந்த வர்த்தகத்தின் ‌போது ஒரு குறிப்பிட்ட பங்கின் மீதான வர்த்தக பரிமாற்றத்தில் மட்டும் 46 லட்சம் மோசடி செய்துள்ளார் சித்தார்த். இந்த ஊழலில் சித்தார்த்தின் சக ஊழியர்களுக்கு பங்கு இருக்குமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோச‌டியால் பாதிக்கப்பட்ட சார்டர்ட் அக்கவுண்டன்ட சக்ரபர்த்தி , தனது அக்கவுண்ட‌ை ஆக்சரு் செய்ய முடியாமல் போனதால் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் வங்கியை அணுகிய போது, அவரது அக்கவுண்டை பயன்படுத்தி வர்த்தகம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
நன்றி : தினமலர்


Tuesday, August 11, 2009

பிக் பஜாரில் 5 நாள் 'மகா பாசட்' தள்ளுபடி

இந்தியாவின் மிகப் பெரிய ஹைபர் மார்க்கெட்டான பியூச்சர் குரூப்பின், பிக் பஜார் சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசியளவிலான ஐந்து நாள் 'மகா பாசாட்' தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது.
நாளை முதல் தொடங்கி, வரும் 16ம் தேதி வரை, ஐந்து நாட்கள் நாடு முழுவதிலும் உள்ள 116 பிக் பஜார் ஸ்டோர்களிலும், இந்த தள்ளுபடி விற்பனை நடைபெறும். இந்திய வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான ஷாப்பிங் அனுபவத்தை கொடுக்கும் வகையில், பிக் பஜார் நிறுவனம், இந்த தள்ளுபடி விற்பனையை அளிக்கிறது. இந்த தள்ளுபடி விற்பனை, பிக் பஜார் ஸ்டோர்கள் போன்றே பர்னிச்சர் பஜார், ஹோம் பஜார், நவராஸ் மற்றும் ஒன் மொபைல் ஸ்டோர்களிலும், கிடைக்கும்.
இந்த தள்ளுபடி குறித்து பிக் பஜார் கான்சப்ட் தலைவர், சதாசிவ் நாயக் கூறுகையில், 'இது நான்காவது ஆண்டு தள்ளுபடி விற்பனை. ஐந்து நாள் 'மகா பாசாட்' நாடு முழுவதிலும் உள்ள பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் ஷாப்பிங்கை மதிப்புடையதாகும். இந்த 'மகா பாசாட்' சலுகையை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதற்காக, கடந்த ஆறு மாதங்களாக திட்டமிட்ட பின் அறிவித்தோம்' என்றார்.
இந்த தள்ளுபடியில், 3,990 ரூபாய் விலையில், போர்பஸ் யுவி வாட்டர் பியூரிபையர், 22 காரட் ஹால்மார்க் தங்க நகைகள் செய்கூலியில், 50 சதவீதம் தள்ளுபடி, நோக்கியா மொபைல் போன்களுக்கு எம்.ஆர்.பி.,விலையில் இருந்து 20 சதவீதம் தள்ளுபடி உட்பட பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.
நன்றி : தினமலர்


Monday, August 3, 2009

ஓ.என்.ஜி.சி.,யில் இருந்து ரூ.5,300 கோடிக்கு ஆர்டர் பெற்றது எல் அண்ட் டி

இந்தியாவின் மிகப்பெரிய இஞ்சினியரிங் கம்பெனியான எல் அண்ட் டி., அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி.,யிடமிருந்து ரூ.5,300 கோடிக்கு இரண்டு ஆர்டர்களை பெற்றிருக்கிறது. மும்பையில் செயல்படுத்த இருக்கும் ஆஃப்ஷோர் ஹைட்ரோகார்பன் திட்டத்தின் இரண்டு ஆர்டர்கள் எல் அண்ட் டி.,க்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. மும்பை ஹை நார்த் பிராசஸ் ஃபிளாட்ஃபார்ம் திட்டத்தில், அங்குள்ளவர்களுக்கு குடியிருப்பு கட்டும் திட்டம் ஆகியவற்றின் ஆர்டர் எல் அண்ட் டி.,க்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் பிராசஸ் கேஸ் கம்பரசன் மோடுல்ஸை சப்ளை செய்யவும் ஆர்டரை பெற்றிருக்கிறது. இதற்கான ஒப்பந்தத்தை இரு நிறுவனங்களும் செய்திருக்கின்றன. கடந்த 1990 ம் ஆண்டில் இருந்தே நாங்கள் ஆயில் கம்பெனிகளின் திட்டங்களையும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் செயல்படுத்தியும் வருகிறோம் என்றார் எல் அண்ட் டி.,யின் சிஎம்டி நாயக்.

நன்றி : தினமலர்



ஐ.ஓ.பி., சர்வதேச வர்த்தகம் உயர்வு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மொத்த சர்வதேச வர்த்தகம், ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 670 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், 2008ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 420 கோடி ரூபாயாக இருந்த மொத்த சர்வதேச வர்த்தகம், 2009ம் ஆண்டு, ஜூன் 30ம் தேதி ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 670 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு ஆண்டில், 29 ஆயிரத்து 250 கோடி ரூபாய் (19.71 சதவீதம்) அளவிற்கு வர்த்தகம் உயர்ந்துள்ளது. மொத்த சர்வதேச டிபாசிட், 2008ம் ஆண்டில், 85 ஆயிரத்து ஒரு கோடி ரூபாயிலிருந்து, 2009ம் ஆண்டில், ஒரு லட்சத்து 806 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு ஆண்டில் சர்வதேச டிபாசிட், 15 ஆயிரத்து 805 கோடி ரூபாய் (18.59 சதவீதம்) அதிகரித்துள்ளது.
ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரையிலான மூன்று மாத காலத்திற்கான நிகர லாபம், 301 கோடியே 78 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே மூன்றாண்டு காலத்தில் 255 கோடியே 97 லட்சம் ரூபாயாக இருந்தது. மூன்று மாத காலத்திற்கான மொத்த வருவாய், 2,808 கோடியே 51 லட்சம் ரூபாயாக உள்ளது. கடந்த ஆண்டு இதே மூன்று மாத காலத்தில் மொத்த வருவாய், 2,186 கோடியே 83 லட்சம் ரூபாயாக இருந்தது. தற்போது 28.43 சதவீதம் உயர்ந்துள்ளது. மூன்று மாத காலத்தில் வட்டி வருவாய், 2,577 கோடியே 85 லட்சம் ரூபாயாகவும், வட்டியில்லா வருவாய் 230 கோடியே 66 லட்சம் ரூபாயாகவும் உள்ளது. மொத்த செலவு 2,379 கோடியே 89 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. வங்கியின் அனைத்து கிளைகளும் 100 சதவீதம் கணினி மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


Sunday, August 2, 2009

உலகளவில் உருக்கில் இந்தியா முன்னணி

உலகளவில் உருக்கு உற்பத்தி செய்யும் நாடுகள், அதன் உற்பத்தியில் திடீரென சரிவை சந்தித்து வரும் வேளையில், இந்தியா வளர்ச்சியடைந்து, தற்போது மூன்றாம் இடம் பெற்றுள்ளது. இந்தாண்டு ஸ்டீல் உற்பத்தியில் மற்ற நாடுகள் சரிவை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளே, ஸ்டீல் உற்பத்தியில் வளர்ச்சியடைந்து வருகின்றன. இந்தாண்டின் முதல் ஆறு மாதங்களில், அதிகளவில் ஸ்டீல் உற்பத்தி செய்யும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலில், இந்தியா, இரண்டு இடங்கள் முன்னேறி மூன்றாம் இடம் பெற்றுள்ளது. சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முறையே முதல் மற்றும் இரண்டாம் இடங்களை பிடித்துள்ளன. அமெரிக்கா, ஜெர்மனி, தென்கொரியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள், ஸ்டீல் உற்பத்தியில் திடீரென சரிவை சந்தித்துள்ளன. இது குறித்து இந்திய ஸ்டீல் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ரூங்டா கூறுகையில், 'பொருளாதார மந்த நிலை நிலவிய போதும், ஸ்டீல் உற்பத்தி துறையின் வளர்ச்சியை பராமரித்தோம். இதற்கு உள்நாட்டு சந்தையில் நிலவும், அதிகப்படியான தேவையே காரணம்' என்றார்.
நன்றி : தினமலர்


விவசாயம், ஓட்டல்களை விட, சிகரெட்டில் லாபம் குவியுது: மூன்று மாதங்களில் மட்டும் 900 கோடி ரூபாய்

விவசாயப் பொருட்கள் விற்பனை மற்றும் ஓட்டல் தொழில் மூலம் கிடைக் கும் வருவாய் பல மடங்கு குறைந்து விட்டது; அதே சமயம், சிகரெட் விற் பனை மூலம், மூன்று மாதங்களில் 900 கோடி ரூபாய் நிகர லாபம் கிடைத் துள்ளது. சிகரெட் விற்பனை, ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறதே ஒழிய, எந்த கட்டுப்பாடுகள் போட்டாலும், குறைந்த பாடில்லை. சிகரெட் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தும் இந் திய டுபாக்கோ கம்பெனி (ஐ.டி.சி.,)க்கு கடந்த ஜூன் மாதத்துடன் முடிந்த முதல் காலாண்டில் மட் டும் 17 சதவீதம் லாபம் கிடைத்துள்ளது. கடந்தாண்டு , ஏப்ரல் - ஜூன் மாதங்களில் ஐ.டி.சி., லாபம் 748 கோடி ரூபாயாக இருந்தது. இந்தாண்டு இதே மூன்று மாதங்களில் 900 கோடியாக உயர்ந்துள்ளது. சிகரெட் விற்பனை மூலமான வருமானம், கடந்த ஆண்டு இந்த மூன்று மாதங்களில் 3,900 கோடியாக இருந்தது; இந்தாண்டு இதே காலகட்டத்தில், 4,090 கோடியாக உள்ளது. இதே காலகட்டத்தில், விவசாய பொருட்கள் விற் பனையால் வரக்கூடிய வருமானம் 49 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது, 940 கோடி ரூபாய் குறைவாக வருமானம் கிடைத்துள் ளது.
அதுபோல, ஓட்டல் தொழில் மூலம் கிடைக்கும் வருமானம் 28 சதவீதம் குறைந்து விட்டது. அதாவது, கடந்த ஆண்டு இந்த மூன்று மாதங்களில் கிடைத்ததை விட, 173 கோடி ரூபாய் குறைவாக கிடைத்துள்ளது.
சிகரெட் விலை உயர்த் தப்பட்டாலும், அதன் விற் பனை குறைந்ததாக தெரியவில்லை. ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தபடி தான் உள்ளது. அதுபோல, சிகரெட் பிடிக்க கட்டுப்பாடுகளை போட்டபோதும், அதன் விற்பனை துளிக்கூட சரியாதது மட்டுமின்றி, அதிகமாகத்தான் உள்ளது. கோல்டுபிளேக்ஸ் கிங்ஸ், கிளாசிக், ஸ்டேட் எக்ஸ்பிரஸ் 555, பென்சன் அண்ட் ஹெட்ஜஸ் போன்ற உயர் ரக சிகரெட் விலைகளை ஐ.டி.சி., தொடர்ந்து அதிகரித்து வந்துள் ளது. கடந்த காலாண்டில், 15 சதவீத லாபம் தான் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது.
ஆனால், அதைவிட அதிகமாக கிடைத்துள்ளது, சிகரெட் தொழில்துறை தரப் பில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி : தினமலர்


Friday, July 31, 2009

ஹோண்டா - முத்தூட் ஒப்பந்தம்

ஹோண்டா நிறுவனம், தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் தனது வாடிக்கையாளர்கள் நிதிச் சேவைக்காக, முத்தூட் பப்பச்சன் துணை நிறுவனமான முத்தூட் கேபிடல் சர்வீசசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
ஜப்பானின் ஹோண்டா நிறுவனம், தனது இந்திய நிறுவனம் மூலம் பல்வேறு இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவின் முத்தூட் பப்பச்சன் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து, கடன் நிதிச் சேவைகளை செய்து வருகிறது. பத்து லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டது இந்நிறுவனம். முத்தூட் பப்பச்சன் நிறுவனத்தின் துணை நிறுவனமான முத்தூட் கேபிடல் சர்வீசசுடன், ஹோண்டா நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் புறநகர் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் ஹோண்டா நிறுவனம் தனது இரு சக்கர வாகனங்களை, முத்தூட் கேபிடல் சில்லரை மையங்கள் மூலம் விற்பனை செய்ய உள்ளது. இதே போல், ஹோண்டா நிறுவன விற்பனை மையங்களில் வாடிக்கையாளர்கள் கடன் தேவைகளுக்கு முத்தூட் கேபிடல் மூலம் நிதிச் சேவை அளிக்கப்படும். 'பிளெக்சி' என்ற புதிய திட்டத்தை முத்தூட் கேபிடல் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள், கடன் தொகையை
தவணைக் காலத்திற்குள், தங்கள் கையிருப்பு வசதிப்படி தினம்தோறும், வாரம்தோறும் அல்லது மாதம்தோறும் தங்கள் வசதிக்தேற்ப திருப்பிச் செலுத்தலாம். இத்திட்டத்தை, முத்தூட் கேபிடல் சர்வீசஸ் விற்பனை மற்றும் சந்தைப் பிரிவு அதிகாரி பால கிருஷ்ணன் வழி நடத்தவுள்ளார். தற்போது சந்தையில் நிலவும் கட்டணங்களுக்கு ஏற்ப இந்த சேவைகள் இருக்கும். இந்த ஒப்பந்தம் தற்போது தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் அமல்படுத்தப் பட்டுள்ளது; பின்னர் படிப்படியாக ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.
நன்றி : தினமலர்


Friday, July 24, 2009

ஏசிசி நிறுவனத்தின் நிகர லாபம் 85 சதவீதம் அதிகம்

இந்தியாவின் மிகப்பெரிய சிமென்ட் உற்பத்தி நிறுவனமான ஏசிசி, இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ. 471 கோடியை ( 97 மில்லியன் டாலர் ) நிகர லாபமாக ஈட்டியிருக்கிறது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஹோல்சிம் நிறுவனத்திற்கு 46 சதவீத பங்குகள் இருக்கும் ஏசிசி யின் கடந்த வருட முதல் காலாண்டு நிகர லாபம் ரூ.255 கோடிதான். இது 85 சதவீத வளர்ச்சி. சிமென்ட் உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இருக்கும் இந்தியாவில் கடந்த சில மாதங்களாக சிமென்ட்டின் தேவை அபரிவிதமாக அதிகரித்திருப்பதால் தான் இந்த அளவுக்கு லாபம் சம்பாதிக்க முடிந்ததாக ஏசிசி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

நன்றி : தினமலர்