இந்தியாவின் மிகப்பெரிய சிமென்ட் உற்பத்தி நிறுவனமான ஏசிசி, இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ. 471 கோடியை ( 97 மில்லியன் டாலர் ) நிகர லாபமாக ஈட்டியிருக்கிறது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஹோல்சிம் நிறுவனத்திற்கு 46 சதவீத பங்குகள் இருக்கும் ஏசிசி யின் கடந்த வருட முதல் காலாண்டு நிகர லாபம் ரூ.255 கோடிதான். இது 85 சதவீத வளர்ச்சி. சிமென்ட் உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இருக்கும் இந்தியாவில் கடந்த சில மாதங்களாக சிமென்ட்டின் தேவை அபரிவிதமாக அதிகரித்திருப்பதால் தான் இந்த அளவுக்கு லாபம் சம்பாதிக்க முடிந்ததாக ஏசிசி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment