Friday, July 24, 2009

ஒருங்கிணைந்த இந்திய அடையாள ஆணைய தலைவர் பொறுப்பை ஏற்றார் நந்தன் நிலேகனி

இன்போசிஸ் நிறுவனத்தின் கோ - சேர்மனாக இருந்து, அதிலிருந்து விலகி மத்திய அரசு பணிக்கு வந்த நந்தன் நிலேகனி, நேற்று ஒருங்கிணைந்த இந்திய அடையாள ஆணையத்தின் சேர்மன் பதவியை ஏற்றார். புதுடில்லியில் யோஜனா பவனில் இருக்கும் திட்ட கமிஷன் அலுவலகத்தின் முதல் மாடியில் இதற்காக அமைக்கப்பட்டிருக்கும் பிரத்யேக அலுவலகத்தில் அவர் அந்த பதவியை ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்றதும் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், முதல் கட்டமாக இன்னும் 12 - 18 மாதங்களில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு விடும் என்றார். ஆனால் இந்த ஒருங்கிணைந்த அடையாள அட்டை இந்தியர்களுக்கு மட்டுமே என்றார். மத்திய எண்ணெய் அமைச்சகம், எண்ணெய் நிறுவனங்கள், பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் நிதி அமைச்சகத்துடன் இணைந்து நாங்கள் செயல்படுவோம் என்று சொன்ன நிலேகனி, புதிதாக கொடுக்க இருக்கும் ஒருங்கிணைந்த அடையாள அட்டையால் இனிமேல் மற்ற அடையாள அட்டைகள் தேவைப்படுமா, தேவைப்படாதா என்று இப்போதே சொல்ல முடியாது என்றார். இருந்தாலும் இது குறித்து இன்னும் ஒரு மாத காலத்திற்குள் தெளிவுபடுத்துவோம் என்றார். எங்களது திட்டத்திற்கு ஐடி கம்பெனிகள் மற்றும் டெலிகாம் துறையினரின் உதவியும் தேவைப்படுகிறது என்றும் தெரிவித்தார் நிலேகனி.
நன்றி :தினமலர்


No comments: