
Thursday, April 2, 2009
ஆறு மாதங்களில் இல்லாத அளவு பங்கு சந்தை முன்னேறியது

கே.ஜி.படுகையில் எரிவாயு உற்பத்தியை ஆர்.ஐ.எல்., துவங்கியது : இந்தியாவின் இறக்குமதி பில் பெருமளவு குறையும்

நன்றி : தினமலர்
பணவீக்கம் சிறிதளவு உயர்ந்து 0.31 சதவீதமாகியது

நன்றி : தினமலர்
Labels:
பணவீக்கம்
2016ம் வருடத்துடன் மாருதி 800, ஆம்னி தயாரிப்பது நிறுத்தப்படும்

நன்றி : தினமலர்
Labels:
வாகனம்
ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸின் ஜாம்நகர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ

நன்றி :தினமலர்
Labels:
ரிலையன்ஸ்
தங்கம் இறக்குமதி கணிசமாக குறைவு

கடந்த பிப்ரவரியிலும் ஒரு டன் தங்கம் கூட இறக்குமதி செய்யப்படவில்லை. இந்த நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில், 1.9 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் 55 டன் இறக்குமதி செய்யப்பட்டது. ஏற்றுமதியைப் பொறுத்தவரை கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச்சில் ஒன்பது டன் தங்க நாணயங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இறக்குமதி செலவை விட, உள்நாட்டில் தங்கம் விலை குறிப்பிடத்தக்க அளவில் குறைவாக உள்ளது. இதன் காரணமாக, சில வியாபாரிகள் உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தை வாங்கி, அவற்றை நாணயங்களாக மாற்றி ஏற்றுமதி செய்கின்றனர். இருந்தாலும், மார்ச் மாதத்தில் தங்க நாணயங்களின் ஏற்றுமதியும் குறைந்துள்ளது.
மாறாக பழைய தங்கம் விற்பனை அதிகரித்திருக்கிறது. மும்பையில் மட்டும் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரியில் தலா ஏழு டன்கள் விற்பனையாகியுள்ளன. ஆனால், கடந்த மார்ச் மாதத்தில் அந்த விற்பனையும் குறைந்துள்ளதோடு, உள் நாட்டில் அதன் தேவையும் குறைந்துள்ளது. தற்போது 10 கிராம் 15,000 ரூபாய் என்பதைத் தாண்டி இருப்பதாலும், விலை அதிகரிக்கும் என்ற கருத்திலும் பழைய தங்கத்தை விற்பதில் ஆர்வமும் குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. தங்கம் வாங்குவதை தள்ளிப் போட்டிருக்கும் மக்களின் மனோபாவம் காரணமாக, இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர் வேலைவாய்ப்பு குறையும் என்றும் கருதப்படுகிறது
நன்றி : தினமலர்
Labels:
தங்கம்
முடிவுக்கு வந்தது மோசமான நிதி ஆண்டு

இந்தப் பங்கு தான் என்று இல்லை; எல்லா பங்குகளும் கீழ் நோக்கியே சென்றன. வீட்டு உபயோகப்பொருட்கள் துறையைத் தவிர மற்ற எல்லாத் துறைகளும் கீழே விழுந்தன. நேற்று முன்தினம் மார்ச்சின் கடைசி நாள். பங்குச் சந்தை மிகவும் கடுமையான பைனான்சியல் ஆண்டை (கடந்த ஏப்ரல் முதல் இந்த மார்ச் வரை) சந்தித்தது பல ஆண்டுகளுக்குப் பிறகு இதுவே முதல் தடவை. மார்ச்சின் கடைசி தினம் சுபமாகவே முடிந்தது. பல காலாண்டுகளுக்குப் பின் பங்குச் சந்தை ஒரு காலாண்டு முடிவில் லாபங்களுடன் முடிந்திருக்கிறது. மார்ச்சில் மட்டும் பங்குச் சந்தை 9.2 சதவீத லாபம் தந்துள்ளது. நேற்று முன்தினம் காலை அல்லாடிய பங்குச் சந்தை முடிவில் 140 புள்ளிகள் லாபத்துடன் முடிவடைந்தது. மியூச்சுவல் பண்டுகள் தங்களது மதிப்பைக் கூட்டுவதற்காக பங்குகளை சந்தையில் வாங்கியதாலும் சந்தை மேலே சென்றது. சந்தைகள் மேலே சென்றதால் டாலருக்கு எதிராக ரூபாயும் வலுவடைந்தது; 44 பைசாக்கள் வலுவடைந்து 50.73 அளவில் வந்தது.
மார்ச் முழுவதும் டாலர் ரூபாய் விளையாட்டு காட்டிக் கொண்டு தான் இருக்கிறது; மேலே ஏறுவதும், கீழே இறங்குவதுமாக. ஏற்றுமதியாளர்களும், இறக்குமதியாளர்களும் எப்படி போகும் என்று யோசிக்கும் நிலைமை வந்து விட்டது.
உற்பத்தித் துறை இந்தக் காலாண்டில் சிறிது தெம்பு காட்டியதால் சந்தை நேற்று மேலே சென்றது. வியாபாரங்கள் சரியில்லாததால் கடன்கள் வாங்குவது பெருமளவு குறைந்திருந்தது. ஆனால், கடந்த காலாண்டில் கம்பெனிகள் பாண்ட்கள் மூலம் மட்டுமே 37 ஆயிரத்து 800 கோடி ரூபாய்களை கடனாகத் திரட்டியுள்ளன. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 193 புள்ளிகள் கூடி 9,901 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 39 புள்ளிகள் கூடி 3,060 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. இந்த நிதி ஆண்டில் தங்கம் தான் மின்னியிருக்கிறது. தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் 28 சதவீதம் லாபம் கண்டிருப்பர். அதேசமயம், வங்கியில் நிரந்தர வைப்புத் திட்டங்களில் போட்டவர்களுக்கு 8 முதல் 10 சதவீதம் வரை கிடைத்திருக்கும். பங்குச் சந்தை 38 சதவீத நஷ்டத்தைக் கொடுத்துள்ளது.
தங்கம் விலை கூடிக்கொண்டே செல்வதால் தேவை குறைந்து வருகிறது. அதனால், இறக்குமதி இல்லை என்றே சொல்லலாம். 2009ம் ஆண்டு ஜனவரியில் 20 டன்னுக்கு மேலேயும், 2007ம் ஆண்டு ஜனவரியில் 65 டன்னுக்கும் மேலாகவும் இறக்குமதி செய்துள்ளோம். 2009ம் ஆண்டு ஜனவரியில் கிட்டதட்ட ஒன்றுமே இறக்குமதி செய்யப்படவில்லை (ஒரு டன் அளவில் தான் இருக்கும்). வரும் மாதங்களில் தேவை கூடும் என்பதால் இறக்குமதி அதிகரிக்கலாம்.
நன்றி : தினமலர்
Labels:
பங்கு சந்தை நிலவரம்
ஓக்ஸ் வேகன் நிறுவனத்தில் கார் தொழிற்சாலை: 3,800 கோடி ரூபாய் முதலீட்டில் புனேயில் துவக்கம்

இது 61வது தொழிற்சாலை. எங்கள் குழுமம், ஒன்பது வகையான கார்களைத் தயாரித்து, 150 நாடுகளில் விற்பனை செய்கின்றன. ஓக்ஸ் வேகன் குழுமத்தின் 66 சதவீத உற்பத்தி, ஜெர்மனியைத் தவிர இதர நாடுகளில் உற்பத்தியாகிறது. இந்தியாவில் தற்போது 120 டீலர்கள் உள்ளனர். கடந்த 2001ம் ஆண்டு அவுரங்கபாத்தில் அமைக்கப்பட்டுள்ள எங்களது தொழிற்சாலையில் இருந்து ஸ்கோடா, ஓக்ஸ் வேகன் மற்றும் ஆடி வகை கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதற்கு அடுத்தபடியாக புனே கார் தயாரிப்பு தொழிற்சாலை 3,800 கோடி ரூபாய்(580 மில்லியன் யூரோ) முதலீட்டில் நிறுவப்பட்டுள்ளது.
ஜெர்மனிய நிறுவனங்கள் சார்பில், இந்தியாவில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளில் இந்த முதலீடு தான் அதிகமானதாகும். புனே தொழிற்சாலையில் இருந்து ஆண்டுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்ய முடியும்; 2,500 தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறவுள்ளனர்.
இந்தியா மாற்றத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. நாட்டை முன் னேற்றத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டுமென இந்திய மக்கள் நினைக் கின்றனர். அதற்காக உழைக்கவும் துவங்கி விட்டனர். இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான மக்கள், தங்களுக்கென்று சொந்தமாக ஒரு கார் இருக்க வேண்டுமென விரும்புகின்றனர். இதனால், இந்தியாவின் ஆட்டோ மொபைல் சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. அடுத்த ஐந்தாண்டுகளில், ஆண்டுக்கு 20 லட்சம் கார்கள் தேவையாய் இருக் கும். ஜெர்மனிய தொழில் நுட்பமும், இந்திய திறமையும் இணையும் இந்தத் தொழிற்சாலை மிகப் பெரிய வெற்றியைப் பெறும். ஓக்ஸ் வேகன் நிறுவன தலைவர் ஜெயெர்க் முல்லர், துணைத் தலைவர்கள் டெட்லெப் விட்டிங், கே.கே.சுவாமி, நிர்வாகக் குழு உறுப்பினர் அல்ரிச் ஹெகன் பெர்க் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
நன்றி : தினமலர்
Labels:
வாகனம்
Subscribe to:
Posts (Atom)