Showing posts with label விமானம். Show all posts
Showing posts with label விமானம். Show all posts

Saturday, August 14, 2010

புதிய சலுகைத்திட்டத்தை அறிவித்தது எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்

சர்வதேச அளவில் முன்னணி ஏர்லைன்ஸ் நிறுவனமான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், விமானப் போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில், ரவுண்ட்டிரிப் விமானப் பயணத்திற்கான கட்டணத்தை அதிரடியாக குறைத்துள்ளது. இதுதொடர்பாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : இந்த கட்டணக்குறைப்பு அனைத்து ( பர்ஸ்ட், பிசினஸ் மற்றும் எகானமி) பிரிவுகளுக்கும் பொருந்தும் என்றும், இந்த கட்டணக்குறைப்பின் மூலம், 13 சதவீத அளவிற்கு சேமிப்பைப் பெறலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணக்குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், அமெரிக்காவின் முக்கிய நகரங்களான நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், ஹாஸ்டன் மற்றும் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையங்களிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளான பக்ரைன், கெய்ரோ, டமாஸ்கஸ், துபாய், குவைத், மஸ்கட், ரியாத், டெஹ்ரான் மற்றும் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் செல்லும் விமானங்களில் இந்த கட்டணக்குறைப்பு பொருந்தும் என்றும், மக்கள் இந்த புதிய சேவையை தங்கள் நிறுவன இணையதளமான டபிள்யூடபிள்யூடபிள்யூ. எமிரேட்ஸ்.காம்/யுஎஸ் என்ற இணையதளத்தில் பெறலாம் என்றும் அதில் தெரிவித்துள்ளது. இந்த தி்ட்டம், இந்த மாதம் 31ம் ‌தேதி முடிவடைவதாகவும், செப்டம்பர் 1ம் தேதி முதல், அக்டோபர் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.


நன்றி: தினமலர்


Wednesday, December 2, 2009

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ. 5000 கோடி நஷ்டம்

ஏர் இந்தியா நிறுவனத்தின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டத்தில் இருந்தே ஏர் இந்தியா நிறுவனத்திற்கு நஷ்ட கணக்கு கூடி வருகிறது. தற்போது, அந்நிறுவனத்தின் நஷ்டகணக்கு இரட்டிப்பாகி ரூ. 5000 கோடியாக அதிகரித்துள்ளது. இதுகுறித்து மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல் கூறும்போது, உலக பொருளாதார சீர்குலைவு, லாபம் அதிகம் வராதது ஆகியவையே இதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார். மேலும், ஏர் இந்தியாவின் நிலையை சரி செய்ய தேசிய இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனம், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. செலவுகளைக் குறைத்து வருவாயை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டுக்குள் ரூ. 2000 கோடி அளவுக்கு செலவுகளைக் குறைக்குமாறு ஏர் இந்தியா கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். ஏற்கனவே, 2007-08ம் ஆண்டில் ஏர் இந்தியாவின் நஷ்டம் ரூ. 2,226.16 கோடியாக இருந்தது. இது தற்போது 5000 கோடியாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது
நன்றி : தினமலர்


Sunday, November 8, 2009

விமான கட்டணம் குறைப்பு : 'கிங் பிஷர்' அறிவிப்பு

'கிங் பிஷர்' நிறுவனம், சேலத்திலிருந்து சென்னை செல்லும் விமான டிக்கெட் கட்டணத்தை 2,879 ரூபாயிலிருந்து 2,529 ரூபாயாக குறைத்துள்ளது. வரும் 15ம் தேதி முதல் சேலம் - சென்னை விமான சேவையை இயக்க கிங் பிஷர் நிறுவனம் முன்வந்துள்ளது. அதற்கான டிக்கெட் முன்பதிவு அக்டோபர் 20ம் தேதி முதல் நடந்து வருகிறது. துவக்கத்தில் சென்னையிலிருந்து சேலத்துக்கு வரவும், சேலத்திலிருந்து சென்னை செல்லவும் ஒரே கட்டணமாக 2,879 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. இக்கட்டணத்தை குறைந்தது மூன்று மாதங்களுக்காவது குறைக்க வேண்டும் என வர்த்தகர் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். கடந்த வாரம் சென்னையிலிருந்து சேலம் வருவதற்கான கட்டணத்தில் 679 ரூபாய் குறைத்து, 2,200 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் கிங் பிஷர் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் அலுவலர்கள் சேலத்தில் ஆய்வு செய்தனர். சேலம் உருக்காலை, தென்னிந்திய நூற்பாலை உரிமையாளர் சங்க தலைவர் தினகரன், ஏற்றுமதியாளர் ஜார்ஜ், சோனா கல்லூரி செயலர் தீரஜ்லால், ரோட்டரி கவர்னர் டேவூ உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து பேசினர். இந்நிலையில், நேற்று சேலத்திலிருந்து சென்னை செல்லும் விமான டிக்கெட் கட்டணத்திலிருந்து 350 ரூபாய் குறைக்கப்பட்டு, 2,529 ரூபாயாக மாற்றி நிர்ணயித்துள்ளனர்.
நன்றி : தினமலர்


Sunday, October 25, 2009

செலவை குறைக்க ஏர் – இந்தியா அதிரடி : கேன்டீனில் இனி அசைவம் இல்லை

செலவை குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஏர் – இந்தியா விமான நிறுவன கேன்டீனில் இனிமேல் முழுக்க, முழுக்க சைவ உணவுகளை மட்டுமே தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சர்வதேச பொருளாதார மந்த நிலை, ஏர் – இந்தியா விமான நிறுவனத்தையும் விட்டு வைக்கவில்லை. கடும் நஷ்டத்தில் அந்த நிறுவனம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. ஏர் – இந்தியா ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க கூட முடியாத நிலை, கடந்த சில மாதங்களுக்கு முன் ஏற்பட்டது. இதன்காரணமாக, செலவுகளை குறைக்கும் வகையில், பல்வேறு அதிரடி சிக்கன நடவடிக்கைகளை ஏர் இந்தியா நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, விமான நிறுவன ஊழியர்களின் கேன்டீன்களிலும் சில சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. டில்லி விமான நிலையத்தில் செயல்படும் கேன்டீனில் மட்டும், தினமும் 700 முதல் 1,100 ஊழியர்கள் வரை சாப்பிடுகின்றனர். ஊழியர்களுக்காக உணவுகள் குறைந்த விலையில் கேன்டீனில் விற் பனை செய்யப்படுகிறது. ஒரு வெஜிடேரியன் 'தாளி'யின் விலை ரூ.2.50க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக மாதம் தோறும் 20 லட்ச ரூபாயை ஏர் – இந்தியா செலவிடுகிறது. ஆனால், மிக குறைந்த அளவு தான் வருவாய் கிடைக்கிறது. குறிப்பாக, அதிக விலை கொடுத்து சிக்கன் வாங்கி, அவற்றை சமைத்து விற்பனை செய்வதற்கு அதிகமாக செலவாகிறது. அவற்றை மானிய விலையில் விற்பனை செய்வதால், வருவாய் அந்த அளவுக்கு கிடைப் பது இல்லை. இதுபோன்ற அதிகப்படியான செலவுகளை குறைக்கும் வகையில், கேன்டீனில் இனிமேல் அசைவ உணவுகள் தயாரிப்பதை கைவிடுவது என, ஏர் இந்தியா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், மாதத் துக்கு மூன்று லட்ச ரூபாய் வரை சேமிக்க முடியும் என, ஏர் இந்தியா நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.

நன்றி : தினமலர்


Wednesday, October 21, 2009

கார்களின் விற்பனை இந்தியாவில் அதிகரிப்பு

'இந்த நிதியாண்டில் இந்தியாவில் கார் விற்பனை, இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டும்' என, இந்திய ஆட்டோமொபைல்ஸ் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை இந்திய தொழில் துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்த துவங்கியது. கடந்த நிதி ஆண்டில் இந்தியாவில் கார் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதனால், இந்திய ஆட்டோமொபைல்ஸ் துறையினர் கவலை அடைந்தனர். ஆனால், இந்த நிதியாண்டில் கார்களின் விற்பனை கணிசமான அளவில் அதிகரித்துள்ளது.
கடந்தாண்டு செப்டம்பரில் இந்தியாவில் 1.7 லட்சம் கார்கள் விற்பனையாயின. இந்தாண்டின் இதே மாதத்தில் 1.29 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த நிதியாண்டில் கார் விற்பனை வளர்ச்சி 1.31 சதவீதமாக இருந்தது. இந்த நிதி ஆண்டில் வளர்ச்சி வீதம் இரட்டை இலக்கத்தை எட்டும், என இந்திய ஆட்டோமொபைல்ஸ் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் இரு சக்கர வாகனங்களின் விற்பனை 7.67 சதவீதமும், மற்ற வாகனங்களின் விற்பனை 9.6 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.
ஆட்டோமொபைல் துறை வட்டாரங்கள் கூறியதாவது: பங்குச் சந்தை எழுச்சி, பருவமழை மீண்டும் துவங்கியது, பண்டிகை காலம் போன்ற பல சாதகமான அம்சங்கள் இருந்ததால் கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இதுதவிர, பண்டிகை கால தள்ளுபடி, வரி குறைப்பு, அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு போன்ற காரணங்களும் கார்களின் விற்பனையை அதிகரித்துள்ளன. இவ்வாறு ஆட்டோமொபைல்ஸ் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி : தினமலர்


Monday, October 19, 2009

வெளிநாட்டு பைலட்டுகளை வீட்டுக்கு அனுப்புகிறது ஏர் இந்தியா

வெளிநாட்டு பைலட்டுகளை வேலையில் இருந்து நீக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, ஏர் இந்தியா நிறுவனத்தில் செயல் இயக்குனர் ஜித்தேந்தர் பார்கவா தெரிவிக்கும் போது, ஏர் இந்தியா நிறுவனம் தற்‌போது கடும் நிதிநெருக்கடியில் உள்ளது. நெருக்கடியை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதன் ஒரு கட்டமாக வெளிநாட்டு பைலட்டுகளை வரும் ஓராண்டிற்குள் பணியில் இருந்து விலக்க முடிவு செய்துள்ளோம். இதனால், எங்களுக்கு 75 கோடி மிச்சமாகும் என்று கூறினார். சமீபத்தில் ஏர் இந்தியா நிறுவன பைலட்டுகளில் சம்பளத்தை குறைத்ததற்காக பைலட்டுகள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டனர். இதனால், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு கோடி கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது. தற்போது, அதே சிக்கன நடவடிக்கையாக மொத்தம் உள்ள 1400 பைலட்டுகளில் 175 வெளிநாட்டு பைலட்டுகளை வேலையில் இருந்து நீக்க அந்நிறுவனம் முயற்சி‌ மேற்கொண்டு வருவது பைலட்டுகள் இடையே மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நன்றி : தினமலர்


Saturday, August 29, 2009

ஏர் - இந்தியா ஊழியர்களுக்கு ஊக்க தொகை குறைக்கப்பட்ட விவகாரம் : குழு அமைப்பு

இப்போது கொடுத்து வரும், உற்பத்திக்கு தகுந்த ஊக்க தொகை மற்றும் பறக்கும் நேரத்திற்கு தகுந்தஊக்க தொகை ஆகியவற்றில் 50 சதவீதத்தை குறைக்க ஏர் - இந்தியா நிர்வாகம் எடுத்திருக்கும் முடிவை, பெரும்பாலான யூனியன்கள் எதிர்க்கின்றன. இதனையடுத்து, அந்த விவகாரம் குறித்து ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர நான்கு கமிட்டிகளை நியமிக்க ஏர் இந்தியாவின் சேர்மன் மற்றும் மேலாண் இயக்குனர் அர்விந்த் யாதவ் முடிவு செய்திருக்கிறார். அந்த கமிட்டிகள், அதன் அறிக்கைகளை வரும் செப்டம்பருக்குள் அளிக்கும் என்றும், அது வரை ஊக்க தொகை பாதியாக குறைக்கப்பட்டிருக்கும் என்று ஏர் - இந்தியா நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. தற்போது ஏர் - இந்தியா ஊழியர்களுக்கு மாதா மாதம் கொடுத்து வரும் சுமார் 3,100 கோடி ரூபாய் சம்பளத்தில், பாதி, ஊக்க தொகையாகவே இருந்து வருகிறது. எனவே இதனை பாதியாக குறைக்க முடிவு செய்திருக்கிறார்கள். ஏர் - இந்தியாவின் இந்த முடிவை பெரும்பாலான யூனியன்கள் எதிர்க்கின்றன. அது குறித்து போராட்டம் செய்யவும் அவைகள் திட்டமிடுகின்றன.
நன்றி : தினமலர்


Thursday, August 27, 2009

ஏர்-இந்தியாவில் சம்பள குறைப்பு: பேச்சில் உடன்பாடு இல்லை

ஏர்-இந்தியா நிர்வாகம் மற்றும் அதன் ஊழியர் சங்கங்கள் இடையே, சம்பளம் மறுசீரமைப்பு குறித்து நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. ஏர்-இந்தியா நிறுவனத்தை நஷ்டத்தில் இருந்து மீட்க, பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பணியாளர்களுக்கு வழங்கப்படும், 'பிளையிங் அலவன்சில்' 50 சதவீதம் குறைக்கும் திட்டம் குறித்து, பணியாளர்கள் சங்கங்களுடன் பேச்சு நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. ஏர்-இந்தியா நிறுவனம், 1,400 கோடி ரூபாய் வரை பிளையிங் அலவன்சாக வழங்கி வருகிறது. தங்கள் நிறுவனத்தின் நஷ்டத்தை குறைக்க, அதை 700 கோடி ரூபாயாக குறைக்க திட்டமிட்டது.
இது குறித்து ஏர் கார்ப்பரேஷன் பணியாளர்கள் சங்க மண்டல செயலர் விவேக் ராவ் கூறியதாவது: ஏர்-இந்தியா நிர்வாகத்தினருடனான பேச்சு நேற்று முன்தினம் மதியம் தொடங்கி நேற்று காலை வரை நீடித்தது. ஆனால், அதில், எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. பணியாளர்களின் சம்பளம் குறைப்பதைத் தவிர்த்து, கம்பெனியை நஷ்டத்தில் இருந்து காக்க, வேறு மாற்று வழிகள் உள்ளன. எந்த வகை சம்பள குறைப்பையும் நாங்கள் எதிர்க்கிறோம். மற்ற வீணான செலவினங்கள் குறித்து விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களை பொறுத்தவரை, சம்பள குறைப்பு என்பது ஒரு தீர்வாகாது. எங்கள் நிலையில், தொடர்ந்து உறுதியாக இருப்போம். இவ்வாறு விவேக் கூறினார்.

நன்றி : தினமலர்





Saturday, August 22, 2009

நீக்கப்பட்ட விமானிகளை உடனடியாக பணியில் சேர்த்துக் கொள்ள வலியுறுத்தி ஜெட் ஏர்வேஸ் பைலட்டுகள் ஸ்டிரைக்

செப்டம்பர் 7ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் இறங்குவோம் என ஜெட் ஏர்வேஸ் விமானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்த முறையான நோட்டீஸை ஜெட் நிர்வாகத்துக்கு ஏற்கெனவே நேஷனல் ஏவியேட்டர்ஸ் கில்டு அனுப்பியுள்ளது. ஜெட் நிர்வாகத்தில் நீக்கப்பட்ட ஜி பலராமன் மற்றும் சாம் தாமஸ் ஆகிய விமானிகளை உடனடியாக பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இல்லாவிட்டால் இந்த வேலை நிறுத்தத்தை தவிர்க்க முடியாது என்றும் ஏற்கெனவே ஜெட் ஏர்வேஸ் விமானிகள் தெரிவி்த்திருந்தனர். விமானிகள் கில்டில் இந்த இரு விமானிகளும் சேர்ந்ததைக் காரணம் காட்டித்தான் அவர்களை பணிநீக்கம் செய்தது ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலேயே விமானிகள் கில்டு ஸ்டிரைக் நோட்டீஸ் கொடுத்திருந்தது. 700 விமானிகள் இந்த ஸ்டிரைக்கில் பங்கேற்கப் போவதாகவும் அறிவித்திருந்தனர். ஆனால் இதற்கு ஜெட் நிர்வாகம் இதுவரை எந்த ரியாக்ஷனும் காட்டாமல் உள்ளது. இதைத் தொடர்ந்தே இன்று இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது விமானிகள் கில்டு.
நன்றி : தினமலர்


Friday, August 21, 2009

ஊழியர்களுக்கான ஊக்கத்தொகையில் 50 சதவீதம் கட் : ஏர் இந்தியா அதிரடி நடவடிக்கை

ஏர் இந்தியா நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஊக்கத்தொகையில் 50 சதவீதத்தை கட் செய்வதாக அறிவித்துள்ளது. டில்லியில் ஏர் இந்தியா போர்டு மீட்டிங் நடந்தது. ஆலோசனை கூட்டத்தில் நிதி நெருக்கடியில் உள்ள ஏர் இந்தியாவின் நிலையை சமாளிக்கும் வகையில், ஊக்கத்தொகை வெட்டு அமல்படுத்தப்படுவதாக கூறப்பட்டது. இந்த வெட்டின் மூலம், ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் படிகள் அளிக்கும் வகையில் ஏர் இந்தியாவுக்கு சுமார் 675 கோடி ரூபாய் மிச்சமாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஏர் இந்தியாவில் 31,000 ஊழியர்கள் உள்ளனர். இவர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் மொத்தம் 3000 கோடி ரூபாயாகும், இதில் ஊக்கத்தொகை மட்டும் 45 சதவீதமாகும். இந்த ஊக்கத்தொகை வெட்டு ஏர் இந்தியாவின் சீனியர் அலுவலர்களுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் பரிந்துரையின்படி ஏர்இந்தியா நிறுவனத்தின் சம்பள செலவினங்களை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா போர்டு தெரிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தினமலர்


Thursday, August 20, 2009

மும்பை நரிமன் பாயின்ட் கட்டிடத்தை மாற்றுங்கள் : ஏர் இந்தியாவுக்கு பிரபுல்படேல் பரிந்துரை

2008 - 09 நிதி ஆண்டில் ரூ.5,000 கோடி நஷ்டம் அடைந்திருக்கும் ஏர் - இந்தியா, மும்பை நரிமன் பாயின்ட்டில் இருக்கும் அதன் தலைமை அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல் கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்தியாவிலேயே அதிக காஸ்ட்லியான பகுதியாக இருக்கும் மும்பை நரிமன் பாயின்ட் பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு அதன் தலைமையகத்தை மாற்றினால் பெருமளவு பணத்தை மிச்சப்படுத்த முடியும் என்றார் அவர். அங்கிருக்கும் 22 மாடிகளை கொண்ட ஏர் - இந்தியா கட்டிடத்தில் பெரும்பாலான தளங்கள் ஏற்கனவே வேறு நிறுவனங்களுக்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏர் இந்தியா நிறுவனம் அதற்கான சீப் ஆப்பரேட்டிங் அதிகாரியையும் தேடி வருவதாக தெரிவித்தார். சர்வதேச அளவில் இதற்காக விளம்பரமும் இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாகும் என தெரிவித்தார்.
நன்றி : தினமலர்

Wednesday, August 19, 2009

ஊதுகிற சங்கை...!

அமைச்சர்களும் அதிகாரிகளும் அலுவல் நிமித்தம் பயணம் செய்யும்போது, அரசு நிறுவனமான ஏர் இந்தியாவில்தான் பயணிக்க வேண்டும் என்றும், தனியார் விமானங்களில் பயணிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டு, நமது அமைச்சர்களும், அதிகாரிகளும் வலியுறுத்தப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதே துரதிர்ஷ்டவசமானது என்பது ஒருபுறமிருக்க, இப்போதாவது மத்திய அரசு துணிந்து ஒரு கட்டுப்பாட்டை விதிக்க முற்பட்டிருக்கிறதே என்று பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

பொருளாதார தாராளமயமாக்கலைத் தொடர்ந்து, தனியார் நிறுவனங்கள் பல விமானத் துறையில் நுழைந்தது முதல், தனியார் விமானத்தில் பயணிப்பதுதான் பெருமை. மரியாதை என்கிற தவறான கண்ணோட்டம், பெரு முதலாளிகளுக்கும், தனியார் துறை அதிகாரிகளுக்கும் ஏற்பட்டதில் ஆச்சரியமில்லை. தனியார் துறை என்றாலே சிறப்பாக இயங்கும் என்கிற மாயையை உலகமயம் ஏற்படுத்தி இருப்பதில் அதிசயமும் இல்லை. ஆனால், நமது அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் அரசு நிறுவனமான ஏர் இந்தியாவில் பயணிப்பது தங்கள் பதவிக்கு இழுக்கு, அகௌரவம் என்று கருதி செயல்பட்டதை எப்படி ஜீரணிப்பது?

கல்வி, சுகாதாரம், ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து ஆகியவை முழுக்க முழுக்க வியாபாரக் கண்ணோட்டத்துடன் செயல்படுவதற்கும், தனியார்மயம் என்கிற பெயரில் பகல் கொள்ளைக்கு உள்படுத்தப்படுவதற்கும் மிக முக்கியமான காரணம், நமது ஆட்சியாளர்களும், நிர்வாகமும் அரசுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், பொதுப் போக்குவரத்து மற்றும் விமானத் துறையைப் புறக்கணிக்க முற்பட்டதுதான்.

பணமும், பதவியும், அதிகாரமும் வந்தவுடன் நமது மக்கள் பிரதிநிதிகளும் சரி, அமைச்சர் பெருமக்களும் சரி, தத்தம் குழந்தைகளை அரசுக் கல்வி நிலையங்களுக்கு அனுப்பாமல், பணக்காரக் குழந்தைகள் படிக்கும் கல்விச்சாலைகளைத் தேடிப்பிடித்துச் சேர்க்க முற்பட்டனர். அவர்களைப் போலவே அதிகார வர்க்கமும் அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைப்பது கேவலம் என்கிற மனப்போக்கைக் கடைப்பிடித்தது.

அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தையும் கல்வி நிலையங்களின் கட்டமைப்பு வசதிகளையும் உறுதிப்படுத்த வேண்டிய மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் அதிகாரத்தில் இருக்கும் அமைச்சர்கள் போன்றோர் ஊரார் குழந்தைகள் படிக்கும் கல்விச்சாலைகளைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் இருப்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? இவர்களது குழந்தைகள் அரசுப் பள்ளிகளில்தான் படித்தாக வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்பட்டால், நமது கிராமத்து ஆரம்பப்பள்ளிகள்கூட ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் தரத்திற்கு உயர்த்தப்பட்டுவிடாதா?

தனியார் மருத்துவமனைக் கலாசாரம் பெருகுவதுவரை, நமது மரியாதைக்குரிய தலைவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளில்தானே சிகிச்சை பெற்றனர். அமைச்சர்களும், மக்கள் பிரதிநிதிகளும், உயர் அதிகாரிகளும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள் எனும்போதுதானே, மருத்துவமனையின் வளர்ச்சியும், நவீனமயமாக்கப்படுதலும், பராமரிப்பும் உறுதி செய்யப்படும்?

ஆட்சி அதிகாரத்திலும், நிர்வாக மையத்திலும் உள்ளவர்களே சிகிச்சை பெறுகிறார்கள் எனும்போதுதானே, சராசரிக் குடிமகனுக்கும் அரசு மருத்துவமனைகளின்மீது நம்பிக்கை ஏற்படும்! அரசு மருத்துவமனை மருத்துவர்களையும், ஊழியர்களையும் அவமானப்படுத்தும், கேவலப்படுத்தும் செயல்தானே நமது ஆட்சியாளர்களும், நிர்வாகிகளும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது? எங்களைக் கேவலப்படுத்தாதீர்கள் என்று ஏன் நமது மருத்துவத் துறையினர் குரல் கொடுப்பதில்லை?

முன்பெல்லாம் அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் முடிந்தவரை வெளியூர் பயணங்களை பஸ்ஸிலும், ரயிலிலும்தான் செய்வது வழக்கம். இப்போது அவர்களிடம் கார் வசதி வந்துவிட்டது. போதாக்குறைக்கு, விமானப் போக்குவரத்து எல்லா நகரங்களையும் இணைக்கத் தொடங்கிவிட்டது. எதற்கெடுத்தாலும் பறக்கத் தொடங்கி விட்டார்கள். கேட்டால், நேரத்தை வீணாக்காமல் பயன்படுத்துகிறோம் என்று காரணம் கூறுகிறார்கள். இவர்கள் ஆலாய்ப் பறந்து நேரத்தை மிச்சப்படுத்துவது அவர்களுக்கு வேண்டுமானால் பயனளித்திருக்கலாம். தேசத்துக்குப் பயனளித்ததாகத் தெரியவில்லை.

சில விஷயங்களை எல்லாம் சட்டம் போட்டு நடைமுறைப்படுத்திவிட முடியாது. அவரவர் மனசாட்சி உறுத்த வேண்டும். தார்மிகக் கடமை அவர்களை வழிநடத்த வேண்டும். இதுதான் மகாத்மா காந்தி தனது தொண்டர்களுக்குச் செய்த வழிகாட்டுதல்.

அரசு உத்தரவு இல்லாமலேயே, நமது மக்கள் பிரதிநிதிகளும், அரசு அதிகாரிகளும் தங்கள் குழந்தைகளை அரசுக் கல்வி நிலையங்களுக்கும், தங்கள் குடும்பத்தினரை அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்புவது என்று முடிவெடுத்தாலே, நமது கல்விச் சாலைகளும், மருத்துவமனைகளும் தனியாருக்குத் தண்ணீர் காட்டும் அளவுக்குச் செயல்படத் தொடங்கிவிடும்.

அதேபோல, தேவையற்ற விமானப் பயணத்தைத் தவிர்த்து பொறுப்பான பதவியிலுள்ளவர்கள் பொதுப் போக்குவரத்துகளில் பயணம் செய்தால், நாடே அவர்களை வாழ்த்தும். மக்களோடு மக்களாக வாழ வேண்டும் என்று சொன்ன காந்தியடிகளின் பெயரால் ஆட்சி நடத்துகிறோம் என்கிற உணர்வுடன் அனைவரும் செயல்பட்டால்...? ஊதுகிற சங்கை ஊதித்தான் பார்ப்போமே...!

நன்றி : தினமணி

Monday, August 17, 2009

உள்நாட்டு விமானங்களில் பிசினஸ் க்ளாசில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜெட் ஏர்வேஸ், ஏர் இந்தியா உள்நாட்டு விமானங்களில் பிசினஸ் க்ளாசில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஒரு ரிப்போர்ட் தெரிவிக்கிறது. இது குறித்து பேட்டியளித்த ஜெட் ஏர்வேஸ் வர்த்தக பிரிவு தலைமை அதிகாரி சுதிர் ராகவன் : ஜூன் மாதத்தை ஒப்பிடும் போது ஜூலை மாதத்தில் உள்நாட்டு விமானங்களில் பிசினஸ் க்ளசில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்துள்ளது. ஆனால் இதை மட்டுமே வைத்து விமான நிறுவனங்கள் சரிவில் இருந்து மீட்பு பாதையில் செல்கிறது என கூறி விட முடியாது. ஏர் இந்தியா நிறுவன விமானங்களில் பிசினஸ் க்ளாசில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் உயர்ந்துள்ளதாக அந்நிறுவன உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் டில்லி- சென்னை, டில்லி-கோவை, டில்லி-பெங்களூரு மார்க்கத்தில் பிசினஸ் க்ளாசில் பயணிக்கும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார். கட்டண குறைப்பு உட்பட பயணிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள பல்வேறு சலுகைகைள் தான் இந்த முன்னேற்றுத்துக்கு காரணம் என கூறப்படுககிறது.
நன்றி : தினமலர்


Thursday, August 13, 2009

பயணிகள் அதிகம், வருமானம் கம்மி : புலம்பும் விமான போக்குவரத்து நிறுவனங்கள்

ஏர்லைன்ஸ் அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்ராலும் குறைவான லாபம் ஈட்டும் நிலையிலேயே தொடர்ந்த இருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் விமான போக்குவரத்து நிறுவனங்கள் கடும் சரிவில் இருந்தன. விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டன. சரிவில் இருந்து மீண்டு வந்துள்ள விமான போக்குவரத்து நிறுவனங்கள், தற்போது பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருந்தாலும், வருமானம் கம்மி தான் என அலுத்துக் கொள்ளகின்றன. இதற்கு காரணம் லோ காஸ்ட் ஆபரஷேன் என தான் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். முன்பு விமான கட்டணங்கள் இருந்த அளவை விட தற்போதைய மிகவும் குறைந்து அளவில் இருக்கின்றன. இதனால் விமானத்தில் பயணிக்கும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது நல்ல விஷயம் தான் என்றாலும், ஆபரேஷனல் காஸ்ட்டுகளால் லாபம் சொர்ப்பம் தான். விமான போக்குவரத்து இயக்குநரகம் தயாரித்துள்ள பட்டியிலின்படி இந்த ஆண்டு ஜூ‌லை மாதம் வரை 35.97 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


Wednesday, August 12, 2009

விமான சேவையை வாபஸ் பெற்றதால் டிக்கெட் தொகையை ரீபண்ட் செய்தது ப்ளை துபாய்

விமான ‌சேவையை வாபஸ் பெற்றதால் டிக்கெட் தொகையை ரீபண்ட் செய்தது ப்ளைதுபாய். ப்ளை துபாய் நிறுவனம் புதிதாக மூன்று விமானங்களை இந்தியாவுக்கு இயக்க முடிவு செய்து, அறிவித்திருந்தது. . இந்தியாவில் சண்டிகர், கோவை மற்றும் லக்னோவுக்கு துபாயிலிருந்து விமானங்களை இயக்க முடிவு செய்தது. இந்நிலையில் சில ஆபரேஷனல் விவகாரங்களால் விமான சேவையை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. தங்கள் நிறுவனத்தின் மீது நம்பிக்கை வைத்த வாடிக்கையாளர்கள் தவிக்க கூடாது என்பதால், விமானத்தில் பயணிக்க டிக்கெட் புக் செய்த அனைவருக்கும் ரீபண்ட் செய்யப்பட்டுள்ளது. மேலும் பயணிகளை உற்சாக படுத்துவதற்கு அவர்களது விமான சேவைக்கு உட்பட்ட எந்த ஒரு பகுதிக்கு வேண்டுமானாலும் இலவசமாக செல்ல டிக்கெட்டும் அனுப்பப்பட்டுள்ளதாக பிளை துபாய் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
நன்றி : தினமலர்


Saturday, August 1, 2009

விமான எரிபொருள் விலை இன்றிரவு முதல் உயர்கிறது

இன்று நள்ளிரவில் இருந்து, விமான எரிபொருளான ஏவியேஷன் டர்பைன் ஃபியூயல் ( ஏ எஃப் டி ) விலை உயர்தப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருப்பதை அடுத்து விமானங்களுக்கான எரிபொருள் விலை 1.6 சதவீதம், அதாவது டில்லியில் கிலோ லிட்டருக்கு ரூ.585 கூட்டப்படுகிறது. இனிமேல் அதன் விலை கிலோ லிட்டருக்கு ரூ.36,923 ஆக இருக்கும் என்று இந்தியன் ஆயில் கார்பரேஷன் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையில் இருக்கும் ஏற்ற இறக்கத்தை பொருத்து, இந்தியாவில் விமான எரிபொருள் விலையும் உயர்த்தப்படுகிறது. இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களை விற்பனை செய்யும் அரசு நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை கடந்த இரண்டு மாதங்களில் நான்கு தடவைகள் விமான எரிபொருள் விலையை கூட்டியிருக்கின்றன. இருந்தாலும் கடந்த இரு வாரங்களுக்கு முன் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்ததால் விமான எரிபொருள் விலையும் 5.7 சதவீதம் குறைக்கப்பட்டது. மே 1 ம் தேதி அன்று கிலோ லிட்டருக்கு ரூ.31,614.54 ஆக இருந்த விமான எரிபொருள் விலை, நான்கு முறை மாற்றி அமைக்கப்பட்டபின் ஜூன் 1 ம் தேதி அன்று ரூ.38,557.56 ஆக உயர்ந்து விட்டது. ஆனால் ஜூலை 16ம் தேதியன்று அது ரூ.36,338 ஆக குறைக்கப்பட்டது. இப்போது அது ரூ. 36,923 ஆக உயர்த்தப்படுகிறது. இந்த விமான எரிபொருள் விலை ஊருக்கு ஊர் மாறுபடும். டில்லியில் ரூ.36,923 ஆக இருக்கும் இது, மும்பையில் ரூ.38,098 ஆகவும், கோல்கட்டாவில் ரூ.45,060 ஆகவும், சென்னையில் ரூ.40,789 ஆகவும் இருக்கிறது. விமானங்களை இயக்க ஆகும் செலவில் 40 சதவீதத்தை எடுத்துக்கொள்ளும் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டதால், ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் விமான கம்பெனிகள் மேலும் சிக்கலுக்குள்ளாகும் என்று சொல்லப்படுகிறது.

நன்றி : தினமலர்



Saturday, July 25, 2009

ஆர்டர் செய்த போயிங் விமானங்களை ஏர் - இந்தியா வாங்கப்போகிறதா ?

கடும் நிதி நெருக்கடியால் ஊழியர்களுக்கான சம்பளத்தை தாமதமாக கொடுப்பது, விமான ரூட்களை குறைப்பது, கடைசியாக மத்திய அரசிடம் இருந்து நிதி உதவி கேட்கும் நிலை வரை போயிருக்கும் ஏர் - இந்தியா, உடனடியாக அதன் செலவினங்களில் இருந்து 12 பில்லியன் டாலர்களை ( சுமார் 57,600 கோடி ரூபாய் ) மிச்சப்படுத்த வேண்டியதிருக்கிறது. எனவே அது ஆர்டர் செய்து இன்னும் வாங்காமல் இருக்கும் 68 போயிங் விமானங்களை வாங்குவதா வேண்டாமா என்ற கடும் குழப்பத்தில் ஏர் - இந்தியா இருக்கிறது. விமான போக்குவரத்து துறை வரலாற்றில் இதுவரை வேறு எந்த நிறுவனமும் கொடுத்திருந்த ஆர்டரை ஏர் - இந்தியா, போயிங் நிறுவனத்திடம் கொடுத்திருந்தது. ஆனால் அந்த ஆர்டரை கேன்சல் செய்வதா, அல்லது பெற்றுக் கொள்வதை தாமதப்படுத்தலாமா அல்லது பெற்றுக்கொண்டு விடுவதுதானா என்று இன்னும் ஏர் - இந்தியா முடிவு செய்யவில்லை என்று தெரிகிறது. இது குறித்து போயிங் இந்தியாவின் தலைவர் தினேஷ் கேஸ்கர் தெரிவிக்கையில், ஏர் - இந்தியா கொடுத்திருக்கும் ஆர்டர் குறித்து இதுவரை எங்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. எனவே அவர்கள் எங்களது மிகப்பெரிய வாடிக்கையாளராகத்தான் இன்னமும் இருக்கிறார்கள் என்றார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதால் இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருவதைத்தான் அது காட்டுகிறது. எனவே இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியாவுக்கு 100 பில்லியன் டாலர் ( சுமார் 4,80,000 கோடி ரூபாய் ) மதிப்புள்ள 1,000 விமானங்கள் தேவைப்படும் என்றார். இப்போது சிக்கலில் இருக்கும் இந்திய விமான போக்குவரத்து துறை இன்னும் ஒன்பது அல்லது ஒரு வருட காலத்திற்குள் சரியாகிவிடும் என்றார் கேஸ்கர். ஏர் - இந்தியா தவிர, இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமான கம்பெனியான ஜெட் ஏர்வேஸ் 7 போயிங் விமானங்களுக்கு ஆர்டர் செய்திருந்தது. ஆனால் அதை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


Thursday, July 23, 2009

ஏர்-இந்தியா சலுகை கட்டண திட்டங்கள் அறிமுகம்

விமானப் பயணத்தை ஊக்கப்படுத்தும் வகையில், 'என்.ஏ.பி., - 3' மற்றும் 'ஏ.பி., - 3' என்ற இரண்டு சிறப்பு கட்டணங்களை ஏர்-இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இது குறித்து ஏர்-இந்தியா நிறுவனத்தின் அறிக்கை: விமானப் பயணத்தை ஊக்கப்படுத்த, 'என்.ஏ.பி., - 3' மற்றும் 'ஏ.பி., - 3' என்ற இரண்டு சிறப்பு கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 'என்.ஏ.பி., - 3' என்ற சிறப்பு கட்டண டிக்கெட் தேர்ந்தெடுக்கப்பட்ட 24 உள்நாட்டு விமான நிலையங்களில் கிடைக்கும். இந்த கட்டணத்தில், அடிப்படை கட்டணம், பயணிகள் சேவை வரி ஆகியவை அடங்கும். எரிபொருள் சர்ச்சார்ஜ் கட்டணம் இதில் சேராது. இதன்படி, ஒருவழி கட்டணமாக மும்பை - ஐதராபாத் 2,079 ரூபாய்; மும்பை - பெங்களூரு 2,779 ரூபாய்; மும்பையில் இருந்து கொச்சி, சென்னை, டில்லி ஆகிய இடங்களுக்கு 3,279 ரூபாய்; டில்லி - சென்னை 3,779 ரூபாய் ஆகும். 'ஏ.பி., - 3' என்ற சிறப்பு கட்டண டிக்கெட் தேர்ந்தெடுக்கப்பட்ட 70 உள்நாட்டு விமான நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கட்டணத்தில், அடிப்படை கட்டணம், பயணிகள் சேவை வரி மற்றும் எரிபொருள் சர்ச்சார்ஜ் கட்டணம் ஆகியவை அடங்கும். இதன்படி, மும்பையில் இருந்து உதய்பூர், கோவா ஆகிய இடங்களுக்கு 3,094 ரூபாய்; மும்பை - கோழிக்கோடு மற்றும் சென்னை - கோவா 4,499 ரூபாய்; மும்பை - திருவனந்தபுரம், சென்னை - கோல்கட்டா, டில்லி - ஐதராபாத் கட்டணம் 5,399 ரூபாய்; மும்பை - கோல்கட்டா, டில்லி - பெங்களூரு 5,919 ரூபாய் ஆகும். இந்த கட்டணங்கள் கொண்ட டிக்கெட்களை பயணிகள் மூன்று நாட்களுக்கு முன் வாங்க வேண்டும். இந்த சலுகையை வரும் செப்டம்பர் 20ம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


Wednesday, July 22, 2009

குடித்து விட்டு விமானம் ஓட்ட வந்து பிட்பட்ட 29 பைலட்கள்

குடித்து விட்டு வாகனங்களை ஓட்டக்கூடாது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். அப்படி குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டி, போலீசாரிடம் சிக்கி சீரழிபவர்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் குடித்து விட்டு விமானங்களை ஓட்டும் பைலட்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா ?. அங்கேயும் குடித்து விட்டு விமானத்தை ஓட்டுபவர்கள் இருக்கிறார்களாம். அப்படி குடித்து விட்டு வந்த பைலட்கள் சோதனையின் போது பிடிபட்டும் இருக்கிறார்கள். பொதுவாக தனியார் விமானங்களில் தான் இது அதிகம் நடக்கிறதாம். கடந்த ஒரு வருட காலத்தில் தனியார் விமானங்களில் பைலட்களாக இருக்கும் 29 பேர், விமானம் புறப்படும் முன் நடத்தப்படும் சோதனையின் போது, குடித்து விட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டு பிடிபட்டிருப்ப தாக, சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல் ராஜ்ய சபாவில் தெரிவித்திருக்கிறார். பொதுவாக விமானங்களை ஓட்ட வரும் விமானிகள் குடித்து விட்டு வரக்கூடாது என்பது விதி. அவர்கள் குடித்திருக்கிறார்களா என்று விமானம் புறப்படும் முன் சோதனை நடத்தப்படுவது வழக்கம். அப்படி குடித்து விட்டு வந்திருப்பது தெரியவந்தால் அவர்கள் உடனடியாக விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு, அதிகபட்சமாக ஆறு வாரங்கள் வரை விமானம் ஓட்ட அனுமதிக்கப்படுவது இல்லை. அதையும் மீறி 29 பைலட்கள் விமானத்தை ஓட்ட வந்து பிடிபட்டிருப்பதாக பிரபுல் படேல் தெரிவித்திருக்கிறார். டைரக்டரேட் ஜெனரல் ஆஃப் சிவில் ஏவியேஷன் தான் இதனை கண்காணிக்கிறது. குடித்து விட்டு விமானம் ஓட்ட வந்து பிடிபட்டவர்களில் அதிகமானவர்கள் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸை சார்ந்த பைலட்கள் என்பதும் தெரிய வந்திருக்கிறது. பிடிபட்ட 29 பைலட்களில் 8 பேர் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் விமானிகள். அதற்கு அடுத்ததாக, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ் ஜெட் விமானிகள் தலா ஆறு பேர் பிடிபட்டிருக்கிறார்கள். ஜெட்லைட், பாரமவுன்ட் மற்றும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்களை சேர்ந்த விமானிகள் தலா மூன்று பேர் பிடிபட்டிருக்கிறார்கள்.
நன்றி : தினமலர்


Tuesday, July 21, 2009

எண்ணெய் நிறுவனங்களுக்கு கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் வைத்திருக்கும் கடன் ரூ.950 கோடி

இந்தியன் ஆயில் கார்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கும் தனியார் விமான கம்பெனியான கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் ரூ.950 கோடிக்கு மேல் கடன் வைத்திருக்கிறது. இருந்தாலும் இந்த கடனை பெறுவதற்காக மத்திய அரசு, பேங்க் கியாரன்டி எதையும் பெறவில்லை. பார்லிமென்டில் எழுத்து மூலமாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா இதனை தெரிவித்தார். இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷனுக்கு ரூ.599 கோடியும், பாரத் பெட்ரோலியம் கார்பரேஷனுக்கு ரூ.314 கோடியும், இந்தியன் ஆயில் கார்பரேஷனுக்கு ரூ.37.36 கோடியும் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் பாக்கி வைத்திருக்கிறது என்றார் முரளி தியோரா. இந்த நிதி ஆண்டின் துவக்கத்தில் கச்சா எண்ணெய் விலை உயர ஆரம்பித்ததால் விமானங்களுக்கான எரிபொருளின் விலையும் உயத்தப்பட்டது. அதிலிருந்து இந்த கடன் தொகை அதிகரித்துக்கொண்டே வந்து இப்போது ரூ.950 கோடிக்கு மேல் போய் விட்டது.
நன்றி : தினமலர்