Wednesday, December 2, 2009

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ. 5000 கோடி நஷ்டம்

ஏர் இந்தியா நிறுவனத்தின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டத்தில் இருந்தே ஏர் இந்தியா நிறுவனத்திற்கு நஷ்ட கணக்கு கூடி வருகிறது. தற்போது, அந்நிறுவனத்தின் நஷ்டகணக்கு இரட்டிப்பாகி ரூ. 5000 கோடியாக அதிகரித்துள்ளது. இதுகுறித்து மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல் கூறும்போது, உலக பொருளாதார சீர்குலைவு, லாபம் அதிகம் வராதது ஆகியவையே இதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார். மேலும், ஏர் இந்தியாவின் நிலையை சரி செய்ய தேசிய இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனம், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. செலவுகளைக் குறைத்து வருவாயை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டுக்குள் ரூ. 2000 கோடி அளவுக்கு செலவுகளைக் குறைக்குமாறு ஏர் இந்தியா கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். ஏற்கனவே, 2007-08ம் ஆண்டில் ஏர் இந்தியாவின் நஷ்டம் ரூ. 2,226.16 கோடியாக இருந்தது. இது தற்போது 5000 கோடியாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது
நன்றி : தினமலர்


No comments: