Wednesday, December 2, 2009

கேரளாவில் ஸ்மார்ட் நகரம் துபாய் நிறுவனம் தவிப்பு

கேரளாவில் ஸ்மார்ட் நகரம் உருவாக்க தேர்ந் தெடுக்கப்பட்ட துபாயை மையமாக கொண்டு செயல்படும் 'டெக்காம்' நிறுவனம் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பதாக, அம்மாநில முதல்வர் அச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.கேரள மாநிலம், கொச்சியில், 1,500 கோடி ரூபாய் மதிப்பில் 'ஸ்மார்ட் நகரம்' அமைக்க தீர்மானிக்கப்பட்டது. இந்த நகரம் அமைக்கும் பணிக்காக, துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 'டெக்காம்' நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டது.இதுகுறித்து நிருபர்களிடம் பேட்டியளித்த கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறியதாவது:

கொச்சி 'ஸ்மார்ட் நகரம்' திட்டத்திற்காக ஒதுக் கப்பட்ட 246 ஏக்கர் நிலத்தில், 12 சதவீதம் நிலத் தில் தங்களுக்கு உரிமை வழங்க வேண்டும் என 'டெக்காம்' நிறுவனம், கேட்டது. இதற்கு அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிபந்தனை ஒரிஜினல் ஒப்பந்தத் தில் இல்லை. 'ஸ்மார்ட் நகரம்' உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு வேறு நிறுவனத்தை தேர்ந்தெடுக்க தயங்காது.இவ்வாறு அச்சுதானந்தன் கூறினார்.இவ்வாறு முதல்வர் கருத்து வெளியிட்ட தினத்தன்று மாலையே, 'டெக்காம்' நிறுவனம், முதல்வர் அச்சுதானந்தனை துபாய் வருமாறு அழைப்பு விடுத்தது.'ஸ்மார்ட் நகர' திட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, அப்துல் ரகுமான் கூறுகையில், 'இத்திட் டம் தாமதமானாலும், கேரள மக்களின் நலனுக்காகவும், மாநில பொருளாதாரத்திற்காகவும், அதை வெற்றிகரமாக செயல்படுத்துவோம்' என்றார்.
நன்றி : தினமலர்


No comments: