Friday, July 11, 2008

இந்திய தொழில் உற்பத்தி வளர்ச்சி 3.8 சதவீதமாக குறைந்தது


புதுடில்லி : இந்தியாவின் தொழில் வளர்ச்சியை குறிக்கும் இன்டக்ஸ் ஆஃப் இன்டஸ்டிரியல் புராடக்ட்ஸ் ( ஐ ஐ பி ), மே 2008ல் 3.8 சதவீதமாக குறைந்து விட்டது. இது 2007 மே மாதத்தில் 10.6 சதவீதமாக இருந்தது. ஏற்கனவே ஏப்ரல் மாதத்தல்தான் இது 7 சதவீதத்தில் இருந்து 6.2 சதவீதமாக குறைந்திருந்தது. மேனுஃபேக்சரிங் புரடக்ஸன் குரோத்தும் மே மாதத்தில் 3.9 சதவீதமாக குறைந்திருக்கிறது. இது 2007 மே மாதத்தில் 11.3 சதவீதமாக இருந்தது. 2007 மே மாதத்தில் 9 சதவீதமாக இருந்த மின் உற்பத்தி வளர்ச்சி 2008 மே மாதத்தில் 2 சதவீதமாக குறைந்து விட்டது. சுரங்க உற்பத்தி வளர்ச்சி மட்டும் கடந்த வருடத்தை விட இந்த வருடம் உயர்ந்திருக்கிறது. மே 2007 ல் 3.8 சதவீதமாக இருந்த சுரங்க உற்பத்தி இந்த வருடம் மே மாதத்தில் 5.2 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


பணவீக்கம் 11.89 சதவீதமாக உயர்ந்தது


புதுடில்லி : ஜூன் 28ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 11.89 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது இதற்கு முந்தைய வாரத்தில் 11.63 சதவீதமாக இருந்தது. ஒரு வாரத்தில் 0.26 சதவீதம் உயர்ந்திருக்கிறது. உணவுப்பொருட்கள், பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், சிமென்ட், சமையல் எண்ணெய் போன்ற பொருட்களில் விலை உயர்ந்துள்ளதால் பணவீக்கம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த வருடத்தில் இதே காலத்தில் பணவீக்கம் 4.42 சதவீதமாகத்தான் இருந்திருக்கிறது.விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு எவ்வளவோ முயன்றும் இந்த வாரத்தில் சிமென்ட் மற்றும் சமையல் எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது. இந்த வாரமும் பணவீக்கம் உயர்ந்திருப்பதால் வங்கிகளுக்கான ரெபோ ரேட்டை ரிசர்வ் வங்கி மேலும் உயர்த்தும் என்று தெரிகிறது. சமீபத்தில் தான் அது ரெபோ ரேட்டை 0.5 சதவீதம் உயர்த்தி இருந்தது.
நன்றி : தினமலர்

2030ல் உலக அளவில் பெட்ரோலிய தேவை 50 சதவீதம் அதிகரிக்கும்


வியன்னா : இப்போதில் இருந்து 2030ம் வருடத்திற்குள் உலக அளவில் பெட்ரோலிய தேவை 50 சதவீதம் அதிகரிக்கும் என்று ஓபக் ( பெட்ரோல் ஏற்றுமதி நாடுகள் அமைப்பு ) தெரிவித்திருக்கிறது. முன்னேறி வரும் நாடுகளில் கார்களின் பயன்பாடு பெருமளவு அதிகரித்திருப்பதால் பெட்ரோலுக்கான தேவை 50 சதவீதம் அதிகரிக்கும் என்று அது கருத்து தெரிவித்திருக்கிறது. ஓபக் அமைப்பின் 2008 வருடத்திற்கான அறிக்கையில், 2030ல் இப்போதாய தேவையை விட 50 சதவீதம் அதிகமாக பெட்ரோலிய தேவை இருக்கும் என்பதால் அதனை சமாளிக்க நம்மிடம் இருக்கும் எண்ணெய் கிணறுகளில் இருந்து புது தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அதிக அளவில் கச்சா எண்ணெய் எடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. டாலரின் மதிப்பு குறைந்திருப்பதாலும் பெட்ரோல் சப்ளை குறித்து வர்த்தகர்களால் பரப்பப்படும் தவறான தகவல்கள் போன்றவற்றால்தான் இப்போது கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருப்பதாக ஓபக் தெரிவித்திருக்கிறது. எனினும் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்திருப்பது குறித்து அது கவலை தெரிவித்திருக்கிறது. கடந்த ஆண்டுகளில் கச்சா எண்ணெய்க்கு குறைந்த அளவே விலை இருந்ததால், ஓபக் நாடுகளால் எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்த அதில் அதிக அளவில் முதலீடு செய்ய முடியாமல் போய் விட்டது. எனவே தான் சீனா போன்ற பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளின் எண்யெண்ய் தேவைக்கு தகுந்தபடி சப்ளை செய்ய முடியாமல் போனது. கடந்த வருடங்களில் தேவைக்கு அதிகமாகவே கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டிருப்பதாகவும் வரும் காலங்களில் எவ்வளவு எடுக்க வேண்டும் என்று செப்பரில் நடக்கும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது. இருந்தாலும் 2012 வாக்கில் கச்சா எண்ணெய்யின் தேவையில் நாள் ஒன்றுக்கு 31 மில்லியன் பேரல்கள் குறையும் என்று எதிர்பார்ப்பதாக ஓபக் தெரிவித்திருக்கிறது. ஐரோப்பா மற்றும் அமெரிக்கா, பெட்ரேலை நம்பி இருக்கும் நிலையில் இருந்து மாறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை குறையும் என்று ஓபக் நினைக்கிறது.
நன்றி : தினமலர்