Tuesday, July 7, 2009

கடந்த 60 ஆண்டுகளாக பட்ஜெட்டில் குறிப்பிடப்படும் பாகிஸ்தான் தர வேண்டிய ரூ.300 கோடி கடன்

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பு, பாகிஸ்தான், இந்தியாவுக்கு ரூ.300 கோடி தரவேண்டி யிருந்தது. அது நம் நாட்டு முதல் பட்ஜெட்டில் ( 1950 - 51 நிதி ஆண்டு ) கடன் ( லயபிலிட்டி ) பகுதியில் அப்போது எழுதப்பட்டது. ஆனால் இன்று வரை அந்த கடனை பாகிஸ்தான் நமக்கு வரவில்லை. எனவே இந்தியாவின் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் அந்த தொகை ரூ.300 கோடி கடனாக குறிப்பிடப்பட்டு வருகிறது. நேற்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த 2009 - 10 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டிலும் ' பிரிவினைக்கு முன் பாகிஸ்தான் இந்தியாவுக்க தர வேண்டிய கடன் ரூ.300 கோடி ' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தியாவின் பட்ஜெட்டில் இப்போது காணப்படும் மொத்த லயபிலிட்டி ரூ.34,95,452 கோடியில் இந்த தொகை 0.008 சதவீதம்தான் என்றாலும், கடந்த 60 வருடங்களாக அந்த தொகை லயபிலிட்டியாக காண்பிக்கப்பட்டு வருகிறது. எனினும் இந்த தொகைக்கு இந்தியா வட்டி எதுவும் சேர்க்காமல் அசல் ரூ.300 கோடியை மட்டுமே தொடர்ந்து கடனாக காட்டி வருகிறது.
நன்றி : தினமலர்


தங்கம் விலை அதிகரிக்கும்

மத்திய பட்ஜெட்டில் தங்கக் கட்டிகள் இறக்குமதி மீதான சுங்க வரி அதிகரிக்கப்பட்டிருப்பதால் தங்கம் விலை அதிகரிக்கும். நேற்று சமர்ப்பிக்கப் பட்ட பட்ஜெட்டில், 10 கிராம் தங்கக்கட்டி இறக்குமதிக்கு வரி, 200 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது வரை, 100 ரூபாய் மட்டுமே இருந்தது. மேலும், தங்க ஆபரணம் உட்பட மற்ற தங்கம் சம்பந்தப்பட்ட பொருட் கள் இறக்குமதி என்றால், அதற்கு 10 கிராமுக்கு 500 ரூபாய் இறக்குமதி வரி வசூலிக்கப்படும்.
இதுவரை இருந்த இறக்குமதி சுங்க வரி போல இது இருமடங்காகும். அதே போல வெள்ளி ஒரு கிலோ இறக்குமதி செய்தால், அதன் மீதான சுங்க வரி, 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே சமயம் பிராண்ட் முத்திரை கொண்ட ஆபரணத் தங்க நகைகள் மீதான எக்சைஸ் வரி முற்றிலும் நீக்கப்பட்டிருக்கிறது.
பட்ஜெட் தாக்கல் உரையில், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, 'தங்கம், வெள்ளி மீதான சுங்கவரி அதிகரிப்பு பெண்களிடையே என் மீது அதிருப்தியை அதிகரிக்க வழி செய்யும்' என்றார். அதற்காகத் தான், ஆபரணத் தங்கம் மீதான எக்சைஸ் வரியை முற்றிலும் நீக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். தங்கம் மீதான சுங்கவரி உயர்வு குறித்து அகில இந்திய தங்கம் விற்பனையாளர் கூட்டமைப்பு தலைவர் ஷீல் சந்த் ஜெயின் கூறுகையில், 'தங்க வர்த்தகத்தைப் பாதிக்கும், அதே சமயம் ஆபரணத் தங்கம் மீதான எக்சைஸ் ரத்தால் அதிகம் பேர் பயனடையப் போவதில்லை' என்றார்.
நன்றி : தினமலர்