Monday, August 17, 2009

உள்நாட்டு விமானங்களில் பிசினஸ் க்ளாசில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜெட் ஏர்வேஸ், ஏர் இந்தியா உள்நாட்டு விமானங்களில் பிசினஸ் க்ளாசில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஒரு ரிப்போர்ட் தெரிவிக்கிறது. இது குறித்து பேட்டியளித்த ஜெட் ஏர்வேஸ் வர்த்தக பிரிவு தலைமை அதிகாரி சுதிர் ராகவன் : ஜூன் மாதத்தை ஒப்பிடும் போது ஜூலை மாதத்தில் உள்நாட்டு விமானங்களில் பிசினஸ் க்ளசில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்துள்ளது. ஆனால் இதை மட்டுமே வைத்து விமான நிறுவனங்கள் சரிவில் இருந்து மீட்பு பாதையில் செல்கிறது என கூறி விட முடியாது. ஏர் இந்தியா நிறுவன விமானங்களில் பிசினஸ் க்ளாசில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் உயர்ந்துள்ளதாக அந்நிறுவன உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் டில்லி- சென்னை, டில்லி-கோவை, டில்லி-பெங்களூரு மார்க்கத்தில் பிசினஸ் க்ளாசில் பயணிக்கும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார். கட்டண குறைப்பு உட்பட பயணிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள பல்வேறு சலுகைகைள் தான் இந்த முன்னேற்றுத்துக்கு காரணம் என கூறப்படுககிறது.
நன்றி : தினமலர்


No comments: