Wednesday, August 12, 2009

விமான சேவையை வாபஸ் பெற்றதால் டிக்கெட் தொகையை ரீபண்ட் செய்தது ப்ளை துபாய்

விமான ‌சேவையை வாபஸ் பெற்றதால் டிக்கெட் தொகையை ரீபண்ட் செய்தது ப்ளைதுபாய். ப்ளை துபாய் நிறுவனம் புதிதாக மூன்று விமானங்களை இந்தியாவுக்கு இயக்க முடிவு செய்து, அறிவித்திருந்தது. . இந்தியாவில் சண்டிகர், கோவை மற்றும் லக்னோவுக்கு துபாயிலிருந்து விமானங்களை இயக்க முடிவு செய்தது. இந்நிலையில் சில ஆபரேஷனல் விவகாரங்களால் விமான சேவையை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. தங்கள் நிறுவனத்தின் மீது நம்பிக்கை வைத்த வாடிக்கையாளர்கள் தவிக்க கூடாது என்பதால், விமானத்தில் பயணிக்க டிக்கெட் புக் செய்த அனைவருக்கும் ரீபண்ட் செய்யப்பட்டுள்ளது. மேலும் பயணிகளை உற்சாக படுத்துவதற்கு அவர்களது விமான சேவைக்கு உட்பட்ட எந்த ஒரு பகுதிக்கு வேண்டுமானாலும் இலவசமாக செல்ல டிக்கெட்டும் அனுப்பப்பட்டுள்ளதாக பிளை துபாய் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
நன்றி : தினமலர்


No comments: