Wednesday, August 12, 2009

பன்றிக்காய்ச்சல் எதிரொலி : டல் அடிக்கும் மகாராஷ்டிரா மல்டிபிளக்சுகள்

பன்றிக்காய்ச்சல் எதிரொலியாக நாட்டில் பல்வேறு இடங்களில் உள்ள மல்டிப்ளக்சுகளில் கூட்டம் இல்லாமல் இருக்கிறது, குறிப்பாக மகாராஷ்டிராவில் உள்ள மல்டிபிளக்சுகள் டல்லாக காணப்படுகின்றன. முதலில் ஐ.பி.எல்., போட்டிகளின் பரபரப்பால் மல்டிப்ளக்ஸ் பக்கம் கூட்டம் எதிர்பார்த்த அளவு திரும்பவில்லை. ஐ.பி.எல்., முடிந்தவுடன் மல்டிப்ள்க்ஸ் உரிமையாளர்களுக்கும் , சினிமா பட தயாரிப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதலால், மல்டிபிளக்சுகள் மூடப்பட்டன. பேச்சுவார்த்தை என நீண்ட இழுபறிக்கு பிறகு திறக்கப்பட்டன தியேட்டர்கள். அதற்குள் வந்து விட்டது பன்றிக்காய்ச்சல். மகாராஷ்டிரா மாநிலம் தான் பன்றிக்காய்ச்சல் நோயால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது என்பதால், அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களை 3 நாட்கள் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் இந்த தடை மேலும் நீட்டிக்கப்படலாம் என மல்டிபிளக்சுகள் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுதந்திர தின விடுமுறை வருவதால், அன்றைய தினம் புதுப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது, ‌யூ.டி.வி., பிரியங்கா சோப்ரா, சாஹித் கபூர் நடிப்பில் வெளிவரும் இந்த திரைப்படம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக கமினே படத்தின் 1300 பிரிண்டகளை போட்டு வீக் எண்டில் திரைப்படத்தை வெளியிட இருந்தது யூ.டி.வி. ஆனால், மகாராஷ்டிரா அரசின் திடீர் உத்தரவால், பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலையில் இருக்கிறது யூ.டி.வி. இந்திய பாக்ஸ் ஆபீசுக்கு புனே 5 சதவீதம் வருமானத்தை ஈட்டித் தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே 3 நாட்கள் கட்டாய மூடலால், கமினே படத்தை திரையிட முடியாமல் போனதால் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்களுக்கு ரூபாய் 2 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


No comments: