Saturday, August 29, 2009

ஏர் - இந்தியா ஊழியர்களுக்கு ஊக்க தொகை குறைக்கப்பட்ட விவகாரம் : குழு அமைப்பு

இப்போது கொடுத்து வரும், உற்பத்திக்கு தகுந்த ஊக்க தொகை மற்றும் பறக்கும் நேரத்திற்கு தகுந்தஊக்க தொகை ஆகியவற்றில் 50 சதவீதத்தை குறைக்க ஏர் - இந்தியா நிர்வாகம் எடுத்திருக்கும் முடிவை, பெரும்பாலான யூனியன்கள் எதிர்க்கின்றன. இதனையடுத்து, அந்த விவகாரம் குறித்து ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர நான்கு கமிட்டிகளை நியமிக்க ஏர் இந்தியாவின் சேர்மன் மற்றும் மேலாண் இயக்குனர் அர்விந்த் யாதவ் முடிவு செய்திருக்கிறார். அந்த கமிட்டிகள், அதன் அறிக்கைகளை வரும் செப்டம்பருக்குள் அளிக்கும் என்றும், அது வரை ஊக்க தொகை பாதியாக குறைக்கப்பட்டிருக்கும் என்று ஏர் - இந்தியா நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. தற்போது ஏர் - இந்தியா ஊழியர்களுக்கு மாதா மாதம் கொடுத்து வரும் சுமார் 3,100 கோடி ரூபாய் சம்பளத்தில், பாதி, ஊக்க தொகையாகவே இருந்து வருகிறது. எனவே இதனை பாதியாக குறைக்க முடிவு செய்திருக்கிறார்கள். ஏர் - இந்தியாவின் இந்த முடிவை பெரும்பாலான யூனியன்கள் எதிர்க்கின்றன. அது குறித்து போராட்டம் செய்யவும் அவைகள் திட்டமிடுகின்றன.
நன்றி : தினமலர்


No comments: