Saturday, August 29, 2009

ரூ.10,000 கோடிக்கு ஆர்டரை எதிர்பார்க்கும் எல் அண்ட் டி

இன்னும் ஒரு மாத காலத்திற்குள் பவர், இன்ஃப்ராஸ்டிரக்சர் மற்றும் ஹைட்ரோகார்பன் துறைகளில் ரூ.10,000 கோடிக்கு ஆர்டரை எதிர்பார்க்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் தான் எல் அண்ட் டி நிறுவனம் ரூ.11,000 கோடிக்கு ஆர்டரை பெற்றிருக்கிறது. செப்டம்பர் மாதத்திற்குள் மொத்தம் ரூ.90,000 கோடிக்கு ஆர்டர்கள் பெறப்படும் என்றும் எல் அண்ட் டி யின் சேர்மன் மற்றும் மேலாண் இயக்குனர் ஏ.எம்.நாயக் தெரிவித்தார். மத்தியில் நிலையான ஆட்சி நடந்து வருவதால், இன்ஃப்ராஸ்டிரக்சர் துறை மீது அதீக அக்கறை காண்பிக்கப்படுவதாலும் அந்த துறையில் முதலீட்டு செலவு அதிகரித்து வருகிறது என்றும் எனவே அந்த துறை வளர்ந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். எனவே 2008 - 09 நிதி ஆண்டில் இதுவரை, எங்களுக்கு வந்துள்ள ஆர்டர் 23 சதவீதம் அதிகரித்திருக்கிறது என்றும் அதில் 15 சதவீத ஆர்டர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கிறது என்றும் நாயக் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


No comments: