Monday, October 19, 2009

வெளிநாட்டு பைலட்டுகளை வீட்டுக்கு அனுப்புகிறது ஏர் இந்தியா

வெளிநாட்டு பைலட்டுகளை வேலையில் இருந்து நீக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, ஏர் இந்தியா நிறுவனத்தில் செயல் இயக்குனர் ஜித்தேந்தர் பார்கவா தெரிவிக்கும் போது, ஏர் இந்தியா நிறுவனம் தற்‌போது கடும் நிதிநெருக்கடியில் உள்ளது. நெருக்கடியை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதன் ஒரு கட்டமாக வெளிநாட்டு பைலட்டுகளை வரும் ஓராண்டிற்குள் பணியில் இருந்து விலக்க முடிவு செய்துள்ளோம். இதனால், எங்களுக்கு 75 கோடி மிச்சமாகும் என்று கூறினார். சமீபத்தில் ஏர் இந்தியா நிறுவன பைலட்டுகளில் சம்பளத்தை குறைத்ததற்காக பைலட்டுகள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டனர். இதனால், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு கோடி கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது. தற்போது, அதே சிக்கன நடவடிக்கையாக மொத்தம் உள்ள 1400 பைலட்டுகளில் 175 வெளிநாட்டு பைலட்டுகளை வேலையில் இருந்து நீக்க அந்நிறுவனம் முயற்சி‌ மேற்கொண்டு வருவது பைலட்டுகள் இடையே மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நன்றி : தினமலர்


No comments: