Monday, October 19, 2009

பாவ்பிஜ் திருவிழா: பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை

மும்பை பங்குச்சந்தைக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாவ்- பிஜ் என்ற திருவிழாவை முன்னிட்டு பங்குச்சந்தைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருவிழா அன்று சகோதரிகள் தங்கள் சகோதரர்களை கிருஷ்ண பரமாத்வாக பாவித்து பாத பூஜை செய்வது வழக்கம். மகாராஷ்டிரா மற்றும் கோவாவில் இந்த விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மும்பை பங்குச்சந்தை, தேசிய பங்குச்சந்தை, கோல்ட், ஆயில் மற்றும் ஆயில்சீட், காட்டான், பெப்பர் உள்ளிட்ட அனைத்து சந்தைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
சென்ற சனிக்கிழமையன்று(17ம் தேதி) மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகளில், தீபாவளியை முன்னிட்டு முகூர்த்த பங்கு வர்த்தகம் நடைபெற்றது. இந்த முகூர்த்த பங்கு வர்த்தகத்தில் மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண் `சென்செக்ஸ்', வர்த்தகம் முடியும்போது 3.19 புள்ளிகள் உயர்ந்து 17,326.01 புள்ளிகளோடு முடிந்தது. தேசிய பங்கு சந்தையின் குறியீட்டு எண் `நிப்டி' 0.35 புள்ளிகள் குறைந்து 5,141.80 புள்ளிகளோடு முடிந்தது.

நன்றி : தினமலர்


No comments: