Saturday, July 25, 2009

ஆர்டர் செய்த போயிங் விமானங்களை ஏர் - இந்தியா வாங்கப்போகிறதா ?

கடும் நிதி நெருக்கடியால் ஊழியர்களுக்கான சம்பளத்தை தாமதமாக கொடுப்பது, விமான ரூட்களை குறைப்பது, கடைசியாக மத்திய அரசிடம் இருந்து நிதி உதவி கேட்கும் நிலை வரை போயிருக்கும் ஏர் - இந்தியா, உடனடியாக அதன் செலவினங்களில் இருந்து 12 பில்லியன் டாலர்களை ( சுமார் 57,600 கோடி ரூபாய் ) மிச்சப்படுத்த வேண்டியதிருக்கிறது. எனவே அது ஆர்டர் செய்து இன்னும் வாங்காமல் இருக்கும் 68 போயிங் விமானங்களை வாங்குவதா வேண்டாமா என்ற கடும் குழப்பத்தில் ஏர் - இந்தியா இருக்கிறது. விமான போக்குவரத்து துறை வரலாற்றில் இதுவரை வேறு எந்த நிறுவனமும் கொடுத்திருந்த ஆர்டரை ஏர் - இந்தியா, போயிங் நிறுவனத்திடம் கொடுத்திருந்தது. ஆனால் அந்த ஆர்டரை கேன்சல் செய்வதா, அல்லது பெற்றுக் கொள்வதை தாமதப்படுத்தலாமா அல்லது பெற்றுக்கொண்டு விடுவதுதானா என்று இன்னும் ஏர் - இந்தியா முடிவு செய்யவில்லை என்று தெரிகிறது. இது குறித்து போயிங் இந்தியாவின் தலைவர் தினேஷ் கேஸ்கர் தெரிவிக்கையில், ஏர் - இந்தியா கொடுத்திருக்கும் ஆர்டர் குறித்து இதுவரை எங்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. எனவே அவர்கள் எங்களது மிகப்பெரிய வாடிக்கையாளராகத்தான் இன்னமும் இருக்கிறார்கள் என்றார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதால் இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருவதைத்தான் அது காட்டுகிறது. எனவே இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியாவுக்கு 100 பில்லியன் டாலர் ( சுமார் 4,80,000 கோடி ரூபாய் ) மதிப்புள்ள 1,000 விமானங்கள் தேவைப்படும் என்றார். இப்போது சிக்கலில் இருக்கும் இந்திய விமான போக்குவரத்து துறை இன்னும் ஒன்பது அல்லது ஒரு வருட காலத்திற்குள் சரியாகிவிடும் என்றார் கேஸ்கர். ஏர் - இந்தியா தவிர, இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமான கம்பெனியான ஜெட் ஏர்வேஸ் 7 போயிங் விமானங்களுக்கு ஆர்டர் செய்திருந்தது. ஆனால் அதை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


2 comments:

கலையரசன் said...

ஏர்-இந்தியா ஒரு விளங்காத ஏர்லைன்ஸ்..
வாங்கி என்னா பண்ண போறானுங்களாம்?

பாரதி said...

கலையரசன் வருகைக்கு நன்றி