Monday, December 14, 2009

விலை உயர்​வுக்​கு முன்பேர வர்த்தகம் காரணம் அல்ல

விலை உயர்​வுக்​கும் முன்​பேர வர்த்​த​கத்​துக்​கும் தொடர்​பில்லை என்று என்.​சி.​டி.​இ.​எக்ஸ் முன்பேர நிறு​வ​ன நிர்​வா​கத் தலை​வர் ஆர்.​ ராம​சே​ஷன் தெரி​வித்​தார். சென்​னை​யில் செய்​தி​யா​ளர்​க​ளி​டம் பேசிய அவர், அத்​தி​யா​வ​சி​யப் பொருள்​க​ளின் விலை உயர்​வைக் கட்​டுப்​ப​டுத்த அரசு உண​வுப் பொருள்​க​ளான பருப்பு,​​ சர்க்​கரை ஆகி​ய​வற்றை முன்​பேர வர்த்​த​கத்​தில் ஈடு​ப​டுத்த தடை விதித்​தது.​ ஆனால் தடை விதிக்​கப்​பட்ட பிறகு இவற்றின் விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு முக்​கி​யக் கார​ணமே தேவைக்​கேற்ப உற்​பத்தி இல்​லா​த​து​தான்.​ வெளி​நா​டு​க​ளில் முன்​பேர வர்த்​த​கத்​துக்கு ஒரு​போ​தும் தடை விதிப்​பது கிடை​யாது.​ அங்கு 100 ஆண்​டு​க​ளுக்​கும் மேலாக முன்பேர வர்த்​தக நடை​முறை உள்​ளது.​ இத்​த​கைய சூழல் இந்​தி​யா​வில் உரு​வாக இன்​னும் பல ஆண்​டு​கள் ஆகும். முன்​பேர வர்த்​த​கம் தொடர்​பான விழிப்​பு​ணர்வை தொடர்ந்து என்​சி​டி​இ​எக்ஸ் ஈடுபட்டு வரு​கி​றது.​ இத​னால் முன்​பேர வர்த்​த​கத்​தில் ஈடு​ப​டு​வோ​ரின் எண்​ணிக்​கை​யும் கணி​ச​மாக உயர்ந்து வரு​கி​றது. முன்​பேர வர்த்​த​கத்​தால் நுகர்​வோ​ருக்கு மட்​டு மின்றி விவ​சா​யி​க​ளுக்​கும் கூடு​தல் விலை கிடைக்​கும் என்​றும் ராம​சே​ஷன் தெரிவித்தார்.
என்​சி​டி​இ​எக்ஸ் 2003ம் ஆண்டி​லி​ருந்து முன்​பேர வர்த்​த​கத்​தில் ஈடு​பட்​டுள்​ளது.​ இதை கனரா வங்கி,​​ கிரி​சில்,​​ இஃப்கோ,​​ நபார்டு,​​ தேசிய பங்​குச் சந்தை,​​ எல்​ஐசி,​​ பஞ்​சாப் நேஷ​னல் வங்கி,​​ கோல்ட்​மேன் சாஷ்,​​ இன்​டர்​நே​ஷ​னல் எக்ஸ்​சேஞ்ச்,​​ ரேணுகா சுகர்ஸ் ஆகிய நிறு​வ​னங்​கள் இணைந்து தொடங்​கி​யுள்​ளன.​ இந்​நி​று​வ​னத்​தில் 5 லட்​சம் வாடிக்​கை​யா​ளர்​கள் உள்​ள​னர்.​ இந்​நி​று​வ​னம் 39 வேளாண் உற்பத்தி பொருட்​கள்,​ 6 உலோ​கங்​கள்,​​ 3 பாலி​மர்​கள்,​​ 4 எரி​சக்தி பொருள்​கள் உட்பட 59 பொருட்​க​ளின் முன்​பேர வர்த்​த​கத்​தில் ஈடு​பட்​டுள்​ளது.​ நாடு முழு​வ​தும் 700 மையங்​க​ளில், இருபதாயிரம் டெர்​மி​னல்​க​ளு​டன் செயல்​ப​டு​கி​றது.​ ​
நன்றி : தினமலர்


No comments: