Sunday, August 2, 2009

உலகளவில் உருக்கில் இந்தியா முன்னணி

உலகளவில் உருக்கு உற்பத்தி செய்யும் நாடுகள், அதன் உற்பத்தியில் திடீரென சரிவை சந்தித்து வரும் வேளையில், இந்தியா வளர்ச்சியடைந்து, தற்போது மூன்றாம் இடம் பெற்றுள்ளது. இந்தாண்டு ஸ்டீல் உற்பத்தியில் மற்ற நாடுகள் சரிவை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளே, ஸ்டீல் உற்பத்தியில் வளர்ச்சியடைந்து வருகின்றன. இந்தாண்டின் முதல் ஆறு மாதங்களில், அதிகளவில் ஸ்டீல் உற்பத்தி செய்யும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலில், இந்தியா, இரண்டு இடங்கள் முன்னேறி மூன்றாம் இடம் பெற்றுள்ளது. சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முறையே முதல் மற்றும் இரண்டாம் இடங்களை பிடித்துள்ளன. அமெரிக்கா, ஜெர்மனி, தென்கொரியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள், ஸ்டீல் உற்பத்தியில் திடீரென சரிவை சந்தித்துள்ளன. இது குறித்து இந்திய ஸ்டீல் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ரூங்டா கூறுகையில், 'பொருளாதார மந்த நிலை நிலவிய போதும், ஸ்டீல் உற்பத்தி துறையின் வளர்ச்சியை பராமரித்தோம். இதற்கு உள்நாட்டு சந்தையில் நிலவும், அதிகப்படியான தேவையே காரணம்' என்றார்.
நன்றி : தினமலர்


No comments: