Sunday, August 2, 2009

விவசாயம், ஓட்டல்களை விட, சிகரெட்டில் லாபம் குவியுது: மூன்று மாதங்களில் மட்டும் 900 கோடி ரூபாய்

விவசாயப் பொருட்கள் விற்பனை மற்றும் ஓட்டல் தொழில் மூலம் கிடைக் கும் வருவாய் பல மடங்கு குறைந்து விட்டது; அதே சமயம், சிகரெட் விற் பனை மூலம், மூன்று மாதங்களில் 900 கோடி ரூபாய் நிகர லாபம் கிடைத் துள்ளது. சிகரெட் விற்பனை, ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறதே ஒழிய, எந்த கட்டுப்பாடுகள் போட்டாலும், குறைந்த பாடில்லை. சிகரெட் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தும் இந் திய டுபாக்கோ கம்பெனி (ஐ.டி.சி.,)க்கு கடந்த ஜூன் மாதத்துடன் முடிந்த முதல் காலாண்டில் மட் டும் 17 சதவீதம் லாபம் கிடைத்துள்ளது. கடந்தாண்டு , ஏப்ரல் - ஜூன் மாதங்களில் ஐ.டி.சி., லாபம் 748 கோடி ரூபாயாக இருந்தது. இந்தாண்டு இதே மூன்று மாதங்களில் 900 கோடியாக உயர்ந்துள்ளது. சிகரெட் விற்பனை மூலமான வருமானம், கடந்த ஆண்டு இந்த மூன்று மாதங்களில் 3,900 கோடியாக இருந்தது; இந்தாண்டு இதே காலகட்டத்தில், 4,090 கோடியாக உள்ளது. இதே காலகட்டத்தில், விவசாய பொருட்கள் விற் பனையால் வரக்கூடிய வருமானம் 49 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது, 940 கோடி ரூபாய் குறைவாக வருமானம் கிடைத்துள் ளது.
அதுபோல, ஓட்டல் தொழில் மூலம் கிடைக்கும் வருமானம் 28 சதவீதம் குறைந்து விட்டது. அதாவது, கடந்த ஆண்டு இந்த மூன்று மாதங்களில் கிடைத்ததை விட, 173 கோடி ரூபாய் குறைவாக கிடைத்துள்ளது.
சிகரெட் விலை உயர்த் தப்பட்டாலும், அதன் விற் பனை குறைந்ததாக தெரியவில்லை. ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தபடி தான் உள்ளது. அதுபோல, சிகரெட் பிடிக்க கட்டுப்பாடுகளை போட்டபோதும், அதன் விற்பனை துளிக்கூட சரியாதது மட்டுமின்றி, அதிகமாகத்தான் உள்ளது. கோல்டுபிளேக்ஸ் கிங்ஸ், கிளாசிக், ஸ்டேட் எக்ஸ்பிரஸ் 555, பென்சன் அண்ட் ஹெட்ஜஸ் போன்ற உயர் ரக சிகரெட் விலைகளை ஐ.டி.சி., தொடர்ந்து அதிகரித்து வந்துள் ளது. கடந்த காலாண்டில், 15 சதவீத லாபம் தான் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது.
ஆனால், அதைவிட அதிகமாக கிடைத்துள்ளது, சிகரெட் தொழில்துறை தரப் பில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி : தினமலர்


No comments: