Monday, December 21, 2009

காத்​தி​ருக்​கும் புதை​குழி

வர​லாறு என்​பது திட்​ட​மிட்டு நிக​ழக்​கூ​டி​ய​தல்ல.​ சொல்​லப்​போ​னால்,​​ மிகச் சாதா​ர​ண​மான அபத்​த​மான முடி​வு​கள்​தான் பெரும்​பா​லான சரித்​திர நிகழ்​வு​களை உரு​வாக்கி இருக்​கின்​றன.​ சமீ​பத்​தில் நடந்த இப்​ப​டிப்​பட்ட ஒரு நிகழ்வு இந்​தியா சம்​பந்​தப்​பட்​டது.​ கார​ணம்,​​ அமெ​ரிக்க வர​லாற்​றில் வியூக முக்​கி​யத்​து​வம் வாய்ந்த ஒரு முடிவை அறி​விக்​கும் முன் இந்​தி​யப் பிர​த​ம​ரு​டன் அந்​நாட்டு அதி​பர் உரை​யா​டி​யி​ருப்​ப​தைச் சாதா​ரண நிகழ்​வாக நம்​ம ôல் எடுத்​துக்​கொள்ள முடி​ய​வில்லை.​

ஆப்​கன் போரில் ஈடு​பட்​டி​ருக்​கும் அமெ​ரிக்​கத் துருப்​பு​க​ளின் எண்​ணிக்​கையை அதி​க​ரிப்​பது}​அதா​வது}​போரை மேலும் தீவி​ரப்​ப​டுத்​து​வது என்று வெள்ளை மாளிகை எடுத்​தி​ருக்​கும் முடிவை இப்​போது மதிப்​பி​டு​வது கடி​ன​மா​னது.​ இதைத் தவிர்த்து,​​ இப்​போ​தைக்கு அமெ​ரிக்​கா​வுக்கு வேறு நல்ல தெரி​வு​கள் ஏதும் இருப்​ப​தா​கத் தெரி​ய​வில்லை.​

அதே​ச​ம​யம்,​​ இந்​தப் போரில் அல்}​காயிதா மற்​றும் தாலி​பன்​க​ளின் வலைப் பின்​னல்​களை அறுக்க நேசப் படை​கள் பாகிஸ்​தா​னு​டன் கூட்​டணி அமைத்​தால் போதாது என்​கிற முடி​வுக்கு அமெ​ரிக்கா வந்​தி​ருக்​கி​றது.​ ராணுவ நட​வ​டிக்​கை​க​ளில்,​​ ஆளில்லா "காம்​பட் ட்ரோன்' தாக்​கு​தல் விமா​னங்​க​ளைப்​போல இந்​தி​யா​வும் கை கோர்க்க வேண்​டும் என்று அமெ​ரிக்க வியூ​க​வா​தி​கள் நினைக்​கி​றார்​கள்.​ இந்​தப் பின்​ன​ணி​யி​லேயே மன்​மோ​கன் சிங்}​ஒபாமா இடை​யே​யான உரை​யா​டல் நடந்​தேறி இருக்​கி​றது.​

உரை​யா​ட​லைத் தொடர்ந்து,​​ அமெ​ரிக்க அறி​விப்​புக்கு இந்​திய வெளி​யு​ற​வுத் துறை அமைச்​ச​கம் வெளி​யிட்​டி​ருக்​கும் வர​வேற்​பைப் பார்க்​கும்​போது அமெ​ரிக்​கா​வின் வியூ​கத்தை நோக்கி இந்​தியா நக​ரத் தொடங்​கி​விட்​ட​தா​கவே தோன்​று​கி​றது.​ ஒரு​வேளை ஆப்​க​னுக்கு இந்​தி​யப் படை​களை அனுப்ப நம் அரசு முடி​வெ​டுத்​தால்,​​ ராணுவ ரீதி​யா​க​வும் ராஜ​தந்​திர ரீதி​யா​க​வும் இந்​தியா எடுக்​கப்​போ​கும் மிக மோச​மான முடி​வு​க​ளில் ஒன்​றாக அது அமை​யு​யும்.​ சோவி​யத் ஒன்​றி​ய​மும் அமெ​ரிக்​கா​வும் கற்ற பாடங்​க​ளை​வி​ட​வும் மோச​மான பாடங்​களை இந்​தியா எதிர்​கொள்ள நேர்ந்​தால் ஆச்​ச​ரி​யப்​ப​டு​வ​தற்​கில்லை.​

ஆப்​கன் மீது 1979}ல் சோவி​யத் ஒன்​றி​யம் போர் தொடுத்​தது.​ ஏறத்​தாழ 10 ஆண்​டு​கள் நீடித்த அந்​தப் போரின் இறு​தி​யில் வலு​வான சோவி​யத் படை​கள் தோல்​வி​யைத் தழு​வின.​ அப்​பு​றம் 12 ஆண்​டு​கள் உள்​நாட்​டுப் போர்.​ பிறகு,​​ 2001 முதல் அமெ​ரிக்கா அங்கு போரிட்​டுக்​கொண்​டி​ருக்​கி​றது.​ ரஷி​யா​வும் சரி,​​ அமெ​ரிக்​கா​வும் சரி;​ ஆப்​க​னைப் பற்றி நினைத்​தது வேறு;​ நடந்​தது வேறு.​

முன்​ன​தாக,​​ ஆங்​கி​லேயே}​ஆப்​கா​னி​யப் போர்​க​ளில் ஆங்​கி​லே​யர்​க​ளுக்​கும் இப்​ப​டித்​தான் நேர்ந்​தது.​ புவி​யி​ய​லைப்​போ​லவே சிக்​க​லான சமூக இயக்​க​வி​ய​லைக் கொண்ட ஆப்​கன் ""ஏன் இந்த நாட்​டுக்​குள் காலடி எடுத்​து​வைத்​தோம்'' என்ற மோச​மான அனு​ப​வத்​தையே படை​யெ​டுத்த நாடு​க​ளுக்​கெல்​லாம் அளித்​தி​ருக்​கி​றது என்​பது சரித்​தி​ரம் புகட்​டும் பாடம்.​

ஆங்​கி​லே​யர்​க​ளும் ரஷி​யர்​க​ளும் தோல்​வியை ஒப்​புக்​கொண்​டார்​கள்.​ அமெ​ரிக்​கர்​கள் முடிந்த வரை மோதிப் பார்க்க முடி​வெ​டுத்​தி​ருக்​கி​றார்​கள்.​ அவ்​வ​ளவே.​

இந்​நி​லை​யில்,​​ இந்​தி​யப் படை​கள் ஆப்​க​னுக்​குள் நுழை​வது இந்​தி​யா​வுக்​குத் தேவை​யற்ற தலைவ​லியை உரு​வாக்​கும்.​ ஏதோ ஒரு காலை வேளை​யில் அமெ​ரிக்க விமா​னங்​கள் தன் துருப்​பு​க​ளைச் சுமந்து பல்​லா​யி​ரம் கி.மீ.​ தொலை​வுக்கு அப்​பால் பறந்த பின்​னர் இந்த வலி​யின் தீவி​ரத்தை இந்​தியா உணர வேண்​டி​யி​ருக்​கும்.​

கடந்த சில மாதங்​க​ளா​கவே இந்​திய எல்​லை​க​ளில் அதி​க​ரித்​து​வ​ரும் சீன அத்​து​மீ​றல்​கள்,​​ இந்​தி​யா​வின் அண்டை நாடு​க​ளில் நிறு​வப்​ப​டும் ராணுவ முக்​கி​யத்​து​வம் மிக்க சீனக் கட்​ட​மைப்​பு​கள் குறித்த செய்​தி​கள் ஒரு​வி​த​மான அச்​சத்தை உரு​வாக்கி வரு​கி​றது.​ இதை எதிர்​கொள்ள ""இந்​தியா ராணுவ ரீதி​யி​லான பலத்​தைப் பெருக்க வேண்​டும்;​ சீனா​வுக்​குப் பாடம் புகட்ட வேண்​டும்'' என்ற குரல்​கள் எழு​வ​தை​யும் பார்க்​கி​றோம்.​

ஆனால்,​​ இந்​தியா எங்கு தன் பலத்​தைப் பெருக்க வேண்​டும் என்​றால்,​​ முத​லில் ராஜ​தந்​திர வட்​டா​ரத்​தில்​தான்.​ கடந்த கால் நூற்​றாண்டு கால​மா​கத் தொடர்ச்​சி​யாக மிக மோச​மான முடி​வு​கள் எடுக்​கப்​பட்ட துறை நமது வெளி​யு​ற​வுத் துறை​யா​கவே இருக்​கும்.​ ஆகை​யால்,​​ இந்​தி​யர்​கள் முத​லில் தம் குரலை நம்​மு​டைய வெளி​யு​ற​வுக் கொள்​கைக்​காக எழுப்​பு​வதே பொருத்​த​மாக இருக்​கும்.​ தற்​போ​தைய தேவை​யும் அதுவே.​

அர​சனை நம்​பிப் புரு​ஷ​னைக் கைவிட்ட கதை​யாக,​​ அமெ​ரிக்​காவை நம்பி நாம் நமது தன்​னம்​பிக்​கை​யை​யும்,​​ தனித்​தன்​மை​யை​யும் கைவி​டு​கி​றோம் என்று அர​சை​யும்,​​ குறிப்​பாக,​​ வெளி​யு​ற​வுத் துறை​யை​யும் எச்​ச​ரிக்க விரும்​பு​கி​றோம்!
நன்றி : தினமணி

No comments: