Saturday, December 19, 2009

காங்​கி​ரசுக்கு சோதனை "தெலங்​கானா'

ஆந்​திர மாநில முதல்​வர் மறைந்த ஒய்.எஸ்.ராஜ​சே​கர ரெட்​டிக்​குப் பிறகு அதி​கா​ரத்​தைக் கைப்​பற்​று​வது யார் என்​பது தொடர்​பான சர்ச்சை எழுந்து முதல்​வ​ராக ரோசய்யா தொடர்​வார் என அறி​விக்​கப்​பட்டு பிரச்னை ஓய்ந்​தி​ருந்த நிலை​யில்,​​ அங்கு "தனி தெலங்​கானா' விவ​கா​ரம் விஸ்​வ​ரூ​பம் எடுத்​துள்​ளது.​

÷1950}களின் தொடக்​கத்​தில் முதன்​மு​த​லாக நிலப்​பி​ர​புக்​க​ளுக்கு எதி​ராக மிகப்​பெ​ரிய விவ​சா​யி​கள் இயக்​கம் உரு​வா​னது.​ பின்​னர் தனி மாநி​லக் கோரிக்கை எழுந்​தது.​ அதன் பிறகு கடந்த 10 ஆண்​டு​க​ளில் அக்​கோ​ரிக்கை புதிய உத்​வே​கம் பெற்​றது.​

இந்​தக் காலத்​தில்​தான் மாநி​லங்​கள் மறு​சீ​ர​மைப்​புக் கமி​ஷன் கோரிக்கை வலுப்​பெ​றவே பிர​ணாப் முகர்ஜி தலை​மை​யி​லான கமிட்டி தனது அறிக்​கையை எல்.கே.அத்​வா​னி​யி​டம் அளித்​தது.​ அப்​போது மத்​திய உள்​துறை அமைச்​சர்,​​ தெலங்​கானா தனி மாநி​லக் கோரிக்​கையை ஏற்க முடி​யாது என்று கூறி நிரா​க​ரித்​து​விட்​டார்.​

காங்​கி​ரஸ் மீண்​டும் ஆட்​சிக்கு வந்​தால் தனி தெலங்​கானா கோரிக்கை பரிசீ​லிக்​கப்​ப​டும் என்று 2004}ம் ஆண்டு நடந்த தேர்த​லின்​போது காங்​கி​ரஸ் கட்சி தனது தேர்​தல் வாக்​கு​று​தி​யில் தெரி​வித்​தி​ருந்​தது.​ 2009}ம் ஆண்டு தேர்த​லின்​போ​தும் இதை காங்​கி​ரஸ் முன்​வைத்​துப் பிர​சா​ரம் செய்​தது.​ செகந்​த​ரா​பா​தில் நடந்த கூட்​டத்​தில் பேசிய காங்​கி​ரஸ் தலை​வர் சோனியா காந்​தி​யும்,​​ "தனி தெலங்​கானா' கோரிக்​கையை கொள்கை அள​வில் ஏற்​றுக் கொள்​வ​தா​கக் கூறி​னார்.​

÷எ​னி​னும் தனி தெலங்​கானா கோரிக்கை மீண்​டும் எழா​மல் பார்த்​துக் கொள்​வ​தாக முதல்​வர் ராஜ​சே​கர ரெட்டி காங்​கி​ரஸ் தலை​மைக்கு உறு​தி​ய​ளித்​த​து​டன் மிக​வும் சாமர்த்​தி​ய​மா​கச் செயல்​பட்டு இப்​பி​ரச்னை தலை​தூக்​கா​மல் பார்த்​துக் கொண்​டார்.​ தெலங்​கானா பிரச்னை குறித்து விவா​திக்க ரோசய்யா தலை​மை​யில் ஒரு கமிட்​டி​யை​யும் ஏற்​ப​டுத்​தி​னார்.​ தெலங்​கானா பகு​தி​யைச் சேர்ந்த சில​ருக்கு அமைச்​சர் பத​வி​யும் கொடுத்​தார்.​ இதை​ய​டுத்து பிரச்னை அமுங்​கிப் போய் இருந்​தது.​

மேலும் அர​சிய​லில் அதி​ருஷ்​டம் ராஜ​சே​கர ரெட்டி பக்​கம் இருந்​தது போலும்!​ அடுத்​த​டுத்து தேர்​தல்​க​ளில் தெலங்​கானா ராஷ்ட்​ரீய சமிதி எதிர்​பார்த்த அளவு வெற்றி பெற​வில்லை.​ இது ராஜ​சே​கர ரெட்​டிக்​குச் சாத​க​மாக இருந்​த​தால் தெலங்​கானா பிரச்னை தலை​தூக்​க​வில்லை.​

​ 2004}ல் காங்​கி​ரஸ் கட்​சி​யு​டன் கூட்​டணி வைத்​தி​ருந்த தெலங்​கானா ராஷ்ட்​ரீய சமிதி,​​ தெலங்​கானா விவ​கா​ரத்தை காங்​கி​ரஸ் கண்​டு​கொள்​ளா​த​தால் 2006}ல் அத​னு​ட​னான உறவை முறித்​துக் கொண்​டது.​ இதைத் தொடர்ந்து தெலங்​கானா ராஷ்ட்​ரீய சமிதி எம்.பி.க்கள்,​​ எம்.எல்.ஏ.க்கள் தங்​கள் பத​வி​களை ராஜி​நாமா செய்​த​னர்.​ ஆனால்,​​ அதைத் தொடர்ந்து நடந்த இடைத்​தேர்த​லி​லும் அக்​கட்சி தோல்​வி​யையே சந்​தித்​தது.​ 2009}ம் ஆண்டு நடை​பெற்ற பொதுத் தேர்த​லில் 17 மக்​க​ள​வைத் தொகு​தி​யில் போட்​டி​யிட்ட தெலங்​கானா ராஷ்ட்​ரீய சமிதி 2 இடங்​க​ளில் மட்​டுமே வென்​றது.​ இதே​போல மாநி​லச் சட்​டப்​பே​ர​வைக்​கான தேர்த​லில் தெலங்​கானா பகு​தி​யில் 119 தொகு​தி​க​ளில் போட்​டி​யிட்டு வெறும் 10 தொகு​தி​க​ளையே அக் கட்சி கைப்​பற்​றி​யது.​

இத​னால் தனி தெலங்​கானா கோரிக்​கைக்கு மக்​க​ளி​டையே ஆத​ரவு இல்லை என்று சொல்​லி​விட முடி​யாது.​ தெலங்​கானா பகு​தி​யில் ரெட்​டி​கள்,​​ கம்​ம​வார் இன மக்​க​ளின் கை ஓங்​கி​யி​ருந்​தது.​ இத​னால் தனி தெலங்​கானா கோரிக்கை தேர்த​லின்​போது முக்​கி​யத்​து​வம் பெற​வில்லை.​ அடுத்​த​டுத்து தேர்​தல்​க​ளில் தோல்வி ஏற்​பட்​டதை அடுத்து ஹைத​ரா​பாத் நக​ராட்​சித் தேர்த​லில் போட்​டி​யி​டத் துணி​வில்​லாத நிலை​யில் கட்​சி​யையே கலைத்​து​வி​ட​லாமா என்ற யோச​ன​யில் இருந்​தார் அதன் நிறு​வ​ன​ரான கே.சந்​தி​ர​சே​கர ராவ்.​

ஆந்​திர மாநி​லத்​தில் ராஜ​சே​கர ரெட்டி மறை​வுக்​குப் பிறகு முதல்​வர் யார் என்ற சர்ச்சை எழுந்த நிலை​யில்,​​ அவ​ரது மகன் ஜெகன்​மோ​கன் ரெட்டி,​​ தனக்​குத்​தான் முதல்​வர் பதவி வேண்​டும் என்று பிடி​வா​தம் பிடித்த நிலை​யில் தாற்​கா​லிக முதல்​வ​ராக ரோசய்யா பொறுப்​பேற்​றார்.​ இதற்கு ஜெகன்​மோ​கன் ரெட்டி கடும் எதிர்ப்​புத் தெரி​வித்​தார்.​ இத​னால் ஆந்​திர அர​சிய​லில் திடீர் குழப்​பம் ஏற்​பட்​டது.​ நிலைமை விப​ரீ​த​மா​வதை உணர்ந்த காங்​கி​ரஸ் தலைமை ஜெகன்​மோ​கன் ரெட்​டி​யைச் சமா​தா​னப்​ப​டுத்தி ரோசய்யா முதல்​வ​ரா​கத் தொடர்ந்து நீடிப்​பார் என்று அறி​வித்​தது.​

இதே​ச​ம​யத்​தில் கர்​நா​டக மாநி​லம் பெல்​லா​ரி​யில் சுரங்​கத் தொழி​லில் ஈடு​பட்​டு​வந்த ரெட்டி சகோ​த​ரர்​கள் மீது சட்​ட​வி​ரோ​த​மா​கச் செயல்​பட்டு வந்​த​தான குற்​றச்​சாட்​டின் பேரில் சிபிஐ விசா​ரணை நடத்த மத்​திய அரசு உத்​த​ர​விட்​டது.​

​ பெல்​லாரி ரெட்டி சகோ​த​ரர்​கள் ஒய்.எஸ்.ராஜ​சே​கர ரெட்​டிக்கு மிக​வும் நெருக்​க​மாக இருந்​த​னர்.​ அவ​ரது மறை​வுக்​குப் பிறகு அந்த நெருக்​கம் ஜெகன்​மோ​கன் ரெட்​டி​யு​ட​னும் தொடர்ந்​தது.​ மேற்​கு​றிப்​பிட்ட இரண்டு சம்​ப​வங்​க​ளும் ஒன்​று​டன்​ஒன்று தொடர்பு இல்​லா​தது என்ற போதி​லும் இந்த நேரத்​தைப் பயன்​ப​டுத்தி தெலங்​கானா ராஷ்ட்​ரீய சமிதி தலை​வர் கே.​ சந்​தி​ர​சே​கர ராவ்,​​ தெலங்​கானா பிரச்​னையை கையி​லெ​டுத்து அதற்​காக உண்​ணா​வி​ர​தப் போராட்​டம் அறி​வித்​தார்.​ ஆனால்,​​ தனி தெலங்​கானா கோரிக்​கைக்கு சிலர் எதிர்ப்​புத் தெரி​வித்​த​னர்.​ இத​னால் பிரச்னை விஸ்​வ​ரூ​பம் எடுத்​தது.​ ரோசய்​யா​வின் ஆட்​சிக்​குக் கெட்ட பெயரை ஏற்​ப​டுத்​த​வும்,​​ அவரை ஆட்​சியி​லி​ருந்து கீழே இறக்​க​வும் ஜெகன் மோகன் ஆத​ர​வா​ளர்​களே பிரச்​னை​யைப் பெரி​தாக்க நினைத்து இரு​த​ரப்​பி​ன​ரை​யும் உசுப்​பி​விட்​டி​ருக்​க​லாம் என்ற கருத்து உள்​ளது.​

ஜெகன்​மோ​கன் ரெட்​டியை முதல்​வ​ராக்க வேண்​டும் என்று கையெ​ழுத்து இயக்​கம் நடத்​தி​ய​வர்​களே தெலங்​கானா தனி மாநி​லக் கோரிக்​கைக்கு எதிர்ப்​புத் தெரி​வித்து பத​வியை ராஜி​நாமா செய்ய முன்​வந்​துள்​ள​னர்.​ இதைத் தொடர்ந்து கட​லோர ஆந்​தி​ரப் பிர​தே​சம் மற்​றும் ராய​ல​சீ​மை​யைச் சேர்ந்த காங்​கி​ரஸ் எம்.எல்.ஏ.க்க​ளும்,​​ வேறு சில பகு​தி​க​ளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்க​ளும் பத​வியை ராஜி​நாமா செய்​யத் தயார் என அறி​வித்​துள்​ள​னர்.​

​ ​ தெலங்​கானா பிரச்​னை​யைச் சரி​வர கையாள மத்​தி​யில் காங்​கி​ரஸ் தலை​மை​யி​லான ஆளும் கட்சி தவ​றி​விட்​டது.​ தெலங்​கானா தனி மாநி​லக் கோரிக்​கையை ஏற்​றுக் கொள்​வ​தாக அறி​வித்த அரசு,​​ அத​னால் ஏற்​ப​டக்​கூ​டிய பின்​வி​ளை​வு​களை நினைத்​துப் பார்க்​கத் தவ​றி​விட்​டது.​ இந்த அறி​விப்பு வந்​த​வு​ட​னேயே அதற்கு எதிர்ப்​புக் கிளம்​பி​யது.​ தனி மாநி​லக் கோரிக்​கையை வலி​யு​றுத்தி சாகும்​வரை உண்​ணா​வி​ர​தம் இருந்த டி.ஆர்.எஸ்.​ கட்​சித் தலை​வர் சந்​தி​ர​சே​கர ராவை சமா​தா​னப்​ப​டுத்​தவே இந்த அறி​விப்பு என்று காங்​கி​ரஸ் சொல்​வதை ஏற்க முடி​யாது.​ ​ சந்​தி​ர​சே​கர ராவ் உண்​ணா​வி​ர​தம் இருந்​த​போதே தெலங்​கானா பற்றி முடிவு எடுப்​ப​தற்​கான முன்​மு​யற்​சி​யில் காங்​கி​ரஸ் இறங்​கி​யது.​ உட​ன​டி​யாக அனைத்​துக் கட்​சிக் கூட்​டத்​துக்கு ஏற்​பாடு செய்​யு​மாறு ஆந்​திர முதல்​வ​ரைக் கேட்​டுக் கொண்​டது.​ மார்க்​சிஸ்ட் மற்​றும் எம்​ஐ​எம் கட்​சி​கள் தவிர மற்ற கட்​சி​கள் தெலங்​கானா கோரிக்​கையை ஆத​ரிக்க முன்​வந்​தன.​ இது தொடர்​பாக காங்​கி​ரஸ் கட்சி மாநி​லச் ​ சட்​டப்​பே​ர​வை​யில் தீர்​மா​னம் கொண்​டு​வர வேண்​டும் என்​றும் வலி​யு​றுத்​தின.​ ​(ஆனால்,​​ இரண்டு நாள்​க​ளுக்​குப் பிறகு இப் பிரச்னை தலை​கீ​ழாக மாறி​விட்​டது வேறு விஷ​யம்.)​

தெலங்​கானா மாநி​லக் கோரிக்​கையை கொள்கை அள​வில் ஏற்​ப​தாக அறி​வித்த உட​னேயே உண்​ணா​வி​ர​தத்தை முடித்​துக் கொள்ள வேண்​டும் என்று சந்​தி​ர​சே​கர ராவை காங்​கி​ரஸ் வலி​யு​றுத்​தி​ய​தா​கத் தெரி​கி​றது.​ அதே​ச​ம​யத்​தில் தனி தெலங்​கானா மாநி​லம் அமைந்​தால் தெலங்​கானா ராஷ்ட்​ரீய சமி​தியை காங்​கி​ர​ஸý​டன் இணைக்க ராவ் உறுதி தெரி​வித்​த​தா​க​வும் கூறப்​ப​டு​கி​றது.​

​ தெலங்​கானா விவ​கா​ரத்​தில் ஜெகன்​மோ​கன் ரெட்டி மற்​றும் அவ​ரது ஆத​ர​வா​ளர்​கள் எதிர்ப்​புத் தெரி​விப்​பார்​கள் என்று காங்​கி​ரஸ் சற்​றும் எதிர்​பார்க்​க​வில்லை.​ ரோசய்​யா​தான் முதல்​வ​ராக நீடிப்​பார் என்று காங்​கி​ரஸ் மேலி​டம் அறி​வித்​த​போது,​​ ​ ​ ஜெகன்​மோ​கன் ரெட்டி வெளிப்​ப​டை​யாக ஒப்​புக்​கொண்​டா​லும் மன​த​ள​வில் அதை ஏற்​றுக்​கொள்​ளத் தயா​ராக இல்லை.​ இந்​தச் சம​யத்​தில் தெலங்​கானா தனி மாநி​லக் கோரிக்கை விஸ்​வ​ரூ​பம் எடுத்​த​போது அதற்கு ரெட்டி ஆத​ர​வா​ளர்​கள் எதிர்ப்பை வெளிப்​ப​டுத்​தி​னர்.​

​ தெலங்​கானா தனி மாநி​லக் கோரிக்​கையை கொள்கை அள​வில் ஏற்​ப​தாக அவ​ச​ரப்​பட்டு அறி​வித்த மத்​திய அரசு,​​ இதே​போன்ற கோரிக்கை நாட்​டின் இதர பகு​தி​களி​லி​ருந்து வரும் என்​பதை எண்​ணிப்​பார்க்​கத் தவ​றி​விட்​டது.​ தெலங்​கானா பற்​றிய அறி​விப்பு வந்​த​வு​ட​னேயே கோர்க்கா ஜன​முக்தி மோர்ச்சா,​​ கோர்க்​கா​லாந்து தனி மாநி​லக் கோரிக்​கையை எழுப்​பி​யது.​ இதைத் தொடர்ந்து உ.பி.​ முதல்​வர் மாயா​வ​தி​யும்,​​ உ.பி.​ மாநி​லத்தை மூன்​றா​கப் பிரிக்க வேண்​டும் என்று கோரிக்கை எழுப்​பி​னார்.​

÷தனி தெலங்​கானா மாநி​லம் அமை​வதை அரசு கொள்கை அள​வில் ஏற்​ற​தை​ய​டுத்து நாட்​டின் இதர பகு​தி​யில் உள்​ள​வர்​கள் தனி மாநி​லக் கோரிக்​கையை எழுப்ப வேண்​டாம் என்று மத்​திய அமைச்​சர் பிர​ணாப் முகர்ஜி தெரி​வித்​துள்​ளார்.​ ஆனால்,​​ அர​சின் அறி​விப்பு வெளி​யான விதம் தவ​றான சமிக்​ஞையை ஏற்​ப​டுத்​தும் அபா​யம் உள்​ளது.​

அதா​வது ஆந்​தி​ரத்​தில் தனி மாநி​லக் கோரிக்​கையை வலி​யு​றுத்​திப் போராட்​டம்,​​ வன்​முறை நடந்​ததை அடுத்து நிலை​மை​யைச் சமா​ளிக்க அரசு தெலங்​கானா தனி மாநி​லக் கோரிக்​கையை ஏற்​ப​தாக அறி​வித்​துள்​ளது.​ இனி வன்​முறை,​​ போராட்​டம் போன்​ற​வற்​றின் மூலம் கோரிக்​கை​களை வலி​யு​றுத்​தி​னால் அர​சைப் பணி​ய​வைத்​து​வி​ட​லாம் என்ற எண்​ணத்தை இது தோற்​று​வித்​து​விட்​டது.​ தற்​போ​தைய அர​சி​யல் சூழ்​நி​லை​யில் தெலங்​கானா தனி மாநி​லக் கோரிக்கை உறு​தி​மொ​ழியை நிறை​வேற்​று​வதா அல்​லது அதி​லி​ருந்து பின்​வாங்​கி​வி​டு​வது நல்​லதா என்​பது புரி​யா​மல் காங்​கி​ரஸ் உள்​ளது.​

÷2004}ம் ஆண்டு மத்​தி​யில் காங்​கி​ரஸ் தலை​மை​யி​லான அரசு அமைய ஆந்​தி​ரம் முக்​கிய கார​ண​மாக இருந்​தது.​ 2009}ம் ஆண்டு தேர்த​லில் காங்​கி​ரஸ் அதி​கா​ரத்​தைத் ​ தக்​க​வைத்​துக் கொள்​ள​வும் ஆந்​தி​ரம் உத​வி​யுள்​ளது.

இக்​கட்​டான இந்த நேரத்​தில் சரி​யான முடிவு எடுக்க ​ காங்​கி​ரஸ் தவ​றி​விட்​டால் இரண்டு பக்​க​மும் மக்​கள் ஆத​ரவை காங்​கி​ரஸ் இழந்​து​விட நேரி​டும்.​ இதைக் கவ​னத்​தில் கொண்டு காங்​கி​ரஸ் செயல்​பட வேண்​டும்.
கட்டுரையாளர் : நீரஜா சௌத்ரி
நன்றி : தினமணி

No comments: