Tuesday, November 25, 2008

பதவி விலகியதும் நூலகம் துவங்குகிறார் ஜார்ஜ் புஷ்

அமெரிக்க அதிபராக இருக்கும் ஜார்ஜ் புஷ்ஷின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதம் 20 ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன் பின் அவர் என்ன செய்யப்போகிறார் என்று உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறது. இந்நிலையில் பெரு நாட்டுக்கு சென்ற அதிபர் புஷ்ஷின் மனைவி லாரா புஷ்ஷை சூழ்ந்து கொண்ட பத்திரிக்கையாளர்கள் இது பற்றி கேள்வி கேட்டு துளைத்தனர். அப்போது அவர், வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறியதும் அவர்களது சொந்த மாகாணமான டெக்ஸாஸ் செல்ல இருப்பதாகவும், அங்கு டல்லஸ் நகரில் நூலகம் ஒன்று துவங்க இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் ஃபிரீடம் இன்ஸ்டிடியூட் ஒன்றை துவக்கவும் புஷ் விரும்பமாக இருக்கிறார் என்றார். நூலகத்திலும் ஃபிரீடம் இன்ஸ்டிடியூட்டிலும் புஷ் பொழுதை போக்கும்போது, லாரா புஷ் கல்வித்துறையில் சேவை செய்ய செல்ல இருக்கிறார். லாரா புஷ், அதிபர் மனைவியாக வெள்ளை மாளிøக்கு செல்லும் முன் டீச்சராகத்தான் வேலை பார்த்து வந்தார். மேலும் ஆப்கானிஸ்தான் பெண்களுக்கான மனித உரிமையை நிலைநாட்ட, அவர் போராட்டப் போவதாகவும் தெரிவித்தார். மேலும் இன்னொரு நபரிடம் ஜார்ஜ் புஷ், அவரது எதிர்காலம் குறித்து பேசியபோது, தான் ஒய்வு பெற்றபின் சொற்பொழிவு ஆற்றப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
நன்றி : தினமலர்


No comments: