Monday, June 29, 2009

பெட்ரோல், டீசல் விலை உயர்வு உடனடியாக இல்லை : முரளி தியோரா

எல்லோரும் எதிர்பார்த்திருக்கும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உடனடியாக உயர்த்தப்பட மாட்டாது என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை எவ்வாரெல்லாம் மாறுகிறது என்பதை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அதன் அடிப்படையில்தான் இந்தியாவில் விற்கப்படும் சில்லரை விலை பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் மாறுதல் செய்யப்படும் என்றார் அவர். அவர் மேலும் தெரிவித்தபோது, நாம் வாங்கும் பேஸ்கட் குரூட் ஆயிலின் விலை வெள்ளிக்கிழமை அன்று பேரலுக்கு 68.54 டாலராக இருந்தது. அது உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இருந்தாலும் அந்த விலை மேலும் உயருகிறதா என்பதை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறோம். எப்படி இருந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை உயர்த்தும் முன், மத்திய அமைச்சரவை கூடி விவாதித்துதான் முடிவு செய்யும் என்றார். இப்போது இந்திய எண்ணெய் கம்பெனிகள், ஒவ்வொரு லிட்டர் டீசல் விற்கும் போதும் ரூ.2.96 நஷ்டம் அடைகின்றன. பெட்ரோலி விற்கும் போது ரூ.6.08 நஷ்டம் அடைகின்றன.
நன்றி : தினமலர்


No comments: