Tuesday, March 3, 2009

செவ்ரான் நிறுவனத்திடம் இருந்த 5 சதவீத ஆர்.பி.எல்., பங்குகளை ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் வாங்குகிறது

ரிலையன்ஸ் பெட்ரோலியத்தின் 5 சதவீத பங்குகளை வைத்திருந்த அமெரிக்க செவ்ரான் நிறுவனத்திடமிருந்து, அந்த பங்குகளை ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் திரும்ப வாங்குகிறது . பங்கு ஒன்றுக்கு ரூ.60 விலை வைத்து அந்த பங்குகளை ரூ.1,350 கோடிக்கு வாங்கிக்கொள்வதாக ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் தெரிவித்திருக்கிறது. எங்களுக்குள் ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தின் படி, பங்கு ஒன்றுக்கு ரூ.60 விலை வைத்து நாங்கள் ரூ.1,350 கோடிக்கு அந்த பங்குகளை வாங்கிக்கொள்ள இருக்கிறோம் என்றார் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸின் தலைமை நிதி அதிகாரி அலோக் அகர்வால். கடந்த 2006 ஏப்ரல் மாதத்தில் செவ்ரான் நிறுவனத்திற்கும் ரிலையன்ஸ் பெட்ரோலியத்திற்குமிடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி, ரிலையன்ஸ் பெட்ரோலியத்தின் 22.50 கோடி பங்குகளை செவ்ரான் வாங்கியது. இப்போது ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனம், ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸூடன் இணைந்து விட்டதால் அந்த பங்குகளை ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் திரும்ப வாங்குகிறது.
நன்றி : தினமலர்


No comments: