Monday, March 16, 2009

ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க்கள் இந்தியன் ஆயில் கார்பரேஷனுக்கு விற்பனை ?

கடந்த ஒரு வருடத்திற்கு முன் மூடப்பட்ட ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க்கள் இன்று மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், நாடு முழுவதும் இருக்கும் அதன் 1,432 பெட்ரோல் பங்க்கள் இந்தியன் ஆயில் கார்பரேஷனுக்கு விற்கப்படும் அல்லது குத்ததைக்கு கொடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும், ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் மற்றும் இந்தியன் ஆயில் கார்பரேஷனும் இணைந்த நிறுவனமாக ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க்கள் மாற்றப்படும் என்றும், அதன் நிர்வாகம் இந்தியன் ஆயில் கார்பரேஷனிடம் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்தியா முழுவதும் பெட்ரோல் பங்க்களை அமைக்க ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் ரூ.5,000 கோடியை முதலீடு செய்திருக்கிறது. அதை அப்படியே விட்டு விட அது தயாராக இல்லை. எனவே, அரசு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்பரேஷனுடன் பார்ட்னராக சேர்ந்து விட்டால், இதுவரை அரசிடமிருந்து பெட்ரோலுக்காக கிடைக்காத மானியம் இனிமேல் கிடைக்கும். ஏனென்றால், குஜராத் ஜாம் நகரில் ரிலையன்ஸ் க்கு சொந்தமாக இருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் முற்றிலுமாக ஏற்றுமதிக்காக ஏற்படுத்தப்பட்டிருப்பதால், அதிலிருந்தும் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க்களுக்கு பெட்ரோலை எடுத்துக்கொள்ள முடியாமல் இருந்தது.எனவே அது நஷ்டத்திலேயே பெட்ரோல் மற்றும் டீசலை விற்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. எனவேதான் ஒரு வருடத்திற்கு முன் அவைகள் மூடப்பட்டன.
நன்றி : தினமலர்


No comments: