Monday, March 16, 2009

தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்த பங்கு சந்தை

தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் பங்கு சந்தை உயர்ந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தின் போது கடைசி இரண்டு மணி நேரத்தில் குறியீட்டு எண் வேகமாக உயர்ந்தது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டிருக்கும் எற்ற நிலையும் இந்திய பங்கு சந்தையை உயர்த்த உதவியது எனலாம். சென்செக்ஸ் 8,900 புள்ளிகளுக்கு மேலும் நிப்டி 2,700 புள்ளிகளுக்கு மேலும் சென்று முடிந்திருக்கிறது. பேங்கிங், டெலிகாம், ஆயில் அண்ட் கேஸ், கேப்பிடல் குட்ஸ் மற்றும் பவர் பங்குகள் இன்று உயர்ந்திருந்தன. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் முலம் அதிக தொகை பங்கு சந்தைக்கு வந்தது. இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 186.93 புள்ளிகள் ( 2.13 சதவீதம் ) உயர்ந்து 8,943.54 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 58 புள்ளிகள் ( 2.13 சதவீதம் ) உயர்ந்து 2,777.25 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், பார்தி ஏர்டெல், எஸ்.பி.ஐ, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ஓ.என்.ஜி.சி., ஐ.டி.சி., பெல், டி.எல்.எஃப், ஐ.சி.ஐ.சி.ஐ.பேங்க், ஹெச்.யு.எல், டி.சி.எஸ், எல் அண்ட் டி போன்ற நிறுவனங்கள் அதிகம் லாபம் பார்த்தன. இருந்தாலும் இன்போசிஸ், மாருதி, சன் பார்மா, கிராசிம், சிப்லா, கெய்ர்ன், ரிலையன்ஸ் இன்ஃப்ரா, யூனிடெக் ஆகியவை சரிவை சந்தித்தன.
நன்றி :தினமலர்


No comments: