
பொதுத்துறை வங்கிகளில் உள்ள பெரிய அளவில் உள்ள வராக்கடன் விஷயத்தில் ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாட்டைக் கொண்டுவரப் போகிறது. வராக்கடனைக் கட்டுவதற்கு உடன்பாடு ஏற்பட்டால், இனி சி.பி.ஐ., அதற்கு ஒப்புதல் தரவேண்டும். பொதுத்துறை வங்கிகளில் வராக்கடன் அளவு குறைந்து வந்தாலும், சில விஷயத்தில் கோடிக்கணக்கில் அதிகக் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத நிலை உள்ளது. தற்போது எந்தெந்த நிறுவனம் அல்லது தனியார் மீது கிரிமினல் நடவடிக்கை உள்ளதோ அந்த விஷயத்தில் சி.பி.ஐ.,யின் அனுமதி பெற்ற பின்பே வராக்கடன் பற்றி முடிவெடுக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி முடிவு செய்திருக்கிறது. ஏனெனில், ஒரு வர்த்தகர் வங்கி ஒன்றில் தன் மீதிருந்த கடன் பாக்கி வசூல் கிரிமினல் வழக்கில், வட்டியுடன் சேர்த்து மொத்தமாக 525 கோடி ரூபாய் கட்ட வேண்டியதற்கு, பேசி முடிவு செய்து 400 கோடி ரூபாய் கட்டி, வராக்கடன் புகாரில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டார். அத்துடன், பணம் கட்டியதால், கிரிமினல் வழக்கு இல்லை என்று எழுதியும் வாங்கிக் கொண்டார். ஆகவே, பணபாக்கி உள்ள வராக்கடன் வைத்திருப்பவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்தும் போது, கிரிமினல் வழக்கு இல்லை என்று அத்தாட்சி பெறுமுன் சி.பி.ஐ ., அனுமதியையும் பெற வேண்டும். இதற்கான நடைமுறையை உருவாக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்திருக்கிறது.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment