Monday, March 2, 2009

உலகின் 13 வது மிகப்பெரிய எண்ணெய் சத்திகரிப்பு நிறுவனமாகியது ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ்

ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸூடன் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனம் இன்று இணைந்திருப்பதன் மூலம் அது, உலகின் 13 வது மிகப்பெரிய எண்ணெய் சுந்திகரிப்பு நிலையம் என்ற பெருமையை கொண்டிருந்த அமெரிக்காவின் செவ்ரான் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி விட்டு, அந்த இடத்தை பிடித்துக்கொண்டது. இன்று காலை தனித்தனியாக நடந்த ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் மற்றும் ரிலையன்ஸ் பெட்ரோலியம் போர்டு மீட்டிங்கில், ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸூடன் ரிலையன்ஸ் பெட்ரோலியத்தை இணைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்காக 16 ரிலையன்ஸ் பெட்ரோலியம் பங்குகளுக்கு ஒரு ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் பங்கை கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த இணைப்பின் மூலம், குஜராத்தில் உள்ள ஜாம் நகரில் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸூக்கு இருக்கும் 33 மில்லியன் டன் திறன் கொண்ட, முற்றிலும் ஏற்றுமதிக்காக துவங்கப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துடன், அதற்கு பக்கத்திலேயே ரிலையன்ஸ் பெட்ரோலியத்திற்கு இருக்கும் 29 மில்லியன் டன் சுத்திகரிப்பு திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையமும் சேர்ந்து கொண்டதால், அது உலகின் 13 வது மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமாகிறது. இந்தியாவை பொருத்தவரை இப்போது ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் தான் இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை கொண்டிருக்கிறது. இந்தியன் ஆயில் கார்பரேஷனுக்கு 50.7 மில்லியன் திறன் கொண்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தான் இருக்கிறது. எனவே அது, இனிமேல் உலகின் 18 வது பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை கொண்டதாக ஆகிறது.
நன்றி : தினமலர்


No comments: