Friday, July 10, 2009

சர்வதேச சந்தையில் விலை குறைந்தால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் : தியோரா

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 50 முதல் 60 டாலருக்குள் இருந்தால், இந்தியாவில் கடந்த வாரத்தில் கூட்டிய பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டு விடும் என்று பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 70 டாலர் வரை வந்ததால் மத்திய அரசு, பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.4 ம் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2 ம் உயர்த்தியது. ஆனால் கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இந்தியா வாங்கும் பேஸ்கட் குரூட் ஆயில் விலை நேற்றைக்கு பேரலுக்கு 61.58 டாலராகத்தான் இருந்தது. ஜூலை மாதத்தின் அதன் சராசரி விலை பேரலுக்கு 61.12 டாலருக்கும் குறைவான விலையில்தான் இருக்கும் என்று சொல்கிறார்கள். இந்தியாவின் பெட்ரோலிய தேவையில் 75 சதவீதத்தை நாம் இறக்குமதிதான் செய்கிறோம். இந்தியாவில் பெட்ரோலிய பொருட்கள் மானிய விலையில் கொடுக்கப்படுவதால், இந்திய எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை 2008 - 09 நிதி ஆண்டில் ரூ.4,870 கோடி வரை நஷ்டம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பெட்ரோல்,டீசல் விலை உயர்வு அவசியமானதுதான் என்றார் முரளி தியோரா.
நன்றி : தினமலர்

No comments: