Friday, July 10, 2009

இன்றும் சரிவில் முடிந்த பங்கு சந்தை

கடந்த அக்டோபர் 2008 க்குப்பின் இந்த வாரம் தான் பங்கு சந்தையில் மோசமான வாரமாக இருந்தது. இந்த வாரத்தில் மட்டும் 10 சதவீத புள்ளிகளை பங்கு சந்தை இழந்திருக்கிறது. ஆயில் அண்ட் கேஸ், பேங்கிங், இன்ஃப்ராஸ்டிரக்சர் மற்றும் ரியாலிட்டி துறையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் நிப்டி 4,000 புள்ளிகள் என்ற நிலையில் இருந்தும் சென்செக்ஸ் 13,500 புள்ளிகள் என்ற நிலையில் இருந்தும் இன்று கீழே இறங்கியது. இரண்டாவது முறையாக பதவி ஏற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் பட்ஜெட்டால் ஏற்பட்ட ஏமாற்றம் இந்த வார துவக்கத்தில் சரிவை ஏற்படுத்தியது. பின்னர் மும்பையில் பெய்த கனமழையும் வர்த்தகம் சரிவர நடக்காததற்கு காரணமாக இருந்தது. இன்று முழுவதும் மந்தமாக இருந்த பங்கு சந்தையில் மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 253.24 புள்ளிகள் ( 1.84 சதவீதம் ) குறைந்து 13,504.22 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 77.05 புள்ளிகள் ( 1.89 சதவீதம் ) குறைந்து 4,003.90 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இந்த வாரம் பங்கு சந்தையில் ஏற்பட்ட நிலை குறித்து கருத்து தெரிவித்த டைமன்சன்ஸ் கன்சல்டிங்கின் அஜய் ஸ்ரீனிவாட்சவா, இன்னும் 6 மாதங்களுக்கு பங்கு சந்தையில் வளர்ச்சியை பார்ப்பது கஷ்டம் என்றார்.
நன்றி : தினமலர்


No comments: