Friday, July 10, 2009

புதிய காலத்திற்கு ஏற்ப 'ஜீவன் சாத்தி பிளஸ்'

காலம் மற்றும் தேவை மாற்றங்களுக்கு ஏற்ப புதிது புதிதாக பாலிசிகளை அறிமுகப்படுத்தி வரும் எல்.ஐ.சி., நிறுவனம், தற்போது 'ஜீவன் சாத்தி பிளஸ்' என்ற புதிய பாலிசியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த 'ஜீவன் சாத்தி பிளஸ்' திட்டத்தால், ஒரே பாலிசியின் மூலம் கணவன் - மனைவி இருவரும் ஆதாயம் பெறலாம். இத்திட்டத்தில் பாலிசிதாரர், பிரின்சிபல் லைப் அஷ்யூர்டு (பி.எல்.ஏ.,) வாகவும், அவரது கணவன் அல்லது மனைவி, ஸ்பவுஸ் லைப் அஷ்யூர்டு (எஸ்.எல்.ஏ.,)வாகவும் கருதப்படுகிறார். இந்த திட்டத்தில் ரெகுலர் பிரீமியம் முறையில் சேர்ந்துள்ள பாலிசிதாரர், ஓராண்டு, அரையாண்டு, காலாண்டு மற்றும் மாதத் தவணைகளில் முறையாக பாலிசிக்குரிய சந்தாவை செலுத்த வேண்டும்.
இத்திட்டத்தின் சிங்கிள் பிரிமியம் முறையில் சேர்ந்துள்ள பாலிசிதாரர் ஒரே தவணையாக பாலிசிக்குரிய மொத்த பணத்தையும் கட்ட வேண்டும். இதற்கான குறைந்தபட்ச தொகையாக 40 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பாலிசியில் சேர குறைந்தது, 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். அதிகபட்சமாக 55 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பாலிசி முதிர்வு வயது அதிகபட்சமாக 70 வயது வரையும், பாலிசியின் கால அளவு 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த 'ஜீவன் சாத்தி பிளஸ்' திட்டம் கணவன் - மனைவி இருவரின் வாழ்க்கைக்கும் நிதி பாதுகாப்பு அளிக்கும் சிறந்த திட்டம்.
நன்றி : தினமலர்


No comments: