Friday, July 10, 2009

இன்னும் ஒரு மாதத்தில் இரண்டு பாயின்ட்- டு -பாயின்ட் ரயில்கள் இயக்கப்படும் : மம்தா பானர்ஜி

கடந்ø மூன்றாம் தேதி ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, 'டுரோன்டோ ' என்ற பெயரில் புதிதாக 12 நான்-ஸ்டாப், பாயின்ட்- டு -பாயின்ட் ரயில்கள் இயக்கப்படும் என்றார். அவைகளில் இரண்டு ரயில்கள் இன்னும் ஒரு மாத காலத்திற்குள்ளாகவேஇயக்கப்படும் என்றார் அவர். செகந்தராபாத்தில் இருந்து ஒரு ரயில் புதுடில்லிக்கும், நாக்பூரில் இருந்து ஒரு ரயில் புதுடில்லிக்கும் புறப்பட்டு செல்லும் என்றார். இந்தியாவில் புதிதாக அறிமுகம் செய்யப்படும் இந்த வகை நான்-ஸ்டாப் ரயில்களில் ஏர்-கன்டிஷன் மற்றும் ஏர்-கன்டிஷன் அல்லாத பெட்டிகள் இணைக்கப் பட்டிருக்கும். மம்தா அறிவித்த இன்னொரு புதிய ரயிலான டபுள்-டெக்கர் ரயில் இன்னும் ஒரு வருட காலத்தில் இந்தியாவில் ஓடத்துவங்கும் என சொல்லப்படுகிறது. ரயில்வே பட்ஜெட் குறித்து லோக்சபாவில் நேற்று நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பதிலளித்த மம்தா, ரயில்வே பட்ஜெட்டில் சொல்லப்பட்ட விஷயங்கள் எல்லாம் இன்னும் ஒரு வருடத்தில் செயல்பட துவங்கும் என்றார். மேலும் ரயில்வே ரெக்ரூட்மென்ட் போர்டின் ( ஆர் ஆர் பி ) செயல்பாடுகள் மாற்றி அமைக்கப்படும் என்றார். அந்தந்த மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு 50 சதவீத வேலைகள் ஒதுக்கப்படும் என்றும், ரயில்வே துறை நடத்தும் வேலைவாய்ப்பு தேர்வுகளில் அந்தந்த மாநில மொழிகளிலேயே கேள்விகள் கேட்கப்படும் என்றார்.
நன்றி : தினமலர்


No comments: