Friday, October 16, 2009

மூன்றில் இரு பங்கு சம்பளம் : வேண்டாம் என்றார் முகேஷ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, தன் சம்பளத்தை மூன்றில் இரண்டு பங்கு அளவுக்கு குறைந்து கொண்டுள்ளார். இனி அவர் ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக பெறுவார் என தெரிவிக்கப் பட்டுள்ளது. பிரபல நிறுவனங்களில் நிர்வாக அதிகாரிகள் அந்தஸ்தில் பணிபுரிவோர் தங்களின் சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என, மத்திய கம்பெனிகள் விவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆலோசனை தெரிவித்திருந்தார். இருப்பினும், இந்த சம்பளம் குறித்து கம்பெனிகளின் போர்டுகளும், பங்குதாரர்களும் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், அமைச்சரின் ஆலோசனையை நிறைவேற்றும் வகையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, 2008-09ம் ஆண்டுக்கான தன் சம்பளத்தை மூன்றில் இரண்டு மடங்கு குறைத்துக் கொண்டுள்ளார். அதாவது, ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் மட்டுமே அவர் சம்பளம் பெறுவார்.
இதற்கு முந்தைய ஆண்டின் அவரது சம்பளமான 44 கோடி ரூபாயை ஒப்பிடுகையில், இது 66 சதவீதம் குறைவு. கம்பெனியின் நிகர லாபத்தில் 5 சதவீதத்தை அவர் சம்பளமாக பெறலாம். அதை ஒப்பிடும் போது, 98 சதவீதம் குறைவு. அதே நேரத்தில், தங்கள் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கான சம்பளம் மற்றும் இதர சலுகைகளை ரிலையன்ஸ் நிறுவனம் மாற்றி அமைத் துள்ளது. அது, தற்போது அவர்கள் பெறும் சம்பளத்தை விட கூடுதலாக இருக்கும்.
நன்றி : தினமலர்


No comments: