Friday, October 16, 2009

சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தை வாங்கியது போலாரிஸ்

சென்னையை சேர்நத சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமான லேசர்சாப்ட் நிறுவனத்தை மும்பையை சேர்ந்த பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான போலாரிஸ் வாங்கியுள்ளது. இதுகுறித்து போலாரிஸ் நிறுவனம் தெரிவிக்கும் போது, லேசர்சாப்ட் நிறுவனத்தின் நூறு சதவீத பங்குகளையும் வாங்கி கொள்வதற்கான ஒப்பந்தம் நிறுவனத்தின் பங்குதாரர்களின் ஒப்புதலோடு நிறைவேற்றப் பட்டுள்ளது. இந்நிறுவனத்தை 52 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளோம் என தெரிவித்துள்ளது. வங்கிகளுக்குத் தேவையான சாப்ட்வேர்களை வடிவமைத்துத் தருவதில் முன்னணி நிறுவனமாக லேசர்சாஃப்ட் விளங்குகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
நன்றி தினமலர்


No comments: