Friday, October 16, 2009

பி.எஸ்.என்.எல்., தருகிறது சலுகை

சென்னை, பி.எஸ்.என்.எல்., தொலைபேசி நிறுவனம், சூப்பர் ஒன் இந்தியா, இந்தியா கோல்டன் 50 மற்றும் ஸ்டூடன்ட் பவர் பூஸ்டர் ஆகிய கார்டுகளுக்கான விலையை குறைத்துள்ளது.
இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., வெளியிட்டுள்ள செய்தி: முன், 330 ரூபாயாக இருந்த சூப்பர் ஒன் இந்தியாவின் விலை தற்போது, 115 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 375 ரூபாயாக இருந்த இந்தியா கோல்டன் 50 கார்டின் விலை, தற்போது 123 ரூபாயாகவும், 110 ரூபாயாக இருந்த ஸ்டூடன்ட் பவர் பூஸ்டரின் விலை, 40 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியா கோல்டன் 50 கார்டிற்கு, உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி., அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 50 பைசா வசூலிக்கப்பட உள்ளது. சூப்பர் ஒன் இந்தியா கார்டில், உள்ளூர் அழைப்புகளுக்கு பி.எஸ்.என்.எல்., போனிற்கு 50 பைசாவும், மற்ற போன்களுக்கு நிமிடத்திற்கு 80 பைசாவும் வசூலிக்கப்பட உள்ளது. ஸ்டூடன்ட் பவர் கார்டில், எந்த ஒரு இணைப்பிற்குமான உள்ளூர் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 90 பைசா வீதமும், இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரை பி.எஸ்.என்.எல்., போன்களுக்கான அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 30 பைசா வீதமும் வசூலிக்கப்பட உள்ளது. இந்த அறிவிப்பு கடந்த 12ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


No comments: