Monday, January 18, 2010

அமெரிக்காவில் மேலும் 4 வங்கிகள் மூடல்

அமெரிக்கா, பொருளாதார சரிவில் இருந்து மீட்டு வந்தாலும், அதன் தாக்கம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. அங்கு வங்கிகள் மூடும் நிலை தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே அமெரிக்க வங்கித் துறையில் 4 வங்கிகள் திவாலாகி உள்ளன. ஜனவரி 15ம் தேதி அன்று மட்டும் பார்ன்ஸ் பேங்கிங் கம்பெனி, செயின்ட் ஸ்டீபன் வங்கி, டவுன் கம்யூனிட்டி வங்கி உள்ளிட்ட மூன்று வங்கிகள் மூடப் பட்டன. கடந்த வாரம் வாஷிங்டனைச் சேர்ந்த ஹாரிசன் வங்கி திவாலானது. இந்த ஆண்டின் தொடக்க மாதத்திலேயே நான்கு வங்கிகள் திவாலாகியுள்ளது அமெரிக்க வங்கித் துறையைக் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
நன்றி : தினமலர்


No comments: